PAGEVIEWERS

பிடியாணை இன்றி கைது செய்ய கூடிய குற்றங்கள், பிடியாணைவுடன் கைது செய்ய கூடிய குற்றங்கள் என்னென்ன என்பதை இந்திய தண்டனை சட்டத்தில் தெரிந்துகொள்வது இவ்வாறு தான்.
அதாவது, இரண்டு வருடங்களுக்கு மேல் தண்டனை பெற கூடிய குற்றங்களை ஒரு நபர் செய்து இருந்தால்,அந்த நபரை பிடியாணையின்றி கைது செய்யலாம்.
அதே மாதிரி ஒரு நபர் இரண்டு வருடங்களுக்குள் தண்டனை பெற கூடிய குற்றங்களை செய்து இருந்தால் ,அந்த நபரை பிடியாணைவுடன் தான் கைது செய்ய வேண்டும்.



இவற்றை பற்றி குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 2(22) விளக்குகின்றது.
மேற்படி இந்திய தண்டனை சட்டத்தில் பிணையில் விடுவிக்கக்கூடிய குற்றங்கள் மற்றும் பிணையில் விடுவிக்கக்கூடாத குற்றங்கள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.

பிணையில் விட கூடிய குற்றங்களுக்கு எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் புலன் விசாரணை செய்து ,விசாரணைக்கு பின் எப்.ஐ.ஆர் தேவை என்றால் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்.

பிணையில் விட கூடாத குற்றங்களுக்கு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்படும்.
லோக் ஆயுக்தா தற்போது நடைமுறையில் உள்ள மாநிலங்களாக 

1.மகாராஷ்டிரா(1971),
 2.பீகார்(1973), 
3.ராஜஸ்தான்(1973), 4.உத்திரபிரதேசம்(1975),
 5.மத்திய பிரதேசம்(1981),
 6.ஆந்திரா(1983), 
7.ஹிமாச்சல் பிரதேசம்(1983), 8.கர்நாடகா(1985),
 9.அஸ்ஸாம்(1986),
10. குஜராத்(1986),
11. கேரளா(1988), 
12.பஞ்சாப்(1985),
13. டெல்லி(1996),
14. ஹரியான(1996)
 ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன.
Flash News:7ஆவது ஊதியக்குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.இனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000.
தில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது.ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்தது.

இதையடுத்து, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இன்று புது தில்லியில்நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.7-ஆவது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் அடிப்படையில், அதன் பரிந்துரைகள் சென்ற ஜனவரி 1-ஆம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும். இதனால், 50 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 58 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.7வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதால், மத்தியஅரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.7 சதவீதம்.7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியில் சேரும் அறிமுக நிலை பணியாளருக்கான மாத ஊதியம் தற்போதைய ரூ.7,000-லிருந்து, ரூ.18,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், அமைச்சரவை செயலரின் அதிகபட்ச மாத ஊதியம் தற்போதைய ரூ.90,000-லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் 6 வது ஊதியகுழு தவறுகளை சரி செய்திட இந்திய உச்ச நீதிமன்றத்தில் 158 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தமிழ்நாட்டில் தற்போது 7 வது ஊதிய குழு அமைக்க சாத்தியம் இல்லை. டாடா சங்க ஊதிய வழக்குபடி 6 ஊதிய குழு முறன்பாட்டை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மீண்டும் குழு அமைத்து சரி செய்த பின் தான் 7வது ஊதிய குழு ஊதியம் நிர்னயம் செய்ய முடியும். எனவே இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் 1.1.2006 முதல் 9300+4200 ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தான் இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் நிர்னயம் செய்யப்படும்....டாடா கிப்ஸன்

கல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ.,வின் இணை இயக்குனர் சசிகலா, தொடக்க கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு பணியாற்றும், இணை இயக்குனர் செல்வராஜ், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் வர்மா, எஸ்.எஸ்.ஏ.,வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு  அரசு  ஊழியர்  அடிப்படை விதிகள் 


             Tn   govt    F.R           Total    pages    328

                           Download   Here   F,R
      தமிழ்நாடு  அரசு ஊழியர் 

                     நடத்தை  விதிகள் -1973

                                          42  Pages



          DOWNLOAD  HERE  

பழைய முறையில் பென்சன் கொடுப்பது பற்றி தி.மு.க. உறுப்பினர் ஐ.பெரியசாமி கேட்ட கேள்விக்கு மாண்பு மிகு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில்

பழைய முறையில் பென்சன் கொடுப்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் .பன்னீர்செல்வம் தெரிவித்தார்*
சென்னை
சட்டசபையில் இன்று தி.மு.. உறுப்பினர் .பெரியசாமி பேசும்போது, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் .பன்னீர் செல்வம் பேசியதாவது:-

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் முறையை அமல்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கைகள் வந்தன. இதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் 22.2.2016 அன்றே வல்லுனர் குழு அமைக்க உத்தரவிட்டார். அதன்படி அமைக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அந்த குழுவின் பரிந்துரை அரசுக்கு கிடைக்க பெற்றவுடன் பழைய முறையில் ஓய்வூதியம் வழங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.



இடைநிலை ஆசிரியரே சிந்தனை செய்வீர்
2016 ஆண்டு முதல் நடைமுறை படுத்த இருக்கும் 7. வது ஊதியகுழுவில் விழப்போகுது மரண அடி .
நாம் தற்போது உள்ள பாதிப்பு நீங்க எந்த அளவு போராடி உள்ளோம் .
டாடா நடத்தி வரும் சட்ட போராட்டம் எந்த அளவு ஆதரவு கொடுத்து உள்ளோம்
மனதை தொட்டு உணர்ந்து உண்மை நிலை தெளிவாக அறிவோம் .
வரும் ஊதிய குழு வில் தற்போது பெறும் ஊதியம் +அகவிலைபடிவி --புதிய ஊதிய மாக நிர்ணயம் செய்ய படும்.
இதில் அடுத்த ஊதிய குழுவில் 2800₹2400 தர ஊதிய கட்டுகள் ஒன்றாக இணைக்க பட உள்ளன என செய்திகள் வெளிவந்தது உள்ளன .ஏற்கனவே நாம் இளநிலை உதவியாளர் பணியிடங்களை காரணம் காட்டி தமிழக அரசு நமது ஊதியத்தை ஏமாற்றம் செய்து வருகிறது .இந்த நிலை தொடர்ந்தால் ஏழாம் ஊதிய. குழுவில் நமக்கு மாபெரும் ஊதிய இழப்புகள் ஏற்படும் .தயவுசெய்து உணமை உணர்ந்து ஊதிய இழப்புகள் நீங்க டாட்டா சங்கத்திற்கு ஒத்தாசை தாருங்கள் . இனி வருங்காலங்களில் .

சட்ட போராட்டம் டாடாவின் தலைமையில் முன்னெடுத்து செல்ல முழுவதும் ஆதரவு வழங்க வேண்டுகிறேன் -----+டாட்டா கிப்சன் .
NELLAI  AEEO .FREE  BOOK   SALE  .....





எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

 
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

மருத்துவ தரிவரிசை பட்டியலில் 3 பேர் முதலிடம் பிடித்துள்ளனர் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. முதலிடத்தை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா மகேசும், 2வது இடத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேசும், 3வது இடத்தை விஜயவாடாவைச் சேர்ந்த ஜெய ஞானவேலும் பிடித்துள்ளனர்.

தரவரிசை பட்டியல் குறித்த விபரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.   நடப்பாண்டில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 2723 இடங்கள் உள்ளன. பிடிஎஸ் படிப்பிற்கு 1055 இடங்கள் உள்ளன.

2 இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகளுக்கான 130 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுவரை மருத்துவ கவுன்சிலிங்கிற்கு 27, 450 பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ கவுன்சிலிங் ஜூன் 20 ம் தேதி துவங்க உள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2016 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதியான நபர்களின் பெயர்ப்பட்டியல் அனுப்புதல் சார்பு


TO DOWNLOAD PROCEEDING LTR CLICK HERE...


MATHS AND PHYSICS PANEL 2016-07 CLICK HERE...

தமிழகத்தில் 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மாநில தேர்தல் ஆணையராக டி.எஸ்.ராஜேசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பெயர் புதிய பதவி (கூடுதல் பொறுப்பு)

1. எஸ்.கே.பிரபாகர்- செயலர், பொதுப்பணித்துறை

2. என்.எஸ்.பழனியப்பன்- செயலர், எரிசக்தித்துறை

3. ஜக்மோகன் சிங் ராஜூ- தலைவர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை

4. மங்கத் ராம் சர்மா- செயலர், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை (தலைவர், சிட்கோ)

5. சி.சந்திரமவுலி- ஆணையர், வணிகவரித்துறை ( செயலர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை)

6.ஆர். வெங்கடேசன்- செயலர், செய்தி மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை( செயலர், வருவாய்த்துறை)
TATAவின் 5வருட சாதனைகள் ...

He is commenting about TATA &TATA.
Before commenting any one...you must know what I am...commenting whom...past history...what is going on now...
Not knowing anything...having lot of strength...what is the use...strength/age will not workout...hand full of dash...what's the use...
Last 9 years what u are doing...
Now also not doing fruitful.....nothing...

இடைநிலை ஆசிரியருக்கு பிரச்ச்னைகள் இருக்குன்னு சொல்லி தூங்கி கிடந்த உங்களை எழுப்பியது TATA சங்கங்களே...
என்ன நடந்தது...இன்னும் அரசு இடைநிலை ஆசிரியரை டிப்ளமோ ஹோல்டர் இல்லை என்றுதான் சொல்லி வருகிறது...
TATA சங்கங் சாதனைகள் கடந்த சில வருடங்களில்....

--மாநில மூப்பு அடப்படையில் பணி நியமனம் உச்ச நீதிமன்றம் மூலமாக.நியமனம் பெற்றவர்கள் மாவட்ட மாறுத்தல் பெற முதன் முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தீர்ப்பு பெற்றது .... நாங்களே..

--இடைநிலை ஆசிரியர்களின் 6வது ஊதிய குழுவில் 'பிரச்சனை உள்ளது' என்று சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு .... நாங்களே...

--தற்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300+4200 வழங்கிட ஊதிய பிரச்சனை தொடர்பாக உச்ச நீதி மன்ற வழக்கு - நிலுவையில்....

....தொடக்க கல்வி துறையில் மாநில அளவில் பதவி உயர்வு வழக்கு நிலுவையில் .....

....ஆசிரியர் நலனுக்காய் 10 கோரிக்கைகளை நிறைவேற்றிட தேர்தல் ஆணையம் மீது பொது நல வழக்கு ....மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நாள் ..18.02.2016.

... CPS..திட்டம் தவறானது, 2003 க்கு பின் ஓய்வு ,,மரணம் அடைந்தவைகளுக்கு ( 216 பேர் ) கட்டிய பணம் திரும்ப வழங்கிட வேண்டும் .தற்காலிக ஓய்வுதியம் ரூ.10,000/= அனுமதிக்க வேண்டும் .கமுடேசன் வழங்கிட வேண்டும்.என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ...விசாரணை நாள் ...23-02-2016 .

எங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்..

...ஆசிரியாரின் நலனுக்காய் உண்மையாய் உழைக்கும் சங்கம் டாட்டா மட்டுமே.!!!!!

We don't want any appreciation r recognition...
We r fighting on our way...ultimately v also FOR teachers only...
Leave us alone...pl don't pass any negative comments against us....
--from Kipson Tata
10-06-2016.உயர்திரு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் TATA சார்பில் கோரிக்கைகள் அளிக்கப்பட்டன.




10-06-2016.உயர்திரு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் TATA சார்பில் கோரிக்கைகள் அளிக்கப்பட்டன.



கோரிக்கைகள்:- 

1.மாணவர்களின் விலையில்லா நலதிட்ட பொருட்கள் பள்ளிக்கே நேரடியாக வழங்கப்பட வேண்டும்.

இயக்குனர் பதில் ;-அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

2.தெலுங்கு,உருது,கன்னடம் ,மலையாளம்
நடுநிலைப்பள்ளிகளில் கல்வி உரிமை சட்ட படி   தமிழ் பட்டதாரி பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இயக்குனர் பதில்;-  -அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் புதிய பணியிடங்கள் உருவாக்க பட்டு பதவி உயர்வு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் .


 3.1997-98 ல் பின்னடைவு காலி பணியிடத்தில் (SC/ST) பணியேற்ற பட்டதாரி தகுதியுடைய இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் கலந்தாய்வில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
 இயக்குனர் பதில்;- உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

 4.இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை ஒளிவு மறைவின்றி உடனடியாக நடத்திட வேண்டும்.
இயக்குனர் பதில்;- தற்போதைய நிலையில் அரசு பணி மாறுதல் குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்க வில்லை .

  5.Economics,commerce,(M.A M.COM WITH B.ED) படித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.வினையாக மிஷன் பட்ட படிப்புகளுக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்க வேண்டும்.பின்னேற்பு வேண்டி 1.5 வருடமாக நிலுனையில் உள்ள கோப்புகளுக்கு விரைந்து அனுமதி வழங்கிட வேண்டும்.
இயக்குனர் பதில்;-  விரைவில் 2   வாரத்திற்குள் இவற்றிற்கு அரசு ஆணை வெளிவரும்.அதன்பின் பணபலன் பெற உரிய தெளிவுரை வழங்கப்படும்


  6.மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை உடனடியாக வழங்கிட வேண்டும்.
 இயக்குனர் பதில்;-  விரைவில் வழங்கிட உள்ளது.

7. தனியார் பள்ளி சட்டம் 1973 சட்ட பிரிவு 31 ன் படி இயக்குனர் அனுமதி இல்லாமல் நிதிஉதவி பெறும் தனியார் பள்ளிகளை விற்பனை செய்வதோ அல்லது தனது வாரிசுகளுக்கு தனமாகவோ ,நன்கொடையாகவோ கொடுப்பது செல்லாது என்பது கூறித்து அணைத்து DEEO களுக்கும் தெரிவுரை வழங்கிட வேண்டும்.முன் அனுமதி பெறாமல் மாற்றம் செய்யப்பட்ட பள்ளி நிர்வாக மாற்ற ஆணை ரத்து செய்திட வேண்டும். 
 இயக்குனர் பதில்;-  விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வழங்கிய பள்ளிகள் பற்றி எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் நிர்வாக மாற்றம் ரத்து செய்யப்படும்.
 
💢💢💢💢💢💢💢💢💢💢💢AEEO அலுவலக தகவல்: முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை பற்றிய தகவல். 31-7-2011க்குள் பிறந்த மாணவர்களை முதல் வகுப்பில் சேர்க்க எந்த தடையும் இல்லை. 01-08-2011முதல் 31-08-2011 வரை பிறந்த மாணவர்களை சேர்த்துக்கொண்டு AEEO /AAEEO விடம் தவிர்ப்பாணை வேண்டி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளவும். 01-09-2011முதல் 30-11-2011 வரை பிறந்துள்ள மாணவர்களை முதல் வகுப்பில் சேர்த்துக்கொண்டு 01-08-2016 க்கு பின்னர் தொகுத்து பட்டிலிட்டு மாணவனின் பிறந்த நாள் சான்று இணைத்து DEEO விற்கு இரண்டு நகல்களில் விண்ணப்பித்து தவிர்ப்பாணை கண்டிப்பாக பெற்றுக்கொள்ளவும்.💢💢💢💢💢💢💢💢💢💢

G.O.165 Dt:01.06.16 MEDICAL AID – NHIS 2014 for Pensioners (including spouse) /Family Pensioners – List of Addl Hospitals covered under this scheme and Addl Specialties included in the Hospitals already empanelled under this Scheme – Approved

















 




 

2016-2017-தொடக்க கல்வி-உதவி தொடக்க கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்...