PAGEVIEWERS

முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

** புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் (அகஇ), கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலராக மாறுதல்

** நாகப்பட்டிணம் முதன்மைக் கல்வி அலுவலர் (அகஇ), திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலராக மாறுதல்

** திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர் (அகஇ), தொடக்கக் கல்வி துணை இயக்குனராக மாறுதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு அறிக்கை மீதான நிதித்துறை தீர்மானம் - அரசிதழில் வெளியீடு

டாடா சங்கம் சார்பில் வருகிற 3-8-2016 மற்றும்  4-8-2016 அன்று தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோரை கோரிக்கைகளுடன்   சந்திக்க உள்ளோம்,  விரும்புகிற மாவடட , வட் டார  பொறுப்பாளர்கள் தங்கள் விபரங்களை பொது செயலாளர் அவர்களிடம் தெரிவிக்க மாநில அமைப்பு சார்பாக கேட்டு கொள்கிறோம் --
அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களுக்கு டாடா சங்கத்தின் வணக்கம் ....... ,

தமிழக அரசு பட்ஜெட் ல் 7 வது ஊதிய குழு பற்றி ஆராய குழு அமைக்கப்படும்.என அறிவிக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே தமிழக 6 ஊதிய குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 158 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நிதித்துறை தெரிவித்துள்ளது.இந்த நிலையில் 6 வது ஊதிய குழு முறன்பாடு தீர்கப்பட வேண்டும்.அதன்பின் 7 வது ஊதிய குழு ஊதியம் நிர்னயம் செய்ய வேண்டும். எனவே தோழர்களே ஊதிய குழுகளை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் ,,,,,CPS. திட்டம் ரத்து குழுவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி தங்கள் மாவட்டத்தில் ,,,வட்டாரத்தில் ,,,,கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் சங்க பாகுபாடு இல்லாமல் நடத்திட ஆயத்தங்கள் செய்திடுங்கள்....இந்த பொண்னான காலத்தில் நாம் ஏனோ தானோ என்று இருந்தால் ஆயுள் முழுவதும் அவதியே......................

. தோழர்களே நமது உரிமைக்காக உரிமை மீட்கப்பட கருத்தரங்கம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்திடுவோம்...டாடா கிப்ஸன் உங்களுக்காக எப்போதும் தாயார் . மேலும் தொடர்புக்கு.....9443464081.

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது - படிவங்களில் விவரங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க உத்தரவு

தூத்துக்குடி  மாவட்டத்தில்  - தொடக்க கல்வி - காலிப்பணியிடம் -  இல்லை -  டாடா சங்கம் .




மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு - அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
1) அனைவருக்கும் 2.57 ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் .
2) 1.1.2016 முதல் 7 வது ஊதிய குழு ஊதியம் பெறலாம் .
3)படிகள் எதுவும் ரத்து செய்யப்பட வில்லை.
4)pay band and grade pay க்கு பதில்     pay level  நடைமுறை படுத்தப்படுகிறது.
5)ஆண்டு ஊதிய உயர்வு ஜனவரி 1 , மற்றும் ஜூலை 1 ஆகிய நாள்களில் மட்டுமே வழங்கப்படும்.இது பணி நியமனம்.,பதவி உயர்வுக்கு பொருந்தும்.
6)குறைந்த நிலை ஊதியம் 18,000 ஆகும்.
7)ஊதிய திருத்தத்திற்கு மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.



திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில்

 ஆசிரியர் இல்லம் திறப்பு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருச்சி மாவட்டம், திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில் 15,376 சதுர அடி கட்டட பரப்பளவில், 73 ஆசிரியர் மற்றும் 3 சிறப்பு விருந்தினர் தங்குவதற்கு ஏதுவாக தரை மற்றும் மூன்று தளங்களுடன் 23 தங்கும் அறைகள், 3 சிறப்பு விருந்தினருக்கான அறைகள், வரவேற்பறை, சமையலறை, உணவு உண்ணும் அறை, கூட்டரங்கம், வைப்பறை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.மேலும்


 சென்னை-- சைதாபேட்டையிலும் 

ஆசிரியர் இல்லம் உள்ளது.நாள் வாடகை ரூ.100/ மட்டும். ஆசிரியர்கள் அடையாள அட்டையுடன் சென்று பயன் படுத்திக்கொள்ளுங்பள்......

.டாடா கிப்சன்
நெல்லை மாவட்டம் - தொடக்க கல்வி- ஆசிரியர்கள்  காலிபணியிடம் -- பட்டியல் ---டாடா சங்கம் --


 
DEE-- மனமொத்த மாறுதலின் போது கடை பிடிக்க வேண்டிய செயல்முறைகள் -- இயக்குனர் -- ஆணை ..




TATA - சங்கத்தின் 19.7.2016 கோரிக்கையை ஏற்று பணி நிரவல் ஒன்றியம் விட்டு ஒன்றியம் செய்யப்படும் போது பணிமாறுதல் அன்று தான் வழங்கிட வேண்டும் --என ஆணை --  DEE பணி நிரவலின்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்(நாள்:22.07.2016)




EMIS-ELEMENTARY DIRECTOR PROCEEDINGS

EMIS (2016-17) முதல் வகுப்பு உள்ளீடு செய்யவும், மற்ற வகுப்பு பதிவுகளை சரி செய்யும் பணியை 7.8.16 க்குள் முடிக்க உத்தரவு..


பிச்சை எடுக்கும் அரசு ஊழியர்கள்


அநீதிக்கு எதிராக அரசின் குரல்வளையை இறுக்கிப் பிடிக்க வேண்டாமா..
{ ( * ) நானும் களத்தில் உள்ளேன் என்று காட்டிக்கொள்ள மட்டும் தான் இந்த குரலோ.. }
உயிர் காக்கும் அரசின் கட்டணமில்லா மருத்துவ காப்பீட்டுத் திட்டம் இருந்தும்... மருத்துவமனையில் இன்னும் கொஞ்சம் சேத்துக் கொடுங்க (காப்பீட்டுத்தொகையினை) என்று அரசு ஊழியர்கள் பிச்சை எடுக்கும் அவல நிலை..
உன் அப்பன் வீட்டு காசையா கேட்கிறான் அரசு ஊழியன்.. மாதம் தவறாமல் பிடித்தம் செய்யப்பட்ட தனக்கான காப்பீட்டுத் தொகையினைத் தானே கேட்கிறான்..
ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை இருந்த பொழுதே அதில் ரூ.50,000 வாங்க படாத பாடு..
இதில் குறிப்பிட்ட 2 சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000-மாம் ..
யாருக்காக இந்த மாற்றம்..
அரசு ஊழியனிடம் பிடுங்கிக் கொடுத்த (தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம்) ரூ.150-ஐ ரூ.180 ஆக உயர்த்த மட்டும் தான் இந்த மாற்றம்..
2008 மே மாதம் வரை HF ரூ.10 பிடித்தம் செய்து 1,00,000 காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது, பிறகு ரூ.25 க்கு 2,00,000 ஆக மாற்றம், அதன் பிறகு ரூ.150-க்கு 4,00,000 ஆனது. ஆனால் தற்பொழுதோ அதே 4,00,000 காப்பீட்டுத் தொகைக்கு ரூ.180 பிடித்தம்
கொடுப்பதோ ரூ.100 (MA) ஆனால் பிடுங்குவதோ ரூ.180
சரி பிடுங்கிய காப்பீட்டுத் தொகையாவது ஆபத்து காலத்தில் பெற முடிகிறதா அதுவும் இல்லை..
மாதம் மாதம் 10,22,000 அரசு ஊழியர்களிடம் ரூ.180 பிடித்தம் செய்தால்.
*10,22,000×180=ரூ.18,39,60,000 (ஒரு மாதத்தில் மட்டும் 18 கோடி)*
ஒரு வருடத்தில் 18,39,60,000×12=ரூ.220,75,20,000.
4 வருடத்தில் 220,75,20,000×4=ரூ.883,00,80,000
நான்கு வருடம் ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனத்திற்கு அரசு நம்மிடமிருந்து பிடுங்கிக் கொடுக்கும் மொத்த தொகை ரூ.883 கோடிகளுக்கு மேல்.. (4 வருடத்தில் மட்டும்)
ஆனால் காப்பீட்டு நிறுவனம் இதற்காக செலவிடும் காப்பீட்டுத் தொகை சொற்ப அளவு தான்..
இப்படி இருக்க 10,22,000 அரசு ஊழியர்களில் எத்தனை பேர் 4 வருடங்களில் சிகிச்சை பெறுவர்...???
இதுவும் சொற்ப அளவு தான்...

சொற்ப அளவில் மட்டுமே சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டுத் தொகையும் சொற்ப அளவில் பிச்சையாக வழங்கப்படுகிறது..???
இந்த முறைகேடுகளை செய்தித்தாளில் வெளியிடுவதுடன் சங்கங்களின் பணி முடிந்துவிட்டதா...??
அதனால் மயிர்நுனி அளவுகூட பயன் ஏதும் இது வரை இல்லையே...
மாநில அமைப்பில் உள்ள இயக்கவாதிகள் இதுநாள்வரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லவில்லையா என்ன...???
இல்லை, இந்த முறைகேடுகளை தட்டிக் கேட்க திராணி இன்றி தனது சொந்த செலவில் சிகிச்சை பெறுகின்றனரோ..??
இல்லை, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தான்மட்டும் முழு காப்பீட்டு உரிமையையும் பெற்றுவிடுவதால் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் அவல நிலை பற்றி கவலையில்லையோ...???
இது எதுவாயினும் அரசு ஊழியனின் உயிர்காக்க சங்கங்களின் ஒன்றுபட்ட போராட்டம் தேவை..
நமது உரிமைகளை பிச்சையாக பெற முடியாது தோழர்களே..
இனியும் இழப்பதற்கு அரசு ஊழியனின் உயிர் மட்டுமே மிச்சமுள்ளது..

அதைக் காக்கவாவது சங்கங்கள் சுயநலமின்றி ஓரணியாய் திரள வேண்டும்..
கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையை உறுதிசெய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டுமாய் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சார்பாக தமிழக அரசையும் நிதித்துறையும் கேட்டுக்கொள்கிறேன்-----

பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பங்கள்......

தமிழ்நாடு அரசு -- நிதித்துறை - 2016-17ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவு திட்ட அறிக்கை....

தமிழ் நாட்டில் ஆசிரியர் மற்றும் அரசுழியர்களுக்கு 6 வது ஊதிய குழு முரண்பாடுகளை தீர்ப்பதற்கு 2010 ல் திரு . ராஜிவ் ரஞ்சன் .இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது . அதிலும் பலவேறுபட்ட முரண்பாடுகள் ஏற்பட்டது. அதை தீர்க்க சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு படி 2012 ல் திரு .கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 3 நபர் குழு அமைக்க பட்டது . அதன் அடிப்படையில் பல்வேறு அரசு ஆணைகள் வெளியிட்டது .அதில் ஆசிரியர்களுக்கு எந்தவொரு பயனுமில்லை .மேலும் இடைநிலை ஆசிரியர்கள் பற்றி உண்மையில்லாத பல்வேறு கருத்தை கூறியது .மேற்கண்ட இரு ஊதிய குழு அறிக்கை கருத்தை ரத்து செய்து உண்மையான ஆதாரங்கள் அடிப்படையில் ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்திட டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண் .33399/2013 தொடரப்பட்டது .அதில் 12.9.2014 தீர்ப்பு பெறப்பட்டது .அதன் அடிப்படையில் அரசு வெளியிட்ட அரசு கடிதம் எண் .60473/Cmpc/2014 நாள் . 10-12-2014 ல் மேற்கண்ட ஊதிய குழு அறிக்கையில் உள்ள அதே கருத்தை மீண்டும் கூறி மறுத்து விட்டது . பிறிதொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இரு நபர் அமர்வில் மேற்கண்ட இரு ஊதிய குழு அறிக்கைகள் சட்டப்படி சரியானவை அல்ல .இதில் பல்வேறு குழறுபடிகள் உள்ளன என்பதால் அதை ரத்து செய்து ஓய்வுபெற்ற சதீஷ்கர் மாநில தலைமை நீதிபதி .திருமிகு .வெங்கடாசல மூர்த்தி அவர்கள் தலைமையில் ஊதிய குறை தீர் ஆணையம்.மீண்டும் அமைத்து ஊதிய முரண்பாடு தீர்க்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது .
அதன் படி உடனடியாக நீதிமன்றம் தீர்ப்பு படி ஆணையம் அமைத்து ஊதியம் மாற்றி அமைக்க பட வேண்டும். மேலும் அரசு கடிதம் 60473/2014 -----10-12-2014 ரத்து செய்யப்பட வேண்டும். மீண்டும் டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள் தலைமையில் 2வழக்கு W.P. MD NO.1612/15 தாக்கல் செய்ய பட்டது .அதில். 10-2-2015 _ உரிய கால கெடுவுக்கு பின் வழக்கு தாக்கல் செய்திட உத்தரவிட்டார் .
ஆனால் தமிழக அரசு. ஆணையம் அமைக்க முடியாது எனவும். ஊதிய மாற்றம் செய்திட முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் சென்று. special leave petitions. Civil. no 35679 - 35838 of 2014 தாக்கல் செய்து 16-01-2015 ல் தடைகள் பெற்று உள்ளதாக அரசு கடிதம் எண் 12925/2015----27-5-2015 தெரிவித்த உள்ளது தமிழக அரசு .
கடந்த 2011சட்ட மன்ற. தேர்தல் வாக்குறுதி யாக ஊதிய முரண்பாடு தீர்க்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்தப்படும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது அரசே உச்ச நீதிமன்றம் சென்று தடைகள் பெற்று இருப்பது வியப்பாக உள்ளன .

இந்த நிலையில் டாடா சங்கம்  உச்ச நீதிமன்றத்தில்  SLP.NO.9091/2014 .I.A NO. 5/2015 மூலம் வழக்கு தாக்கல் செய்து உள்ளது .மேற்படி டாடா சங்கத்தின் ஊதிய வழக்கிற்கு தமிழக நிதி துறை பதில் மனு தாக்கல் செய்யாமல் நிலுவையில் உள்ளது.அதனால் நமது ஊதிய வழக்கு இறுதி நிலைக்கு வரவில்லை .எனவே ஆசிரியர்களே நமது வழக்கு முடிவுக்கு கொண்டுவர வும் அரசு விரைந்து பதில் மனு தாக்கல் செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கண்டிப்பாக 7 வது  ஊதிய குழுவுக்கு முன்பாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தான் 7 வது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.டாடா சங்கம் அதற்கு ஏற்ற ஆயத்த நிலையில் உள்ளது;

தமிழ்நாட்டிடில் 7 வது ஊதிய குழு உச்ச நீதிமன்றத்தில் அரசு அனுமதி பெற்று அதன் பின்னர் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில்தான் அமைக்க முடியும் .16 மாநிலங்களில் 6 வது ஊதியகழுவில் வழங்கப்படட பிற மாநில அரசு ஆணைகள் மற்றும் 2650 பக்கங்கள் கொண்ட அரசு ஆவணங்களுடன் ஊதிய குழுவை எதிர் கொள்ள டாடா சங்கம் தயார் நிலையில் உள்ளது.கண்டிப்பாக 1.1.2006 முதல் 9300+4200 என இடைநிலை ஆசிரியர் ஊதியம் மாற்றப்பட்டு அதன் அடிப்படையில் தான் 7 வது அமையும் ..

டாட்டா கிப்சன் .பொது செயலாளர்
தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்
9443464081
அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு டாடா சங்கத்தின் வணக்கங்கள் தமிழ்நாட்டில் நடைமுறை படுத்தப்பட்ட 6 வது ஊதிய குழு வால் ஏற்பட்ட பாதிப்புகள் பல ஆகும் .அதில் ஒன்று 1.1.2011 க்கு முன்பாக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பிபி 750 ஊதியத்தில் சேர்காமல் ஊதியம் நிர்ணயம் செய்த்தால் ஏற்பட்ட ஊதிய இழப்பு ஆகும் .அதாவது இளையவர் அதிக ஊதியமும் மூத்தவர் குறைந்த ஊதியமும் பெற்று வருகிறார்கள் .இந்த ஊதிய பாதிப்பை அரசு ஆணை எண்.25/p#ar/ date .23-3-2015 ன் படி சரிசெய்திட முடியும் .இது போன்ற ஊதிய பாதிப்பில் உள்ள1.1.2011 முன்னர் பதவி உயர்வு பெற்ற து.பள்ளி .த.ஆசிரியர்கள் மற்றும் பட்டாதாரி ஆசிரியர்கள் டாடா சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களை அல்லது பொது செயலாளரை அனுகவும் .9443464081... ...டாடா கிப்ஸன்....

பணி மாறுதல் -- பணி நிரவல் ----டாடா சங்கம்  கோரிக்கை 


மதிப்புமிகு.தொடக்க கல்வி இயக்குனர் அவர்களுக்கு வணக்கம். கடந்த ஆண்டு 2015 ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுமாறுதல் கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் பெற்ற பல ஆசிரியர்கள் பணி விடுவிப்பு செய்யப்படாமல் உள்ளனர். இந்த நிலையில் தற்போது அரசு ஆணை எண்.258 நாள்6-7-2016 மூலம் இந்த ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திட அரசு ஆணையிட்டு உள்ளது.மேலும் விரைவில் தங்களால் விரைவில் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட உள்ளது.எனவே முந்தய கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் பெற்ற தொடக்க கல்வி துறை சார்ந்த ஆசிரியர்களை உடனடியாக பணி விடுவிப்பு செய்திட வேண்டும்.இதற்கான ஆணையை தாங்கள் உடனடியாக வழங்கிட சமூகம் அவர்களை வேண்டுகிறேன். இப்படிக்கு. டாடா கிப்ஸன். பொதுசெயலாளர். டாடா சங்கம் 235. வடக்குதெரு. பரப்பாடி....627 110. திருநெல்வேலி.மாவட்டம்
******கல்வி உதவி தொகை பெற அரசு, உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்****************

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய வகுப்பை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவி தெகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

பள்ளிக்கல்வி - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப பணி நிரவல் செய்திட அரசு உத்தரவு...........

 🚥🚥🚥🚥🚥                                                                                      

G.O. No. 258 dated 6.7.16 -Transfer Norms-
Important points. 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥                                                                      
G.O. No. 258 dated 6.7.16
🌹01.06.2016 நாளை கணக்கிட்டு காலிப்பணியிடம் பட்டியல் தயாரிப்பு.
🌹உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்தபின் பொது மாறுதல் கலந்தாய்வு.
🌹பொது மாறுதல் கலந்தாய்விற்கு முன்னர் நிர்வாக மாறுதல் & மனமொத்த மாறுதல் முடிக்கப்பட வேண்டும்.
🌹மனமொத்த மாறுதல் 01.06.2015 க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. .
🌹அலகு விட்டு அலகு மாநகராட்சி பள்ளிகளுக்கு மட்டுமே. . தொடக்கக் கல்வித்துறை யில் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு இல்லை.
🌹01.06.2015 பணியேற்பில் இருந்து விலக்கு பெறுவதில் சென்ற ஆண்டு பின்பற்றபடியே...
1. Total blind.
2.Physically challenged
3.Army working person's spouse
4.Critically operated persons .
5.Cancer patients
6.Widow
7.Having Special children.
8.Spouce

🌹01.6.2015 க்கு பின்னர் கணவன் / மனைவி இறந்து இருப்பீன் சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கப்பட வேண்டும். 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥                  TATA Sangam

அகஇ - குறுவளமைய பயிற்சி - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 16.07.2016 அன்று நடைபெறவிருந்த குறுவளமையப் பயிற்சி 23.07.2016 அன்று ஒத்திவைத்து இயக்குனர் உத்தரவு

ஆறாவது ஊதிய குழுவும் ஆசிரியர் சங்கங்களும் -

 ஓர் கண்ணோட்டம்.


அன்பார்ந்த ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வணக்கங்கள். 

ஆறாவது ஊதிய குழுவினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள  
ஊதிய முரண்பாடுகள் முழுமையாக இன்னமும் சரி செய்யப்படவில்லை. தற்போது ஆசிரியர் சங்கங்களால் ஏற்ப்பட்ட நிலைகளை அரசாணையில்    குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை குறிப்பிட்டு ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
ஆறாவது ஊதிய குழு அரசாணை 234 நாள்.1.6.2009  வெளியிடப்பட்டபோது, தொகுப்பூதியத்தில் பணியேற்று 1.6.2006 - இல் காலமுறை ஊதியத்திற்கு வந்தவர்கள் 1.6.2006 - இல் பெற்று வந்த ஊதியம் பின்வருமாறு,
             அடிப்படை ஊதியம்              :   4500
              அகவிலைப்படி ஊதியம்    :   2250
              அகவிலைப்படி 24%              :   1620
                                                                   =======
       (DA G.O.188.Dt.17.4.06)  TOTAL      :     8370
                                                                  =======
ஆறாவது ஊதிய விகிதம் G.O. 234 Dt.1.6.2009 - இல் வெளியான போது இவ்வகையான இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்
                          அடிப்படை ஊதியம்     :    5200
                          தர ஊதியம்                     :    2800
                          அகவிலைப்படி              :    NIL
                                                                          =======
(New DA (2%) only from 1.7.2006) TOTAL   :     8000
                                                                          =======
முந்தைய ஊதிய விகிதத்தில் பெற்றுவந்த ரூ.8370 ஐ விட புதிய ஊதிய விகித ஊதியம் ரூ.370 குறைவாக இருந்தது. ( 8370 - 8000 = 370)
இவ்வாறான நிலை மொத்தமிருந்த 29 ஊதிய பிரிவினர்களில் 03 ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டது. கல்வித்துறையில் 1.6.2006 இல் காலமுறை ஊதிய விகிதத்திற்கு உட்படுத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  மட்டுமே ஏற்ப்பட்டது. அதனை கீழே உள்ள அட்டவணை மூலம் அறியலாம். இந்த அட்டவணை தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A) மூலம் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பை பல்வேறு சங்கங்கள் அன்றைய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனால் 1.1.2006 முதல் 31.5.2009 வரை பணியேற்றவர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக்கொள்ள வாய்ப்பு  கொடுக்கப்பட்டது.
பெற்றுவந்ததை விட குறைவான ஊதியம் பெறும் நிலை எந்தெந்த ஊதிய பிரிவினர்களுக்கு ஏற்பட்ட்தோ  அதனை தெளிவாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்ததால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்பட்டிருக்கும். சற்று பொறுமையாக படியுங்கள்.
(எப்படி கொண்டு சென்றனர், உள்ளதை உள்ளபடியே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பு சரி செய்யப்பட்டிருக்கும் என்பதையும், தவறான தகவலை அரசுக்கு கொடுத்ததால் பெற்று வந்ததை விட நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதியத்தில் குறைவு ஏற்படாத ஊதிய பிரிவினர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக் கொள்ள வழி வகை ஏற்ப்படுத்தியதையும் நீங்கள் அறிந்துகொள்ள உங்கள் முன் வைக்கிறேன்.)
               01.01.2006 முதல் 31.5.2009 வரை புதிய நியமனதாரர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தில் குறைவு ஏற்படுவதாக சங்கங்கள் அரசுக்கு தெரிவித்துள்ளன. ஆனால் உண்மை நிலவரமோ மொத்தமிருந்த ஊதிய பிரிவினர்களில் மூன்று ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டுள்ளது.  அரசாணை  258 நாள் 23.5.2009. இல் உள்ளதை படியுங்கள்.
       Certain Employees / Teachers  Associations have brought to the notice of Government that the employees appointed as fresh recruits on or after 1.1.2006 and upto the date of issue of Orders happen to face loss in emoluments while fixing their pay in the revised pay structure and therefore requested to rectify the same by granting pay protection of allowing the fitment benefit to the new entrants as was allowed in the earlier pay commission periods.
  முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அதற்க்கு பின்னர் தனி ஊதியம் 750 கொடுத்தாலும் அகவிலைப்படிகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் 1.1.2009-க்கு பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு முந்தைய ஊதிய விகித ஊதியமே அதிகமாக உள்ளது.
பணி ஒய்வு பெற்றவர்களை மதிக்கிறோம். விழிப்புணர்வுகளுக்காக பாதிப்புகளை இடைநிலை ஆசிரியர்களின் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.
             பணியாளர்கள் அங்கம் வகிக்க வேண்டியது  
                 பணியாளர் சங்கத்தில்
    பணி  ஓய்வு பெற்றவர்கள் இருக்க வேண்டியது




 

 


தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( டாடா ) மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 09.07.2016 சனிக்கிழமை மதியம் 2.00 மணிக்கு மாநில தலைவர் அவர்கள் தலைமையில் திருச்சி ...ஹோட்டல் அருணில் நடைபெற்றது.             


 மேற்படி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்.    வருமாறு.......         
                
  1)மத்திய அரசு உழியர்களுக்கு ஏழாவது ஊதியகுழு நடைமுறைபடுத்தப்பட உள்ள நிலையில் தமிழக இடைநிலை ஆசிரியர்களின் 6 வது ஊதிய குழு முறன்பாடு இதுநாள் வரை தீர்க்கப்பட வில்லை.மேலும் தமிழக 6 வது ஊதியகுழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 158 வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேற்படி வழக்குகளுக்கு தமிழக அரசு வரைவாக பதில் மனு தாக்கல் செய்து வழக்கை முடித்து ஊதிய முறன்பாட்டை தீர்த்த பின்னர்தான்    தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு அமைக்க வேண்டும்...                
 2)பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்திட அமைக்கப்பட்ட குழு அறிக்கை தயாரிக்கும் முன்னர் அனைத்து சங்கங்களையும் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்திட வேண்டும்.......              
3) தலைமை ஆசிசியர்கள் பல்வேறு பதிவேடுகள் பராமறிப்பு செய்திட வேண்டியது உள்ளதாள் "" அரசு உழியர்களுக்கு உள்ள பவாணிசாகர் பயிற்சி மையம்  "" போல் தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் பயிற்சி வழங்கிட திருச்சியை மையமாக கொண்டு புதிய பயிற்சி மையம் துவங்கப்பட வேண்டும் ...               
 4) ஆண்கள், பெண்கள்,மாற்றுதிறனாழிகளுக்கு தனி தனி மேல்நிலை பள்ளிகள் இருப்பது  போல்  திருநங்கைகள்  கல்வி தடையின்றிபயில மாவட்ட தலைநகர்களில் சிறப்பு மேல்நிலைபள்ளிதுவங்கப்பட வேண்டும்........                 5)அரசின் விலையில்லா பொருள்கள் அனைத்தும் பள்ளிகளுக்கே கொண்டு வந்து வழங்கிட வேண்டும்....                 
 6)தமிழக அரசு உழியர்களுக்கான பணி விதிகள் மற்றும்  அடிப்படை விதிகள் ஊதிய விதிகள் இதுவரை தமிழில் இல்லை.ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.எனவே முக்கிய விதிகளைதமிழில் மொழிபெயற்பு செய்து அரசிதழில் வெளியிட வேண்டும் ....             
  7).தொடக்க கல்வி துறையில்  கடந்த 10 வருடமாக நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு. பணிநிரவல் நடைபெற வில்லை.  எனவே விரைந்து பணிநிரவல் நடத்திட வேண்டும். 
8)ஆசிரியர்களின் உயர்கல்வி பின்னேற்ப ு2 வருடமாக அனுமதிக்கப்படாமல்நிலுவையில் உள்ளது இவற்றிற்கு கல்வித்துறை செயலாளர் விரைர்து அனுமதித்து ஆணை வழங்கிட வேண்டும்.                   9)வினாயகா மிஷன் பல்கலைகழகம் படிப்புகள். மற்றும் M.Com. B.Dd.  / M.A .  B.Ed.(பொருளாதாரம்) படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வும் பதவி உயர்வும் அனுமதிக்க வேண்டும்.                   
  10) ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் துவங்கப்பட்ட ஆங்கில வழி கல்வி பாட பிரிவுக்கு போர்கால அடிப்படையில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் விரைந்து நியமிக்க அரசை வேண்டுகிறோம்.      
  11.) 2003--2006 வருடங்களில் தொகுப்புதியத்தில் பணி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணி காலத்தை ஊதிய உயர்வுக்கும்  பதவி உயர்வுக்கும் எடுத்துக்கொள்ளபணி நியமன நாள் பணிவரன்முறை செய்திட வேண்டுகிறோம்..    
   12 ) தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிசெய்து வரும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் . ..               
  13.) உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள TET வழக்குகளை விரைந்து முடித்து மத்திய அரசு போல் ஆண்டுக்கு இரு முறை தகுதிதேர்வு நடத்த வேண்டும்..                   
  14) தொடக்க கல்வி துறையில் அதே பள்ளியில் B.Ed கற்பித்தல் பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முழு ஊதியம் வழங்கிட வேண்டும்..                   
  15) ஆசிரியர்கள் , அரசு உழியர்களின்  பணி சார்ந்த வழக்குகள் விரைந்து முடிக்கப்பட மதுரையிலும் சென்னையிலும் என இரண்டு  "டிரிபினல்" நீதிமன்றங்கள் உயர்நீதி மன்ற வளாகத்தில் அமைத்திட வேண்டுகிறோம்.           16)  ஆசிரியர்களுக்கு  விரைவாக பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்உ  கலந்தாய்வு ஓளிவு மறைவு இல்லாமல் நேர்மையான முறையில் நடத்திட வேண்டும்..               
  17)    பள்ளி கல்வி துறை போல் தொடக்க கல்விதுறையிலும்  பணி நியமன தேதி அடிப்படையில் மாநில அளவில் பதவிஉயர்வு பட்டியல் தயார் செய்து நடைமுறை படுத்திட வேண்டும்  

தேசிய திறனாய்வு தேர்வு 9ம் வகுப்பு மாணவர்கள் ஆக.1 முதல் விண்ணப்பிக்கலாம்
அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆக.1 முதல் 8 வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் பகுதிகளில் இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2016-17ம் கல்வியாண்டில் தொடர்ந்து 9ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளிக்க வேண்டும்.தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.8ம் தேதி ஆகும். இதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 பேருக்கு 12ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
7 வது ஊதியகுழு .....
.டாடா சங்கம் எப்படி எதிர்கொள்ளும்..... 

கடந்த 6 வது ஊதியகுழு நடமுறை படுத்தும்போது டாடா சங்கம் துவங்கப்படவே இல்லை. ஊதிய குழு 1.6.2009 நடைமுறை படுத்தப்பட்பது.அதன்மூலம் ஏற்பட்ட பாதிப்பு நீங்க 14.4.2010 ல் டாடா சங்கம் துவங்கப்பட்டது. ஊதிய பாதிப்பு நீங்க பல்வேறு ஆதாரங்களை RTI மூலம் சேகரித்து நீதி வேண்டி நீதிமன்றத்தை நாடியது.மேலும் தொடந்து இன்று வரை ஊதிய பிரச்சனைக்காக தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வரை வழக்கு நடத்தி வருகிறது.""கன்டிப்பாக 1.1.2006 முதல் டாடா ஊதிய மாற்றம் பெற்று தரும் "" தற்போது உள்ள நிலையில் டாடா சங்கம் ஏகப்பட்ட அதாரங்களுடன் எதையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது. எனவே எந்த ஆசிரியரும் அஞ்சல் வேண்டாம் . டாடா சங்கம் மட்டுமே போதும் இடைநிலை., பட்டதாரி ., முதுகலை என அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் ஊதிய மாற்றம் பெற்று தரும் . தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு உச்ச நீதிமன்ற அனுமதி பெற்றபின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தான் அமைக்க முடியும் .எனவே 1.1.2006 முதல் ஊதிய மாற்றம் எட்டு.இதன் பயனை அடைய அனைவரும் 2019 வரை காத்திருக்க வேண்டும் .........டாடாகிப்ஸன்

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக கருப்பசாமி நியமனம்...........

தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்துக்கு, புதிய இயக்குனராக கருப்பசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரிக் பள்ளி இயக்ககம், முறைசாரா கல்வி ஆகியவற்றுக்கு, இயக்குனர் பணியிடங்கள், நான்கு மாதங்களாக காலியாக இருந்தன. முறைசாரா கல்வியை, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவனும், மெட்ரிக் இயக்ககத்துக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகனும் கூடுதல் பொறுப்பில் கவனித்தனர்.


இந்நிலையில், மேல்நிலைப் பள்ளி இணை இயக்குனர் முத்து பழனிச்சாமி, பணியாளர் நிர்வாகம் இணை இயக்குனர் கருப்பசாமி ஆகியோர் இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில், கருப்பசாமி மெட்ரிக் பள்ளி இயக்ககத்துக்கும், பழனிச்சாமி முறைசாரா கல்வி இயக்ககத்துக்கும் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி கல்வித்துறை கையாளும் பிரிவுகள் : தமிழக பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ், பள்ளிக் கல்வி, தொடக்க கல்வி, மெட்ரிக் பள்ளி, முறைசாரா கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேர்வுத்துறை இயக்ககம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய துறைகள், ஒவ்வொரு இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அவர்களுக்கு கீழ் இணை இயக்குனர்களும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் இயங்குகின்றனர்.

திருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் பங்கு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

பணிப்பதிவேட்டில் வாரிசுதாரராக இல்லாத நிலையிலும் அரசுஊழியர்களின் இறுதி பணப் பலன்களில் அவரது தாயாருக்கு பங்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், குமுழியேந்தலை சேர்ந்த எம்.முத்துலெட்சுமி (72) உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:


எனக்கு 5 மகன்கள், 3 மகள்கள். 8 குழந்தைகள் இருந்தும் என்னை யாரும் கவனிக்கவில்லை. என் மகன் கணேசன் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி யூனியனில் ஊரக நல அலுவலராக பணிபுரிந்தார். அவர் 2013-ல் இறந்தார். கணேசனுக்கும், அவரது மனைவி அன்புக்கரசிக்கும் பிரச்சினை இருந்தது. கணவனிடம் ஜீவனாம்சம் கோரி தேவகோட்டை நீதிமன்றத்தில் அன்புக்கரசி வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.
(TATA)

மாநில செயற்குழு கூட்ட அழைப்பு - 2016.
நாள் : 09.07.2016.
இடம் : ஹோட்டல்
அருண் மினி ஹால்.
திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில்.

நேரம் : மதியம் 2 மணி
அனைத்து மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். மாவட்டப் பொறுப்பாளர்கள் வட்டாரக் கிளை பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
....2016-- 17. கல்வி ஆண்டிற்கான உறுப்பினர் சந்தா புத்தகத்தின் அடிகட்டையுடன் மாநில இணைப்பு கட்டண பங்கு தொகை கொண்டு வரவும்..



அன்புடன்
S.C. கிப்சன்
பொது செயலாளர்.
TATA.

வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1:1என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டதில் அனைத்து சங்கங்களிலும் உள்ள வரலாறு பாட ஆசிரியர்கள் சார்பாக அவர்களிடம் இருந்து பெறப்பட்ட அன்பளிப்பு மூலம் போடப்பட்டு வெற்றி பெற்ற வழக்கு விவரம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வரலாறு பாடத்திற்கு பி.ஜி.Promotion வழங்கும் போது 1:1என வழங்க வேண்டும் என தொடுத்தவழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு விவரம்
=============
G.O.152ல் ஆங்கில பட்டதாரி ஆசியர்களுக்கு வழங்கியது போல் வரலாறு ஆசிரியர்களும் 1:1என்ற அடிப்படையில் பதவிஉயர்வு வழங்கவேண்டும்.


1:1என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி நடைமுறைபடுத்தி 70 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் தகவல் அளிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கபட்டுள்ளது.
 
 

இனி 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு

அனைவரும் கட்டாயத் தேர்ச்சி திட்டம் இனி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது கட்டாயத் தேர்ச்சி திட்டம் எட்டாம் வகுப்பு வரை செயல்படுத்தப்படுகிறது. எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெறச் செய்வதால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய வரைவு கல்விக் கொள்கையின் ஒரு பகுதியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக இந்த வரைவு கொள்கையின் ஒரு பகுதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு கருத்துக்கள்,

பள்ளிக்கல்வி - 2016 நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்தோர் பட்டியல் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

அரசு ஊழியர்கள் மீது லஞ்சப் புகார் குறித்த தமிழக அரசின் அரசாணை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக அரசு ஊழியர்கள் மீதான லஞ்சப் புகார் குறித்த தமிழக அரசின் புதிய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


அரசு ஊழியர்கள் மீது ஊழல் புகார் வந்தால் அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து புகழேந்தி தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தமிழக அரசின் புதிய அரசாணையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
7 வது ஊதியக் குழு பரிந்துரை பற்றிய செய்தி தொகுப்பு...

============================
7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.தர ஊதிய நடைமுறை அறவே கைவிடப்பட்டுள்ளது.குழு காப்பீட்டு நிதி வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
01.01.2016 முதல் பரிந்துரையை அமல்படுத்தி ஊதிய உயர்வு நிலுவைத் தொகையையும் ரொக்கமாக வழங்க அறிவித்துள்ளது.

ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு பற்றிய கணக்கீடுகள்
தற்போது பணியில் இருக்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக அவரவர் பெறும் அடிப்படை ஊதியத்தில் (Basic pay+Grade pay+pp) சேர்த்து 32 % த்தை பெருக்கினால் வருகிற தொகையினை புதிய ஊதியமாக வழங்கிட மத்திய அமைச்சரவை முடிவு செய்து அறிவித்துள்ளது. இந்த உயர்வு தற்போது அவரவர் பெறும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி 125 % சேர்த்து கணக்கிடும் போது 14.2 % சத உயர்வு வரும். ஒவ்வொருவரின் 01.01.2016ல் திருத்தப்பட்ட அடிப்படை ஊதியத்தினை கணக்கிட அவரவர் 01.01.2016ல் பெற்று வரும் அடிப்படை ஊதியத்தினை 2.57 % ஆல் பெருக்கினாலும் அதே உயர்வுதான் வரும்.அவ்வாறு கணக்கிடும் போது ஊதியம் குறைவாக இருந்தால் 7 வது ஊதியக் குழுவில் ஏற்பு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள தொகை இடைநிலை ஆசிரியர்களுக்கு
ரூ 29200 (entry pay) ஊதியமாகும்.பணியில் மூத்தவருக்கு ஊதியம் குறைந்தாலும் ரூ 29200 லிருந்து ஊதியம் நிர்ணயம் செய்து சர்வீஸ் வெயிட்டேஜ் முறையில் கணக்கிட்டு ஊதியம் நிர்ணயம் செய்யும் பழைய முறையே அமல்படுத்துவார்கள் என அறிகிறோம்.ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் மேற்காணும் நடைமுறையே பொருந்தும்.

குறைந்தபட்ச ஊதியம் 26,000 நிர்ணயம் செயதிட சங்கங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியது.மத்திய அரசு 18,000 மட்டுமே என்று அறிவித்துள்ளது. அடிபிறழாமல் ஊதியக் குழு பரிந்துரையை ஏற்பு செய்ய 6 மாத காலம் அவகாசம் எடுத்துக்கொண்டது தேவையில்லை. ஆனால் மத்திய அரசு 6 மாதத்திற்குள் வழங்கியுள்ளதாக பெருமிதம் கொள்வதை உணர முடிகிறது.
(நாளேடுகளில் 23.5 % ஊதிய உயர்வு என்பது பொருத்தமில்லாத செய்தியாகும்.23.5 % ஊதிய உயர்வு என்பது பெருநகரங்களில் பணிபுரிவோர் பெறுகின்ற இதர படிகள் சேர்த்து  ஆகும் .
PG VACANCY LIST in kanyakumari DT as on 31.05.2016.
TAMIL- 11
ENGLISH -2
SLB Nagercoil
Thenkaipattinam
PHYSICS - 1
kottaram
CHEMISTRY -1
Nattalam
MATHS-2
Munchirai
Vallankumaran vilai
BOTANY-4
Kollankodu
Thenkaipattinam
Kaattathurai
Agastheeswaram
ZOOLOGY-3
Kollankodu
SLP Nagercoil
Vadaseri
HISTORY-3
KDVP G Ngercoil
Marthandam B
Kurathiyarai
POLITICAL SCIENCE -1
Thackeray
ECONOMICS-4
Munchirai
Vilavankodu
Edalakkudi
KDVP G Nagercoil
PHYSICAL DIRECTOR -1
Marthandam
RTI ல் இவையெல்லாம் கேட்டால் தகவல் தர தேவையில்லை!
Right to information act 2005
R TI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள் :
| .துறை Website ல் உள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை
2. கட்டணம் செலுத்தி பெறக்கூடிய சேவை எனில் RTIல் தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை

3. கோப்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய காலம் முடிந்து, / அழிக்கப்பட்டிருப்பின் தெரிவிக்க வேண்டியதில்லை
4. கேள்விகளாய் இருந்தால் பதில் தெரிவிக்க வேண்டியதில்லை
5 கேட்ட தகவலுக்கான கோப்பு இருந்தால் நகலாக வழங்கலாம்.
6. நாமாக விளக்க மோ நாம் அறிந்தவற்றையோ கூறக் கூடாது.
7. தெளிவுரை, விளக்கம், மொழிபெயர்ப்பு செய்து தர வேண்டியதில்லை.
8. கோரிக்கை, புகார், யூகம் அடிப்படையிலான கேள்விகளுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை.
மனுதாரர் தன் மீதான புகார் குறித்து நகல் கேட்டால் கொடுக்கலாம்.
9. மனுதாரர் முன்பு கொடுத்த சாதாரண மனுவைக் கேட்டால் தெரிவிக்க வேண்டியதில்லை.
10. மனுதாரர் கேட்கும் படிவத்தில் தர வேண்டியதில்லை
11. பல்வேறு கோப்புகளை தொகுத்து தர வேண்டியிருப்பின், விதிப்படி தொகுத்து தர வேண்டியதில்லை.
12. ஏன் எப்படி, எங்கு எதனடிப்படையில் போன்ற கேள்விகளுக்கும், ஆம் எனில் பதில் ,இல்லை எனில் பதில் போன்ற உபகேள்விகளுக்கும் பதில் தர வேண்டியதில்லை
13. சாதாரண திட்டங்களில் தந்த மனு மீதான நடவடிக்கை குறித்து கேட்க முடியாது
14. மனுதாரருக்காக வேறொருவர் கேட்க கூடாது (வக்கீல் தன் கட்சிக்காரருக்காக)
15. மூன்றாம் நபர் குறித்த விபரம் , நமது அலுவலக பணியாளர் பற்றிய எந்த விபரமும் தர வேண்டியதில்லை.(சம்பளம், கிப்ட், IT, memo, ஒழுங்கு நடவடிக்கை)
மனைவி கூட மூன்றாம் நபர்
16. பட்டா ட்ரான்ஸ்பர், சிட்டா போன்ற விபரங்கள் தெரிவிக்க வேண்டியதில்லை
17.SR Copy தர வேண்டியதில்லை
18. பணி நியமனம் தொடர்பான நகல் தர வேண்டியதில்லை
19. பணியாளரது தனிப்பட்ட விபரங்கள் (அ) அலுவலக தொடர்பாக வரப் பெற்ற விண்ணப்பங்களில் உள்ள விண்ணப்பதாரரது விபரம், தெரிவிக்க வேண்டியதில்லை
20. வேண்டிய விபரங்களைப் பெற்று தொகுத்து அனுப்ப வேண்டியதில்லை
21. மிக அதிக அளவு விபரம் கோரப்பட்டால், தெரிவிக்க வேண்டியதில்லை
22. SR நகல் வழங்க வேண்டியதில்லை.
பொது நலன் எனக் கருதினால் முதல் பக்கம் மட்டும் தரலாம்
23. ஒரே மாதிரியான தகவல்களை திரும்ப திரும்ப கேட்க கூடாது
24. நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள போது, மனுதாரர் RTIல் தகவல் பெற முடியாது 
: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியை மனமொத்த மாறுதலில் வாடிப்பட்டி அலங்காநல்லுர் மதுரை மேற்கு பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளதால் தேவைப்படும் இடைநிலை ஆசிரியர் தொடர்பு கொள்ளவும்.9842108287
[7/1, 1:42 PM] +91 80128 09341: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டாங்கொளத்துர் ஒன்றியத்தில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியை விருப்ப மாறுதலில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் ,திருமங்கலம்,மதுரை கிழக்கு,வட்டாரங்களில் பணிபுரிய விருப்பம் தெரிவித்து உள்ளார் விருப்பம் உடைய ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும் .9842108287