PAGEVIEWERS


மாவட்டம்தோறும் டீன்-ஏஜ் பருவத்தினருக்காக கவுன்சிலிங் செண்டர்கள்: அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மாவட்டம் தோறும் வளர் இளம் பருவத்தினரின் மனச்சிக்கல்களை கவுன்சிலிங் மூலம் தீர்ப்பதற்கு மையங்கள் அமைக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து வெளியான அரசு உத்தரவில் தற்போதைய உலகம் போட்டிகள் நிறைந்த உலகம். இத்தகைய சூழ்நிலையை எதிர் கொள்ள இயலாமையினாலும் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மனதளவில் பாதிக்கப்படும் வளர் இளம் பருவத்தினரின் பிரச்னைகளை கண்டறிந்து, அவர்களுடன் கலந்துபேசி, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாவட்டத்திற்கு ஒரு மனவள ஆலோசனை மையம் என்று 31 மாவட்டங்களிலும், சென்னையில் 3 மையங்கள் என 34 ஆலோசனை மையங்களை ஏற்படுத்த 2 கோடியே  51 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.


குரூப் 1 தேர்வு மீண்டும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜனவரி 27ம் தேதி நடைபெறுவதாக இருந்த குரூப் 1 தேர்வு தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்தேர்வு பிப்ரவரி 16ம் தேதி நடைபெறும். ஏற்கனவே, கடந்தாண்டு டிசம்பர் 30ம் தேதி நடைபெறவிருந்த
இத்தேர்வு, இந்தாண்டு ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தற்போது பிப்ரவரி 16ம் தேதிக்கு மீண்டும் ஒருமுறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.




வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் கடந்த எட்டு ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் வந்த ஆசிரியை சசி கலாவிற்கு கவுன்சிலர் மூர்த்தி பரிசு வழங்கி கவுரவித்தார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கும் அவர் ஊக்கப்பரிசு வழங்கினார். அருகில், பள்ளி தலைமை ஆசிரியை சுமதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கட்ராமன்.

   PAY CELL   RTI MATER  















  1. ஊதிய குறைதீர்க்கும் பிரிவு தனது அறிக்கையை 

             அரசிடம் சமர்ப்பிக்கவில்லை ..


                      H R A .வில் மாற்றம் இல்லை ,


       அரசு கடித  எண் ;69278/ஊ.கு.தீ.பி./  நாள் ;09.01.2013.