PAGEVIEWERS

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தமிழக அரசுக்கு பதில் அளிக்க அவகாசம் அளித்து ஒத்திவைப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுகீட்டை ரத்து செய்யக் கோரித் தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி
இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் சார்பில், பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறைக்கு மாறுதல் பெற்றாலும் அவர்களின் CPS க/கு எண்ணை மாற்றம் செய்ய தேவையில்லை.

மாற்றம் செய்ய வேண்டியதற்கான வழிமுறைகள்:-
1. பழைய பணியின் நியமன ஆணை
2. கணக்குத்தாள் நகல் 
3. மாறுதல் பெற்ற பணியின் DDO மூலம் கடிதம்.
குறிப்பு: DDO மூலம் அனுப்பும் கடிதத்தில் பழைய பணியில் பணிபுரிந்த DDO CODE மற்றும் EXTENSION(EXTN)ஐ குறிப்பிட வேண்டும். அதேபோல் மாற்றம் செய்ய வேண்டிய DDO CODE மற்றும் EXTENSION(EXTN)ஐ குறிப்பிட வேண்டும்.

புதியதாக நியமனம் பெற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட எண் (CPS NO.) ஒதுக்கீடு செய்ய மே 2015 வரை கால அவகாசம் வழங்கி அரசு உத்தரவு

அரசாணைக்கு (எண். 165 கல்வி. 15.10.14) திருத்தம் அளித்து புது அரசாணை (எண். 68.கல்வி். 25.03.15) பெறப்பட்டுள்ளது..

1987 வரை 10 வகுப்பு கல்வித் தகுதியுடன் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து, ஏதேனும் ஒருசில பாடங்களில் தோல்வி அடைந்து, 1987 க்கு பிறகு பயிற்சியை முடித்தவர்களைப் பொருத்தவரை அவர்களும் +2 முடித்ததாகக் கருதி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறும் வகையில் ஏற்கெனவே வெளியிட்ட அரசாணைக்கு (எண். 165 கல்வி. 15.10.14) திருத்தம் அளித்து புது அரசாணை (எண். 68.கல்வி். 25.03.15) பெறப்பட்டுள்ளது

தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!.....


சென்னை: தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 15 மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வி துறை செயலாளர் சபிதா பிறப்பித்துள்ளார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் விவரம் வருமாறு: அடைப்பு குறிக்குள் முன்பு வகித்த பதவி குறிப்பிடப்பட்டுள்ளது.
1. விஜயக்கண்ணு (மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

எமது பள்ளி --டாட்டா கிப்சன்


TATA - திருச்சி - வையம்பட்டி -புதிய ஒன்றிய கிளை துவக்க விழா 

நாள் ; 28 - 03- 2015   மாலை  5.15 மணி 

தலைமை ; திரு .வை.விஜயகுமார் -
                              திருச்சி மாவட்ட செயலாளர் 

சிறப்பு விருந்தினர் ; 1.ந .கார்த்திகையன் 
                                                  -மாநில தலைவர் 

                                          2. திரு.செ .கிப்சன் -       

                                                  பொதுசெயலாளர்

            மற்றும்  மாநில , மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்கள்

ஆசிரியர்கள் பிரச்சனைக்கு காரணம் அரசா? அதிகாரிகளா?


தமிழக பட்ஜெட் : பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி நிதி

தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி, வேளாண்துறைக்கு ரூ.6 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் :107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி  நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசுப் பள்ளிகளில் 100% கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளன.பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டாட்டா மாநில செயற்குழு நாள் 21-3-2015...

















தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள், 1989 - இடைநிலை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை குறித்து திருத்திய ஊதிய விகிதங்கள் - திருத்திய ஆணை வெளியீடு

டாட்டா மாநில செயற்குழு தீர்மானம் நாள் 21-3-2015







ஜாக்டா. கூட்டமைப்பு கூட்டம் 22.03.2015








ஜாக்டா உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு செய்தி இன்றைய பத்திீரிகைகளில் தீன இதழ்.தி இந்து.தினமலர் உள்ளிட்ட நாளேடுகளில் வந்துள்ளன....
ஆசிரியர் பேரினமே திரள்வீர் கோரிக்கைகளை வென்றெடுப்போம். ஏப்ரல்-12 ல் சென்னையில் ஒன்றிணைவோம்.உண்ணாவிரதத்தில் பங்கேற்போம் அரசின் கவனத்தினை ஈர்ப்போம். வெற்றிப் பெறுவோம் பி.கே.இளமாறன்- ஜாக்டா....
 
 

தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ முன்னிட்டு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.002284/பி.சி.3-1/2015, நாள்.18.03.2015ன் படி தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ முன்னிட்டு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும்
உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

TATA - தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் - மாநில செயற்குழு கூட்டம்


Pri CRC

>22.11.14 take leave with in 22-05-15
>06.12.14, take leave with in 06-06-15
>13.12.14, take leave with in 13-06-15
>03.01.15 take leave with in 03-07-15
>28.02.15 take leave with in 28-08-15
>14.03.15. take leave with in 14-09-15
TATA - தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் - மாநில செயற்குழு கூட்டம் 

இடம் ; திருச்சி  மாவட்டம் -
 துரையூர் - பேருந்து நிலையம் அருகில் - ஜாய் மகால்

நாள்  ; 21.03 . 2015   - சனிக்கிழமை 

நேரம்  ;  காலை  10.00 மணி 
 
பொருள் ;-
1.நீதியரசர் .திரு.வெங்கடாசல மூர்த்தி  அவர்கள் நமக்கு அனுப்பி உள்ள கடிதம் நாள் 8.3.15 .குறித்து 
 
2. 2800 ல் உள்ள உறுப்பினர்கள் விபரம்  நீதிமன்ற வகைக்கு  XL படிவத்தில் A4 தாளில் பிரதி எடுத்து இரண்டு நகல் கொண்டு வர வேண்டும் இது மிக மிக அவசரம் ஏன் என்றால் ஊதிய வழக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளது. 
 
3.  அனைத்து மாவட்ட , வட்டார  பொறுப்பாளர்களும் உறுப்பினர் சந்தா படிவங்களுடன் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம் -
 
4. மற்றும் பல முக்கிய கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் --
-- மாநில அமைப்பு

அரசாணை எண்.62ல் குறிப்பிடப்பட்டுள்ள ஈடுசெய்யும் விடுப்பு குறித்த அரசாணை 2218 நாள் 14.12.81 (பொதுத்துறை)

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் ஊழல் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி வழக்கு ....

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரும் மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை
உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த லினட் அமலா சாந்தகுமாரி இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மனு விவரம்: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவல் அரசு நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக 2007இல் நியமிக்கப்பட்டேன். எம்பில் படித்துள்ளதால் உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளியில்
பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற எனக்குத் தகுதி உள்ளது. என்னைவிடத் தகுதி குறைவான பலரும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனால் எனக்கு பதவி உயர்வு அளித்து தூத்துக்குடிக்கு இடமாறுதல் அளிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் தடையில்லாச்சான்று
அளிக்குமாறு அறிவுறுத்தினர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு இடமாறுதல் பெறுவதற்காக 2014 மே, ஜூன் மாதங்களில் கலந்தாய்வில் கலந்து கொண்டேன்.
எனக்கு இடமாறுதல் கிடைக்கவில்லை. ஆசிரியர் பணியிடமாறுதல் கலந்தாய்வில் பெரும்பாலான காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. இதனால் உண்மையான
காரணங்களுக்காக இடமாறுதல் கோருபவர்களுக்கு மாறுதல் கிடைக்காமல் போகிறது.
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மாவட்டத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலர் அதை
முன்னணி பத்திரிகைகள் அல்லது பிரத்யேக இணையதளங்களில் வெளியிடவேண்டும். சட்டப்படியான இந்த நடைமுறையைப் பின்பற்றினால் தான் வெளிப்படையாக
இடமாறுதல் நடைபெறும். இந்த நடைமுறை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுகளில் பின்பற்றப்படவில்லை. மாறாக நிர்வாகத் தேவை என்ற பெயரில் காலிப்பணியிடங்கள்
மறைக்கப்பட்டு அவை அரசியல்வாதிகளின் நிர்பந்தத்தின் பேரில் நிரப்பப்படுகின்றன.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அரசு இணையதளம் மற்றும்
முன்னணி பத்திரிகைகளில் வெளியிடவும் உத்தரவிடவேண்டும். தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் காலிப்பணியிடங்களை மறைத்து நடைபெறும்
லஞ்சஊழல் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர்,

இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

NPS (CPS )யில் முதல் தனியார் மயம்

PFRDA letter no /201310/CRTB/1,Date 30.04.2013 click here

01.04.2004 முதல் மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் புதியபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் மேலும் ஒரு அபாயகரமானமுடிவினை இடைக்கால  ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டுஆணையம் (PFRDA) எடுத்துள்ளது.இது நாள் வரை TRUSTEE BANK- (அறங்காவலர் வங்கிஆக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனவங்கியான BANK OF INDIA  ஓய்வூதிய நிதியனை கையாண்டு வந்தது.

பள்ளிக்கல்வி - 8 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்து உத்தரவு

இந்த கல்வி ஆண்டுக்கான Upp.pri. CRC நாட்கள் பின்வருமாறு. 13.09.2014 22.11.2014 13.12.2014 24.01.2015 14.02.2015, 28.02.2015 14.03.2015. ஈடு செய் விடுப்பாக அனுபவிக்கலாம். இந்த கல்வி ஆண்டுக்கான Pri CRC நாட்கள் பின்வருமாறு. 06.09.2014 22.11.2014 06.12.2014 13.12.2014 03.01.2015 28.02.2015 14.03.2015. இதில் 6.9.14 CRC மட்டும் ஆறுமாத காலத்திற்கும் மேல் ஆகிவிட்டதால் அந்த நாளை அனுபவிக்கத இயலாது. மீதம் உள்ள 6 நாட்களையும் ஈடு செய் விடுப்பாக அனுபவிக்கலாம்.

GO.NO ;62 Date 13.3.2015 --CRC LEAVE
13.09.2014
22.11.2014
13.12.2014
24.01.2015
14.02.2015,
28.02.2015
14.03.2015.
ஈடு செய் விடுப்பாக அனுபவிக்கலாம்.


இந்த கல்வி ஆண்டுக்கான Pri CRC நாட்கள் பின்வருமாறு.
06.09.2014
22.11.2014
06.12.2014
13.12.2014
03.01.2015
28.02.2015
14.03.2015.
இதில் 6.9.14 CRC மட்டும் ஆறுமாத காலத்திற்கும் மேல் ஆகிவிட்டதால் அந்த நாளை அனுபவிக்கத இயலாது. மீதம் உள்ள 6 நாட்களையும் ஈடு செய் விடுப்பாக அனுபவிக்கலாம்.





  

   


என் அன்பிற்கும் மரியாதைக்குரிய ஆசிரியர் சமுதாயமே. அனைவருக்கும் எந்தன் பணிவான வணக்கம். ,,,,???


கடந்த ஜாக்டோ போராட்டத்தில் கலந்தவர்களுக்கு எந்தன் நன்றிகள்.
ஏனெனில் இக்கேள்வி உங்களுக்கு தான்.
எத்தனை இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு பற்றி பேசப்பட்டது? ???
எத்தனை தலைவர்கள் உண்மையாக இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு கலைய வேண்டும் என்று ஆணித்தரமாக இருந்தார்கள்? ????
ஏன் நிறைய இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் ஓரங்கட்டப் பட்டனர் ????
சபிதாவை மாற்றம் வேண்டும் என்பது போராட்டத்தின் கோரிக்கை என்று கூறிய பொழுது அங்கு இருந்தவர்கள் ஏன் அதை எதிர்த்து குரல் கொடுக்க வில்லை? ???
சபிதாவை தெரிந்தவர்க்கு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு பற்றி தெரியாமல் போனது ஏன்? ??
கூட்டம் கூட்டி அவர்கள் நலனை காக்க இன்னும் எத்தனை நாளைக்கு நீங்கள் அவர்கள் பின் செல்ல போகிறீர்கள்? ???
பல பட்டதாரி ஆசிரியர்கள் பகிரங்கமாக பேசுகிறார்கள் அவர்கள் 4200 பெற்றால் நமக்கு என்ன மரியாதை என்று, ஆனால் நம்மிடம் ஒற்றுமை என்கிறார்கள். இன்னும் எத்தனை நாள் இப்படி ஏமாற போகிறீர்கள்? ????
உங்களுக்கு என்று உண்மையாக உழைக்க ஒரு சங்கம் கூட தமிழகத்தில் இல்லையா? ???
இடைநிலை ஆசிரியர் இனமே உனக்கு என்று உலகில் தனி இடம் உண்டு.
ஒழுக்கம், ஆரம்ப கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பநலம் போன்றவற்றை கற்று தரும் நம்மை தொடர்ந்து ஏமாற்றும் அவர்களை ஏன் எதிர்த்து கேள்வி கேட்க தயங்குகிறீர்கள்? ???
நாளை உன் மனக்குமுறல் களை வெளியே கொண்டு வா. உன் நண்பர்களிடம் பேசுங்கள், உண்மை நிலை எடுத்து சொல்லுங்கள், உனக்காக உழைக்க காத்திருக்கும் சங்கத்தை நோக்கி காலடி எடுத்து வையுங்கள்.
நாளைதான் உன் சகாக்களை கூட்டமாக பார்க்கும் கடைசி நாள்.
ஓங்கட்டும் நமது குரல் உரிமைக்காக.
வெற்றி நம்வசம் ஆகட்டும். நாளை நமதே. வெற்றியும் நமதே.
இது உரிமைப் போர், இடைநிலை ஆசிரியர்கள் தகுதிப் போர்.
இதில் நாம் வெல்வது உறுதி.
டாட்டா மட்டுமே இன்றைய சூழலில் இடைநிலை ஆசிரியர்களின் உண்மை நண்பன். இணைந்திடுவோம் டாட்டா வில்.

Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 - Recommendations of the Grievance Redressal Cell - Dispensation of Higher Start of Pay for the posts of Graduate Junior Assistants / Typist and Record Clerks orders issued -

TATA - தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் - மாநில செயற்குழு கூட்டம் 

இடம் ; திருச்சி  மாவட்டம் -
 துரையூர் - பேருந்து நிலையம் அருகில் - ஜாய் மகால்

நாள்  ; 21.03 . 2015   - சனிக்கிழமை 

நேரம்  ;  காலை  10.00 மணி 
 
பொருள் ;-
1.நீதியரசர் .திரு.வெங்கடாசல மூர்த்தி  அவர்கள் நமக்கு அனுப்பி உள்ள கடிதம் நாள் 8.3.15 .குறித்து 
 
2. 2800 ல் உள்ள உறுப்பினர்கள் விபரம்  நீதிமன்ற வகைக்கு  XL படிவத்தில் A4 தாளில் பிரதி எடுத்து இரண்டு நகல் கொண்டு வர வேண்டும் இது மிக மிக அவசரம் ஏன் என்றால் ஊதிய வழக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளது. 
 
3.  அனைத்து மாவட்ட , வட்டார  பொறுப்பாளர்களும் உறுப்பினர் சந்தா படிவங்களுடன் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம் -
 
4. மற்றும் பல முக்கிய கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் --
-- மாநில அமைப்பு

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு தற்போது நிலை ......


நமது ஊதிய பிரச்சினை யில் 10 I A S ,அலுவலர் கள் ஊதியம் மாற்றி அமைக்க முடியாது என்ற நிலையில் அரசு கடிதம் 60473/cmpc/2014. வெளியிட பட்டுள்ளது .அதை ஏதிர்த்து டாட்டா சங்கம் சார்பில் மீண்டும் நீதிமன்றத்தில் ஜனவரியில் வழக்கு தாக்கல் செய்ய பட்டது .அதில் 5000 பேரின் பெயர் பட்டியலில் மற்றும் "ஊதியம் குறை தீர்க்கும் ஆணையம் " தலைவர் நீதியரசர் திரு .வெங்கடாசல மூர்த்தி அவர்களிடம் மனு செய்து 2 
 மாதங்கள் கழித்து நினைவூட்டும் கடிதம் அனுப்பி அதன்பின் மார்ச்சு மாதம் 16 தேதி க்கு பின்பு வழக்கை மீண்டும் தாக்கல் செய்திட வழிகாட்டுதல் வழங்கப்பட்டது .
தற்போது ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி யும் "ஊதியம் குறை தீர் ஆணையர் தலைவர் அவர்களிடம் இருந்து டாடா பொது செயலாளர் கிப்சன் அவர்களுக்கு 8.3.15.அன்று கடிதம் வந்து உள்ளது .அது நமது மூத்த வழக்கறிஞர் அவர்களிடம் கொடுக்க பட்டுள்ளது .மேலும் நமது சங்க பொது குழு 21-3-2015 நடக்க இருப்பதால் 5000 பேரின் பெயர் பட்டியல் பொது குழு வில் முழுமையான தகவல் தயாரித்து ஏப்ரல் முதல் வாரத்தில். மீண்டும் வழக்கு ஊதியம் குறை தீர்வு ஆணையம் நம் ஊதியம் பிரச்சினை க்காக ஓய்வுபெற்ற நீதி பதி தலைமை யில் அமைத்து 10 IAS அலுவலர் அறிக்கைகள் மாற்றி எழுத பட்டு ஊதிய மாற்றம் டாடாசங்கம் முலம் 9300+4200 கிடைக்கும் .இந்த மாற்றம் நம்மால் மட்டுமே முடியும் வேறு எவராலும் முடியாது...

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 31.08.2014ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்து ஆசிரியரின்றி உபரியாக உள்ள பணியிடங்களை சரண் செய்ய இயக்குனர் உத்தரவு

தேர்வு பணிகளுக்கான கையேடு - மார்ச் 2015

TATA - தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் - மாநில செயற்குழு கூட்டம் 

இடம் ; திருச்சி  மாவட்டம் -
 துரையூர் - பேருந்து நிலையம் அருகில் - ஜாய் மகால்

நாள்  ; 21.03 . 2015   - சனிக்கிழமை 

நேரம்  ;  காலை  10.00 மணி 

 அனைத்து மாவட்ட , வட்டார  பொறுப்பாளர்களும் உறுப்பினர் சந்தா படிவங்களுடன் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம் - மாநில அமைப்பு

வருமான வரி: பள்ளிகளுக்கு கெடு!!

வரும் 31ம் தேதிக்குள், வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், ஒரு நாளைக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்' என, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, கல்வித் துறை
எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான வருமானவரிக் கணக்கை, இம்மாத இறுதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, வருமானவரித் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப் பாட்டிலுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்,

அனைத்து சட்ட உதவிகளையும் டாட்டா சங்கம் செய்திடும்

    • குரல் கொடுப்பார் யாருமுண்டா!
      ஆசிரியர்குரல் நண்பர்களே!சட்ட வல்லுனர்களே!பத்திரிக்கையாளர்களே !முகனூல் வல்லுனர்களே!
      ஆசிரியர்குரல் கடந்த 4 ஆண்டுகளாக ஆசிரியர்கள்,ஆசிரிய இயக்கங்கள் ,அரசுப்பள்ளிகளைப் பற்றிய செய்திகளை அளித்து வந்துள்ளது.
      இன்று காலை ஆசிரியர்குரல் பகிர்ந்தசெய்தி
      ஆசிரியர்களே!
      தமிழக ஆசிரிய சங்கங்களின் சொத்துக்கள்,அறக்கட்டளைகள்,வைப்பீடுகள் போன்றவற்றிற்கு எந்த சங்கங்களும் முறையான கணக்கினை தெரிவிப்பதில்லை.
      உறுப்பினர்களிடம் போராட்டத்தின்போது வசூலிக்கப்படும் பணத்திற்கும்கணக்கு வழக்கில்லை.சில ஒன்றிய ,மாவட்டபொறுப்பாளர்கள் ஏதும் செய்யாமலே இதனை ஏப்பம் விட்டுவிடுகின்றனர்.
      ஒன்றியத்தில் ,மாவட்டத்தில் ,மானில அளவில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்...
      இதற்கு ஒரு சங்கத்தவர் எதிர்ப்பு தெரிவித்தனர்.எமது நிலையை தெளிவு படுத்தினோம்.
      எமது பதில் கருத்தாக ஆசிரியர்குரல் இனி உளறல் குரல் என அவர் அடித்த கமெண்ட்டினை பதிவிட்டொம்.
      அதற்கு அவர் எம் மீது வழக்கு போடப்போவதாக கூறுகிறார்.
      ஆசிரியர் குரல் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரம் வழங்காவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும்
      மேலும் Eilaina yenga federation members yellakittayum solli asiriyar kural account ah spam nu fb la complaint panna vachu block panna poren.
      ஆசிரியர்குரல் அருணாசலம்


பள்ளிக்கல்வி - 2012-13ம் ஆண்டில் ஆசிரியர் தெர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்த நாள் முதல் முறையாண நியமனமாக முறைபடுத்தி ஆணை வழங்கி உத்தரவு

வருந்துகிறோம்!!!
sad க்கான பட முடிவு  திருச்சி மாவட்டம், தமிழ்நாடு அனைத்து  ஆசிரியர் சங்கம் , மண்டல தலைவர் திரு .புகழேந்தி அவர்களின் மாமியார்  அவர்களின் மறைவிற்கு இயக்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

இன்றைய 08.03.2015 ஜாக்டோ போராட்டம் ? ஏமாற்றத்தில் இடைநிலை ஆசிரியர் சமுதாயம் !

இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற பேரணியில் மாதம் ரூ .10000/= பாதிப்பில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர் பாதிப்பு பற்றி விளக்கமாக எந்த மாவட்டத்திலும் பேசவில்லை /பத்திரிக்கை செய்திகளுக்கும் இந்த கோரிக்கை பற்றி விரிவாக பேட்டி கொடுக்க பட வில்லை இப்படி இருந்தால் நமது கோரிக்கைகளை இவர்கள் எப்படி வென்று தருவார்கள் ? மேலும் நான்கு சுவருக்குள் அரசுடன் நடக்கும் பேச்சு வார்த்தையில் எப்படி இவர்கள் நமக்காக முழு மனதுடன் பேசி பெற்று தருவார்கள் ? மேலும் இவர்கள் உண்மை நிலை வெளிவர வேண்டும்  அரசிடம் சமரசம் செய்திடாமல் கடந்த 7 வருடமாக
 ஏமாற்றப்பட்டது போல் தற்போதும் ஆகி விட கூடாது என்பதால் தான் ஜாக்டா உருவாக்க பட்டு உள்ளது ,மேலும் இவர்கள் நம் முன்னேயே பேச வில்லை இங்கு பேசினால்தானே உளவு காவல் துறை அரசிடம் எடுத்து செல்லப்படும்  இடைநிலை ஆசிரியர் சமுதாயம் இழந்துள்ளது அதிகம் .உங்கள் திறமையில் இந்துல்லத்தை பெற்று தருவதில் கவணம் செலுத்துங்கள் ......

நமது முக்கிய கோரிக்கை 3 மட்டுமே 

1.இடைநிலை ஆசிரியர் ஊதியம்  .2.CPS ரத்து . 3.தொகுப்பூதிய பணி நாள். ஏற்க பட வேண்டும்.
மேலும் டாட்டா வின் சட்ட போராட்டம் மிக வலுவாக தொடருகிறது ... மிக விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் .
மேலும் முக நூல் பக்கத்தில் டாட்டா சங்கத்தையும் என்னையும் எள்ளி  நகையாடுகிறவர்கள் எவரும்
 பாதிப்புக்கு உள்ளான இடைநிலை ஆசிரியர்கள் அல்ல என்பதை கருத்தில் கொண்டு சிந்திப்பீர் !!!
தமிழகத்தில் புதிதாக டாட்டா சங்கத்தின் தலைமயில் ஜாக்டா என்ற பெயரில் 15 சங்கங்களை கொண்ட அமைப்பு உருவாக்க பட்டுள்ளது. இதன். முதல் கூட்டம் 5-3-15 அன்று நடைபெற்றது .மேற்படி கூட்டமைப்பு சார்பாக 5.3.15 தலைமை செயலகம் சென்று மனு கொடுத்தனர்  .இந்த கூட்டமைப்பு பணியில் உள்ள. தலைவர்கள் மூலம் உருவான சங்கம் ஆகும். இந்த கூட்டமைப்பில் பணி ஓய்வுபெற்றவர் இல்லை .டாட்டா சங்கத்தின் நோக்கம் சட்ட போராட்டம் மற்றும் கள போராட்டம் இரண்டுமே இருந்தால் தான் நமது கோரிக்கை வெல்ல முடியும் .
1.இடைநிலை ஆசிரியர் ஊதியம் 
.2.CPS ரத்து .
3.தொகுப்பூதிய பணி நாள். ஏற்க பட வேண்டும்.
கோரிக்கைகள்  3 மட்டுமே  
ஜாக்டோ போல் 15 அல்ல 25 அல்லவே
அல்ல...

கோரிக்கைகளை நிறைவேற்ற ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்: வாசன் அறிக்கை

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 வருடமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.


தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 6–வது ஊதியக்குழுவில் திருத்தம் மேற்கொண்டு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் அரசு ஆசிரியர்களுக்கான தர ஊதியம் ரூ.4,200ம், படி நிர்ணயம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.

தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் முதல்-அமைச்சர் தனி பிரிவில் JACTA மனு



 
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் தனி பிரிவில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டா)JACTA கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசில்
பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்போல், தமிழக அரசின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (சி.பி.எஸ்.) ரத்து செய்துவிட்டு, பழைய திட்டத்தை (ஜி.பி.எப்.) நடைமுறைப்படுத்த வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்ட அனைத்து நிலை ஆசிரியர்களையும் பணியில் சேர்த்த நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறையில் வழங்குவதுபோல, மாவட்ட அளவிலான கலந்தாய்வின் மூலம் பொதுமாறுதல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'ஜாக்டோ'விற்கு போட்டியாக 'ஜாக்டா' அமைப்பு மனு....

 
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, 'ஜாக்டோ' ஆசிரியர் அமைப்பினர், அறிவித்துள்ள நிலையில், 'ஜாக்டா' அமைப்பினர், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில்,
மனு கொடுத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, ஆறாவது சம்பளக்
கமிஷன்படி, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, 15 கோரிக்கைகளை, நிறைவேற்றக்கோரி, 8ம் தேதி முதல் போராட்டம் நடத்தப் போவதாக, 'ஜாக்டோ' அமைப்பு அறிவித்துள்ளது. 'ஜாக்டோ' அமைப்பு, 28 ஆசிரியர் சங்கங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜாக்டா--கூட்டமைப்பில் உள்ள சங்கம்


1,தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் --
2,தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் -TATA.
3,தமிழ்நாடு ஆசிரியர் மன்றம்
4,தமிழ்நாடு கலை ஆசிரியர் கழகம்
5,தமிழ்நாடு பட்டதாரி இடைநிலை ஆசிரியர் பேரவை
6,தமிழ்நாடு தொழில் ஆசிரியர் நல சங்கம்
7,தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆசிரியர் சங்கம்
8,தமிழ்நாடு கைதொழில் கல்வி ஆசிரியர் சங்கம்
9,தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம்
10,தமிழக ஆசிரியர் மன்றம்
11,JSR,தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி
12,தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம் .
13,சென்னை மாநகராட்சி இடைநிலை ஆசிரியர் சங்கம்
14.ஒருங்கிணைந்த பள்ளி ஆசிரியர் சங்கம்
15,தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆசிரியர் பேரவை

அக இ - தொடக்க நிலை / உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "குழந்தைகளின் அடைவு குறித்து கலந்துரையாடல்" என்ற தலைப்பில் 14.03.2015 அன்று குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.

இரண்டு கோரிக்கைகள் மட்டும் வைத்த போராட்டம் என்றால் அதற்கு மறுகேள்வியே இல்லை.--டாடா வாழ்த்தி வரவேற்கும் ்...டாட்டா கிப்சன் ்...

போராட்டம் வேண்டாம் என்றோ, போராட்டத்திற்குப் போக வேண்டாம் என்றோ யாரிடமும் சொல்லவில்லை. போராட்டம் வேண்டாம் என்று நாங்கள் ( இளைய தலைமுறை) சொல்லவில்லை. போராட்டத்தின் முக்கிய அம்சமாக என்ன உள்ளது, என்ன இருக்க வேண்டும் தற்போது என்பது கேள்வியாக அனைவரது மனதிலும் உள்ளது. 2800 கிரேடு பேவில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் இந்த 6 வது ஊதியப் பரிந்துரை முழுவதும் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அடுத்த ஊதியக்குழுவில் இன்னும் மாபெரும் இழப்பு. இதைக் கருத்தில் கொண்டு இ. ஆ ஊதியம் மற்றும் cps cancel ஆகிய இரண்டு அதிமுக்கிய கோரிக்கையை மட்டுமே வைத்து நம் தொடக்கப்பள்ளி சங்கங்கள் மட்டும் இணைந்து ( அரசு கூற்றின்படி இ.ஆ 1,00,000 பேர்+ ) போராட்டம் செய்திருக்கலாமே? என்பது பலரது கேள்வி. அதைவிடுத்து 15 கோரிக்கைகள்( உட்பிரிவு வேறு) எதற்கு? மற்றவர் கோரிக்கையும் பெற வேண்டியதுதான், ஆனால் அதிமுக்கியமான கோரிக்கைகளை அதுவும் இத்தனை வருடம் இதோ, அதோ என்று ஏமாற்றிய கோரிக்கைகளை மட்டும் வைத்திருக்கலாமே?