PAGEVIEWERS

பள்ளிகளில் பணிநிரவல்: ஆசிரியர்களுக்கு சிக்கல்

பள்ளிகளில் ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் நடத்துவதற்கு முன், பணிநிரவல் மூலம் சில காலியிடங்களை நிரப்ப, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கவுன்சிலிங் விரைவில் துவங்க உள்ளது. இதற்கு முன் காலிப் பணியிடங்களை, பணிநிரவல் முறையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.சில  பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் , பட்டதாரி ஆசிரியர்களில், ஒரே பாடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிகளில், குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை.

உதாரணமாக, ஒரு பள்ளியில் வரலாறு பாடம் நடத்த இரண்டு ஆசிரியர்கள் இருந்தால், அதில் ஒருவர், வரலாறு ஆசிரியர் இல்லாத பள்ளிக்கு மாறுதல் செய்யப்படுவார். இதுபோல பணிநிரவல் செய்த பின், காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே மாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.

பணிநிரவல் அடிப்படையில் தான், காலிப் பணியிடங்கள் வெளியிடப்படும்.

வட்டார வள மையஅளவிலான பயிற்சிகள் 2012-13

  • ஜூன் - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சி - 2 நாள்கள்
  • ஜூலை -   புதுமையான முறையில் கணிதம் கற்பித்தல் - 3 நாள்கள்
  • ஆகஸ்ட் - உள்ளடங்கிய கல்வி - 2 நாள்கள்
  • அக்டோபர் - அமைதி மற்றும் மதிப்புக் கல்வி - 2 நாள்கள்
  • நவம்பர் - வகுப்பறை தொடர்புடைய ஆங்கிலம் - 2 நாள்கள்
.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய சீருடை 

வழங்கப்படுகிறது  

அரசு பள்ளியில் படிக்கும் மாணவ & மாணவிகளுக்கு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மெரூன் கலர் சீருடை இந்த மாத இறுதிக்குள் வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ & மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு மாணவர்களுக்கு காக்கி கலர் அரைக்கால் சட்டை, வெள்ளை சட்டை, மாணவிகளுக்கு நீல நிற பாவாடை, நீல நிற தாவணி, வெள்ளை சட்டை வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள இலவச சீருடையின் நிறம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு மெரூன் கலர் பேன்ட், வெளிர் பிரவுன் நிற மேல் சட்டையும், மாணவிகளுக்கு மெரூன் நிற சல்வார் கமீசும், வெளிர் பிரவுன் நிற துப்பட்டாவும் வழங்கப்பட உள்ளது. இந்த கல்வி ஆண்டில் 48.63 லட்சம் மாணவ & மாணவிகளுக்கு 4 செட் இலவச சீருடை வழங்க 329.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் நேற்று முதல் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சீருடைகளையே மாணவ & மாணவிகள் அணிந்து வந்தனர். புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மெரூன் கலர் சீருடைகள் நேற்று வரை பள்ளிகளுக்கு வந்து சேரவில்லை.


இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சரக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய கலர் சீருடைகள் சமூகநலத்துறை மூலம் தைக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் அந்த பணிகள் முடிவடையும். புதுக் கோட்டை தேர்தல் பணியில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜூன் 15ம் தேதிக்கு பிறகுதான் அரசு பள்ளி மாணவ & மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கும் பணி குறித்து முடிவு செய்யப்படும். இந்த மாத இறுதிக்குள் ஒன்று அல்லது இரண்டு செட் சீருடை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

பெற்றோர் கூறுகையில், தனியார் பள்ளிகள் போன்று கோடை விடுமுறை நாட்களிலேயே அரசு பள்ளி மாணவ & மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கும் நடைமுறையை கல்வித்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளும் உள்ளது என்று பெயர் எடுக்க முடியும். பள்ளி திறக்கும் முதல் நாளில் புதிய சீருடைகளை அணிந்து மாணவ & மாணவிகள் ஆர்வமு
டன் பள்ளிக்கு வருவார்கள், என்றனர்.

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் மணி உத்தரவிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதி, பெயர், தந்தை பெயர், இன்ஷியல், ஜாதி போன்றவைகளை பள்ளி நிர்வாகங்கள் மாற்றம் செய்யக் கூடாது.
மாணவர்கள் சேர்க்கையின்போதே பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதியை சரியாக பெற்று பதிவு செய்ய வேண்டும். மாற்றம் செய்ய முடியாது என்பதை தெளிவாக எடுத்து கூற வேண்டும். பிறப்பு, ஜாதி சான்றுகளை பெற்று, அதில் உள்ள தேதி, விபரங்களை சரி பார்த்து பின்னரே பதிவு செய்ய வேண்டும். இதை தலைமையாசிரியகளும் சரி பார்த்து கையெழுத்திட வேண்டும்.
மதிப்பெண் சான்றுகளில் திருத்தம் செய்ய முடியாது என்பதை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கோர்ட் உத்தரவிட்டாலும் கூட, இயக்குனர் அனுமதி இல்லாமல் திருத்தம் செய்ய கூடாது. ஜாதி, பெயர், பிறந்த தேதி குறித்து அதிக அளவில் விண்ணப்பிக்கின்றனர். பலர் கோர்ட்டுகளுக்கு செல்கின்றனர். ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பள்ளி கல்வி செயலரையும் வழக்கில் சேர்த்து சம்மன் பெற்றால், அவரது பெயரை நீக்க அரசு வக்கீல்களை சந்தித்து நடவடிக்கை எடுக்க, முதன்மை கல்வி அலுவலர்கள் முன் வர வேண்டும். மதிப்பெண் சான்றுகளை திருத்தம் செய்ய, பள்ளி கல்வி இயக்குனர் பரிந்துரைபடி, அரசு தேர்வுத்துறை இயக்குனர் தான் திருத்தம் செய்ய முடியும். 2012- 13ம் ஆண்டில் இது போன்ற குறைபாடுகள் வராமல் பார்த்து கொள்ள, அனைத்து தலைமை ஆசிரியர்களையும் அறிவுறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் ஆண்டு

ஜூன் 25 | 2012 | இந்திய கல்வி முறை.
ஜூன் 26 | 2012 | கற்றலை மேம்படுத்துதல், எளிதாக்குதல்.
ஜூன் 27 | 2012 | தமிழ்/ தெலுங்கு/ உருது/மலையாளம் கற்பித்தல். மழலையர் பராமரிப்பு மற்றும் கல்வி.
ஜூன் 28 | 2012 |  ஆங்கிலம் கற்பித்தல்.
ஜூன் 29 | 2012 | கணிதம் கற்பித்தல்.
ஜூன் 30 | 2012 |  அறிவியல் கற்பித்தல்.
ஜூலை 2 | 2012 |  சமூக அறிவியல் கற்பித்தல்.

முதலாம் ஆண்டு

ஜூலை 4 | 2012 | குழந்தை கல்வி கற்றல்.
ஜூலை 5 | 2012 |  கற்றலை மேம்படுத்துதல் மற்றும் எளிதாக்குதல்.
ஜூலை 6 | 2012 | தமிழ்/தெலுங்கு/ உருது/மலையாளம் கற்பித்தல். மழலையர் பராமரிப்பு மற்றும் கல்வி.
ஜூலை 9 | 2012 | ஆங்கிலம் கற்பித்தல்.
ஜூலை 10 | 2012 |  கணிதம் கற்பித்தல்.
ஜூலை 11 | 2012 | அறிவியல் கற்பித்தல்.
ஜூலை 12 | 2012 | சமூக அறிவியல் கற்பித்தல்.

தொடக்கக் கல்வி - 20122013 ஆம் கல்வியாண்டு - ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - வழக்கு M.P.NOs. 1 to 1 / 2012 in W.P. No. 14864 to 14868, 15578,15579 / 2012, M.P. Nos. 2 & 2 / 2 in W.P. No. 15004, 15235, 15675, 15802, 16088, 16111, 16186 / 2012ன் மீதான 26.06.2012 நாளிட்ட சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால தீர்ப்பாணை - நடைமுறைப்படுத்துதல் சார்ந்து.

தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 9502 / டி 1 / 2012, நாள்.27.06.2012

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? - ஓர் எச்சரிக்கை குறிப்பு.!

சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம்
வெறும் வயிற்றில் பழம் சாப்பிடும்போது நமது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளிகொண்டு வருகிறது இந்த பழம். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்க வழி வகை செய்கிறது.

banana
வாழைப் பழம்


தெரிந்து கொள்ளுங்கள்



சி.எப்.எல்., பல்பிலும் சிக்கல்


மின்தடையும், தட்டுப்பாடும் நிலவும் சூழ்நிலையில் மின்சாரத்தைச்

 சேமிக்க சி.எப்.எல்., பல்புகள் குறித்து அதிகம் பேசப்படுகிறது.குண்டு

 பல்புகளை விட 3 மடங்கு குறைவான மின் ஆற்றலை

 பயன்படுத்துகின்றன. சி.எப்.எல்., விளக்கில் பாதரசம் உள்ளது.

 சி.எப்.எல்., பல்பை விற்கும் கடைக்காரரை அவற்றைச் சேகரித்து

 அதனை உற்பத்தி செய்யும் நிறுவனத்திடம் அனுப்ப வேண்டும் என்னும்

 சட்ட விதி உள்ளது.



ஆனால் இது குறித்த விழிப்புணர்வு சி.எப்.எல்., பல்பை வாங்குவோருக் கும்,

 கடைக்காரர்களுக்கும் இல்லை. விற்கும் நிறுவனங்களும் இதனை 

கண்டு கொள்ளவில்லை

. பியூஸ் ஆன உடன் தூக்கி எறியப்படும் சி.எப்.எல்., வழியாக பாதரசம்

 மண்ணில் சேர்கிறது.

 ஒரு பாதரச தெர்மாமீட்டரில் உள்ள பாதரசம் ஒரு நீர்நிலையையே 

மாசுபடுத்த போதுமானது.



சி.எப்.எல்., பல்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கங்கள்

 அவை மறுசுழற்சி

 செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்த வேண்டும். 

ஏனெனனில் பாதரச மாசுபாடு 

மனிதர்களின் இனப்பெருக்க மண்டலத்தை பாதிக்கும்.

.

.
ஆனால் இது குறித்த விழிப்புணர்வு சி.எப்.எல்., பல்பை வாங்குவோருக்

 கும்

, கடைக்காரர்களுக்கும் இல்லை. விற்கும் நிறுவனங்களும் இதனை

 கண்டு கொள்ளவில்லை

. பியூஸ் ஆன உடன் தூக்கி எறியப்படும் சி.எப்.எல்., வழியாக பாதரசம் 

மண்ணில் சேர்கிறது

. ஒரு பாதரச தெர்மாமீட்டரில் உள்ள பாதரசம் ஒரு நீர்நிலையையே 

மாசுபடுத்த போதுமானது


சி.எப்.எல்., பல்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கங்கள்

 அவை மறுசுழற்சி 

செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்த வேண்டும்

. ஏனெனனில் பாதரச மாசுபாடு 

மனிதர்களின் இனப்பெருக்க மண்டலத்தை பாதிக்கும்.


ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம்

பி.எட்., - ஆசிரியர் பயிற்சி டிப்ளமா உள்ளிட்ட படிப்புகளுக்கு, கல்லூரிகளுக்கு தகுந்தாற் போல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு, கட்டணத்தை முறைப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட தனியார் பி.எட்., கல்லூரிகள்; 600 தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், ஒரே சீரான வகையில் கட்டணம் இல்லை. கல்லூரிகளுக்கு ஏற்றாற்போல், வெவ்வேறான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

முதன் முறையாக இதை முறைப்படுத்தி, படிப்பிற்கு தகுந்தாற்போல் கட்டணத்தை நிர்ணயித்து, தமிழக அரசு நேற்று அறிவித்தது. சுயநிதி தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான கட்டணம் குறித்து, கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பாலசுப்ரமணியன் நேற்று மாலை அறிவித்தார்.
அவர் கூறியதாவது: சுயநிதி தனியார் கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சி கல்லூரிகளுக்கு, 2012- 13ம் கல்வியாண்டிற்கு கல்விக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, அனைத்து வகை கல்வியியல் கல்லூரிகளிடம் இருந்து, வரவு மற்றும் செலவு விவரங்களை, ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்கப்பட்டது

2012-13 ஆம் கல்வியாண்டு - ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - சில நெறிமுறைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி 1 / 2012 , நாள். 26.06.2012
அரசாணை எண். 107ன் படி 10+2+3 மற்றும் 11+1+3 முடித்தவர்களுக்கு மட்டும் உரிய பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் 3 ஆண்டு பட்டப்படிப்பு முடித்த பின்பு +2 முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.   

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை (2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:  வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களை (2010-11) நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்கள் ஜூலை 1-ம் தேதி மீண்டும் கலந்துகொள்ளலாம்.  இதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லையென்றாலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை நகல் எடுத்தும் கலந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தற்காலிக பணியாளர்களுக்கு பேறுகால விடுப்பு பொருந்தும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 அரசுத் துறைகளில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் பேறுகால விடுப்பு 80 நாட்கள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்தவர் கண்ணகி. இவர் கால்நடை பராமரிப்பு துறையில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி பணியாளராக கடந்த 30.5.1985 பணியில் சேர்ந்தார். 1993ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, 1995ல் அரசுக்கு தற்காலிக பணியாளர்களின் பட்டியலை நிர்வாகம் அனுப்பி வைத்தது.

இந்நிலையில், 5.5.1996ல் கண்ணகி கர்ப்பமானதால் நிர்வாகத்திடம் பேறுகால விடுப்பு கோரினார். தற்காலிக பணியாளர் என்பதால் பேறுகால விடுப்பு தரமுடியாது என்று நிர்வாகம் மறுத்துவிட்டது. 30.6.1996ல் கண்ணகிக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

அதன் பின்னர் மீண்டும் பணியில் சேர கண்ணகி முயன்றபோது நிர்வாகம் பணி வழங்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசா ரித்த நிர்வாக தீர்ப்பாயம் 18.11.1999ம் ஆண்டில் மனு தாரருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் நிர்வாகம் கண்ணகிக்கு வேலை வழங்க மறுத்துவந்தது.

இதனால், கண்ணகி மீண்டும் நிர்வாக தீர்ப்பாயத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில் தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயம் கலைக்கப்பட்டதால் இவ் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இருதரப்பின் வாதத்தையும் கேட்ட நீதிபதி, பேறு கால விடுப்பு சட்டம் 1961 பிரிவு 5 (2)படி ஓர் ஆண்டில் 80 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த பெண் பணியாளர்களுக்கு 12 வாரம் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்புக்கு தகுதியானவர்கள். இதில் ஒப்பந்த பணியாளர்களாக இருந்தாலும் தினக் கூலியாக இருந்தாலும் இவ்விதி பொருந்தும் என்று தீர்ப்பு வழங்கினார்.

மேலும், மனுதாரருக்கு வேலை வழங்க மறுத்தது சட்ட விரோதமான செயல் என்றும் இது அரசமைப்பு சட்ட உறுப்பு எண் 14, 21 பிரிவுக்கு எதிரானது என்றும் கூறினார். எனவே, மனுதாரருக்கு மீண்டும் பணி வழங்கி, அனைத்து விதமான பண, பணிபயன்களையும் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்

பள்ளிகளில் ஆபத்தான விளையாட்டுப் பொருட்களை வைக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டுப் பொருட்களை பள்ளிகளில் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் குற்றாலத்தைச் சேர்ந்தவர் வெள்ளிமலை. இவரது மகள் முத்துலட்சுமி குற்றாலம் கணபதி தேசிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 22.12.2003 அன்று மதிய உணவு இடைவேளையின் போது முத்துலட்சுமி பள்ளி அருகே தோழிகளுடன் சேர்ந்து ராட்டினம் ஆடினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் முத்துலட்சுமியின் கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் வலது கை அப்பறப்படுத்தப்பட்டது.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிமலை வழக்கு தொடர்ந்தார். அதில் தனது மகள் வலது கையை இழக்க பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு தான் காரணம். எனவே அவளது எதிர்காலத்தை கருத்து கொண்டு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா நேற்று வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது,

வழக்கு விசாரணையில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் கவனக் குறைவு மூலம் சிறுமி வலது கையை இழந்துள்ளது தெரிய வருகின்றது. சிறுமியின் தந்தை அரசிடம் இழப்பீடு அளிக்க கோரிக்கை விடுத்தும் கிடைக்கவில்லை.

வழக்கின் தன்மை, ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொத்தம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதில் பள்ளி நிர்வாகம் ரூ.1.5 லட்சமும், அரசு ரூ.1.5 லட்சமும் வழங்க வேண்டும். மேலும் இழப்பீட்டுத் தொகையை 2005ம் ஆண்டு முதல் 12 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.

ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை பள்ளி நேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. இதனால் பல விபத்துகள், கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. மேலும் பள்ளி வளாகம் அல்லது பள்ளியையொட்டிய பகுதியில் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய விளையாட்டு பொருட்களை வைக்க அனுமதிக்கக் கூடாது. குழந்தைகளின் சுகாதாரத்தை கெடுக்கும் உணவுப் பொருட்களை பள்ளியின் அருகே விற்கக் கூடாது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

பச்சை மையை யார் பயன்படுத்தலாம்? அரசு புதிய உத்தரவு

பச்சை மையை யார், எப்போது, எந்தத் தருணத்தில் பயன்படுத்தலாம் என்பது குறித்து தமிழக அரசு புதிய வழிகாட்டுதல் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
  • அரசு அலுவலகங்களில் நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ணத்திலான மைகளை மட்டுமே அரசு ஆவணங்களில் எழுத பயன்படுத்த வேண்டும். இவைகளைத் தவிர பிற வண்ண மைகளை பயன்படுத்தக் கூடாது.  
  •  சட்டத் துறையைச் சேர்ந்தவர்கள் சிவப்பு நிற மையை உபயோகப்படுத்தலாம்.
யார் பச்சை மை பயன்படுத்தலாம்? 
  • வரைவு உத்தரவுகள், அறிவிக்கைகள், விதிகள் போன்றவற்றில் திருத்தம் செய்யும் போது பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அதிகாரிகள் பச்சை நிற மையை பயன்படுத்தலாம்.  
  • அரசு அலுவலகங்களில் மைப் பேனா, பால்பாயிண்ட் பேனா, ஜெல் பேனா ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கலாம். 
  • சான்றொப்பம் இடுவதற்கு அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் பச்சை நிற மையினை பயன்படுத்த வேண்டும்.  
  • பிரிவு "அ' அலுவலர்கள் மட்டும் அரசு கோப்புகளில் சிறு குறிப்புகள் எழுத பச்சை நிற மையை பயன்படுத்தலாம். 
அரசாணை எண்: 151 நாள்: 21-10-2010

தமிழ்நாடு குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2010 வரைவு விதிமுறைகள் வெளியீடு

குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான வரைவு விதிமுறைகள் தமிழக அரசின் இணையதளத்திலும், பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்திலும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் இந்த விதிமுறைகளைப் பார்வையிட்டு தங்களது கருத்துகளை டிசம்பர் 20-ம் தேதிக்குள் அரசுக்குத் தெரியப்படுத்தலாம். 

இணை இயக்குநர் (உயர் கல்வி), பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம், சென்னை -600 006 என்ற முகவரிக்கு தங்களது கருத்துகளை அஞ்சலில் அனுப்பலாம். இமெயில் முகவரி:  jdhssed​@nic.in


தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2010 வரைவு விதிகள்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - விதிமுறைகள்

6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாயமாக்கும் வகையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தமிழக அரசின் சார்பில் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • மாணவர்களின் பெற்றோர்களை உள்ளடக்கிய பள்ளி நிர்வாகக் குழு பள்ளியின் வளர்சிக்கான மூன்றாண்டு திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.
  • இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் நடைபெறும் மாணவர் சேர்க்கை, தேவைப்படும் கூடுதல் ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள், தேவைப்படும் நிதி போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • பள்ளி நிர்வாகக் குழுவின் தலைவர் அல்லது துணைத் தலைவர், அமைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்ட இந்தத் திட்ட அறிக்கை நிகழ் நிதியாண்டு முடிவதற்கு முன்னதாக உள்ளூர் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்

பிரம்படி கொடுக்கும் ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

பள்ளி குழந்தைகளுக்கு பிரம்படி போன்ற கடுமையான தண்டனை கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை அளிக்கும் வகையில் சிறுவர்கள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிகளில் ‘கார்பரேட் பனிஷ்மென்ட்’ எனப்படும் பிரம்படி தண்டனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறு தவறு செய்யும் மாணவர்களுக்கும் பள்ளிகளில் பிரம்படி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த 2010ம் ஆண்டு 7 மாநிலங்களில் சுமார் 6 ஆயிரம் மாணவர்களிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் ஆய்வு நடத்தியது. இதில் 99 சதவீத மாணவர்கள் பள்ளிகளில் கடுமையான தண்டனையை சந்தித்து வருவதாக புகார் தெரிவித்திருந்தனர்.

இதை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சிறுவர்கள் பாதுகாப்பு சட்டத்தை குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் என பெயர் மாற்றம் செய்யவும், அதில் பல்வேறு புதிய அம்சங்களை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிய அளிவில் காயம் ஏற்படுத்தும் பிரம்படி தண்டனைக்கு ஒரு வருட சிறை தண்டனையும், அந்த தவறை மீண்டும் செய்தால் 3 வருட சிறை தண்டனை அளிக்கவும் சட்டதிருத்தம் செய்யப்படுகிறது. இரண்டாவது முறை தவறு செய்யும் போது பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யவும் சட்டதிருத்தம் கொண்டு வரப்படுகிறது.

மாணவர்கள் மனதளவிலும், உடல் ரீதியிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் வகையில் தண்டனை வழங்கும் ஆசிரியர்களுக்கு 5 வருட சிறை தண்டனையும், இதே தவறை இரண்டாவது முறை செய்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

HSC March 2012 - Online filing of Application for Revaluation / Retotalling

Government of Tamil Nadu
Directorate of Government Examinations
Higher Secondary Examination March 2012



Application for Revaluation / Retotalling of Answer Script



TNTET 2012 - LIST OF EXAM VENUE / CHECK YOUR APPLICATION STATUS



                          Tamil Nadu Teachers Eligiblity Test 2012

horizontal rule
I.  List of Candidates
    enter your Application No. (eg.0100001)
           (for all the candidates who have applied for Examination)
                                                      App No.      
EXAMINATION TIME TABLE


Tamil Nadu Teacher Eligiblity Test 2012
 I. List of Admitted candidates                                      -        656088
Date of Examination: 12.07.2012 Thursday
Paper I Timing: 10:30 A.M to 12 Noon
Paper II Timing: 02:30 P.M to 04:00 P.M
Paper Both : (Paper I Timing and Paper II Timing)
           

Dated: 25-06-2012
Chairman

ஊதிய முரண்பாடு களைதல் குழு கவனிக்குமா? 3 ஆண்டு கோரிக்கைக்கு முடிவு வருமா?


6வது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4,200 தர ஊதியம் கிடைக்குமா? மூன்று ஆண்டு கால கோரிக்கை முடிவுக்கு வருமா என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 75 ஆயிரம் ஆசிரியர்களுமாக மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 44 ஆயிரத்து 905 பேர் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 9 ஆயிரத்து 969 பேர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள். 65 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள். மீதமுள்ள 91 ஆயிரத்து 36 பேர் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.இடைநிலை ஆசிரியர்களில் சாதாரண நிலையில் 40 ஆயிரம் பேரும், தேர்வு நிலையில் 30 ஆயிரம் பேரும், சிறப்பு நிலையில் 21 ஆயிரத்து 36 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டன. அதன் படி இடைநிலை ஆசிரியர்களில் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200& 20,200, தர ஊதியம் ரூ.2,800, தேர்வு நிலையில் உள்ளவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,300&34,800, தர ஊதியம் ரூ.4,300, சிறப்பு நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.9,300 & 34,800 அடிப்படை ஊதியம், ரூ.4,500 தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊதிய விகிதத்தை மாற்றி சாதாரண நிலையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 9,300 & 34,800, தர ஊதியம் ரூ.4,200ம், தேர்வு நிலையில் உள்ளவர்களுக்கு தர ஊதியம் ரூ.4,600ம், சிறப்பு நிலையில் உள்ளவர்களுக்கு தர ஊதியம் ரூ.4,800ம் வழங்க வேண்டுமென்று கடந்த மூன்று ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஊதியக் குழு முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு அமைக்கப்பட்ட போதும் இடைநிலை ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
தற்போது தமிழக அரசு செயலாளர் (செலவுகள்) கிருஷ்ணனை தலைவராகக் கொண்டு உறுப்பினர்கள் அரசு கூடுதல் செயலாளர் பத்மநாபன், இணை செயலாளர் உமாநாத் ஆகிய மூவரை கொண்ட புதிய குழு ஊதியக் குழு ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் குறை தீர்ப்பில் சிக்கல்

தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தாததால், ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அரசு உதவி பெறும் 632 உயர்நிலைப் பள்ளிகள், 1,120 மேல்நிலைப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களது குறைகளை தீர்க்க, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, குறை தீர்ப்பு கூட்டங்கள், மாவட்ட கல்வி அலுவலரால் அந்தந்த கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், இரண்டு நாட்கள் நடத்தப்பட்டு வந்தது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது குறைகளை தலைமை ஆசிரியர்களிடம் மனுவாக வழங்குவர். அவை, குறை தீர்ப்பு கூட்டத்தின் போது, மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்படும். இதை பெற்று அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். 

தற்போது, இந்த குறை தீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் உள்ள வருகைப் பதிவேட்டில், குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டதாக பதிவு செய்து வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான மனுக்கள் தீர்வு கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 

குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்த அரசும், பள்ளிக்கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அமைச்சர் செல்லூர் ராஜு மகன் தமிழ்மணி இரு சக்கர வாகன விபத்தினால் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து துயரத்தில் ஆழ்ந்திருக்கும் செல்லூர் ராஜுவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மகன், நேற்றிரவு சென்னையில் உறவினர் இல்ல நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு இரு சக்ர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்த நேரம் பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் ஐகோர்ட் எதிரில் நள்ளிரவு 12.30 மணிக்கு வேகமாக வந்த போது எதிர்பாரதவிதமாக ஸ்பீடு பிரேக்கரில் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனால் தலையில் பலத்த காயத்திற்கு உள்ளானார்.

உடனடியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தமிழ்மணி  இன்று காலமானார்.

தமிழ்மணியின் மரணத்தால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு அவரது குடும்பத்தினக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

வட்டார வள மையஅளவிலான பயிற்சிகள் 2012-13..

  • ஜூன் - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சி - 2 நாள்கள்
  • ஜூலை -   புதுமையான முறையில் கணிதம் கற்பித்தல் - 3 நாள்கள்
  • ஆகஸ்ட் - உள்ளடங்கிய கல்வி - 2 நாள்கள்
  • அக்டோபர் - அமைதி மற்றும் மதிப்புக் கல்வி - 2 நாள்கள்
  • நவம்பர் - வகுப்பறை தொடர்புடைய ஆங்கிலம் - 2 நாள்கள்

குறுவள மைய பயிற்சி நாள்கள் 2012-13 (CRC)

  • 23-06-2012  - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சி 
  • 14-07-2012  - துணைக்கருவிகள் தயாரித்தல் பட்டறை
  • 11-08-2012  - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - அனுபவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
  • 15-09-2012  - செயல்திட்டம்
  • 20-10-2012  - உள்ளடங்கிய கல்வி
  • 17-11-2012  - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
  • 08-12-2012  - கலை மற்றும் கைவேலைப்பாடுகள் பட்டறை
  • 12-01-2012  - எளிய அறிவியல் செய்முறைகள் பட்டறை
  • 09-02-2012  - வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல்
  • 09-03-2012  - பள்ளி சுகாதாரம் மற்றம் தன் சுத்தம்

பெண் வாரிசுகளுக்கு திருமணமானாலும் கருணை அடிப்படையில் பணி : விதிமுறைகளைத் தளர்த்தியது அரசு

பெண் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான விதிமுறைகளை வகுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

"பணியில் இருக்கும் போது, மரணமடைந்த அரசு ஊழியரின் நெருங்கிய உறவினர்கள் என்று குறிப்பிடப்பட்ட நபர்களில், திருமணமாகாத மகள் என்ற நிலையில், பணி நியமனம் கோரி விண்ணப்பம் அளித்து, பணி நியமனம் வழங்கப்படுவதற்கு முன்னதாகவே திருமணம் செய்து கொண்டவர்கள், கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு உரிய தகுதிகளை நிறைவு செய்யும் பட்சத்தில், பணி நியமனம் வழங்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


அரசாணை எண்: 96 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை நாள்: 18-06-2012
Directorate of Elementary Education
DPI Complex
College Road, Chennai-600 006
(PBX Nos.  28253684 & 28253709)
Designation / Section
Name
Direct
.PABX
Resi.
Director
Thiru V.C Rameswaramurugan
28271169
122
 
JD (Admin)
  
28267186
127
  
JD (Aided School Scheme)
Tmt N Latha
28202414
126
.
FAX
.
28217583
.
.
 
Telephone Directory            HODs

தனியார் கல்லூரிகளில் பி.எட் : கல்விக் கட்டணம் விரைவில் அறிவிப்பு

தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கான கல்விக் கட்டணம் குறித்து நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும், 647 தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு ஏறத்தாழ 2,500 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருவதால், பி.எட். படிப்பில் மாணவ-மாணவிகள் போட்டிப் போட்டு சேருகிறார்கள். தற்போது போட்டித்தேர்வு முறை வந்துவிட்டதால் பி.எட். படிப்புக்கு மவுசு மேலும் கூடிவிட்டது.
அரசு மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் மிகக்குறைந்த பி.எட். இடங்களே இருப்பதால், பட்டப் படிப்பில் மிக அதிக மதிப்பெண் பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே அங்கு இடம் கிடைக்கிறது. பெரும்பாலான மாணவ-மாணவிகள் பி.எட். படிப்பதற்கு தனியார் சுயநிதி கல்லூரிகளைத்தான் நாடுகிறார்கள்.
தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் எவ்வளவு கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து அவர்களின் கோரிக்கைகளையும், கேட்டறிந்தது. நடப்பு கல்வி ஆண்டில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், தனியார் கல்லூரிகளில் பி.எட். கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்க அரசு முடிவு செய்துள்ளது.
கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், எவ்வளவு கல்விக்கட்டணம்? என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இன்று 25.06.2012 நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பணியிடங்களின் காலிப்பணியிட அறிக்கை, மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலிலுள்ள குறைபாடுகளையும், முரண்பாடுகளையும் களைவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது இரட்டைப் பட்டங்கள் குறித்து சர்ச்சை பெரிய அளவில் உருவாகியுள்ளதால் அதுகுறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் அரசாணை எண்.15ன்படி உருவாக்கப்பட்ட 1267 பணியிடங்களை பதவிஉயர்வு கலந்தாய்வில் காட்டுவதா என்பதை குறித்தும் முடிவெடுக்கப்படும் என்றும் மேலும் இந்த அரசாணை சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்குகள் குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று தொடக்கக் கல்வி துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
  1. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை (மே 15) முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.
  2. MBBS Admission Official Website| www.tnhealth.org
  3. மே 11ல் பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பங்கள்
  4. B.E/B.Tech Admission Official Website | www.annauniv.edu/tnea2012/
  5. 14ம் தேதி முதல் கால்நடை படிப்புகளுக்கான விண்ணப்பம்
  6. B.V.Sc Admission Official Website | www.tanuvas.tn.nic.in/ugadmin
  7. 7ம் தேதி முதல் வேளாண்மைப் படிப்புகளுக்கான விண்ணப்பம்
  8. Agri Admission Official Website | www.tnau.ac.in/admission
    ......................TNPSC..........
     
    பொறுப்பேற்பு
  1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவர் பொறுப்பேற்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்.
  2. TNPSC INTERVIEW PART - 1
  3. TNPSC INTERVIEW PART - 2
  4. OFFICIAL WEBSITE
  5. TNPSC OFFICIAL WEBSITE.
  6. TNPSC RESULTS
  7. RESULTS 
  8. STUDY MATERIALS
  9. TRB|TET|TNPSC|12 மாதங்களுக்கான சமீபத்திய நிகழ்வுகள் 2011 | 12 MONTHS Current Affairs-2011 
  10. ANNUAL PLANNER
  11. TNPSC ANNUAL PLANNER FOR THE YEAR 2012-2013
  12. ONLINE SERVICES
  13. TNPSC ONE TIME REGISTRATION SYSTEM
  14. CURRENT NOTIFICATIONS
  15. TNPSC SYLLABUS FOR VARIOUS POSTS
  16. TNPSC SYLLABUS
  17. QUESTION PAPERS AND ANSWER KEYS
  18. PREVIOUS YEAR QUESTION PAPERS
  19. ANSWER KEYS
  20. DEPARTMENTAL EXAMINATIONS
  21. Click here to Download Departmental Examinations May 2012 Hall Ticket
  22. DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration
  23. Results of Departmental Examinations - DECEMBER 2011
  24. FEES DETAILS
  25. SYLLABUS
    1. Departmental Test- Books To Download
    Departmental Test- Previous Year Question Papers
  26. Departmental Test Bulletin
  27. MORE TO KNOW
  28. NAMES OF EXAMINATION / SERVICE AND CODE NUMBERS
  29. LIST OF EXAMINATION CENTRES
  30. LIST OF COMMUNITIES.
  31. VARIOUS G.Os
  32. LIST OF SUBJECTS WITH CODES
  33. TNPSC NEWS
  34. அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளுக்கு 8-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

TET அறிவிப்பு : ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 12.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.

 

  1. TRB EDUCATION | TET குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் | Child Development and Pedagogy 001-1000 - QUESTIONS
  2. Tamil Nadu Teacher Eligiblity Test (TNTET) - 2012 Advertisement and Prospectus
  3. Tamil Nadu Teacher Eligiblity Test (TNTET) - 2012 Model Question Paper and Syllabus for Paper I and Paper II
* ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏப்ரல்12ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் கால நீட்டிப்பு செய்துள்ளது.


ஆசிரியர் தகுதி தேர்வு (TET) மார்க் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள் அவர்களுக்கு போட்டித்தேர்வு கிடையாது என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி அறிவித்தார்.

*   ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET)  பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன.