PAGEVIEWERS

இக்னோ நுழைவு தேர்வுகள் ஆக., 26 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன என, மதுரை மண்டல இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார். எம்.பி.ஏ., பி.எஸ்சி., நர்சிங், பி.எட்., மற்றும் எம்.எட்., நுழைவு படிப்புக்கான தேர்வுகள் ஆக.,19ல் நடப்பதாக இருந்தது. இவை ஆக., 26 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. காலை 10 முதல் 1 மணி வரை எம்.பி.ஏ., பி.எஸ்சி., படிப்புக்கும், பிற்பகல் 2 முதல் 4 மணி வரை பி.எட்., எம்.எட்., படிப்புக்கும் தேர்வுகள் நடக்கும். நுழைவு தேர்வுக்கான அனுமதி சீட்டு ஆக., முதல் வாரத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று, மண்டல இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment