PAGEVIEWERS


புதுமைப்பித்தன் படைப்புகள்
சிறுகதைகள்
1. அகல்யை
2. செல்லம்மாள்

3. கோபாலய்யங்காரின் மனைவி

4. இது மிஷின் யுகம்

5. கடவுளின் பிரதிநிதி

6. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

7. படபடப்பு

8. ஒரு நாள் கழிந்தது

9. தெரு விளக்கு

10. காலனும் கிழவியும்

11. பொன்னகரம்

12. இரண்டு உலகங்கள்

13. மனித யந்திரம்

14. ஆண்மை

15. ஆற்றங்கரைப் பிள்ளையார்

16. அபிநவ ஸ்நாப்

17. அன்று இரவு

18. அந்த முட்டாள் வேணு

19. அவதாரம்

20. பிரம்ம ராக்ஷஸ்

21. பயம்

22. டாக்டர் சம்பத்

23. எப்போதும் முடிவிலே இன்பம்

24. ஞானக் குகை

25. கோபாலபுரம்

26. இலக்கிய மம்ம நாயனார் புராணம்

27. 'இந்தப் பாவி'

28. காளி கோவில்

29. கபாடபுரம்

30. கடிதம்

31. கலியாணி

32. கனவுப் பெண்

33. காஞ்சனை

34. கண்ணன் குழல்

35. கருச்சிதைவு

36. கட்டிலை விட்டிறங்காக் கதை

37. கட்டில் பேசுகிறது

38. கவந்தனும் காமனும்

39. கயிற்றரவு

40. ?

41. கொடுக்காப்புளி மரம்

42. கொலைகாரன் கை

43. கொன்ற சிரிப்பு

44. குப்பனின் கனவு

45. குற்றவாளி யார்?

46. மாயவலை

47. மகாமசானம்

48. மனக்குகை ஓவியங்கள்

49. மன நிழல்

50. மோட்சம்

51. 'நானே கொன்றேன்!'

52. நல்ல வேலைக்காரன்

53. நம்பிக்கை

54. நன்மை பயக்குமெனின்

55. நாசகாரக் கும்பல்
56. நிகும்பலை

57. நினைவுப் பாதை

58. நிர்விகற்ப சமாதி

59. நிசமும் நினைப்பும்

60. நியாயம்

61. நியாயந்தான்

62. நொண்டி

63. ஒப்பந்தம்

64. ஒரு கொலை அனுபவம்

65. பால்வண்ணம் பிள்ளை

66. பறிமுதல்

67. பாட்டியின் தீபாவளி

68. பித்துக்குளி

69. பொய்க் குதிரை

70. 'பூசனிக்காய்' அம்பி

71. புரட்சி மனப்பான்மை

72. புதிய கூண்டு

73. புதிய கந்த புராணம்

74. புதிய நந்தன்

75. புதிய ஒளி

76. ராமனாதனின் கடிதம்

77. சாப விமோசனம்

78. சாளரம்

79. சாமாவின் தவறு

80. சாயங்கால மயக்கம்

81. சமாதி

82. சாமியாரும் குழந்தையும் சீடையும்

83. சணப்பன் கோழி

84. சங்குத் தேவனின் தர்மம்

85. செல்வம்

86. செவ்வாய் தோஷம்

87. சிற்பியின் நரகம்

88. சித்தம் போக்கு

89. சித்தி

90. சிவசிதம்பர சேவுகம்

91. சொன்ன சொல்

92. சுப்பையா பிள்ளையின் காதல்கள்

93. தனி ஒருவனுக்கு

94. தேக்கங் கன்றுகள்

95. திறந்த ஜன்னல்

96. திருக்குறள் குமரேச பிள்ளை

97. திருக்குறள் செய்த திருக்கூத்து

98. தியாகமூர்த்தி

99. துன்பக் கேணி

100. உணர்ச்சியின் அடிமைகள்

101. உபதேசம்

102. வாடாமல்லிகை

103. வாழ்க்கை

104. வழி

105. வெளிப்பூச்சு

106. வேதாளம் சொன்ன கதை

107. விபரீத ஆசை

108. விநாயக சதுர்த்தி

மொழிபெயர்ப்பு சிறுகதைகள்



















சிறுகதைகள்
புதினங்கள்

கட்டுரை நூல்கள்

புதினங்கள்

சிறுகதைகள்

சிறுகதைகள்


CCE பற்றி ஆசிரியர்களால் அடிக்கடி கேட்கப்படும்
கேள்விகளும் அவற்றிற்கான விடைகளும் 
என்ற தலைப்பில் பள்ளிகல்வித்துறை கையேடு
ஒன்றினை    வெளியிட்டுள்ளது.    


CLICK HERE TO DOWNLOAD  
TN GOVT    [Press Release No.471] ( Free bicycles to ITI students )
EXPECTED DEARNESS ALLOWANCE FROM JULY 2012

AICPIN will certainly go up, because of the essential commodities prices are going high with non stop. Anyway we can assume the additional Dearness allowance from July 2012 will be minimum 7%. The existing Dearness allowance is 65%, it will become as 65% + 7% = 72%.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2012 - 13 ஆம் ஆண்டிற்கு வட்டார மைய அளவில் நடைபெறும் பயிற்சிக்கு ரூ.100 /- ஓர் ஆசிரியருக்கு ஒரு நாள் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.


தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவு.

6 - ஆவது ஊதியக்குழு ஊதிய விகிதம் வந்ததால்
01.06.2009 - க்கு பின்னர் பணியேற்றவர்களுக்கு
ஏற்பட்டுள்ள ஊதிய பாதிப்பை பாரீர்.


01.01.2012 - இன் படி இதனை ஆசிரியர் அரங்கம் விளக்க
விரும்புகிறது.


01.01.2012 இ.நி.ஆசிரியர் அ. ஊதியம்  5200+2800 +750 = 8750
01.01.2012 - இன் படி D.A. 65%                                                   = 5688
                                                            TOTAL                                   = 14438


6 - வது ஊதியகுழு ஊதிய விகிதம் வராமலிருந்தால் 
01.01.2012 - இல் இடைநிலை ஆசிரியர் ஊதியம்
(முந்தைய ஊதிய விகிதத்தில் )                 4500 + D.P.2250     =  6750
01.01.2012 - இல் முந்தைய ஊதிய விகித D.A.139%               =  9383
(G.O.No. 145.date.30.04.2012)                  TOTAL                           =           16133


                                                               16133 - 14438 = 1695 இழப்பு.

இதற்கு ஒரே தீர்வு மத்தியஅரசுக்கு இணையான ஊதியத்தை
இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதேயாகும்.

ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டதன் நோக்கம் குறைகளை
தீர்ப்பதற்காகவே.    அவர்களிடம் இதுபோன்ற குறைகளை சுட்டி
காட்டுவதற்கு மாறாக கோரிக்கை வைத்துக்கொண்டுள்ளார்கள் நம்
பெரும்பான்மை சங்கங்கள்.    கோரிக்கை வைக்கும் காலம் கடந்து
தற்போது ஊதியத்தில் உள்ள குறைகளை தீர்க்க குழு அமைக்கப்பட்டுள்ள
காலத்தில் குறைகளை விளக்கி கூறாமல் கோரிக்கை வைத்து கொண்டிருந்தால் பாதிப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே.

எந்த சங்கம் இது போன்று தெளிவாக பாதிப்புகளை சுட்டி காட்டி
குறைதீர்ர்க்கும் பிரிவிடம் விளக்கி உள்ளது என்பது மனசாட்சி உள்ள
இடைநிலை ஆசிரியர்களுக்கு தெரியும்.
           
          தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் எவ்வாறு பாதிப்புகளை
ஊதிய குறை தீர்க்கும் பிரிவிடம் விளக்கியுள்ளது என்பதற்கு
சான்றாக இதனை குறிப்பிட்டுள்ளோம்.

       ஒவ்வொரு நிலையிலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எவ்வகையான
பாதிப்புகள் என்பதை T.A.T.A விளக்கியுள்ளது.

    மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா             அவர்கள்          உறுதியாக
 இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை நீக்குவார்கள் 
 என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
                                               
Honble Chief Justice of Madras High Court called on the Honble Chief Minister
Press Release

Dress rehearsal for the Independence day celebration
Press Release
Press Release

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் குறிப்பிட்ட மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில், பெண்களுக்கான இரண்டாண்டு செவிலியர் பட்டயப் படிப்பிற்கு, 2,000 இடங்கள் வரை உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது, "கட்-ஆப்' மதிப்பெண், கலந்தாய்வு தேதி உள்ளிட்ட விவரங்களை, www.tnhealth.org என்ற இணைய தளத்தில் அறியலாம்.





சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்ற 8 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணியும், 4 பேருக்கு ஐ.எப்.எஸ். பணியும், 4 பேருக்கு ஐ.பி.எஸ். பணியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.



சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு உதவும் வகையில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி, வசுந்தரா வெற்றி ஆகியோரால் மனிதநேய அறக்கட்டளை தொடங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. சாதி, மத வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் பயன்பெறும் நோக்கில் இந்த அறக்கட்டளை சார்பில் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் மூலமாக பல்வேறு சமூகப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடக்கக் கல்வி - 1997 - 1998 ஆம் ஆண்டுகளில் நாடுநர்கள் இல்லாமையால் SC / ST இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் அதே இனத்தைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதியுடன் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் விவரங்களை கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 16431 / டி1 / 2012, நாள். 07.08.2012 பதிவிறக்கம் செய்ய...
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளில் ‘திறந்த புத்தகம்’ தேர்வு முறை வரும் 2013&14ம் ஆண்டு நடைமுறைக்கு வர இருக்கிறது.

மனப்பாடம் செய்து பாடம் படிக்கும் நடைமுறைக்கு ஓரளவு தீர்வு காணும் வகையில் சிபிஎஸ்இ புதிய தேர்வுமுறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. 10, 12ம் வகுப்புகளில் போர்டு தேர்வுகளுக்கு திறந்த புத்தகம் என்ற தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 2013&14 முதல் இது நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

திறந்த புத்தம் என்ற உடன் புத்தகத்தை திறந்துவைத்து தேர்வு எழுதும் நடைமுறை அல்ல. தேர்வில் எந்தெந்த பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறுமோ 4 மாதங்கள் முன்பே அது தொடர்பாக மாணவ மாணவியருக்கு தெரிவிக்கப்படும். அதனை மட்டும் படித்தால் போதும் என்ற நிலை மாணவர்களுக்கு உருவாவதால் அவர்களின் மனரீதியான அழுத்தம், தேர்வு பயம் குறையும். முடிந்த வரை நன்றாக படிக்கவும், தேர்வு எழுதவும் முடியும் என்பது இதற்கு மற்றொரு காரணம் ஆகும்.



பள்ளிகளில் தேர்வு முறையில் புனரமைப்பு செய்வது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நியமித்த குழு இதுபோன்ற பரிந்துரைகளை அளித்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் புதிய தேர்வு முறை தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தியை பொதுமக்கள் இம்மாதம் 8ம் தேதி கொண்டாடும் நிலையில், கிருஷ்ண ஜெயந்திக்கான அரசு விடுமுறை அடுத்த மாதம் 8ம் தேதி விடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பகவான் கிருஷ்ணர் ஆவணி மாதம் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். இந்தாண்டு, கிருஷ்ணஜெயந்தி வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஆவணி மாதத்தில் வரும் வேளையில் நிர்ணயம் செய்துள்ளனர். இதையொட்டியே அனைத்து காலண்டர்களிலும் கிருஷ்ண ஜெயந்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் விடுமுறை பட்டியலிலும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என குறிப்பிடப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, ஆவணி அவிட்டத்தன்று பிராமணர்கள் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்த, எட்டாவது நாள் வரும் அஷ்டமி திதியன்று கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு, ஆவணி அவிட்டம், ஆடி மாதத்தில் 17ம் தேதி அதாவது இம்மாதம் முதல் தேதி வந்துள்ளது. இதைபின்பற்றி, பிராமணர்கள் அன்று பூணூல் மாற்றிக் கொண்டனர். இதையடுத்து, கிருஷ்ண ஜெயந்தி தற்போது இம்மாதம் 9ம் தேதியன்று அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது. ஆனால், அரசு அறிவிப்போ, அடுத்த மாதம் 8ம் தேதி அஷ்டமி திதியாக உள்ளது.


இதுகுறித்து, ஜோதிடர் சீனிவாசன் கூறும்போது, "ஆவணி மாதத்தில் முதல் தேதி மற்றும் 30ம் தேதியில் என இரண்டுமுறை அமாவாசை வருகிறது. இதனால் தான் ஆடிமாதத்தில் ஆவணி அவிட்டம் வருகிறது. இதை அடியொற்றியே, கிருஷ்ண ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது,'' என்றார்.


இதைத் தொடர்ந்து, அரசு விடுமுறை தினம் மாற்றப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ABL விட புத்தகம சிறந்தது 
            மாணவர் மனப்பாடம் செய்யும் நிலைமாறி, அறிவு மேம்படும் வகையில் புத்தகத்தை வைத்து எழுதும் தேர்வு முறை அமல்படுத்தப்படுமா, என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது மாணவர் அறிவை மேம்படுத்தவும், புத்தக சுமையை குறைக்கவும் எட்டாம் வகுப்புவரை முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இம்முறையைப் போலவே, தேர்வு முறையிலும் நவீனத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தற்போதுள்ள முறையில் மாணவர்கள் மனப்பாடம் செய்யும் முறையே அதிகம் உள்ளது. பெரும்பாலும் "புக் பேக்' என்ற, புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள வினாக்களே அதிகம் கேட்கப்படுகிறது. எனவே வினாவிடை புத்தகங்களையே அதிகம் நம்பி உள்ளனர். மனப்பாட சக்தியுள்ள மாணவரே அறிவுத்திறன் மிக்கவர் என்ற நிலை உள்ளது. இதைவிடுத்து புத்தகத்தினுள் இருந்து ஒரு வினாவை கேட்டால், "வினாத்தாள் மிகவும் கடினம்' என விமர்சனம் கிளம்புகிறது.


ஒரு தலைப்பிலான பாடம் அல்லது கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை புரட்டிப் படிக்கும் வகையில் மாணவர்கள் தேர்வு முறை இருக்க வேண்டும். மாணவர்களுக்கு பாடம் நடத்தி முடித்தபின், தேர்வில் வினாக்களை பாடப்புத்தகத்தினுள் இருந்து நுணுக்கமாக கேட்க வேண்டும். தேர்வு எழுதும்போது புத்தகத்தையும் கையில் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர்கள் விடையை புத்தகங்களில் தேடி எடுத்து எழுத வேண்டும். இதற்கு புத்தகத்தை ஆழ்ந்து படித்திருந்தால்தான் விடையை தெளிவாக எழுத முடியும். அரசு துறைகள் பலவற்றில் இதுபோன்ற தேர்வுகள் (டிபார்ட்மென்டல் எக்ஸாம்) தற்போது நடைமுறையில் உள்ளது.



உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் கூறுகையில், "இத்தேர்வு மேலோட்டமாக பார்க்கும்போது எளிதாகத் தெரியலாம். ஆனால் மாணவர்கள் விடையை அறிய புத்தகத்தை ஆழ்ந்து படிப்பர் என்பதால், புரிந்துகொள்ளும் திறன் வளரும். அவர்களின் முழுத்திறனும் வெளிப்படும்,'' என்றார்.

"இரண்டு ஆண்டுகளில், 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றியிருந்தால், தானாக அந்த ஊழியரின் பணி நிரந்தரமாகி விடும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேட்டூர் அணை மின் வாரியத்தில், ஒப்பந்த தொழிலாளராக ராஜு என்பவர் பணியாற்றினார். 1991 முதல் 1999ம் ஆண்டு வரை, பல்வேறு ஒப்பந்ததாரர்களிடம், இவர் பணியாற்றியுள்ளார். அதன்பின், மின் வாரியத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். 2003ம் ஆண்டு நவம்பரில் இறந்தார். இவரை பணி நிரந்தரம் செய்து, மின் வாரியம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

இதையடுத்து, மின் வாரியத்தில், 480 நாட்களுக்கும் மேல் பணியாற்றியுள்ளதால், பணி நிரந்தர அந்தஸ்து பெற கணவருக்கு உரிமையுள்ளது என்றும், குடும்ப பென்ஷன், பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, சென்னை ஐகோர்ட்டில் ராஜுவின் மனைவி லட்சுமி மனு தாக்கல் செய்தார். மின் வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வாரியத்தின் நிரந்தர ஊழியர் இல்லை என்பதால், 1981ம் ஆண்டு சட்டப்படியான பலன்களை வழங்க முடியாது என கூறப்பட்டது.


இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
ஒரு ஊழியர், இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து, 480 நாட்கள் பணியாற்றியிருந்தால், அவருக்கு நிரந்தர ஊழியர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். கடந்த 1981ம் ஆண்டு சட்டப்படி, பணி நிரந்தரம் செய்ய வேண்டியது, அந்த நிறுவன உரிமையாளரின் கடமை. அவ்வாறு நிரந்தர அந்தஸ்து வழங்கப்படவில்லை என்றாலும், 480 நாட்கள் பணி முடித்திருந்தால், தானாக நிரந்தர ஊழியராக ஆகி விடுவார்.

எனவே, மனுதாரருக்கு குடும்ப பென்ஷன், பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகளை, எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். மனுதாரரின் மகள் வளர்மதிக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரிய மனுவை, விதிகளின்படி, நான்கு வாரங்களுக்குள் பரிசீலித்து, பைசல் செய்ய வேண்டும்.


இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.





பள்ளிக்கல்வி இயக்குனராக தேவராஜன், நேற்று நியமிக்கப் பட்டார்.


ஈரோடு மாவட்டம், குமலன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான தேவராஜன், எம்.ஏ., - எம்.எட்., பட்டதாரி. 1995ல், போட்டித் தேர்வு மூலம் மாவட்டக் கல்வி அதிகாரியாக தேர்வு பெற்று, பின் முதன்மைக் கல்வி அலுவலராக, பல மாவட்டங்களில் பணியாற்றினார்.

இணை இயக்குனர் பதவி உயர்வு பெற்று, தேர்வுத்துறை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், இயக்குனர் பதவி உயர்வுக்குப் பின், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகிய பதவிகளுக்குப் பின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனராக பணிபுரிந்து வந்தார். தற்போது பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் 6ம் தேதி, புதிய பொறுப்பை ஏற்கிறார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், புதிய பாடத் திட்டங்களை மெருகேற்றியது; முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு திட்டங்கள் குறித்து பயிற்சி கையேடுகளை தயாரித்து, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தது உள்ளிட்ட பல்வேறு பணிகளை, தேவராஜன் சிறப்பாக செய்து முடித்தவர்.

கல்வியில் பின் தங்கியுள்ள வட மாவட்டங்களை முன்னேற்றுவது; ஒட்டுமொத்த கல்வித்தரத்தை உயர்த்துவது; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தரமான, புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது போன்றவை, புதிய இயக்குனர் முன் வைக்கப்பட்டுள்ள சவால்கள்.

 திருநெல்வேலி    மாவடத்தில்   பொது மாறுத்தல்    கலந்தாய்வில்   26    இடை நிலைஆசிரியர்     மறைப்பு.        மாவட்ட   தொடக்க   கல்வி   ஆலுவலர்    மீது புகார் . கல்வி   உரிமை  சட்டப்படி    உருவாக்கப்பட்ட 70 பணியிடம்   மறைப்பு .

எஸ்.எஸ்.ஏ. கல்வி திட்டத்தில் பல லட்சம் சுருட்டல்?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் நடந்த பள்ளி மேலாண்மை பயிற்சி வகுப்பு, வாழ்வியல் திறன் பயிற்சி முகாமிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், முறைகேடு நடந்துள்ளதால், இதுகுறித்து விசாரிக்க தனி குழுவை கலெக்டர் அமைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், வட்டார வளமையங்கள் மூலம் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, கடந்த மார்ச் மாதம் பள்ளி மேலாண்மை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

அதே போல், ஒவ்வொரு ஒன்றியத்திலும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பகல் நேர சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பு நடந்தது.மூன்று நாள் பயிற்சி இந்த இரு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு, மாவட்டம் முழுவதும் பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பில், பயிற்சி பெற்ற உறுப்பினர்கள், மூன்று நாள், குறுவள மையத்தில் தங்கி பயிற்சி பெற வேண்டும். ஆனால், எந்த உறுப்பினர்களும் பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெறவில்லை. பலர் பயிற்சி வகுப்பிற்கு வரவே இல்லை.

பயிற்சி பெறும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் காலை சிற்றுண்டிக்கு 25 ரூபாயும், மதியம் சாப்பாட்டிற்கு 40 ரூபாயும், இரவு சாப்பாட்டிற்கு 40 ரூபாயும், காலை மற்றும் மாலையில் தேநீர் மற்றும் நொறுக்குத்தீனிக்காக 40 ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது. விதிகள் மீறல் மேலும், பயிற்சி வகுப்பில் ஜெனரேட்டர் வசதி, சாமியானா, ஒலிபெருக்கி உள்ளிட்ட ஏற்பாடு செய்வதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது.

அதே போல், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு நடந்த வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பிற்கும் ஒரு குழந்தைக்கு, 100 ரூபாய் வீதம் நான்கு நாள் பயிற்சி முகாமிற்கு, தலா 400 ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டது. பயிற்சி முடித்த இந்த குழந்தைகளை, அவரவர் வயதிற்கு தகுந்தாற்போல், பள்ளிகளில் சேர்க்க வேண்டும். தொடர்ந்து ஒரு ஆண்டு, இந்த குழந்தைகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் கண்காணிக்க வேண்டும்.

ஆனால், அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், இந்த இரு பயிற்சி முகாம்களுடைய விதிமுறையை பின்பற்றவில்லை. முறைகேடு புகார் இதற்காக, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ஒதுக்கீடு செய்த நிதியில், 60 சதவீதம் பணத்தை அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் கூட்டணி அமைத்து முறைகேடு செய்தனர்.

அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி முகாம் செலவினங்களை மேற்கொள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பெயர்களில் வங்கியில் இணைப்பு கணக்கு உள்ளது.

ஓசூர் அருகே தளி ஒன்றியத்தில் நடந்த, பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பு, வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பு நடத்தியதில், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. கலெக்டர் மகேஷ்வரன், முறைகேட்டை விசாரிக்க தனிக்குழு அமைத்துள்ளதால், அதிகாரிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

இக்னோ நுழைவு தேர்வுகள் ஆக., 26 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன என, மதுரை மண்டல இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார். எம்.பி.ஏ., பி.எஸ்சி., நர்சிங், பி.எட்., மற்றும் எம்.எட்., நுழைவு படிப்புக்கான தேர்வுகள் ஆக.,19ல் நடப்பதாக இருந்தது. இவை ஆக., 26 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. காலை 10 முதல் 1 மணி வரை எம்.பி.ஏ., பி.எஸ்சி., படிப்புக்கும், பிற்பகல் 2 முதல் 4 மணி வரை பி.எட்., எம்.எட்., படிப்புக்கும் தேர்வுகள் நடக்கும். நுழைவு தேர்வுக்கான அனுமதி சீட்டு ஆக., முதல் வாரத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று, மண்டல இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு மத்திய அரசிடம் தமிழக அரசு அறிவுரைகள் பெற்று முடிவெடுக்கலாம் - மதுரை ஐகோர்ட் உத்தரவு

இடைநிலை ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய அரசிடம் தமிழக அரசு அறிவுரைகள் பெற்று முடிவெடுக்கலாம் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ஜஸ்டின் பிரபாகர் தாக்கல் செய்த மனு: நான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவைத்தொடர்ந்து, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். மத்திய அரசு 2009 ல், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதியை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) நிர்ணயித்தது.
இதன்படி, தமிழக பள்ளிக் கல்வித்துறை 2011 நவ.,15 ல் அரசாணை 181 வெளியிட்டது. அதில், ‘பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு அடிப்படையில் நியமிக்கப்படுவர். இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில், மாநில பதிவு மூப்பு பின்பற்றப்படும்,’ என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, தகுதித் தேர்வு அவசியமில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 மார்ச் 7 ல், ‘அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகளில், 2010 ஆக.,23 க்கு பின், இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் தகுதித்தேர்வு எழுத வேண்டும்,’ என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது, ஏற்கனவே வெளியான அரசாணை 181 க்கு முரணானது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு, தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்ற தேர்வு வாரிய அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேபோல், திருநெல்வேலி புதூரை சேர்ந்த ஜெயக்குமார் உட்பட சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள், ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தனி நீதிபதி, “ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையால், இடைநிலை ஆசிரியர் தேர்வு நடைமுறைகள் பாதிக்கப்படும். தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது,” என்றார்.
மனுக்கள் நேற்று நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் விதி 18 ன்படி, மத்திய அரசிடம் சில விதிவிலக்குகள் பெறலாம். ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியான பின், தகுதியுள்ள போதிய ஆசிரியர்கள் கிடைக்கவில்லை எனில், கட்டாயக் கல்விச் சட்டம் விதி 18 ன்படி, மத்திய அரசிடம் விலக்கு பெறுவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம். இம்மனுக்கள் பைசல் செய்யப்படுகிறது, என்றார்.

பி.ஏ., நடைமுறை ஆங்கிலம் (Functional English) மற்றும் ஆங்கில இலக்கியம் சமமானதே: ஐகோர்ட்

பி.ஏ., நடைமுறை ஆங்கிலம் மற்றும் ஆங்கில இலக்கிய பாடங்களை வேறுபடுத்தி பார்க்கக்கூடாது எனவும், நடைமுறை ஆங்கிலம் படித்தவர்களுக்கு பட்டதாரி உதவி ஆசிரியர் பணி வழங்க வேண்டும் எனவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர்கள் செல்லத்தாய், அனுராதா. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், 2004 ல் செல்லத்தாயும், 2005 ல் அனுராதாவும் பி.ஏ.,நடைமுறை ஆங்கிலம் (Functional English) தேர்ச்சி பெற்றனர். வேறு பல்கலையில் 2010 ல் பி.எட்.,தேர்ச்சி பெற்றனர். 2009-10 ல், பட்டதாரி உதவி ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு இருவரின் பெயர்களும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டது.
சான்றிதழ் சரிபார்ப்புக்குச் சென்றனர். பணி நியமனம் வழங்கவில்லை. தேர்வுசெய்து படித்திருந்தனர். இதனால் அவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இது பி.ஏ. ஆங்கில இலக்கியப் பாடத்திற்கு சமமானது என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனால், தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடக்கோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு வக்கீல், "அரசு உத்தரவுப்படி பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை, பி.ஏ., ஆங்கில இலக்கியத்திற்கு சமம் என, பல்கலை கூறவில்லை,&'&' என்றார். மனுதாரர் வக்கீல், "கோவை அவினாசிலிங்கம் பல்கலையில் பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை அரசு அங்கீகரித்து, பணி நியமனம் வழங்கியுள்ளது,&'&' என்றார்.
நீதிபதி: நிகர்நிலை பல்கலையில் பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை, பி.ஏ., ஆங்கில இலக்கியத்திற்கு சமமாக கருதும் அரசு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பாடத்தை மட்டும் ஏன் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். இது தவறு. மனுதாரர்கள் இருவருக்கும் பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும், என்றார்.