பழைய முறையில் பென்சன் கொடுப்பது பற்றி தி.மு.க. உறுப்பினர் ஐ.பெரியசாமி கேட்ட கேள்விக்கு மாண்பு மிகு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில்

பழைய முறையில் பென்சன் கொடுப்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் .பன்னீர்செல்வம் தெரிவித்தார்*
சென்னை
சட்டசபையில் இன்று தி.மு.. உறுப்பினர் .பெரியசாமி பேசும்போது, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் .பன்னீர் செல்வம் பேசியதாவது:-

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் முறையை அமல்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கைகள் வந்தன. இதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் 22.2.2016 அன்றே வல்லுனர் குழு அமைக்க உத்தரவிட்டார். அதன்படி அமைக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அந்த குழுவின் பரிந்துரை அரசுக்கு கிடைக்க பெற்றவுடன் பழைய முறையில் ஓய்வூதியம் வழங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment