PAGEVIEWERS


அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் தினம் 1 மணி நேரம் ஆய்வு செய்தால் 6 மாதத்தில் பெரிய மாற்றம் ஏற்படும்

அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் தங்களது துறை சம்பந்தமாக தினமும் 1 மணி நேரம் ஆய்வு செய்தால் 6 மாதத்தில் மாற்றம் ஏற்படும் என்று கோவையில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை துவக்கி வைத்து கிரண்பேடி கூறினார்.
நாட்டிலிருந்து ஊழலை ஒழிக்கும்

பொருட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு புதுமைகளை மத்திய அரசு புகுத்தி வருவதாக மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக, லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக நாராயணசாமி அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊழல் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு, 2011ம் ஆண்டிலேயே லோக்பால், மற்றும் லோக்ஆயுக்தா மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாது, ஊழல் குறி்த்து தகவலளிப்போருக்கு பாதுகாப்பு அளிக்கும் மசோதா உள்ளிட்ட மசோதாக்களையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டிலிருந்து ஊழல் ஒழிப்பு என்பது ஒருநாளில் முடிந்துவிடக் கூடிய வேலை அல்ல என்றும் இது ஒரு தொடர் நடவடிக்கை என்றும், அப்பணியை மத்திய அரசு செவ்வனே செய்து வருவதாகவும் நாராயணசாமி அதில் குறிப்பிட்டுள்ளார்

தொடக்கக் கல்வி - வழக்கு - 01.01.1971-க்கு முன்னர் இடைநிலை ஆசிரியர் கல்வி தகுதி பெற்று இளநிலை ஆசிரியராக பணிபுரிந்து காலத்தை நியமன் நாள் முதல் இடைநிலை ஆசிரியராக பணிகாலமாக கருதி பணப்பலன் கோருதல்.






நோய் எதிர்ப்பு சக்தி தரும் உலர் திராட்சை

என்னதான் வைட்டமின் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டாலும் இயற்கை குணம் வாய்ந்த பழங்களுக்கு நிகர் எதுவும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை... அந்த வகையில் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

புதிய ரூ.1000 நோட்டு விரைவில் வெளியீடு


இந்திய ரூபாய்க்கு தனி சின்னம் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து, புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் அந்த சின்னம் அச்சிடப்படுகிறது. ஏற்கனவே 10, 50, 100 ரூபாய் நோட்டுகள் சின்னத்துடன் வெளியிடப்பட்டு விட்டன. தற்போது புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியாக உள்ளது. இது பற்றி, ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: ரூபாய் சின்னம் அச்சடிக்கப்பட்ட புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும்.

மகாத்மாகாந்தி,2005 வரிசையில் ‘எல்’ வரிசையாக இந்த நோட்டு வெளியாகிறது. நோட்டின் முன்பக்கம் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கையெழுத்து இருக்கும். பின்புறம் 2012 என ஆண்டு குறிக்கப்பட்டிருக்கும். இந்த நோட்டு மேலும் சில பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 


அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு நாளை ஈரானில் ஆரம்பம் பிரதமர் இன்று பயணம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (29) ஈரானுக்கு
 விஜயம் செய்கிறார். அணி சேரா அமைப்பின் 16 வது உச்சி 
மாநாடு நாளை 30 ஆம் திகதி நடைபெறுகிறது. இதில்
 கலந்துகொள்ளும் முகமாகவே ஜனாதிபதி இன்று அந்நாட்டிற்கு
 பயணமாகின்றார்.அணி சேரா உச்சி மாநாட்டில் ஜனாதிபதி
 அவர்கள் உரை நிகழ்த்தவுள்ளார்.



கல்வித் தரத்தில், தொடர்ந்து பல ஆண்டுகளாக, பின்னடைவில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர், டி.இ.டி., தேர்வில், அதிக இடங்களைப் பிடித்து, சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 25ம் தேதி, ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) முடிவு வெளியிடப்பட்டது. 6.72 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவு குறித்த புள்ளி விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், மாவட்ட வாரியாகவும், ஆண், பெண் வாரியாகவும் அலசி ஆராய்ந்து, நேற்று வெளியிட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், எப்போதுமே கடைசி இடங்களில் அணி வகுக்கும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்கள், டி.இ.டி., தேர்வில் அபார சாதனை படைத்துள்ளன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வரே, அதிக இடங்களைப் பிடித்து, சாதனை படைத்துள்ளனர்.

கல்வியில் சிறந்து விளங்கும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, மிகக் குறைந்த இடங்களே கிடைத்துள்ளன.

சேலம், "டாப்':


இடைநிலை ஆசிரியருக்கான, டி.இ.டி., முதல் தாள் தேர்வில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில் இருந்து, 121 பேர் தேர்வு பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், 116 பேர்; வேலூரில், 99; திருவண்ணாமலையில், 65; விழுப்புரம் மாவட்டத்தில், 77 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதுவே, கன்னியாகுமரி மாவட்டத்தில், 26 பேர், நெல்லையில், 62 பேர், தூத்துக்குடியில், 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மிகக் குறைவாக, நீலகிரி மாவட்டத்தில், நான்கு பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த நான்கு பேருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மற்ற மாவட்டங்களில், சராசரியாக, 25 பேர் வீதம் தேர்ச்சி 
பெற்றனர். தலைநகர் 
சென்னையில், 69 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
கணிதத்தில் கடலூர்:


பட்டதாரி ஆசிரியருக்கான, டி.இ.டி., இரண்டாம் தாள், கணிதம் - அறிவியல் பாடங்களில், கடலூர் மாவட்டத்தில் இருந்து, 70 பேர் தேர்ச்சி பெற்று, அபார சாதனை படைத்தனர். இதற்கு அடுத்த இடங்களில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 23 பேர்; தர்மபுரியில், 22 பேர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 தேர்வில், முதலிடத்தை பிடிக்கும் விருதுநகர் மாவட்டத்தில், கணிதம் - அறிவியல் பாடத்தில், ஒரே ஒரு பெண் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளார். ராமநாதபுரத்தில்இரண்டு பேர், தூத்துக்குடி, திருவாரூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து, தலா மூன்று பேர் தேர்ச்சி பெற்றனர்.
சமூக அறிவியலில்...:


டி.இ.டி., இரண்டாம் தாளில், சமூக அறிவியல் பாடத்தில், சேலம் மாவட்டமே முதலிடம் பிடித்தது. இந்த மாவட்டத்தில், 39 பேர் தேர்ச்சி பெற்றனர். 29 இடங்களைப் பிடித்து, கடலூர், தர்மபுரி மாவட்டங்கள், இரண்டாவது இடத்திலும்; 24 இடங்களைப் பிடித்து, விழுப்புரம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தப் பாடத்திலும், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அதிக இடங்களைப் பிடிக்கவில்லை. கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில், தலா, 11 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில், ஏழு பேர், விருது நகரில், 12 பேர், கோவையில் ஐந்து பேர் தேர்ச்சி பெற்றனர்.கடினமாக அமைந்த, டி.இ.டி., தேர்வில், வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அதிக இடங்களைப் பிடித்து சாதனை படைத்திருப்பதைக் கண்டு, கல்வித்துறை அதிகாரிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
"முட்டை' வாங்கிய சிவகங்கை :


டி.இ.டி., இரண்டாம் தாள், கணிதம் - அறிவியல் பாடத்தில், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் சொந்த மாவட்டமான சிவகங்கையில் இருந்து, ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் இருந்தும், ஒருவர் கூட 
தேர்வு பெறவில்லை. இந்தப் பாடத்தில், புதுக்கோட்டை, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் இருந்து, தலா ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இரண்டாம் தாள் தேர்வில், சமூக அறிவியல் பாடத்திலும்,நீலகிரி மாவட்டத்தில், ஒருவர் கூட தேர்வு பெறவில்லை. சிவகங்கை மாவட்டத்தில், இருவர் தேர்ச்சி பெற்றனர்.

இளைஞர்கள் அபார சாதனை:


டி.இ.டி., தேர்வில், 25 வயது முதல், 30 வரையிலான இளைஞர்கள், 77.81 சதவீத இடங்களை கைப்பற்றி, சாதனை படைத்தனர். தேர்ச்சி பெற்ற, 2,448 பேரில், 30 வயதிற்கு உட்பட்டோரின் எண்ணிக்கை, 1,905.இதில், 25 வயது முதல், 30 வயது வரையிலான இளைஞர்கள், படித்து முடித்து வெளியே வந்த வேகத்தில், தேர்வை சிறப்பாக எதிர்கொண்டு, சாதித்திருப்பது தெரிய வந்துள்ளது. தேர்வு எழுதிய, 40 முதல், 45 வரையிலான, 5,653 பேரில், 20 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.முந்தைய ஆட்சியில், அனைத்து வகை ஆசிரியருமே, மாநில பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இதனால், 50 வயதிற்கு மேற்பட்டவர் அதிகளவில் தேர்வு பெற்றனர். வயதான நிலையில் தேர்வு பெறும் ஆசிரியருக்கு, பணியில் ஈடுபாடோ, கல்வித்துறை அளிக்கும் பயிற்சிகளில், பிடிப்புடன் ஈடுபடவோ மாட்டார்கள் என்பது, பலரது கருத்து.

பேசும் படம்
Pesum Padam

 : திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் பகுதியைச்சேர்ந்தவர் ராஜா. பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன் (14). திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வருகிறார். சக மாணவர்கள் சிலரை கார்த்திகேயன் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்த ஆசிரியர் பிரபு, கார்த்திகேயனை பிரம்பால் அடித்தார். 

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு
வழிவகைகள் ஆராயப்படும்:
 பிரதமர்





 அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டு வருகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) பிரிவினருக்கு இடஒதுக்கீடு ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க உத்தரப் பிரதேச மாநில

ஓடும் ரயிலில் இருந்து ஆசிரியரை தூக்கி வீசி கொலை செய்த பயணிகள்

 Teacher Thrown Off Train Uttar Pradesh Dies
Dejected Qantas passengers stuck at...
உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி ஆசிரியர் ஒருவரை சக பயணிகளே கொலை செய்தனர்.
டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் மொராபாத்துக்கு காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கங்கா ஷரன் என்ற பள்ளி ஆசிரியர் பயணம் செய்தார்.
பயணத்தின்போது அவருக்கும் சில பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியது.
அப்போது ரயில் லக்னெளவில் இருந்து 370 கி.மீ. தொலைவில் உள்ள அம்ரோஹா ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
திடீரென பயணிகள் ஆசிரியர் கங்கா ஷரனை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டனர்.

தண்டவாளம் அருகில் விழுந்த அவர் அதே இடத்தில் பலியானார். அவரைத் தள்ளிவிட்ட பயணிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
லஞ்சம் தராத பயணியை தள்ளிவிட்ட ரயில்வே போலீசார்:
இந் நிலையில் மும்பையில் லஞ்சம் கேட்ட ரயில்வே போலீசாருக்கு பணம் தராத பயணியை போலீசாரே ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

வேலூரில் இரண்டு உதவி தொடக்க கல்வி அலுவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் கணியம்பாடி உதவி தொடக்க கல்வி அலுவலராக இருப்பவர் வெங்கடேசன்.

செவ்வாய் கிரகத்திலிருந்து மனிதக் குரலை அனுப்பிய கியூரியாசிட்டி


 Mars Rover Sends Back Human Voice Recording
NASAs Mars rover sends back stunnin...
பஸடேனா (கலிபோர்னியா): செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூமியிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட இந்தக் குரல், செவ்வாய்கிரகத்திலிருந்து நாசாவுக்குத் திரும்பியுள்ளது.
இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் முதல் சுவடு குரல் மூலம் பதிவாகியுள்ளது.
க்யூரியாசிட்டி தனது டெலிபோட்டோ கேமிராவில் எடுத்து அனுப்பியுள்ள புதிய படத்துடன் இந்த குரலையும் நாசா வெளியிட்டுள்ளது.
"க்யூரியாசிட்டி மூலம் பூமிக்கு நன்மைகள் கிடைக்கும். புதிய தலைமுறை விஞ்ஞானிகளும், விண்வெளி வீரர்களுக்கும் இது உந்துதாக இருக்கும். செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்த்தும் ஒரு விஷயமாக இது பார்க்கப்படுகிறது," என நாசா நிர்வாகி சார்லஸ் போல்டன் தெரிவித்தார்.
இந்தக் குரல் பதிவு மூலம் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இன்னும் ஓரடி முன்னோக்கி சென்றுள்ளது க்யூரியாசிட்டி.
க்யூரியாசிட்டி எடுத்து அனுப்பியுள்ள இந்தப் படத்தில் செவ்வாயின் மிகப்பெரிய மலை தெரிகிறது. படம் எடுக்கப்பட்ட இடத்திலிருந்து அதன் உச்சி 16.2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
அடுத்த சில தினங்களில் க்யூரியாசிட்டி செவ்வாயில் குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்க உள்ளது. அப்போது இன்னும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

CT ஸ்கான் மூளை மற்றும் இரத்தப் புற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

CT scan

CT ஸ்கான் என்று அழைக்கப்படும்.. computerised tomography ஸ்கான்

.. இளம் பராயம் தொடக்கம் அடிக்கடி செய்யப்பட்டு வந்தால்.. மூளை 

மற்றும் இரத்தப் புற்றுநோய் தோன்றுவதற்கான வாய்ப்பை அது 

அதிகரிக்கச் செய்வதாக... பிரித்தானிய நியூகார்சில் பல்கலைக்கழக

 ஆய்வொன்றில் இருந்து தெரிய வந்துள்ளது.

உடலில் ஏற்படும் உள்ளக காயங்கள்.. மற்றும் உள்ளக நோய்

செவ்வாய் கிரகத்திலிருந்து புதிய படங்களை அனுப்பியது கியூரியாசிட்டி விண்கலம்


 Nasa Unveils Mars Rover Curiosity
NASAs Mars rover sends back stunnin...
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்துக்கு நாசா ஆய்வு மையம் அனுப்பி வைத்திருக்கும் கியூரியாசிட்டி விண்கலமானது புதிய புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறது.
இப்புதிய புகைப்படத்தில் அங்குள்ள சிகரத்தின் படம் இடம்பெற்றுள்ளது. இதேபோல் பாறை ஒன்றையும் விண்கலம் படம்பிடித்திருக்கிறது. நாசா அனுப்பியிருக்கும் மவுண்ட் சார்ப் என்ற இந்த சிகரம் முழுவதும் மண்குவியல்களால் ஆனது.