PAGEVIEWERS

சென்னை: தமிழகத்தில் காவிரி டெல்டா வறட்சி மற்றும் கிரானைட் குவாரி ஊழல் விவகாரங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று கோட்டையில் அவசர ஆலோசனை 
 நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த ஆய்வுகள் 90 நிமிடங்கள் நடந்தன.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் தங்கியிருந்த முதல்வர், நேற்று முன்தினம் பிற்பகல் சென்னை வந்தார். துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்த அவர், அன்று கோட்டைக்கு வரவில்லை. இந்நிலையில், நேற்று பிற்பகல் ஒரு மணி வரை, கோட்டைக்கு அவர் வரும் எந்த திட்டமும் இல்லை என்று முதலில் கூறப்பட்டது. பின்பு திடீரென பிற்பகல் 2:20 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா, கோட்டைக்கு வந்தார். முன்னதாகவே அவர் வருகை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டதால், அமைச்சர்கள் அனைவரும், தலைமைச் செயலகத்தில் ஆஜராகியிருந்தனர்.
"இலவசக் கல்விச் சட்டம் 2009'
 என்று அழைக்கப்படும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், மத்திய அரசின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. 6 வயது முதல், 14 வயதுடைய குழந்தைகளுக்கான கல்வியை, அடிப்படை உரிமையாக்கும் இச்சட்டம், 14 வயது வரை, மாணவர்கள் யாரையும், "தேர்ச்சி அடையவில்லை' என்று அறிவிக்கவும் தடை விதித்துள்ளது.

இது தவிர, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், அந்த ஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டணத்தை மாநில, மத்திய அரசுகள் இணைந்து அளிக்கும் என்றும், இச்சட்டம் கூறுகிறது.இந்த இலவசக் கல்விச் சட்டத்தை எதிர்த்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, கூட்டுறவுப் பள்ளி ஒன்று தொடுத்த வழக்கில், 2012ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில், "ஏழைகளுக்கு, 25 சதவீதத்தை ஒதுக்கும் இச்சட்டம், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்குப் பொருந்தாது; 2012 - 2013 கல்வியாண்டு முதல், இதை அமல்படுத்த வேண்டும்' என தெரிவித்தது. "ஏற்கனவே மாணவர் சேர்க்கை முடிந்து விட்ட பள்ளிகளில், அந்த சேர்க்கையை மாற்றத் தேவையில்லை' என்றும், அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்மிக சிந்தனை* தீயதை நல்லதென்றும், நல்லதை தீயதென்றும் சொல்லுபவர்களுக்குத் துயரம் தான் மிஞ்சும். தீமையாய்த் தோன்றுகின்ற அனைத்தில்இருந்தும் விலகுங்கள்.* விருந்து வீட்டிற்குப் ...மேலும் படிக்க
- பைபிள்
Current events
பிளஸ் 2 வுக்கு பின் என்ன படிக்கலாம்...? எங்கு படிக்கலாம்...? என்ற மாணவ , மாணவிகளின் கேள்விக்கு கல்வி நிபுணர்கள் பதில் அளிக்கும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் தினமலர் இணையதளத்தின் மூலம் மாணவ, மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களுக்கு விடை பெற்றனர். கை நிறைய சம்பாதிக்க என்ன வழி ? , கலை, அறிவியல் படிப்புகள் மற்றும் சட்டப்படிப்புகள்,மருத்துவம் - அறிவியல் படிப்பு தொடர்பான ஆலோசனை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி ஜூலை 12ம் தேதி அன்று வங்கியில் கல்விக் கடன் பெறும் வழிமுறைகள் குறித்து வங்கி அதிகாரி விருத்தாசலம் விளக்கமளித்தார். தினமலர் டி.வி, நடத்தி வரும் இந்நிகழ்ச்சி மாணவ, மாணவிகளுக்கு பெரும் துணையாக இருந்தது என பலரும் தங்களுடைய நன்றியை தெரிவித்து கொண்டனர். இன்னும் வரும் காலத்தில் பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சி நடத்த தினமலர் திட்டமிட்டுள்ளது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
லண்டன்: ஒலிம்பிக்போட்டி நிறைவுபெறும் இன்று 66 கிலோ ஆண்கள் ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் வெள்ளி பதக்கம் வென்றார். 
இறுதிப்போட்டியில் அவர் போராடி தோல்வியந்தார்.சுஷில்குமார் கடந்த 2008-ம் ஆண்டு பீய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 66 கி..கி. எடைப்பிரிவில் நடந்த காலிறுதியில் உஸ்பெஸ்கிஸ்தான் வீரர் இக்தியோர் நூர்ஸோவை 3-1 புள்ளி கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்ப சுற்றுலா

சமையல் அறை


சிறுவர் உலகம்

தமிழ் திரை உலகம்

 
ஆசிரியர் தகுதித் தேர்வு
பொழுது போக்கு