PAGEVIEWERS

CPS-வழக்கறிஞர்கள் நீதி மன்ற புறக்கணிப்பு -ஆகையால் வழக்கு விசாரணைக்கு இன்று (13.07.2015 ) வரவில்லை

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் திருஎங்கெல்ஸ் அவர்களால் தொடரப்பட்டபொது நல வழக்கு(வழக்குஎண்.(11897/2015) இன்று நீதிமன்ற எண்.9ல் விசாரணைக்கு வர இருந்தது வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு -ஆகையால் வழக்கு விசாரணைக்கு இன்று (13.07.2015 ) வரவில்லை.அடுத்து வரும் வேலைக நாட்களில் விசாரணைக்கு வழக்கு வரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்  .................

2015-16ம் கல்வியாண்டிற்கான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதலுக்கான விண்ணப்பம் பெற உத்தரவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில் நாளை(13.07.2015)" விசாரணை

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில்  வழக்கு எண் -WP (M D)11987/2015- நாளை (13.07.2015) மெட்ராஸ் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் 9 ஆவது உயர் நீதி மன்றத்தில் வருகிறது .

தகவல்-திரு.எங்க்ல்ஸ் -திண்டுக்கல்

G.O. 200 நாள்:10.07.15 -ன் விளக்கம்.

சுருக்கம்: Associations / Individual employees - யிடமிருந்து பெறப்பட்ட ஊதிய திருத்தம் சார்பான கோரிக்கைகள் General Pay Revision - க்காக Commission அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுகிறது. ( Deferred) 
 
விளக்கம்:  அரசாணை 234 - ன்படி. ஊதியம் வழங்கப்பட்டதாம். பின்னர் ஒருநபர் குழுவானது ஊதிய முரண்பாடுகள் களையவும் குறிப்பாக ஆசிரியர் சங்கங்கள் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கிட கோரியவைகளை ஆய்வு செய்ய ( to examine ) அமைக்கப்பட்டதாம். பின்னர் நீதிமன்ற ஆணையின்படி ஊதிய குறை தீர்க்கும் பிரிவு (PGRC) அமைக்கப்பட்டு 4376 Representations பெறப்பட்டு 89 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு 2 இலட்சம் ஊழியர்கள் பயனடைந்தார்களாம். 


    இருந்தாலும் Individual Employees / Associations - ஆல் ஊதிய திருத்தம் கோரி வழக்குகள் தொடரப்பட்டதாம். மேலும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தனிநபர்/சங்கங்களால் பல்வேறு தகவல்கள் கோரப்பட்டதாம். இதனால் நிதித்துறைக்கு அதிகமான வேலைப்பழு ஏற்பட்டதாம். 

    தொடர்ந்து திருத்திய ஊதியம் வழங்கி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால், ஊதிய திருத்தம் சார்பான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதாம். (Cannot be entertained) 

   (With retrospective effect என்பது முந்தைய தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட என பொருள் கொள்ளலாம்.)

    எனவே General Pay Revision ( அதாவது அடுத்த ஊதியகுழு) - ன் போது ஊதிய முரண்பாடுகள் குறித்தும், ஊதிய திருத்தம் சார்பான கோரிக்கைகள் குறித்தும் அரசு கவனத்தில் கொள்ள (to examine) முடிவு செய்துள்ளதாம். 

   எனவே Associations / Individual Employees - யிடமிருந்து பெறப்பட்ட ஊதிய திருத்தம் சார்பான கோரிக்கைகள் General Pay Revision - க்காக Commission அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்மடுகிறது (Deferred ) என இந்த அரசாணை மூலம் அரசு தெருவிக்கிறது. 
( அதாவது இனி சங்கமோ தனிநபரோ ஊதிய திருத்தம் சார்பாக அடுத்த ஊதியகுழு வரை வரவேண்டாம் என்கிறார்கள்.)

------------------------------------------          இது நம்ம புலம்பல்:
எனவே ஆசிரியர் சமுதாயமே நல்லா தூங்குங்க. தூங்கிக்கொண்டே இருங்க. நீங்கள் விழிப்படைந்தால் பலருக்கு பாதிப்பு. எனவே தயவுசெய்து தூங்குங்க. 
------------------------------------------
ஒருவேளை ஆகஸ்ட் 15, 1947 - க்கு முன் தான் உயிர் வாழ்கிறோமோ என்று நினைத்து காலண்டரை பார்த்தேன், 2015 JULY 10. சுதந்திர நாட்டில் இப்படியா ...................... 
என்ன சொல்லவோ. செய்தி ஆக்கம்: திரு. தாமஸ் ராக்லேண்ட், துணை பொது செயலாளர், TATA, திருச்சி

""ஊதிய பிரச்சினையும் உச்ச நீதிமன்றம் தடையும் "'


Image result for supreme court
தமிழக அரசாங்கம் 6 வது ஊதிய குழு நடைமுறை படுத்தியதில் இடைநிலை ஆசிரியர் கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்
இதற்கு எதிராக அனைத்து ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு போராட்டம் நடத்தி கிடைத்த பலன் ₹750 மட்டுமே .ஆனாலும் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தை விட குறைந்த ஊதியம் நிர்ணயம் செய்து ஏற்படுத்திய பாதிப்பு நீங்கவில்லை.
டாட்டா சங்கம் பல வகையை போராட்டம் செய்தது .அதில் ஒன்று தான் "" சட்ட போராட்டம் ""
தற்போது தமிழக அரசு உயர்நீதிமன்றம் உத்தரவு க்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று தமிழகத்தில் 6 ஊதிய குழு. முழுவதும் நடைமுறை படுத்தியுள்ளார் .இதில் எவரும் பாதிக்கப்படவில்லை.என பொய்யான தகவல் நீதிமன்றத்தில் கூறி தடை பெற்று விட்டது .

இந்த தடைகளை நீக்கம் செய்திட டாட்டா சங்கம் முயற்சிகள் செய்து வருகிறது .இந்த சட்ட போராட்டம் நமது இறுதி யுத்தம் ஆகும் .இதில் நாம் துவண்டுவிடாமல் டாட்டா சங்கத்திற்கு துணையாக வாருங்கள் .
கண்டிப்பாக இதில் நாம் தான் வெற்றி பெறுவோம் .
இது குறித்த டாட்டா சங்கம் சார்பாக விரிவான விளக்கங்களுடன் 4 பக்க நோட்டிஸ் வெளியிடப்பட்டு உள்ளன . இந்த நோட்டிஸ் தங்கள் ஒன்றுயங்களுக்கு தேவையான எண்ணிக்கை மற்றும் முகவரியை SMS செய்திடவும் .

டாட்டா கிப்சன் .
9443464081.

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது

பள்ளிகல்வி துறை-ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்

CLICK HERE-DSE- TEACHERS TRANSFER APPLICATION 

 

தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் விண்ணப்பம்

 

AEEO TRANSFER APPLICATION

CLICK HERE TO DOWNLOAD -AEEO TRANSFER FORM

 

தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் (Mutual Transfer Application Model)

 

தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்

CLICK HERE-DEE- TEACHERS TRANSFER APPLICATION 

 

 

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் விருப்ப மாறுதல்-விண்ணப்பம்

ஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.


மத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (Expected DA என நம்மவர்கள் அனுப்பும் தகவல்கள் மத்திய அரசு ஊழியர்களின் இணையங்களின் தகவல்கள் மூலமே அனுப்பப்படுகின்றன) இவர்களின் கணக்கீடுகள் பெரும்பாலும் நம்பகத்தன்மை உடையதாகவே உள்ளது. 7th CPCல் ஊதியம் நிர்ணயம் செய்ய எதிர்பார்க்கப்படும் முறை பற்றி அவர்களின் இணையதளத்தில் உள்ளது  கீழே குறிப்பிடப்பட்டுள்ளது 



"7th CPC Pay in Pay Band = [(6th CPC Pay in Pay Band as on 01.01.2016+6th CPC Grade Pay)X 2.20]-6th CPC Grade Pay".

அதாவது 7th CPC ஊதியம் என்பது, 1.1.2016 அன்று உள்ள ஆறாவது ஊதியகுழு  ஊதியம் + ஆறாவது ஊதியகுழு தர ஊதியம் x 2.20. அதன் பின்னர் ஆறாவது ஊதியகுழு தர ஊதியத்தை கழித்தால் கிடைப்பது ஆகும்.

   உதாரணமாக ஆறாவது ஊதிய குழுவின் 5200+2800 ல் இருப்போரை வைத்து கணக்கிட்டு பார்த்தால் 5200 + 2800 =8000 x 2.20 =17600 - GP2800 = 14800 என வரும். இது அடிப்படை ஊதியம் எனும் Entry Level Pay கணக்கிடுவதற்குரியது. இத்துடன் புதிய GP 8800 சேர்த்தால் 23600 வரும். அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலிலும் இவ்வாறே அனைத்து தரப்பினருக்கும் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும். இத்தகவல்கள் காணப்படும் பகுதிகள் கீழே இணைப்புகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஜூன் மாதம் இது போன்ற இணையங்களில் Multiplication factor 3.7 என்றும் ஊதியம் 4.5 மடங்கு கூடுதலாக இருக்கும் என்றும் தகவல்கள் உள்ளன. இருப்பினும் ஆறாவது ஊதியகுழு 1.86 முறையை விளக்கி அதை பின்பற்றி 2.20 வரலாம் என விளக்கியுள்ள 2.20 Multiplication factor முறை உங்கள் முன் விளக்கி கூறப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள Link ல் சென்று பார்க்கவும்.

7th Pay Commission Pay and Allowances Estimation - GConnect Calculator - http://www.gconnect.in/orders-in-brief/7thcpc/7th-pay-commission-pay-allowances-estimation-gconnect-calculator.html

TET பொருந்தாது: சிறுபான்மை பள்ளிகளுக்கு- சென்னை உயர் நீதிமன்றம் ஆணை...



2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெற விண்ணப்பம் , இயக்குநர் உத்தரவு மற்றும் தேர்வு செய்ய வழிகாடும் அரசாணை

TN GOVT ALL FINANCE G.O's & PROCEEDINGS IN ONE CLICK

S.NO.
SUBJECT
G.O. NO. AND DATE
1
The Tamil Nadu Revised Scales of Pay Rules,2009
2
Pay Fixation of fresh recruits on or after 01.01.2006
G.O Ms No 258
Dt : June 23, 2009 
3
Pay Comission arrears in respect of Government servants who died on or after 01.01.2006
4
Clarifications on The Tamil Nadu Revised Scales of Pay Rules,2009
5
–do–
6
–do–

உணர்வோம் உணர்வடைவோம்



இற்றைய செய்திகள் .01- 07 - 2015.



📚TNTET:ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தேர்வான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி வெளியீடு.
📚TNTET & PGTRB Exam: அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வுகள் & ஜனவரி 2016 க்குள் புதிய நியமனம்?
📚CPS: Rate of interestfor the year 2014-2015 and 2015-2016 - Orders - Issued.
📚தமிழக அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி அறிக்கைசீட்டு தரப்படாது-
📚ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி
📚உபகரணம் இல்லாமல் பயிற்சியா? உடற்கல்வி ஆசிரியர்கள் புலம்பல்.
📚சத்தமில்லாமல் சந்தையில் இருந்து வெளியேறுகிறது டாப் ராமன் நூடுல்ஸ்
📚ஹெல்மெட் கட்டாயம்: தமிழக அரசின் உத்தரவை தடை செய்ய கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
📚புவிஈர்ப்பு விசை காரணமாக பூமியில் நேற்று ஒரு வினாடி அதிகம்: நாசா அறிவிப்பு
📚வருவாய்த் துறையில் காலியாக உள்ள 142 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு
📚'ஸ்மார்ட் சிட்டி', 'அம்ருட்' திட்டத்திற்கு தேர்வான நகரங்கள் எத்தனை?
📚அரசு சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி மாணவர் சேர்க்கை தடை ஜூலை 2 வரை நீட்டிப்பு
📚அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூலை 1-ல் கலந்தாய்வு தொடக்கம்
📚ஜீன்ஸ், மிடி அணிய தடை மாணவியருக்கு அதிரடி உத்தரவு
📚பார்வை குறைபாடு உள்ளோருக்கு அரசு பணிகளில் வயது வரம்பு சலுகை
📚துப்பினால் 'பைன்': நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசுதிட்டம்: குப்பை போடுபவர்களுக்கும் தண்டனை வழங்க முடிவு
📚இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்!
📚இன்ஜி., மாணவர்களுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு பிளஸ் 1 பாடம்
📚பி.இ.: பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்
exercising.

ஊதிய குழு வழங்கிய 1.86 என்றால் என்ன ?


ஊதிய குழு நடைமுறை படுத்தப் பட்ட 1.1.2006 அன்று பெற்று வந்த அகவிலைபடி 86% ஆகும் . அதனுடன் 100 ஐ கூட்டி 100 ஆல் வகுத்தால் கிடைப்பது தான் 1.86 ஆகும் .
7 வது ஊதிய குழு வில் ஊதியம் எப்படி நிர்ணயம் செய்யப்படும் .
1.1.2016 பெறும் அடிப்படை ஊதியத்தில் தர ஊதியத்தை கழித்து. வரும் ஊதியத்தை2.20. ஆல் பெருக்கி அதனுடன் புதிய தர ஊதியத்தை கூட்ட வேண்டும் .
GP 2800---8800
GP 4200---14,400
GP 4600 ---- 15,000
GP 5400 ---+ 16400
Tata kipson.

7 ஊதிய குழு மாதிரி ஊதிய நிர்ணயம்


1.1.2016 முன்னர் பணி நியமனம் பெற்றவர்கள். தற்போது பெற்று வரும் அடிப்படை ஊதியத்தில் தர ஊதியத்தை கழித்து அதை 2.20 ஆல் பெருக்கி அதனுடன் புதிய தர ஊதியத்தை கூட்ட வேண்டும் .
எ.கா .1
1.1.16.ல் அடிப்படை ஊதியம் ₹16100 - 2800 = 13300 * 2.20 =29260 + 8800 = 38060 (புதிய அடிப்படை ஊதியம்

எ.கா. 2
15.6-2009 நியமனம் பெற்றவர்கள்
1-1-2016 பெறும் ஊதியம்
73060*2.20 = 16192
.₹16200 + 8800 = 24,920.(2016 ல் புதிய ஊதியம் .
நமது சங்கத்தின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றியது --தமிழக அரசு
அரசு பள்ளகளின் கழிப்பறை களை சுத்தம் செய்யும் பணி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது .
பராமரிப்பு பணி மற்றும் அனைத்து வகையான சுத்தம் செய்யும் ஊராட்சி சுகாதார சிப்பந்திகள் மூலம் செய்ய வேண்டும் அதை தலைமை ஆசிரியர் கள் மேற்பார்வை செய்ய வேண்டும் .
இனிமேல். கழிப்பறை விசயத்தில் ஆசிரியர் கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது .

 




TODAYS NEWS...25-06-2015


*CPS: உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு
*1 & 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே வகுப்பில் உக்கார வைக்க தமிழக அரசு உத்தரவு
*சென்னைவாசிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு: மெட்ரோ ரயிலில் இலவச பயணம்
*அகஇ - பகுதி நேர பணியாளர்கள் - பணி நிரவல் சார்பான உத்தரவு
*அனைத்து வகை மாணவர்களுக்கும் "ஆதார்" - விரைவில் பள்ளியிலயே சிறப்பு முகாம் - இயக்குனர் செயல்முறைகள்
*7th cpc Estimated pay scales
*செயல்வழிக் கற்றலை கண்காணிக்க அரசு உத்தரவு
*அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் ஆசிரியர்கள் , கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு
*கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம்: அதிக விண்ணப்பங்களால் குலுக்கல் முறையில் தேர்வு
*அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி.
*6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'
*6 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு
*42 ஆயிரம் பணியாளர் தேவை: சத்துணவு மையங்களில்
*அரசு செவிலியர் பணியிடங்கள்: ஜூன் 28-இல் தகுதித் தேர்வு
*பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் 'ஹெல்மெட்?'
*ஆன் - லைன் மூலம் பாட புத்தகம் விற்பனை : சோதனை முறையில் 3மாவட்டங்களில் அமல்'
*வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்': ஜூலையில் துவக்கம்
*எம்.இ., - எம்.டெக்., மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலை அறிவிப்பு
*அரசின் ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் மாற்றம்: தமிழக அரசுஉத்தரவு
*தலைக் கவசம் சில சந்தேகங்கள்...?
*ஆந்திரத்தைப் போல் தமிழகத்திலும் பிளஸ் 1-க்கும் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும்: கல்வி மேம்பாட்டுக் குழு வலியுறுத்தல்
*அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சில பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு:பாடம் நடத்தும் பணிகள் பாதிப்பு
*அரசு மருத்துவக் கல்லூரிகளில் 585 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன: இன்றுடன் கலந்தாய்வு முடிகிறது
*சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு
*பி.இ. சேர்க்கை: பிற மாநிலத்தவர் ஜூலை 9-க்குள் விண்ணப்பிக்கலாம்

7 th pay


🌻24.6.15 செய்திகள்🌻



🌳🌳TETNT & PGTRB: விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு அறிவிப்பு?
🌳🌳முதல்நிலை மருத்துவ படிப்புகான நுழைவுத் தேர்வு ஜுலை மாதம் 25-ஆம் தேதி நடத்தப்படும்:
சிபிஎஸ்இ அறிவிப்பு

🌳🌳சனி கிரக சந்திரனில் ஏரிகள்: விஞ்ஞானிகள் தகவல்
🌳🌳மத்திய /மாநில அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல ,PASSPORT பெற NOC தேவையில்லை-மத்திய அரசு கடிதம
🌳🌳உதவி பேராசிரியர்கள் 1,080 பேர் தவிப்பு
🌳🌳ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு எப்போது?
🌳🌳Hsc(+2):Maths- Chapter-1- One word (study Material)
🌳🌳சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு
🌳🌳பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு: இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு
🌳🌳கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு வரிச் சலுகை அளிக்க மத்திய அரசு திட்டம்
🌳🌳நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்க்கு விடுமுறை
🌳🌳பிஇ, பிடெக். 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை: அழகப்பா பொறியியல் கல்லூரியில் வரும் 26-ல் கலந்தாய்வு
🌳🌳இன்று நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
🌳🌳தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் முதுநிலை பொறியியல் பட்டதாரிகளின் நிலை கேள்விக்குறி: ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிப்பு
🌳🌳அலுவலகத்துக்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை: ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை
🌳🌳அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது
🌳🌳கட்டாய 'ஹெல்மெட்' உத்தரவில் விதிவிலக்கு வருமா?
🌳🌳முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கை: பதிவு செய்ய ஜூலை 3 கடைசி நாள்
🌳🌳எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்: பழைய மாணவர்களுக்கு தடையில்லை:உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
🌳🌳தெரிந்து கொள்வோம்: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பரிணாமம்
🌳🌳பி.எட். படிப்பு காலம் 2 வருடம் ஆனது மாணவர்களுக்கான செயல்முறை பயிற்சி 100 நாட்களாக அதிகரிப்பு
துணைவேந்தர்விஸ்வநாதன் பேட்டி

🌳🌳கருணாநிதி பெயர் இருந்த பாட புத்தகங்கள் வாபஸ்.
🌳🌳தமிழகத்திலும் இரண்டு ஆண்டு பி.எட். படிப்பு: தமிழக அரசு ஆணை.
🌳🌳தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு
🌳🌳பதவி உயர்வு தீர்வுக்குழு மாயம்? சத்துணவு அமைப்பாளர்கள் தவிப்பு

தொடக்கக் கல்வி - பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலை நன்முறையில் பின்பற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து இயக்குனரின் அறிவுரைகள்

ஊதிய பிரச்சினை யில் உச்ச ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றம் தடை ஏன் ? சிறப்பு விளக்க கூட்டம் .


நாள் ;27-6-2015. காலை 10-00 மணி
இடம் ;- RKV.ரெசிடென்ஸ் .புதிய பேருந்து நிலையம் எதிரில் -கிருஷ்ணகிரி
நாள் ;- 28-6-2015. காலை ; 10-30 மணி
இடம் ;- பெரியார் மன்றம் -தருமபுரி .
ஊதிய பிரச்சினை எப்படி ஏற்பட்டது ?
கிருஷ்ணன் ias. ஊதிய குழுவை அமைத்தது யார் ? நீதிமன்றம் மா? அல்லது தமிழக அரசா ?

ஏன் ஒரு நபர் குழு மற்றும் மூன்று நபர் குழு அறிக்கைகள் நீதிமன்றம் ரத்து செய்தது .?.
நீதிமன்றம் மூலமாக ஊதிய பிரச்சினை தீர்க்க முடியுமா ?
ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றது யார் ?.
விரிவான விளக்கம் மற்றும் உங்கள் சந்தேகங்கள் நீங்கிட சங்க வேறுபாடு மறந்து சங்கமிப்போம் . நீதிமன்றம் தடை ஏன் ?
சிறப்பு விளக்க கூட்டம் .
நாள் ;27-6-2015. காலை 10-00 மணி
இடம் ;- RKV.ரெசிடென்ஸ் .புதிய பேருந்து நிலையம் எதிரில் -கிருஷ்ணகிரி
நாள் ;- 28-6-2015. காலை ; 10-30 மணி
இடம் ;- பெரியார் மன்றம் -தருமபுரி .
ஊதிய பிரச்சினை எப்படி ஏற்பட்டது ?
கிருஷ்ணன் ias. ஊதிய குழுவை அமைத்தது யார் ? நீதிமன்றம் மா? அல்லது தமிழக அரசா ?

ஏன் ஒரு நபர் குழு மற்றும் மூன்று நபர் குழு அறிக்கைகள் நீதிமன்றம் ரத்து செய்தது ஏன் .?.
நீதிமன்றம் மூலமாக ஊதிய பிரச்சினை தீர்க்க முடியுமா ?
ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றது யார் ?.
விரிவான விளக்கம் மற்றும் உங்கள் சந்தேகங்கள் நீங்கிட சங்க வேறுபாடு மறந்து சங்கமிப்போம் .
  ஊதிய பிரச்சினை யில் அரசு கூறும் காரணம் அரசு கடிதம் எண் 60473/2014.படித்து பாருங்கள் .இதை நீக்கம் செய்திட டாட்டா சட்ட போராட்டம் நடத்தி வருகிறது . உங்கள் சங்கத்தை கடுமையான கள போராட்டம் நடத்த நிற்பந்தியுங்கள் . அதற்கு டாட்டா முழு ஆதரவு வழங்கும் .
நீலகிரி மாவட்ட கிளை மற்றும் கூடலூர் வட்டார கிளை ஆகியவற்றை அன்புடன் வரவேற்று மாவட்ட தலைவர் பிரசாந்த் . மாவட்ட செயலாளர்  அருண்குமார் .மாத.பொது.மணிகண்டன் .வட்டார தலைவர் ரவிக்குமார் .வ செ.சிலம்பரசன் வ.பொ. முருகன். புதிய பொறுப்பாளர்களை நியமித்து அனைவருக்கும் மனம் மகிழ வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் இவன் .டாட்டா மாநில அமைப்பு- கிப்சன் .
விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:

தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் மற்றும் பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
மாநில முன்னாள் பொருளாளர் திரு .முனியசாமி அவர்களுக்கு  சேலம் மாவட்டம் இயக்க பணிகள் மற்றும் ஆசிரியர் நலன் சார்ந்த பணியை செய்ய முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .இவன் டாட்டா கிப்சன்
சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றியம் கீரகூடு ஊ.ஓ
து.பள்ளி இடைநிலை ஆசிரியரும் டாட்டா சங்கத்தின் ஏற்காடு ஒன்றிய செயலாளர் .திரு .ரமேஷ் பாபு அவர்கள் இன்று ( 21-06-2015 ) இயற்கை ஏய்தினார் .அவரது நல்லடக்கம் நாளை அவரது சொந்த ஊரான திருகோவிலுரில் நடைபெற உள்ளது

அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை. டாட்டா மாநில அமைப்பு சார் பாக வேண்டுகிறேன் . கிப்சன் .

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புதல் சார்பாக தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க 31.05.2009 வரை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு

2015-2016 ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் மற்றும் வரையறை விடுமுறை



மெட்ரிக்., பள்ளிகளுக்கு புதிய சட்டம் கொண்டு வருவோம் : நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு விளக்கம்

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், ஒருங்கிணைந்த சட்டத்தை வகுக்க, உயர் மட்டக் குழுவை அமைப்பதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க., பிரமுகருமான, ஆர்.வேலு, தாக்கல் செய்த மனு:மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான விதிமுறைகள், செல்லாது என, அறிவிக்க வேண்டும்.
சென்னை மற்றும் மதுரைபல்கலைகழகங்களால், 1976 ஜூன், 1ம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை தவிர, மற்ற மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.இம்மனு, 2011ல், தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, கல்வி துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று, விசாரணைக்கு
வந்தது.

பள்ளிக்கல்வி - சிறுபான்மை மொழி மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமன ஆணை பெற்றவர்களை முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வெளியீடு

தொடக்க கல்வி - RTE - சட்டப்படி பள்ளி பணி நாள்கள் 200 ஆக குறைத்திட மனு





டாட்டா பொது செயலாளர் மற்றும் மாநில தலைவர் பயண திட்டம்...
13-6-2015 ---மாநில செயற்குழு --சென்னை.
14-6-2015 -- ஊதிய வழக்கு சார்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அவர்களுடன் பொள்ளாச்சி யில் சந்திப்பு
15-6-2015 -- நீலகிரி மாவட்ட கிளை மற்றும் கூடலூர் வட்டார கிளை துவக்க விழா

தொடக்க கல்வி-உதவி பெரும் பள்ளிகள் துணை குறியீட்டினை பயன்படுத்தி வலைத்தளம் மூலம் சம்பளப் பட்டியல் தயார் செய்தல்-சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல் முறைகள்!

பணிப்பதிவேட்டினை பராமரித்தல் மற்றும் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்பான அரசுக்கடிதம் நாள் : 21. 05. 2015



SSA - 20/06/2015 மற்றும் 27/06/2015 ஆகிய நாட்களில் ஜூன் மாத CRC குறுவள மைய பயிற்சி - பயிற்சி ஏடு (MODULE)

அகஇ - பகுதி நேர ஆசிரியர்களின் பணி சார்ந்த கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த மாநில திட்ட இயக்குநரின் அறிவுரைகள்

மாநில செயற்குழு கூட்டம் வருகிற 13-06-2015 சனிக்கிழமை பிற்பகல் 1;30 மணி முதல் 5;30 மணி வரை நடைபெற உள்ளது . மேற்படி கூட்டம் சென்னை எழும்பூர்



பெறுநர்
திரு மிகு .டாட்டா மாநில மற்றும் மாவட்ட ,வட்டார பொறுப்பாளர் அவர்கள் .

அன்புடையீர்
வணக்கம் .நமது சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வருகிற 13-06-2015 சனிக்கிழமை பிற்பகல் 1;30 மணி முதல் 5;30 மணி வரை நடைபெற உள்ளது .
மேற்படி கூட்டம் சென்னை எழும்பூர்
இக்சா மையத்தில் வைத்து நடைபெற உள்ளது .

இந்த கூட்டம் "ஊதிய பிரச்சினையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் மூலம் பெற்றுள்ள தடை "
மற்றும். அதை நீக்கம் செய்திட எடுக்கப்பட. வேண்டிய நடவடிக்கை. பற்றி விரிவான விவாதம் நடத்திட அனைவரும். தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன் .

மிக்க நன்றி
இப்படிக்கு
டாட்டா .மாநில தலைவர் .கார்த்திகேயன் .
டாடா .பொது செயலாளர் .கிப்சன்
டாட்டா .மாநில பொருளாளர் .தாமரை. வேல்

இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சணை யில் உச்ச நீதிமன்றத்தில் அரசு பெற்று இருக்கும் தடை நீக்க படாமல் ஊதிய மாற்றம் ஏற்படுமா ?



இது குறித்து நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான் அவர்களை சந்தித்து தமிழக அரசு நமக்கு அனுப்பி உள்ள கடிதம் குறித்தும் அதில் அரசு தடை பெற்று உள்ளதாக கூரியுல்ல தகவல் பற்றியும் விவாதித்தோம்.

தற்போது அரசு தடை பெற்று இருப்பதால் நாம் உச்ச நீதிமன்றம் சென்று தடை நீக்க பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வழக்கு எண் ;504/2012 .வழக்கு நடத்தியவர்களால் தான் திரு.கிருஷ்ணன் .இ .ஆ.ப. அவர்கள் தலைமையில் நீதிமன்ற உத்தரவு படிதான் ஊதிய குறை தீர்க்கும்  பிரிவு  அமைக்கப்பட்டது.(ஆதாரம் அ .ஆ.எண் ;123/நிதி /2012 .நாள் .10.04.2012.) 

 இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சணை யில் ஊதிய குறை தீர் பிரிவு தலைவர் .திரு.கிருஷ்ணன் .இ .ஆ.ப. அவர்கள் அறிக்கையில்தான் நம்மை மிகவும் இழிவு செய்து உள்ளார்கள் .அ .ஆ.எண் ;123/நிதி /2012 .நாள் .10.04.2012. இது  ரிட் அப்பில் எண் ;504,505,514,515 ,516 ./2012 வழக்குகளின் இடைகால ஆணை படி தான் அமைக்கப்பட்டது ஆகும் .இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை . மேற்படி வழக்கிலும் நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான் அவர்கள் வாதாடி உள்ளார்கள் .மேற்படி வழக்கை 20 துறையை  சார்ந்த 72 பணி இடங்களில் பணி செய்யும் 252 வழக்குகள் கூட்டாக நடத்தப்பட்டு அதன் தீர்ப்பு 27.02.2014 அன்று 2 நீதிபதிகளால் வழங்கப்பட்டு உள்ளது .
மேற்படி தீர்ப்பில் திரு.ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ.ப. அவர்களின்  ஒரு நபர் குழு அறிக்கையும் திரு.கிருஷ்ணன் .இ .ஆ.ப. அவர்கள் தலைமையிலான  ஊதிய குறை தீர்க்கும்  பிரிவு  அறிக்கையும் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்ய பட்டு உள்ளது. எனவே நாமும் மேற்படி அறிக்கையை ரத்து செய்து ஊதியம் 9300+4200 வேண்டும் என்றுதான் போராடுகிறோம்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் செல்லாமல் ஊதியம் மாற்றம் பெற முடியாது.பள்ளிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டாலும் ஊதிய மாற்றம் என்ற கோரிக்கையை மட்டும் வெல்ல முடியாது என்ற உண்மைய உணர்ந்து கொள்ளுங்கள் .உச்ச நீதிமன்றம் சென்றால் கண்டிப்பாக ஊதியம் 9300+4200 என்று 01.01.2006 முதல் மாற்றம் கிடைக்கும்.அது மட்டும் அல்லாது 2800 தர ஊதியத்தில் உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக ஊதிய உயர்வு 8000 முதல் 12,000 வரை கண்டிப்பாக கிடைக்கும்.

மனம் தளர வேண்டாம் இது நமது ஊதிய மாற்றத்திற்கான கடைசி போராட்டம்.இதில் வெல்வது நமது ஆசிரியர் சமுகம்மே .தமிழக அரசு அல்ல .
 இவன் 
டாட்டா கிப்சன் .பொது செயலாளர் ,தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.