PAGEVIEWERS

தொடக்கக் கல்வி - நீதிமன்ற தீர்ப்பாணைகள் - 01.06.88 க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் மொத்த பணிக்காலத்தையும் கணக்கீட்டு 01.06.88 அன்று நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் தேர்வுநிலை / சிறப்புநிலை அனுமதித்து தமிழக அரசு உத்தரவு.

அரசாணை எண். 146 பள்ளிக்கல்வி(ஜி1)த்துறை நாள். 19.06.2012
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 13907 / எல்1 / 2011 , நாள். 20.06.2012

எந்ததெந்த ஆசிரியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?

பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை மற்றும் சட்டத்துறை ஆகியவற்றில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடைபெற்றுவரும் பணிகள் பற்றிய விபரங்களை அறிதல் அவசியம்.
பள்ளிக் கல்வித்துறையின் விபரங்கள்
* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,743 - இப்பணிக்கு தேர்வுப் பட்டியல் தயாராக உள்ளது. ஆனால் ஐகோர்ட் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 5,451 - இவர்கள் டி.இ.டி தேர்வு மூலம் தெரிவுசெய்யப்படுவர்.
* சிறப்பு ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,555 - தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது.
* பட்டதாரி ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 4,367 - இதுவரை 4,006 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையிடம் பட்டியல் வழங்கப்பட்டு விட்டது. மீதியுள்ள இடங்களுக்கு 23, 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
* பட்டதாரி ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 18,343 - டி.இ.டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
* வேளாண் ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 25 - தேர்வு முடிவை வெளியிட அரசிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன.
* பி.ஆர்.டி - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 634 - டி.இ.டி தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுவர்.
* ஏ.இ.இ.ஓ - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை - 34 - 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.
* முதுநிலை விரிவுரையாளர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 34 - 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.
* முதுகலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை - 1,347 - ஒரு கட்ட தேர்வு முடிவு வெளியீடு. மீதமுள்ள இடங்களுக்கு 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
* முதுகலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 2,895 - மே 27ம் தேதி தேர்வு நடந்தது. விரைவில் முடிவு வெளியிடப்படும்.
இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 36,428
உயர்கல்வித் துறை
* உதவிப் பேராசிரியர்(பொறியியல் கல்லூரி) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 154 - தேர்வு முடிவை வெளியிடும் பணி நடக்கிறது.
* உதவிப் பேராசிரியர்(பாலிடெக்னிக்) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 139 - தேர்வு முடிவை வெளியிடும் பணி நடக்கிறது.
* உதவி பேராசிரியர்(கலை அறிவியல் கல்லூரி) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,025 - உயர்கல்வித் துறையிடம் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 1,318
சட்டத்துறை
* விரிவுரையாளர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 45 - தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
 இந்த 3 துறைகளிலும் மொசேர்த்து காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 37,791.

டி.ஆர்.பி தேர்வு: ஜூலை 12 பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில், ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதற்காக ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூலை 12ம் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நடத்தப்படும் நாளில், பள்ளி செயல்படுவதால் மாணவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூன் 4ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. 
 
ஆனால் நிர்வாகத்தில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக ஜூலை 12ம் தேதிக்கு இத்தேர்வு ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
இத்தேர்வை தமிழகம் முழுதும் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இதற்காக 1400 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் நாள் பணி நாளாக இருப்பதால் மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்சி - ஏற்கெனவே அளிக்கப்பட்டு வரும் குறுவள மையத்தில் மற்றும் வட்டார வள மையத்தில் அளித்திட உத்தரவு.

தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 800 / அ5 / பயிற்சி / SSA / 2011 , நாள்.21.06.2012 
வட்டார மற்றும் குறுவள மைய பயிற்சிகள் ஏற்கெனவே அளிக்கப்பட்டு வரும் குறுவள மையத்தில் மற்றும் வட்டார வள மையத்தில் அளித்திடல் வேண்டும் என மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

புதிய மருத்துவ திட்டத்தின் கீழ் THE UNITED INDIA INSURANCE CO LTD தேர்ந்தெடுத்து 01.07.2012 முதல் செயல்படுத்த தமிழக அரசு ஆணை. 

 

DOWNLOAD  G.O 

கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் - திருமணமான பெண் வாரிசுதாரருக்கும் பணி நியமனம் வழங்குதல் - தெளிவுரைகள் வெளியிடப்படுகின்றன.

அரசாணை எண். 96 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (க்யூ.1) துறை நாள்.18.06.2012
கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் - பணியிடை மரணமடைந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையிலான பணிநியமனம் வழங்குதல் - விண்ணப்பம் அளிக்கும்போது திருமணம் ஆகாமல் இருந்து பின்னர் பணிநியமனத்திற்கு முன்னர் திருமணமான பெண் வாரிசுதாரருக்கும் பணி நியமனம் வழங்குதல் - தெளிவுரைகள் வெளியிடப்படுகின்றன.

சமூக விரோத கும்பலிடம் சிக்க வேண்டாம்: டி.ஆர்.பி. எச்சரிக்கை


அனைத்து தேர்வுகளும், முறையாக, நேர்மையாக, ஒவ்வொரு நிலையிலும் கவனமுடன் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்வில், எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் கிடையாது. சமூக விரோத கும்பலின் பேச்சுக்களை நம்பி, தேர்வர் ஏமாறக் கூடாது. சமூக விரோத கும்பல் அணுகினால், உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்.

அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிக்கை: "தமிழக முதல்வர், எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டில், 42 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டார். இதற்கான தேர்வுகள், வெளிப்படையாகவும், நேர்மையாகவும், சரியான முறையிலும் நடந்து வருகின்றன. பள்ளிக் கல்வி அமைச்சரும், டி.ஆர்.பி., தேர்வுகள் அனைத்தையும் வெளிப்படையாக, முறையான அடிப்படையில் நடத்த வேண்டும் என, தெளிவாக கூறியுள்ளார்.
எனினும், டி.ஆர்.பி., தேர்வுகள் குறித்து, வெளியில் சிலர், தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இத்தகவல், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு வந்துள்ளன. இதனால், தேர்வு நடைமுறைகள் குறித்து, தேர்வர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது, டி.ஆர்.பி.,யின் முக்கிய கடமை. டி.ஆர்.பி.,யில் நடைபெறும் அனைத்துப் பணிகளும், முற்றிலும் கணினிமயமானது.
விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், அது உடனடியாக, "ஸ்கேன்&' செய்யப்படுகிறது. விண்ணப்பத்தில், பணியாளர்களின் தலையீடு எதையும் அனுமதிப்பதில்லை. பதிவெண் ஒதுக்கீடு, தேர்வு மையம், தேர்வு அறை, இருக்கை விவரம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுமே, கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. "ஹால் டிக்கெட்&'டுகள், தபால் மூலம், சம்பந்தப்பட்ட தேர்வருக்கு அனுப்பப்படுகிறது. தேர்வு மையத்தில் இருந்து, விடைத்தாள் நகலை, தேர்வர் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
தேர்வு மையங்களில் இருந்து, விடைத் தாள்களை பெற்று உடனடியாக,"ஸ்கேன்&' செய்யப்பட்டு, கம்ப்யூட்டர் மூலம் மதிப்பீடு செய்யப்படுகிறது. அதன்பின், இட ஒதுக்கீடு அடிப்படையில், மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இவை அனைத்துமே, கணினிமயமாக்கப்பட்ட திட்டத்தின் மூலம் நடக்கின்றன.
இறுதிப் பட்டியல் வெளியிடும்போது, தேர்வர்களின் நலன் கருதி, டி.ஆர்.பி., இணையதளத்தில், "கீ-ஆன்சர்&' வெளியிடுவது என, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. இதன்மூலம், தேர்வர், தங்களது மதிப்பெண்களை சுயமாகவும், தெளிவாகவும் மதிப்பீடு செய்து கொள்ள முடியும்.
எனவே, தேர்வர்கள், டி.ஆர்.பி., செயல்பாடுகளில் முழு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சமூக விரோத கும்பல் மற்றும் சம்பந்தமில்லாத நபர்களின் பேச்சைக் கேட்க வேண்டாம். பணம் கொடுத்தால் வேலை என்று கூறும் சமூக விரோத கும்பலிடம், தேர்வர் சிக்கி ஏமாறக் கூடாது. அப்படிப்பட்ட நபர்களைப் பற்றி தகவல் கூறினால், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது 
VOICE OF 'TATA'  மாதாந்திர இதழைப் பெற   

ஆண்டு சந்தா  ரூ.100 ஐ
                                            
   S.C.கிப்சன் ,பொதுசெயலாளர் ,                                          235,வடக்குத் தெரு  ,பரப்பாடி , 627110.
திருநெல்வேலி  மாவட்டம்

                                                   என்ற முகவரிக்கு  

money order       செய்து,புத்தகம் அனுப்பவேண்டிய                                 
              
முகவரியை            தெளிவாக எழுதி

 அனுப்பவும் .உங்கள் சந்தா தொகைக்கான ரசீதுடன் இதழ் தொடர்ந்து 

முகவரிக்கு அனுப்பப்படும் 

Direct recruitment of Graduate Assistant (Backlog Vacancies) through Employment Registration seniority for the year 2010 – 2011

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006
Direct recruitment of Graduate Assistant (Backlog Vacancies) through Employment Registration seniority for the year 2010 – 2011
RELEASE OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERFICATION
The Teachers Recruitment Board is now releasing the details of the candidates who are called for the said certificate verification. The list is being released to help the right candidates, who are not in receipt of the intimation letter sent by the Board and also having their name in this list may attend the scheduled date at Teachers Recruitment Board by taking a printout from this website. This list is released based on the details received from the director of employment and Training. If any discrepancy found in list, All Queries / Clarifications relating to Employment Seniority and other issues may be got from the Director of Employment and Training, Guindy, Chennai-600 032. Ph: 22501002 / 22501006 / 22500911 / 22500900  Website: tnvelaivaaippu.gov.in
This list is being released to help the right candidates who are not in receipt of the C.V. call letter sent by this Board. The details of the candidates may be verified by giving their Employment number in the following format.
Example for Employment No: 011991F12345
292001M00123
In the format the first 2 digits represents the District code number(01) which are given here under. The second is the year of registration (1991) which is a 4 digit numbers represents their year of registration, next is the sex of the candidate ie (Male/ Female) and the last number is a 5 digit number which was written in the Employment card, this should be 5 digit number, necessary zeros should be used as prefix if it is less than 5 digit.
DISTRICT CODES
District Code No.
District
 
District Code No.
District
01
KANYAKUMARI
 
17
KARUR
02
TIRUNELVELI
 
18
PERAMBALUR
03
TUTICORIN
 
19
TIRUCHIRAPALLI
04
RAMANATHAPURAM
 
20
NAGAPATTINAM
05
SIVAGANGAI
 
21
THIRUVARUR
06
VIRUDHUNAGAR
 
22
THANJAVUR
07
THENI
 
23
VILUPPURAM
08
MADURAI
 
24
CUDDALORE
09
DINDIGUL
 
25
THIRUVANNAMALAI
10
NILGIRIS
 
26
VELLORE
11
COIMBATORE
 
27
KANCHEEPURAM
12
ERODE
 
28
THIRUVALLUR
13
SALEM
 
29
CHENNAI
14
NAMAKKAL
 
30
KRISHNAGIRI
15
DHARMAPURI
 
31
ARIYALUR
16
PUDUKOTTAI
 
32
TIRUPUR
Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.

 
Dated: 19-06-2012
 

தொடக்கக் கல்வி - முப்பருவ மற்றும் முழுமையான தொடர் மதிப்பீட்டு முறைக்கான முதல் பருவ பாடத்திட்டம் வகுப்பு I முதல் VIII வரை

தற்போது முதல் மூன்று வகுப்புகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது மீதி வகுப்புகளுக்கான பாடத்திட்டம் இன்னும் ஒரு சில நிமிடங்களில் வெளியிடப்படும்.

1,040 மையங்களில் டி.இ.டி. தேர்வு: ஹால் டிக்கெட் அனுப்பும் பணி துவக்கம்.

ஜூலை 12ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு, 1,040 மையங்களில் நடக்கிறது. இதற்கான, "ஹால் டிக்கெட்&' அனுப்பும் பணி, நேற்று முதல் துவங்கியது.
அரசு பள்ளிகள், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, டி.ஆர்.பி., (தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்) செய்து வருகிறது. கடந்த காலங்களில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு நடந்து வந்த நிலை மாறி, ஓராண்டாக, தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

பொதுவாக, 100, 200 மையங்களில் தான் தேர்வுகள் நடக்கும். ஆனால், டி.இ.டி., தேர்வுக்கு, 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால், அதிகபட்சமாக, 1,040 மையங்களில் தேர்வு நடக்க இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும், 400 முதல் 500 பேர் வரை தேர்வெழுதுவர்; ஒரு அறையில் 20 பேர் வரை எழுதுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியர்), 3 லட்சத்து, 4 ஆயிரத்து, 248 பேரும்; இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வை, 3 லட்சத்து, 51 ஆயிரத்து, 836 பேர் என, மொத்தம், 6 லட்சத்து, 56 ஆயிரத்து, 84 பேர் எழுதுகின்றனர். ஹால் டிக்கெட் தேர்வர்களுக்கு, நேற்று முதல் ஹால் டிக்கெட் அனுப்பப்படுகிறது.
முதலில், தென் மாவட்டங்களுக்கும், கடைசியாக, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அனுப்பப்படும். 22ம் தேதிக்குள், அனைவருக்கும், ஹால் டிக்கெட் அனுப்பப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹால் டிக்கெட் பின்புறம், விண்ணப்பத்தில், மொழிப்பாடத்தை குறிப்பிடாமல் இருந்தால், தேர்வு அறையில் தேர்வு செய்து, ஓ.எம்.ஆர்., ஷீட்டில் பதிவு செய்ய வேண்டும். இரண்டாம் தாள் தேர்வில், விருப்பப் பாடத்தை மாற்றி எழுதியிருந்தால், விடைத்தாளில் சரியாக எழுத வேண்டும் போன்ற முக்கிய அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட, அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் அமைப்புகள் நடத்தும் அனைத்து தேர்வுகளும், பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நடக்கும். ஆனால், டி.இ.டி., தேர்வு, வியாழக்கிழமை நடக்கிறது.
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறும் போது, ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களில் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பல்வேறு தேர்வுகளை நடத்த, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, வேறு வழியின்றி, வியாழக்கிழமை நடத்துகிறோம். ஆகஸ்டில் நடத்தினால், மேலும் கால தாமதம் ஏற்படும்&' என்றனர்.
டி.இ.டி., தேர்வுக்கு, "கீ-ஆன்சர்&' வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. விடைகளில் வரும் ஆட்சேபங்களைப் பார்த்த பின், இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிடவும் டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.
தொடக்கக் கல்வி துறையில்  மாநில அளவில்

பதவி உயர்வு கோரியும்  ஒன்றிய அளவில் பதவி உயர்வுக்கு 

தடை கோரியும் பணி மாறுதல் G.O. க்கு  சென்னை 

 உயர்நீதி மன்றத்தில் 18.6.2012 ல் வழக்கு 

தாக்கல் செய்யப்பட்டுள்ளது   முடிவு 21.06.2012 ல் தெரியும்  .தங்கள்  ஆதரவை 9443464081   க்கு தெரியப்படுத்தவும் 

CCE - கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிடுதல் - அறிக்கை சமர்பித்தல் குறித்த செயல்முறைகள்

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை - பார்வை அறிக்கை படிவம்...
சென்னை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் ந.க.எண். 796 / ஈ2 / 2012 , நாள். 15.06.2012 
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பாக தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்கள் தற்பொழுது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் வகுப்புகளை இக்கல்வியாண்டில் கையாண்டு வருகின்றனர்.
இம்முறையினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் வலுவூட்டதல் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.எனவே அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், மெற்றிக் பள்ளி ஆய்வாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனைவரும் 2012 ஜூன் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களில் ஐந்து பள்ளிகளுக்கு சென்று தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு நடைமுறைப்படுத்தும் முறையினை உற்றுநோக்கி, இம்முறையினை செயல்படுத்தும் பொழுது ஆசிரியர்களுக்கு எழும் ஐயங்களையும், இடர்பாடுகளையும் கண்டறிந்து அவற்றை அறிக்கையாக தயார் செய்து அவ்வறிக்கையினை ஒன்றிய மேற்பார்வையாளர்கள் மூலம் 22.06.2012 அன்று தனி நபர் மூலம் படிவங்களின் தொகுப்பினை முதல்வர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அவர்களிடம் சமர்பிக்கவ்வும், சமர்ப்பித்தற்கான அறிக்கையினை அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீக்கம்


இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று நீக்கியுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களைப் போல இடைநிலை ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த மனுவில், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று 7.3.2012 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், இது 15.12.2011 தேதியன்று இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். எனவே, இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியரர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து, இது குறித்து தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில், மதுரை கிளை நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை தாக்கல் செய்ததோடு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7,903 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தது.
தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி கே. வெங்கட்ராமன், வழக்குத் தொடர்ந்துள்ள 2 பட்டதாரிகளுக்கான பணியிடங்களை மட்டும் காலியாக வைத்துவிட்டு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து
, அரசுத் தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுகூட்டல் செய்ய ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, இந்தாண்டு முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேவையான நடவடிக்கையை, தேர்வுத் துறை எடுத்துள்ளது. மாணவர்கள், விடைத்தாளின் நகல் கிடைக்கப்பெற்ற ஐந்து நாட்களுக்குள், "கோர் பேங்கிங் சர்வீஸ்' வசதி உள்ள, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏதாவது ஒரு கிளை மூலம் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள்கள் நகல்கள் கேட்டு
, விண்ணப்பித்து, நகல்கள் பெற்றவர்கள் மட்டுமே மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுகூட்டலுக்குத் தகுதியானவர்கள். ஒரு பாடத்திற்கு மேல் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல், கட்டணத் தொகையையும் தனித்தனியாக செலுத்த வேண்டும்.