PAGEVIEWERS


TATA- சங்கம் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு -விசாரணை  ஏன் ? வரவில்லை.....

TATA- சங்க மாவட்ட ,வட்டார  பொறுப்பாளர்களுக்கும்  ,உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் வேண்டுகோள் .....

நமது இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு கடந்த 12.9.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது .மேற்படி வழக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே விசாரணைக்கு வர வேண்டியது .ஆனால் வழக்கறிஞருக்கு நமது சங்கம் பேசிய வாக்கு கொடுத்தப்படி படி நவம்பர் முதல் வாரத்தில் ரூ 50,000 கொடுக்க முடிய வில்லை அதன் காரணமாகத்தான் வழக்கு நீண்ட நாள்களாக தள்ளிப்போய் கொண்டு உள்ளது.உச்ச நீதிமன்ற இணைய தளத்தின் அட்வான்ஸ் கேஸ் லிஸ்டில் வந்து கொண்டு இருக்கிறது .இப்படியே போனால் விசாரணைக்கு வர 3 மாதங்கள் வரை ஆகலாம் .எனவே நாம் பேசியபடி வழக்கறிஞருக்கு ரூ.50,000 கொடுக்க உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறேன் .இந்த வழக்கு தனி ஒருவர் ஊதிய மாற்றம் வேண்டி நடக்க வில்லை .ஒட்டு மொத்த இடைநிலை ஆசிரியர்களின் இழந்த உரிமை மீட்கப்பட நடைபெறும் வழக்கு ஆகும்.ஆனால் ஒட்டு மொத்த இடைநிலை ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வழக்கு நடைபெற்று வருகிறது..இந்த ஊதிய வழக்குக்கு நாம் பேசி உள்ள தொகை ரூ.2,50,000 ஆகும்.நாம் கொடுத்து உள்ளது ரூ.50,000 மட்டுமே ஆகும்,நிதி இல்லாமல் இடைநிலை ஆசிரியரின் நீதி தாமதம் ஆகுகிறது.எனவே TATA- சங்க மாவட்ட ,வட்டார  பொறுப்பாளர்களுக்கும்  ,உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த வழக்கு விரைந்து முடிக்கப்பட தங்களின் மேலான ஆதரவை தாருங்கள் .

 

7-வது ஊதிய குழு பரிந்துரை குறித்து அரசு ஆய்வு: மத்திய அமைச்சர்

ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அரசு சரியான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து வருகிறது என மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார். நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வதியர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய பரிந்துரைக் குழுவை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது.


இக்குகுழு, 23.55 சதம் உயர்வு வழங்குவதற்கான பரிந்துரைகளை சில நாள்களுக்கு மன்பு மத்திய அரசிடம் அளித்தது.

இந்நிலையில் இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து அரசு சரியான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து வருகிறது என மத்திய பிரதமர் அலுவலக அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார்.  ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவற்கு சில வரைமுறைகள் உள்ளன என்ற அமைச்சர் அவை செயல்படுத்தப்படும் போது அது குறித்து பேசலாம் என்றார்.

மேலும், பிரமதர் மோடியின் 18 மாத ஆட்சியில் மத்திய பணியாளர் நலத் துறை பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது என்றார் அமைச்சர்.
Circumstances Proposed (₹)
Death occurring due to accidents in course of performance of duties. 25 lakh
Death in the course of performance of duties attribute to acts of violence by terrorists, anti-social elements etc. 25 lakh
Death occurring in border skirmishes and action against militants,terrorists, extremists, 

sea pirates 35 lakh
Death occurring while on duty in the specified high altitude,inaccessible border posts, on account of natural disasters, extreme weather conditions

 35 lakh
Death occurring during enemy action in war or such war like engagements, which are specifically notified by Ministry of Defence# and death occurring during evacuation of Indian Nationals from a wartorn zone in foreign country 45 lakh.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுபடியும் சிக்கல்
7வது ஊதியகுழுவில் Entry pay:29200
2009-ல் உள்ள இ.நி.ஆ ஊதியம்:6870
தரஊதியம் :2800
சிறப்பு தரஊதியம் : 750
மொத்தம் 10420
10420*2.57, :26779ரூ
7 வது ஊதிய குழுவில் 2009ல் உள்ள ஆசிரியர் ஊதியம்   : 26779
மறுபடியும் இழப்பு   :2421
மேலும் மேலும் வஞ்சிக்கப்படும் இ.நி.ஆசியர்களே
இவன்---TATA   SANGAM.
Pay commission-ல் எப்படி fitment formula மூலம் புதிய ஊதியம் கணக்கிடப்படுகிறது .........?
தற்போது D.A 119%

01-01-2016 - ல் எதிர் பார்க்கப்படும் 6% கூடுதல் D.A உடன் மொத்த  D.A 125%.
Pay 100% + D.A 125% = 225% = 2.25
# ஒரு வேளை அரசின் அளிப்பாக கூறப்படும் 15% ஊதிய உயர்வு எனில்,
F.F = 2.25 + ( 2.25 × 15% ) = 2.58
# ஒரு வேளை தொழிற் சங்கங்களின் குறைந்த பட்ச கேட்பான 30% உயர்வு எனில்,
F.F = 2.25 + ( 2.25 × 30% ) = 2.92
இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்....

 

 

தொடக்ககல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்களை சந்தித்து TATA சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள்

1. இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் வழக்கு குறித்தும் நிதி துறைச்செயலாளரின் கடிதத்திற்கு இடைநிலை ஆசிரியரின் கல்வித்தகுதி பணித்தன்மை குறித்து கேட்கபட்டதற்கு 215 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களின் தொகுப்பு வழங்கப்பட்டது(இவை பள்ளிக்கல்வித்துறை செயலாளரின் நேர்முக உதவியாளர் மற்றும் நிதித்துறைச் செயலாளரிடமும் வழங்கப்பட்டது.
2. திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் மீதான புகர் வழங்கப்பட்டது இவர் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

3. திருச்சி மாவட்டம் தா.பேட்டை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ரேவதி மீதான புகார் வழங்கப்பட்டது இவர்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார
4. விநாயகம்மிஷன் பல்கலை கழகத்தில் படித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற நமது கோரிக்கைக்கு ஆணை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்
5. பணிமாறுதல் பெற்று ஈராசிரியர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை விடுவித்தல் வேண்டும்
6. ஆசிரியர்கள் உயர்கல்விக்கு பின் அனுமதி ஆணை வழங்க வேண்டும்
7. நெல்லை மாவட்டம் DEEO அலுவலக கண்காணிப்பாளர் மாலா உட்பட பலர் மீது பொதுச்செயலாளர் அளித்த புகார் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ள நகல் வழங்கப்பட்டது இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பணியிட மாற்றம் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு: இடைநிலை, பட்டதாரிகள் ஏமாற்றம்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் பி.எட். பட்டதாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில்ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரைக்குமான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள் போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

6 வது ஊதிய கமிஷன் அரிவிக்கப்பட்டத்திலிருந்தே எவ்வாறு இடைநிலை ஆசிரியர்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்பதை பார்ப்போம்.

 நடுவன் அரசுக்கு பரிந்துரை செய்த ஊதியக் குழு கமிட்டி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ துறையில் செவிலியர்களுக்கு மட்டும் சிறப்பு ஊதிய நிர்ணயங்கள் செய்தல் வேண்டும் ஏனெனில் இவை இரண்டும் சேவையை
அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை என பரிந்துறை செய்தது. எனவே மத்திய அரசு அன்றைய அடிப்படை ஊதியமான 4500 x பெருக்கு விகிதமான 1.86 ஆல் பெருக்க கிடைத்த தொகையான ரூ.8370 அடிப்படை ஊதியமாக வைக்காமல் ரூ.9300 அடிப்படை ஆக வைத்து கிரேடு ஊதியமாக 4200 சேர்த்து ஒரு இடைநிலை ஆசிரியரின் அடிப்படை ஊதியம் ஆக ரூ13500 அறிவித்தது. எள்முனையளவும் குறையாது மத்திய அரசின் பரிந்துறைகளை அறிவிப்போம் என அறிவித்த அன்றைய தமிழக அரசு இடைநிலை

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஏமாற்றம் .-உறுதிமொழி என்னாச்சு?தினகரன் செய்தி

 

 

இடைநிலை ஆசிரியர்களில் 1-6-2009 பின்  நியமனம்  ஆறாவது ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே  என்பதால் பழைய ஊதியம் போதும் ,புதிய ஊதியம் வேண்டாம்.

ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக  நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும். 


தற்போது புதிய ஊதிய விகிதத்தினருக்கான  D.A. அறிவித்த பின்னர் முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி  அரசாணை வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A  அரசாணை  வெளியிடப்பட்ட பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்றுவருபவர்களுக்காக நிதித்துறை அரசாணை  258 நாள்.14.5.2013 இல் D.A. 166% -க்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தை விட, முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில் இருந்திருந்தாலே ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.

முந்தைய ஊதிய விகிதமே  இருந்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய ஊதியம்:

         BASIC PAY                          =       4500
         DEARNESS PAY (D.P)        =       2250
         D.A. 166%                             =     11205
                                                           ___________
         TOTAL                                          17955
                                                           ____________
         (D.A. நிதித்துறை அரசாணை  258 நாள்.14.5.2013 இன் படி)

ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு.

           BASIC                                 =      5200
           GRADE PAY                       =      2800
           P.P.                                    =        750
           D.A. 80%                             =      7000
                                                              _________
           TOTAL                                        15750
                                                              __________

மூன்றாவது ஊக்க ஊதிய (3rd Incentive) உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் -15.


 Govt issued  pay   9300+4200  to SSLC,Tamil + English shorten   qualification 

but 

HSC+D.T.Ed qualified teacher  get only  5200+
gp 2800+750pp----ஏன் ?

dears think about it.










ன் இனிய அப்பாவி இடைநிலை ஆசிரிய தோழனே! உன் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக உன்னிடமிருந்து பறிக்கப்படுவதை உணர்ந்தாயா? உன் தரநிலை தர ஊதியத்தால் தரம் கெட்டு போனதை அறிந்தாயா? அறிந்தும் உன்னிடம் எவ்வித சலனமோ, சஞ்சலமோ இருப்பதாக தெரியவில்லை. உன்னால் உனக்கான சரியான இயக்கத்தைக்கூட தெரிவு செய்ய இயலாமல் சிதறிக் கிடக்கிறாய். போராட்ட களத்தில் உன் பங்களிப்பு என்பது சொல்லும் அளவிற்கில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஏன் இந்த தயக்கம். நாம் ஏன் செல்ல வேண்டும்? நமக்காக யாராவது போராடுவார்கள் என்ற அசட்டையா? இல்லை அச்சமா? புரியவில்லை. இந்த நாட்டின் தலைவிதியை நிரணயிக்கப்போகும் மாணவர் சமுதாயம் உன் கையில். உன்னுடைய பிரதிபலிப்பு உன் மாணவர் சமுதாயத்திற்கும் தொடரும் என்பது உனக்கு பரியாததா?. உன் உரிமைகளைக் கூட கேட்க திராணியற்று ஊமையாய் உருக்குலைந்து இருக்கும் உன்னால் எப்படி உன் மாணவர் சமுதாயத்திற்கு உரிமையை பெற கற்றுக்கொடுக்க போகிறாய்?. போராட்டக் களத்தில் மற்றவர்கள் போராடிப் பெறும் உரிமைகளை எவ்வித கூச்சமும் இன்றி எப்படி உன்னால் அனுபவிக்க இயலுகிறது. மீண்டும் பகத்சிங் பிறந்தா உன்னை காப்பற்ற முடியும்?. இல்லை சேகுவரா தோன்ற வேண்டுமா?. உனக்கான பகத்சிங், சே யார் என்று அடையாளம் கண்டுக்கொள். இன்று தவறவிட்டால் இழந்த உரிமைகளை உன்னால் இனிமேல் பெற இயலாது. பல கட்ட போராட்டங்கள் தனித்தும், இணைந்தும் அரங்கேற்றியாகிவிட்டது. அரசோ, அதிகாரிகளோ அசையவில்லை. 30000க்கும் குறைவாக உள்ள பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு நீக்க முன்வர அரசு தயங்க காரணம் யோசித்தாயா? தொடக்கக்கல்வித் துறையில் உள்ள சங்கங்களின் போராட்டங்களை பார்த்தாலே பயம் கொள்ளும் அரசாங்கம் அமைதி காப்பதன் அர்த்தம் புரிந்தாயா? போராட்ட களத்தில் உன் பங்களிப்பு குறைந்ததன் விளைவே என்பதை நீ அறிவாயா?. அளவு மாற்றம் குணம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை என்றாவது நினைத்ததுண்டா?. போராட்டம் யாருக்கோ என்று வெளியில் நின்று வேடிக்கை பாரப்பது எவ்வளவு கேவலம் என்பது இனிமேலாவது உணர்ந்து கொள். இயக்கங்கள் அறிவிக்கும் போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொள்ள தயாராகு. மற்றவர்களையும் தயார் படுத்து. இடைநிலை ஆசிரியர்களில் இளைஞர்கள் பலம் அதிகமாகிவிட்டது. உன் பலத்தை பலவீனமாக்க சில சுயநலமிக்க தலைவர்கள் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்கள். அதில் சிக்கி சின்னாபின்னமாகி விடாதே. சிந்தித்து செயல்படு. சிந்தணை செய்யாதவன் ஜெயித்ததாக வரலாறு இல்லை. உனக்காக போராட கூட்டு நடவடிக்கைக்கு 

TATA  KIPSON.9443464081.

உணர்வாயா? மற்றவர்க்கும் உணர்த்துவாயா?
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!

உரிமையைப் போராடிப் பெறுவோம்!!!

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு; TATA சார்பில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் TATAவை இணைத்து கொள்ள மனு தாக்கல்.வழக்கு வருகிற 16 அல்லது 17.11.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் என நமது வழக்கறிஞர் அவர்கள் இன்று தொலைபேசி மூலம் தெரிவித்தார்கள் .


ஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ பட்டம் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300, தர ஊதியம் ரூ.4200 வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவிப்பு...RTI--அரசு கடித எண் ;41541/சி.எம்.பி.சி./2013.நாள்.20.8.2013.

 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - அரசு மேல்நிலை / உயர்நிலைப் பள்ளிகளில் 23.08.2010க்குப் பின்னர் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டவர்களில் 23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடந்திருப்பின் ஆசிரியர் தகுதித் தேர்ச்சி பெற தேவையில்லை, மேலும் அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிக்க ஆணை

நிதித்துறை - G.O MS : 282 - அரசு ஊழியர் பணியிலிருக்கும் போது இறந்துவிட்டால் வழங்கப்படும் ஈமச் சடங்கு நிதி ரூ.5000/- இல் இருந்து ரூ.25000/- ஆக உயர்த்தி அரசானை வெளியீடு...........

ஜாக்டோவின் அறிவிப்பு!!!
அன்பார்ந்த இடைநிலை ஆசிரியர்களே!!
அனைவருக்கும் வணக்கம்.நீங்கள் ஊதியம் குறித்து தேவையில்லாத பதிவுகளையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருவதை நாங்கள் அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.உங்களின் மனவேதனைகளும் ஆதங்கங்களும் எங்களுக்கு புரியாமலில்லை.நம் கையில் எதுவுமில்லை.அரசு நமக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.நாம் பொறுத்திருந்து தான் சாதிக்க முடியும்.எடுத்தவுடனேயே ஊதிய முரண்பாட்டை நீக்கு என்று கூறிவிட முடியாது.படிப்படியாகத்தான் படிகளில் ஏற வேண்டும். இன்னுமோர் பத்து ஆண்டுகளுக்குள் நிச்சயம் நாம் மத்திய அரசுக்கு இணையான 9300+4200 பெற்றே தீருவோம்.அதுவரை பொறுமையாக இருங்கள் இடைநிலை ஆசிரியர்களே.நாங்கள் எப்பாடுபட்டாவது உங்களின் உரிமையை பெற்றுத் தருவோம்.
இன்னும் ஓர் இரண்டு மூன்று வருடங்களாவது போராட்டம் நீண்டு போகட்டும் அப்போதான் அரசு நம் போராட்டக் குணத்தை அறியும்.நாம் போராளிகள் என்பதை அரசுக்கு ஒரு சில ஆண்டுகளாவது போராடிக் காட்ட வேண்டாமா.அதற்குள் தலைமையாசிரியர்களுக்கு நிகரான ஊதியம் கேட்டால் எப்படி?
நீங்களே சற்று சிந்தியுங்கள்.
அப்டேட் ஆகாமல் அப்படியே இருக்கும் எங்களை உங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது ஊதியம் மட்டுமே. அதையே நீக்கிவிடு என்றால் உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் நீங்கிவிடாதா? பிறகெப்படி எங்களுக்கான மதிப்பை பள்ளியில் நிலைநாட்டிக் கொள்வது.உங்களின் ஊதியம் பெற்றுத் தருவது எங்கள் கடமை.போராடாமல் எதுவும் கிடைத்து விடாது.இதுவரை நாம் பெற்றவை அனைத்தும் போராடி பெற்றவையே.எஸ்மா,டெஸ்மா சட்டங்களையே பார்த்தவங்க தான் நாம.ஆசிரியர்களின் போராட்டம் தோற்றதா சரித்திரமே இல்லை எங்களின் ஊதியம் குறைவுபடும் சமயத்தில் மட்டும்.இது ஏனோ உங்களின் ஊதிய முரண்பாடு களைவதில் மட்டும் பலிக்காமல் போய்விட்டது.

பரவாயில்லை இனிவரும் போராட்டங்களில் நாம் நிச்சயம் நம் பலத்தைக் காட்டுவோம்.இங்கே ஒரு உண்மையை நாங்கள் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.ஏனென்றால் எங்களால் இனியும் உங்களை ஏமாற்ற முடியாது. என்னவெனில் இதில் முழுவதும் பாதிப்பு உங்கள் சார்ந்ததாகவே இருப்பதால் எங்களால் இதில் அவ்வளவாக எவரும் தீவிரம் கொண்டு ஈடுபட முடியவில்லை.உங்களுக்காக நாங்கள் ஏன் போராட வேண்டும் என்ற மனநிலை நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ளதும் உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
மேலும் வயதான காலத்தில் பொண்டாட்டி பிள்ளைகளை பிரிந்து சங்க செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டு உங்களுக்காக பாடுபடுவதில் எங்களின் மனைவிமார்கள் எள்ளளவும் மகிழ்ச்சி கொள்ளவில்லை.இது மேலும் எங்களுக்கு தளர்வையே ஏற்படுத்துகிறது.

இத்தனையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக நாங்கள் உழைத்து வருகிறோம் என்பதை உங்கள்
மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
எங்களால் முடியாதது எதுவும் இல்லை.இப்படியே நீங்கள் தேவையற்ற விமர்சனங்களைக் கையாண்டால் எங்களால் உங்களின் ஊதியத்தை பெற்றுத் தர முடியாது என்பதை இங்கு அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

எங்களால் இடைநிலை ஆசிரியர்களாகிய உங்களின் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியவில்லை.எங்கள் அனைவரின் காதுகளிலிருந்தும் இரத்தம் வருவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியுமா என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
பரவாயில்லை அதை நாங்கள் தாங்கிக்கொள்கிறோம். நாங்கள் மனது வைத்திருந்தால் உங்களின் ஊதியம் 9300+4200 ஐ எப்பவோ வாங்கிக் கொடுத்திருக்க முடியும்.
ஆனால் தலைமையாசிரியர் பதவிக்கும் இடைநிலை ஆசிரியர்
பதவிக்கும் இடையே வேறுபாடுகள் வேண்டாமோ?

நீங்கள் எங்களின் இடத்திலிருந்து பார்த்தால்தான் எங்களின் வேதனை புரியும்.பரவாயில்லை விடுங்கள் அதை.இதுவரை நடந்துள்ள போராட்டங்கள் அனைத்திலும் இடைநிலை ஆசிரியர்களான நீங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளீர்கள்.இனிவரும் காலங்களிலும் அத்தகைய நல்லதொரு பங்களிப்பை நீங்கள் நல்குவீர்கள் என்று நம்புகிறோம்.
மேலும் புதிய ஆசிரியர்களின் பயவுணர்வை போக்கி போராட்டங்களில் பங்கேற்பதால் எவ்வித பாதிப்பும் வந்துவிடாது என்பதை நீங்கள் எடுத்துரைத்து அவர்களையும் போராட்டக் களத்திற்கு கொண்டுவர வேண்டும்.
போராட்டக் காலங்களில் நாம் இழந்த ஊதியத்தை மீண்டும் அரியரோடு பெற்றுள்ளோம் எனவே எதற்கும் அஞ்ச வேண்டாம் என்று கூறுங்கள்.

மேலும் ஒரு உண்மையை தங்களிடத்தில் கூற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.ஜாக்டோவில் இருக்கும் வயதான தாத்தாக்களின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைக்காத காரணத்தினால் ஏறக்குறைய ஜாக்டோ செத்துவிடும் நிலையில் உள்ளது.
அதற்காக நம் ஊதியப் பிரச்சினையை விட்டுவிடவா முடியும்.

முடியாது எப்பாடுபட்டாவது இழந்த நம் உரிமையை மீட்டே தீருவோம்.
செய் அல்லது செத்துமடி என்று யாரோவொரு இடைநிலை ஆசிரியன் கூறுவது என் செவிகளில் விழுகிறது.பரவாயில்லை கேட்டுவிட்டு போகட்டும்.
அதற்காக நாங்கள் செத்து விடவா முடியும்?
நமக்கு மாணம் பெரிதல்ல உசுறுதான் முக்கியம்.முடியாது என்று விட்டுவிட்டால் இதுவரை நாங்கள் கட்டிக்காத்த மாணம்
என்னாவது.

அப்புறம் எப்படி உங்களிடம் சந்தா வாங்குவது?
தரையில் விழுந்தாலும்
மீசையில் மண் ஒட்டலைன்னு கூறும் நாம் அப்படியே உங்களை அம்போன்னு விட்டுவிடவா முடியும்? எங்களுக்கு உங்களின் சேவை எப்போதும் தேவை.கூட்டம் சேர்க்கவும்,கோஷம் போடவும், சந்தாகொடுக்கவும் இடைநிலை ஆசிரியர்களாகிய நீங்கள் தேவை.
எங்களால் உங்கள் பிரச்சினையை தீர்க்க முடியாது என்று எப்படி விட்டுவிட முடியும்?

இருந்தாலும் நான் இங்கே ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன்.உங்கள் (இ.நி.ஆ) மேல் இருக்கும் அக்கறையால் உண்மை ஒன்றை அழுத்தமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
எங்களால் உங்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாது.கஜானா காலியாம்.
இன்னும் பத்தே பத்து வருடங்களில்
உங்கள் ஊதியம் 9300+4200 உங்கள் கையில் அதற்கு நாங்கள் கியாரன்டி.இல்லை எனக்கு பிரச்சினை இப்பவே தீர வேண்டும் என்றால் உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் தனியாகப் பிரிந்து கூட போராடி உங்களுக்கானதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.எங்களை நம்பியிருங்கள் என்று தான் கூறுகிறோம்.

ஆனாலும் நீங்கள் எங்களை விட்டு சென்றால் அதற்கு ஜாக்டோ பொறுப்பாகாது.
ஜாக்டோ கோமாவில் இருப்பதென்னவோ உண்மைதான் ஆனால் செத்துவிடவில்லை தலைமையாசிரியர்களான எங்களுக்கு ஏதாவதொரு பாதிப்பு ஏற்படும்போது மட்டும் அது வீறுகொண்டு எழும்,இப்போதல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து வரக்கூடிய போராட்டங்களில் இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கண்டிப்பா தவறாமல் கலந்து கொள்ளவும்.
வெற்றி நமதே!!
வெற்றி நமதே!!
போராடுவோம்!!
போராடுவோம்!!
இறுதிவரை ( சாகும் வரை) போராடுவோம்!!

வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!
வாழ்க ஜாக்டோ
வளர்க ஜாக்டோ

இப்படிக்கு ஜாக்டோ ஒருங்கினைப்பாளர்
சுப்பிரமணி 👎👎👎👎👎👎 இந்த பதிவு உண்மை எனில் நான் ஜாக்டோவில் இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்..👎👎👎👎👎👎R..ரெங்கபாஷ்யம் இடைநிலை ஆசிரியர்...கரூர்
இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய மாற்றம் கிடைக்குமா ? ----சந்தேகங்களும் --விளக்கங்களும் ...டாட்டா கிப்சன் .




 

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு; TATA சார்பில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் TATAவை இணைத்து கொள்ள மனு தாக்கல்


மாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம்
எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர,
மொத்த சம்பளம் எவ்வளவு?
அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்?
எதற்கு பிடிக்கிறார்கள்? என்பது தெரியாது.

வருமான வரிக்காக பிடிக்கிறார்களா? அல்லது
வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்) பிடிக்கிறார்களா? என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள்? என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன? என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர்.

இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை.
எவ்வளவு பிடிக்கிறார்கள்?
***************************************
பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். பணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் தொகையில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும் 3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும். ஆனால் சமீப காலமாக சிடிசி (cost to company) முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள்.

சம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந் தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. இந்த தொகையையும் நிறுவனங்கள் பென்ஷன், காப்பீடு என்று பிரித்து முதலீடு செய்கின்றன.
நிரந்தர கணக்கு எண்
*******************************
புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு ஆரம்ப காலங்களில் செய்த முக்கியமான பணி நிரந்தர வைப்பு நிதி எண் ( யுஏஎன் - Universal Account Number) கொண்டுவந்ததுதான். இதன் மூலம் பி.எஃப். தொகையை கையாளுவது எளிதாகிவிட்டது. பலர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால் புதிய நிறுவனத்துக்கு சென்றவுடன் பழைய பிஎஃப் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் தொகை யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யுஏஎன் கொண்டுவரப்பட்டது. இதனால் புதிய நிறுவனத்துக்கு செல்லும் போது யுஏஎன் எண்ணை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் சேர்ந்துவிடும். பயனாளிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் தொகையை கையாளலாம்.

தெரிந்துகொள்வது எப்படி?
****************************************
சில வருடங்களுக்கு முன்பு பி.எஃப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யுஏஎன்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் இணையத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, வட்டி எப்போது வரவு ஆனது. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல் களையும பார்த்துக்கொள்ள முடியும்.

இணையதளம் தவிர பி.எஃப் கணக்கை நிர்வகிக்க செயலி இருக் கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்மு டைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். தவிர அந்த இணையதளத்தில் இருக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் கணக்கில் இருக்கும் தொகையை அறிந்துகொள்ளலாம்.
பணம் எடுப்பது எப்படி?
***********************************
பி.எஃப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக் காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பிஎஃப் தொகை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

பணியில் சேர்ந்து ஐந்து வருடத் துக்குள் பி.எஃப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எஃப். தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். பணம் எடுப் பதை தவிர சில தேவைகளுக்கு முன் பணம் கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம், குழந்தைகளில் கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு எடுத்து கொள்ளலாம்.
ஆன்லைன் பரிவர்த்தனை
******************************************
வரும் மார்ச் மாதம் முதல் ஆன் லைனிலேயே பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். மூன்று மணி நேரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பி.எஃப். தொகை அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும். இந்த வசதியை பிஎஃப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்திருக்கிறார். தற்போது ஆதார் எண் இருப்பவர்கள் 3 நாட்களில் தங்களது தொகையினை பெற்றுக் கொள்ள முடியும்.

பங்குச் சந்தையில் பி.எஃப்.
***************************************
ஓய்வு காலத்துக்காக சேமிக்கப்படும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்களே என்று அச்சப்பட தேவையில்லை. இப்போது பி.எஃப். ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் தொகை இருக்கிறது. இவை அரசாங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக பி.எஃப். அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தொகையில் முக்கியமான குறியீடுகளாக பிஎஸ்இ இடிஎப் மற்றும் என்எஸ்இ இடிஎப்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் அதிகபட்சம் 15 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்
**********************
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர் ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.

ஓய்வுகாலத்துக்கு இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தவிர இன்னும் அதிகமாக பிடிக்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் பணி யாற்றும் நிறுவனத்திலேயே எழுதி கொடுத்து பிடித்தம் செய்யலாம். இந்த விருப்ப தொகை விபிஎப் ஆக முதலீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சேமிக்கும் பழக்கம் இல்லாத மாத வருமானம் கொண்டவர்கள் தங்களது ஓய்வு காலத்தை பொருளாதார சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பிஎஃப் திட்டம் உண்மையிலேயே ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் திட்டம்தான்.
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.
நன்றி : தி இந்து நாளிதழ் - 26.10.2015
டாட்டா சங்கத்தின் உச்ச நீதிமன்றம் ஊதிய வழக்கு எண் SLP . C. 9109/2015. I. A. No. 6/2015 விசாரணை விபரம் .
இன்று உச்ச நீதிமன்றத்தில் 6 வது ஊதியகுழு இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சினை மற்றும் இரு வேறுபட்ட ஊதிய முறையை ரத்து செய்து 1.1.2015 முதல் டிப்ளோமா கல்வி தகுதி படி 1-6-88 முதல் பெற்று வந்த ஊதியம் ஆறாம் ஊதிய குழுவில் மறுக்கப்பட்டுள்ளது .இதை ரத்து செய்து ஊதியம் 9300+4200 வழங்கிட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .அதன் விசாரணை இன்று 5-11-2015 நடைபெற்ற இருந்து .ஆனால் விசாரணை பட்டியலில் இன்று இடம்பெற வில்லை .நமது மூத்த வழக்கறிஞர் .திரு.ந்ந்தகுமார் அவர்கள் தெரிவித்த படி நாளை அல்லது 14-11-2015 அன்று விசாரணைக்கு வரும் என தெரிவித்தார்கள் .நல்லது நடக்கும் இடைநிலை ஆசிரியர் ஊதியம் டாட்டா சங்க வழக்கில் மாற்றம் கிடைக்கும் .அனைவரும் ஆதரவு தாரீர் .இழந்த உரிமை மீட்போம் ........டாட்டா கிப்சன் .9443464081.
நெல்லை மாவட்டம் முக்கூடல் சொக்கலால் மேல்நிலை பள்ளியில். பணி செய்து வந்த திருமதி .மரகதவல்லி .இடைநிலை ஆசிரியர் .பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கேட்டதனால் இடைநிலை இரண்டு மாத காலம் தற்காலிக பணிநீக்கம் செய்ய பட்டார் .டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள் வழிகாட்டுதல் படி 3-11-2015 பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக DEO. அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது .அவர்களுக்கு ஆதரவாக டாட்டா கிப்சன் அவர்கள் கலந்து கொண்டார் .போராட்டம் மாலை 6.45 மணி வரை நடைபெற்றது .இறுதியாக CEO .and DEO மற்றும் காவல்துறையினர் ஆகியோர் முன்னிலையில் பொது செயலாளர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை படி எவ்வித நிபந்தனைகள் இல்லாமல் மீண்டும் பணியில் சேர நிர்வாகம் ஆணை வழங்கியது .மேற்படி ஆசிரியர் பணியில் சேர செய்தி வெளியிட்ட( 3-11-2015 மற்றும் 4-11-15 ) அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் அனைவருக்கும் டாட்டா சங்கம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கிறோம் .மேற்படி ஆசிரியர் இன்று 5-11-15 பணியில் சேர்ந்து உள்ளார்கள்
ஓ!இடைநிலை ஆசிரியப் பேரினமே! 🌺
அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்கிறார்களே!
நீங்களோ எத்தனைதான் அடி அடித்தாலும் அசையாமல் நிற்பது ஏனோ?
ஆறாவது ஊதியக்குழு இடைநிலை ஆசிரியர் வயிற்றில் அடித்திருக்கிறதே?
உனது வயிறு பற்றிக்கொண்டு எரியவில்லையா?
பொறுமை கடலினும் பெரிது எனும் வள்ளுவன் வாக்குக்கிணங்க பொறுமை காக்கிறாயோ?
இது பொறுமையாக இருக்க வேண்டிய காலமா? இல்லை!இல்லவே இல்லை!
🌺இந்தக் காலத்தில் நீ மௌனமாக இருந்தால் உன் எதிர்கால ஆசிரிய சமுதாயத்தை யாராலும் மீட்டெடுக்க முடியாது என்பதை அறிவாயோ?
🌺ஆறாவது ஊதியக்குழுவில் ₹10,000 பாதிப்பு என்றால் 2016-ல் ஏழாவது ஊதியக்குழுவில் உனது பாதிப்பு ₹20,000 என்பதைஅறிந்தும் மௌனம் காக்கிறாயோ?
நமக்கு காலம் கை கொடுக்கவில்லை.இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது.அதற்குள் ஏதாவது செய்ய வேண்டுமே!
பொங்கியெழு.......
வீறுகொண்டெழு......
🌺👍ஊதியம் பெறும் வரை ஓய மாட்டேன் என உள்ளத்தில் உறுதிகொள்.......
👍🍀
உனக்காக நீ உழைக்காமல் வேறு யார் உழைப்பார்?
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை உலகுக்கு உணர்த்துவோம்!ஒற்றுமையின் பலத்தை உலகுக்கு பறைசாற்றுவோம்!
🍀பாதிக்கப்பட்டவனுக்கே அந்த பாதிப்பின் வலி தெரியும்.உள்ளத்தில் வலி இருந்தால் நிச்சயம் வழி பிறக்கும்.
நம்முடைய தர ஊதியம் ₹2800 காட்டுகிறது நாம் தரம் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்பதை.
நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமானால்,நம் தர ஊதியம் உயர வேண்டும்.
இன்னும் ஏன் பொறுமையாக இருக்கிறாய்?
😛😝யாரோ நமக்காக போராடி வாங்கித் தருவார்கள் என பகல் கனவு காண்கிறாயோ!
😳பகல் கனவு என்றும் பலித்ததில்லையே! இதை நீ அறியாயோ!
யாரும் நமக்காக போராடவில்லை.அவர்கள் அவர்களுக்காக மட்டுமே போராடுகிறார்கள்.அவர்கள் நமக்கு ஒன்றும் பெற்றுத் தரப்போவதுமில்லை.
🐎🐎விரைவாக பாதிக்கப்பட்ட 2009 மற்றும் Tet ஆசிரியர்களை ஒன்று சேர்ப்போம்.நாம் ஒன்றுபட்டால் நிச்சயம் நமக்கு தீர்வு உண்டு......
🙏🙏🙏
🍄🍄ஒவ்வொவரும் நிச்சயம் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையில்....
🌸🍁 👍👍 உங்களில் ஒருவன்.👍
டாட்டா சங்கத்தின் உச்ச நீதிமன்றம் வழக்கு .SLP(C)No.9109/2015ல் I.A.No.6/2015. அபிடவிட் உங்கள் பார்வைக்கு ......
20 துறைகள் சார்ந்த 52 வகை பணியிடங்களுக்கு அரசு ஆணை எண்.71.நிதி .நாள் .26.2.11 மூலம் ஊதிய குறைப்பு செய்து ஆணையிட பட்டது .அதே அரசு ஆணையில் ஊதிய குறைதீர்ப்பு பிரிவு அமைக்க பட்டது .இந்த பிரிவில் ஊதிய பாதிப்பு மற்றும் முரண்பாடு உள்ளவர்கள் மனு செய்து பாதிப்பை சரி செய்து கொள்ளலாம் .என ஆணையிடப்பட்டது .ஊதிய குறைப்பால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் பல சங்கம் நீதிமன்றம் நாடி தடைகள் பெற்றனர் .இதன் தொடர்ச்சியாக நடந்த வழக்கு விசாரணை W.A.No.504/2012.ன் முடிவில் 27.2.2014.அன்றுசென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழக அரசின் ஒருநபர் குழு அறிக்கை மற்றும் ஊதியகுறை தீர்க்கும் பிரிவு அறிக்கைகள் ரத்து செய்தது மட்டும் அல்லாமல் ஓய்வு பெற்ற தலைமை நீதி திரு .வெங்கடாசலம் மூர்த்தி அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்து தீர்ப்பு வழங்கப்பட்டது .
இந்த ஆணையம் தமிழக அரசு உழியர்களுக்கு ஆறாவது ஊதிய குழு வில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வுகள் செய்து அரசுக்கு அறிக்கைகள் கொடுக்க வேண்டும் .மேலும் 20 துறைகள் சார்ந்த 52. வகையான பணியிடங்களுக்கு ஊதிய குறைப்பு செய்து சரியா ?.தவறா ?என ஆய்வுகள் செய்து அறிக்கை கொடுத்து அதன்படியே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .இந்த பணியிடங்களுக்கு ஒருநபர் குழு அறிக்கை படி மத்திய அரசு உழியர்களைவிட அதிக ஊதிய நாளது தேதி வரை வழங்கப்படுகிறது .
தற்போது தமிழக அரசுழியர்கள் ஊதிய பிரச்சினை வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது .இந்த வழக்கில் அரசு வெற்றி பெற வேண்டும் என்றால் இடைநிலை ஆசிரியர் களுக்கு பொய்யான காரணம் கூறி 1989 முதல் பெற்று வந்த ஊதியத்தை மீண்டும் வழங்கி ட வேண்டும் .என்ற இக்கட்டான நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது .டாட்டா சங்கத்தின் சட்ட போராட்டத்திற்கு கள போராட்டம் வழு சேர்ந்து உள்ளது நமது சங்கம் மட்டுமே ஆறாம் ஊதிய குழு அறிக்கைகள் சட்ட விரோதமானவை உண்மையில்லாதவை என பல்வேறு ஆதாரம் தாக்கல் செய்து உள்ளது ..இதனால் நமது ஊதிய பிரச்சினை யை தீர்த்தால் தான் 52 வகையான பணியிடங்களுக்கு ஊதிய குறைப்பு செய்தது சரி என அரசு வழக்கில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை டாட்டா சங்கத்தின் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு ஏற்படுத்தி உள்ளன .இதன் காரணமாக தான் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 என மாற்றம் செய்திட நடவடிக்கை எடுத்து வருகிறது .
இந்த அபிட்விட் டை பிரின்டு எடுத்து வருகிற CRC.7-11-15 ல் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன் .....
G o.71.date .26.2.11.and G.o.242 date .22-7-2013
ன் படி ஊதிய குறைப்பு செய்யப்பட்ட 20 துறைகள்

வேளாண்மை துறை .
வேளாண்மை பொறியியல் துறை
கால்நடை பராமரிப்பு துறை .
மீன் வளத்துறை .
நெடுஞ்சாலை துறை .
ஊரக வளர்ச்சி துறை .
போக்குவரத்து துறை.
கைத்தறி துறை.
அரசு வாகனங்கள் பராமரிப்பு துறை .
பொதுப்பணி துறை .
இன்டஸ்ட்ரீஸ் துறை
அரசு இல்லங்கள் துறை .
மருத்துவ போக்குவரத்து துறை .
உடல் உனமுற்றோர் நல துறை .
நகர பஞ்சாயத்து துறை .
மின்சார வாரியம் .சென்னை மாநகராட்சி .
வருவாய் துறை .
காவல் துறை .
வனத்துறை.

டாட்டா கிப்சன் .
பொது செயலாளர் .
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் .
9443464081.
கல்வித்தரம் எப்போது மேம்பாடு அடையும் ?
தற்போது உள்ள நடைமுறைக்கு ஏபில் அட்டை தேவையா? ஏபில் ஏன்?
1.மாணவர்கள் தன் சுய வேகத்தில் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
2. வகுப்புகளுக்கு முக்கியத்துவம் இல்லை. மாணவர்களின் அடைவுத்திறனே முக்கியம்
3. இதனால் 5ஆம் வகுப்புக்குள் எழுத்துக்கள் தெரியாத மாணவர்களே இருக்க முடியாது. அதாவது மிகவும் பின்தங்கி இருக்கும் 5 ஆம் வகுப்பு மாணவன் தன் திறன் 3ஆம் வகுப்பிற்குண்டான திறன் எனில் அவன் 3ஆம் வகுப்பு படிக்கலாம். அதற்காகதான் ஏணிபடிகள்.
4. ஒரு 2 ஆம் வகுப்பு மாணவன் திறன் இருந்தால் நேரடியாக ஏணிப்படிகளை முடித்து 3 ஆம் வகுப்பிற்கு கூட செல்ல முடியும்.
இப்படி மாணவர்களின் குறைந்த பட்ச கற்றல் அடைவை உறுதி செய்ய அப்போதைய Chennai Corporation Commissioner Mr.விஜயகுமார் IAS அவர்களால் உருவாக்கப்பட்டது.
ஏபில் ஏன் வேண்டாம்?

தவறாமல் பங்கு பெறுங்கள் .....

6 வது ஊதிய குழு பிரச்சணை ---ஊதிய வழக்கு --- போரடகளம் --கருத்தரங்கம் ..

இடம் ;- இராமநாதபுரம் ;  நாள் .11.10.2015  மாலை .2.30 மணி .


08.10.2015 . போராட்டத்தில் மாநில அளவில் கலந்து கொண்டோர் விவரம்
(-இயக்குனரிடமிருந்து பெறப்பட்ட தகவல்)

தொடக்கக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை - 1,12,742
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 33,061
* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 79,681
* பங்கேற்றோர் % -70.68 %

பள்ளிக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை- 1,07,473
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 84,408
வேலை நிறுத்தத்தில்
* ஈடுபட்டவர்கள்- 23,065
* பங்கேற்றோர் % -21.46 %

ஒட்டு மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை- 2,20,215
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 1,17,469
* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 1,02,746
* பங்கேற்றோர் % - 46.65 %

ஆசிரியர்கள் ஸ்டிரைக் அபாரம் -அரசு மெகா ஷாக்.......

8.10.2015 போராட்டத்தில் டாட்டா சங்கம் ..ஆழைக்கப்படாத விருந்தினர் ஆக கலந்து கொண்டது . ஜேக்டோ வில் எண்ணிக்கை அதிகமாக பள்ளிகல்வி துறை சார்ந்த சங்கம் இருந்தாலும் பள்ளிகல்வி துறை யில் பணிபுரியும் ஆசிரியர் கள் அதிகம் பங்கு பெற வில்லை .20% மட்டுமே பங்களிப்பு செய்தனர் .ஜேக்டோ நிர்வாகிகள் அடுத்த கட்ட போராட்டம் செய்யும் முன்னர் தொடக்க கல்வி துறையில் உள்ள அனைத்து சங்கங்கள் இணைத்து இதைவிட வலுவான போராட்டம் உருவாக்க வேண்டும் .நான் பெரியவர் நீ சிறியவர் என்பதை மறக்க வேண்டும் .போராட்டம் செய்ய வராத பள்ளிகல்வி சங்கங்கள் ஒதுக்கப்பட்ட. வேண்டும் .
👥வேறுபாடு கருதாது அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் எனபதில் மாற்றுக் கருத்து இல்லை .
👥 பெரியவர்/ன் என்ற எண்ணம் உண்டான போதே எல்லாம் துண்டாகி விட்டது. இதை உணர வேண்டும்.
👥ஈகோ வை விடுத்து அனைவரும் ஒன்றினையும் போது மட்டுமே வெற்றி சாத்தியப்படலாம்.
👥பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிக்கையில் வெகு சுலபமாக "சில சங்கங்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபடுகிறது" என்று கூறியுள்ளது நமக்குள் ஒற்றுமையில்லை என்பதையே உலகுக்குத் தெரிவிப்பதாக உள்ளது.
👥 இனி வரும் காலத்தில் "ஒரு சில" என்பதற்குப் பதிலாக "அனைத்து சங்கங்களும்" என்று குறிப்பிடும் நிலையை உருவாக்கினால் மட்டுமே கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகாமலிருக்க ஒற்றுமை அவசியம்.
👥ஒன்று படுவோம் போராடுவோம் என்பது வெறும் வார்த்தையாக மட்டும் இருந்தால் போதாது. மனதிலும் உணர்விலும் இருக்க வேண்டும்.....

.டாட்டா கிப்சன் .பொது செயலாளர் .
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் .9025054081.

பள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் PASSPORT பெற NOC - தெளிவுரை வழங்கி இயக்குனர் செயல்முறைகள்,,,,,,,,,,,,

அக்டோபர் 8 போராட்டம் ---டாட்டா வின் அறிவிப்பு ...


1. 6 வது ஊதிய குழு முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும் .இடைநிலை ஆசிரியரின் இரு வேறு பட்ட ஊதிய முரண்பாடுதீர்க்கப்பட வேண்டும்

2. CPS திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் 

3.2003--2006 தொகுப்பூதிய பணிக்காலம் பணிகலமாக ஏற்கப்பட்டு பணி நியமன நாள் முதல் பணிவரன்முறை செய்யப்பட வேண்டும் .

என்ற கோரிக்கைகளை மட்டும் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( டாட்டா  ) அக்டோபர் 8 போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கி   போராட்டத்தில் கலந்து கொள்கிறது மேலும் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு வலு சேர்க்க கேட்டுக்கொள்ள படுகிறது.டாட்டா சங்கம் போராட்டத்திற்கு தடை வேண்டி நீதி மன்றத்தில் வழக்கு ஏதும் தாக்கல் செய்ய வில்லை .

மாநில அமைப்பு ....டாட்டா கிப்சன் .

பள்ளிக்கல்வி இயக்குனர் அளவிலான பேச்சுவார்த்தை தோல்வி; திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ அறிவிப்பு

சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இன்று மாலை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதையடுத்து திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ அறிவித்துள்ளது.
ஊதிய பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தடை காரணமாக 6 வது ஊதிய முறன்பாடு அரசு தீர்க்க முடியாது .கல்வி  துறை சார்பாக  டாட்டா சங்க சங்கம் SLP-9109/2015. ல்   I.A.NO.6/2015.வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

உச்ச நீதிமன்ற தடையால் தமிழ் நாட்டடில் 7 வது ஊதிய குழு அமைப்பது கேள்வி குறியே ? இதோ தடை ஆணை ...


யார் கள போராட்டம் செய்தாலும் சென்னை மாநில செயற்குழுவில் எடுத்த முடிவு படி டாட்டா முழு ஆதரவு .

               தமிழ் நாட்டில் 6 வது ஊதிய குழு அரசு ஆணை 234 நிதி நாள் .1.6.2009 ன் படி நடைமுறை படுத்தப் பட்டது .அதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே  பெற்று வந்ததை விட ரூ 370 குறைவாக நிர்ணயம் செய்யப் பட்டது.தற்காலிக தீர்வாக அரசு ஆணை 258 நிதி .நாள் 27.6.2009 ன் படி 1.1.2006 முதல் 31.5.2009 முடிய பணி நியமனம் பெற்றவர்கள் 1.86.என்ற விதியை பயன் படுத்தி ஊதியத்தை பெருக்கி நிர்ணயம் செய்து கொள்ள ஆணையிடப்பட்டது .அதன் பின் அரசு ஆணை 444 ன் படி ஊதிய பிரச்சனையை தீர்க்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.இந்த குழு அரசின் கைபாவையாக செயல் பட்டு முரண்பாடான அறிக்கையை அரசிடம் சமர்பித்தது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிதிமன்றத்தை நாடினர் .நீதிமன்ற தீர்ப்பு படி அரசு ஆணை 123 ன் படி 3 நபர்களை கொண்ட ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டது .இந்த குழுவும் 4342 பேரிடம் 4 நாளில் விசாரணை செய்து முரண்பாடான பொய்யான அறிக்கை அரசிடம் கொடுக்கப்பட்டது..டாட்டா சங்கம் தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் பல்வேறு ஆதரங்களை சேகரித்து வழக்கு தாக்கல் செய்தது..மேலும் இணையம் மூலம் சேகரித்த தகவலை வெளியிட்டு அனைவரயும் விழிப்படைய செய்த சங்கம் டாட்டா மட்டுமே .
                27.2.2014 ல் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு படி 6 வது ஊதிய குழு அறிக்கையை ரத்து செய்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 6 ஊதிய குழு முரண்பாடுகளை தீர்க்க ஆனையிடப்பட்டது..தமிழக அரசின் 6 வது ஊதிய குழு தவறானது என உயர் நீதிமன்றத்தில் 3642 பேர் வழக்கு நடத்தி உள்ளார்கள் .மேலும் 72,000 இடைநிலை ஆசிரியர்கள் பிரச்சனைக்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு  டாட்டா வும் ,எஸ் எஸ்.டி எ மட்டுமே நடத்தியது .தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு டாட்டா மட்டுமே சென்று உள்ளது. 5.5 இலச்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்தாலும் 6 வது ஊதிய குழு வுக்கு எதிராக சமரசம் இல்லாமல் வழக்கு நடத்துவது டாட்டா சங்கம் மட்டுமே .

                            அன்பர்களே ஜேம்ஸ் என்ற ஒரே ஒரு உதவி தொடக்க கல்வி அலுவலர் மட்டுமே 2011 ல் இருந்து சட்ட போராட்டம் நீதிமன்றத்தில் நடத்தி இன்று தர ஊதியத்தில் 200 ரூபாய் உயர்வு பெற்று உள்ளார்கள் ஒட்டு மொத்த உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்பட வில்லை .எனவே சாட்சி டாட்டா சட்ட போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெரும் .அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் 9300+4200 என ஊதிய மாற்றம் ஏற்படும் .
                                மேலும் TET வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தமிழ் நாட்டில் தகுதி தேர்வு நடத்த முடியவில்லை ,பணி நியமனம் செய்ய முடியவில்லை .அது போல் 2009 ல் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்குவழக்கு முடியும் வரை பணிமாறுதல் முடியவில்லை .அது போல் 6 வது ஊதிய பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதி முடிவு ஏற்படாத வரையில் தமிழ் நாட்டில் 7 ஊதிய குழு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது .இந்த நிலை ஏற்பட காரணம் தமிழக அரசு தான் கரணம் ஆகும் .
                                    மகிழ்ச்சியான செய்தி என்ன வென்றால் 6 ஊதிய குழு பிரச்சனைக்கு இறுதி முடிவு வந்த பின்புதான் 7 ஊதிய குழு தமிழ் நாட்டில் அமைக்க முடியும் .இதற்கு காரணம் டாட்டா வின் சட்ட போராட்டம் தான் .எனவே கண்டிப்பாக நமக்கு சட்ட போராட்டத்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்பதை அனைவருக்கும் தெருவித்து கொள்கிறேன் .

                                                         டாட்டா  கிப்சன்            
                                                     .9025054081//9443464081..


அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாற்றம்

அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 14 ஆசிரியர்கள், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இருக்க வேண்டும்; சில பள்ளிகளில், குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள நிலையில், அதிக ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
சில பள்ளிகளில், அதிக மாணவர் இருந்தும், போதிய ஆசிரியர் இல்லாமல், கல்வித்தரம் பாதிக்கிறது.அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு நடத்தி, ஆசிரியர் பற்றாக்குறை பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் மூன்று, மேல்நிலைப்பள்ளிகள், 18 என, மொத்தம், 21 பள்ளிகள் உள்ளன. கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில், கூடுதலாக இருந்த, 14 ஆசிரியர்கள், பற்றாக்குறையான பணியிடங்களுக்கு, இடமாறுதல் செய்யப்பட்டனர்.
*** கல்வி இயக்கக தெளிவுரைகளுடன்
உள்ள பதிவு...

தொடக்கக் கல்வித் துறை இடைநிலை ஆசிரியர்களின்
பி.எட்., கற்பித்தல் பயிற்சிக்கு---
ஊதியமில்லா விடுப்பு எனும் நிலையை மாற்றி
முழு ஊதியம் வழங்கிட வேண்டும். ***

** அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 180 நாட்கள்
சொந்த அலுவலின் பேரிலான ஈட்டா விடுப்பு
( UEL PA )உள்ளது. **

* இந்த 180 நாட்களை ஓய்வு பெறும் போது ஒப்புவிப்பு
செய்து 180 நாட்களுக்கு அரைச் சம்பளம் வீதம்
90 நாட்களுக்கு ஊதியம் பெறலாம். *

** ஆசிரியர்கள் இந்த 180 நாட்களில்
சுமார் 30 நாட்கள் கற்பித்தல் பயிற்சிக்கு சென்றால்,
நாம் எடுக்கும் 30 நாள் UEL PA விடுப்புக்கு,
15 நாள் ஊதியம் கிடைக்கும். **

** நம்முடைய இருப்பு 180-30=150 ஆக குறையும்.
எனவே ஓய்வு பெறும் போது, 75 நாட்களுக்கு
மட்டுமே ஊதியம் பெற முடியும்.
கற்பித்தல் காலம்-15 நாள் ஊதியம்+
ஓய்வு சமயம். -75 நாள் ஊதியம்=
மொத்தம். -90 நாள் ஊதியம் **

* கற்பித்தல் பயிற்சிக்கு LLP எடுத்து விட்டால்,ஓய்வு சமயம்
180 நாள் UEL PA க்குரிய 90 நாள் ஊதியம் பெறலாம். *

** எனவே கூட்டிக் கழித்துப் பாருங்களேன்...
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு...
அப்போ...அந்த ஒரு மாத ஊதியம்....?
Loss of pay தான். **

* எனவே நாம் பெறுவது அரைச் சம்பளம் அல்ல.
நமக்கு ஒரு மாத ஊதியம் இழப்பு ஏற்படுகிறது
என்பதை நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம். *

**** பள்ளிக் கல்வித்துறை
அரசுக் கடித எண்.48269/எம்2/94 நாள்.28.12.95

பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
3849/சி32/96 நாள்.3.2.96

ஆகியவற்றின் படி
அரசு உயர்நிலை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள்,தமிழாசிரியர்கள்,
உடற்கல்வி ஆசிரியர்கள்,தொழிலாசிரியர்கள்
ஆகியோர்கட்கு

பி.எட்., கற்பித்தல் பயிற்சிக்கு முழு ஊதியம்
வழங்க உத்தரவிடப்பட்டது. ****

*** எனவே தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும்
கற்பித்தல் பயிற்சிக்கு
LLP - Leave On Loss Of Pay என்பதை மாற்றி
முழு ஊதியம் பெற்றுத் தர வேண்டும். ***

👆 * மேற்காணும் செயல்முறைகளின் படி...
ஓய்வு நேரம் பயிற்சி எடுக்கலாம்.
பிஎட்., கற்பித்தல் பயிற்சி வகுப்பு எடுத்தல் காரணமாக
1.பள்ளி பாடநேரம் பாதிக்கப் படக் கூடாது.
2.பாடக் குறிப்பு எழுதுவது பாதிக்கக் கூடாது
3.பயிற்சி ஏடுகள் சரிபார்க்க வேண்டும்
4.தேர்வுகள் வைக்க வேண்டும்
5.கற்பித்தல் பாதிக்கக் கூடாது
என்ற நிபந்தனையின் பேரில் பள்ளிக் கல்வித்துறையில்
முழு ஊதியம் வழங்கப்படுகிறது. *

** தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்
படிக்க அனுமதி பெறும் போது...
மேலே காணும் இது போன்ற நிபந்தனைகளுடன்
அனுமதி தரப்படுகிறது. **

* தொடக்கப் பள்ளிகளில் 1-5 வகுப்புகளுக்கு
வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இல்லை.
பெரும்பாலான பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும்,
சில பள்ளிகள் மூன்று ஆசிரியர் பள்ளிகளாகவும்,
சில பள்ளிகள் மூன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர் உள்ள
பள்ளிகளாகவும் உள்ளன. *

* எனவே தொடக்கக் கல்வித் துறையில்...
விடுப்பு முடிந்து வந்து மீண்டும்
சம்பந்தப்பட்ட இடைநிலை ஆசிரியர் தான்
பாடங்களை நடத்தணும்,
பாட நோட்டுக்களையும் திருத்தணும்,
தேர்வும் வைக்க வேண்டும்,
பாடம் சார்ந்த பதிவேடுகளை
சம்பந்தப்பட்ட விடுப்பு ஆசிரியர் தான்
பராமரிக்க வேண்டும். *

* எனவே முழு பணி செய்தாலும் ஊதியமில்லை. *

** நடுநிலைப் பள்ளியில் பணிசெய்து, அங்கேயே
கற்பித்தல் பயிற்சி செய்தால் முழு ஊதியம்
தரப்படுகிறது.

உயர்நிலை/மேல்நிலைப் பள்ளியில் பணி செய்து
அங்கேயே கற்பித்தல் பயிற்சி செய்தால் முழு ஊதியம்
தரப்படுகிறது. **

* ஆனால் தொடக்கப் பள்ளி/நடுநிலைப் பள்ளியில்
பணிசெய்து , உயர்நிலைப் பள்ளியில் கற்பித்தல் செய்தால்
முழு ஊதியம் தரப்படுவதில்லை. *

*** Primary Teacher க்கு
Full work உண்டு.
But
No pay
For
Teaching practice... ***

** ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர்கட்கு ஊதியம் வழங்க
அந்த கணக்குத் தலைப்பின் கீழ் அரசால் நிதி
விடுவிக்கப்படுகிறது.

எனவே நாம் கற்பித்தல் பயிற்சிக்கு செல்லும் போது,
வழங்கப்பட்ட ஊதியம் போக, எஞ்சிய ஊதியம்
அரசிடம் ஒப்புவிப்பு செய்யப்படுகிறது.

எனவே இது நிதிச்சுமை சாராத கோரிக்கை. **
**** பள்ளிக் கல்வித் துறை,நிதித் துறை,
பணியாளர் & நிர்வாக சீர்திருத்தத் துறைகளின்
பார்வைக்கு எடுத்துச் சென்று,
தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கட்கு
கற்பித்தல் பயிற்சிக்கு முழு ஊதியம் பெற
நடவடிக்கை எடுக்க வேண்டும். *** .

ஓய்வூதியம் என்பது சலுகையா சிந்திப்பீர்...........

ஓய்வூதியம் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்தில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
ஆரம்பத்தில் 1891ல் டென்மார்க்கும், 1898ல் நியூசிலாந்தும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தின.1917க்குப் பிறகு, சோவியத் ஒன்றியம்தான் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் போன்ற உரிமைகளை உலகில் முதன் முதலில் சட்டப்பூர்வமாக அறிவித்து அமல்படுத்தியது.
இத்தகைய சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் உலகில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் புதிய உத்வேகத்தை அளித்தன. சர்வதேச சங்கமும், அதன் துணை அமைப்பான தொழிலாளர் ஸ்தாபனமும் உழைப்பாளி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான வரைமுறைகளை வகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒருவர் வயது முதிர்வின் காரணமாகப் பணி ஓய்வுபெறும்போது எஞ்சிய கால வாழ்வாதாரத்திற்காக வைப்பு நிதி திட்டம் உருவாகியது.இத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள் தனது பங்களிப்பை செலுத்துவதோடு நிர்வாகமும் தனது பங்களிப்பை செலுத்த வேண்டும்.
1930 களில் உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எஸ்.எம். கெய்ன்ஸி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி மக்களின் வாங்கும் சத்தியைப் பெருக்க அரசுத்துறையில் நலத்திட்டங்களை உருவாக்கி வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டங்களை உருவாக்கிய அரசுகள் சேமநல அரசுகள் என அழைக்கப்பட்டன.
அந்த அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு பங்களிப்பு வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தின. இத்திட்டத்திற்கு அரசுகள் அளிக்க வேண்டிய பங்குத்தொகை மாதம்தோறும் அளிக்காமல் அந்த நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு மடைமாற்றப்பட்டது.
இந்திய நாட்டில் முதலாவது ஊதியக் குழுவின் விளைவாக தளர்த்தப்பட்ட ஓய்வூதிய விதிகள் 1950 ஏப்ரல் 17ம்தேதி அமல்படுத்தப்பட்டன. அதன்படி, பொது வருங்கால சேமிப்பு நிதி உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் மத்திய-மாநில அரசுகள் ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும் தாங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை ஓய்வூதியமாக வழங்கத் துவங்கின. பின்னர், ஊழியர்களிடம் எவ்விதமான பங்களிப்பும் பெறாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வூதியச் சலுகை வழங்குவதில் முன்னர், பின்னர் என வேறுபடுத்தி பாரபட்சம் காட்டத்துவங்கியது மத்திய அரசு. அதனை எதிர்த்து டி.எஸ்.நகரா மற்றும் இதரர் பதிவு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் 17.12.1982ல் அளித்த தீர்ப்பு நாளையே ஓய்வூதியர்களின் ‘உரிமை’ தினமாக கொண்டாட படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு மகா சாசனமாகும். ஓய்வூதியம் என்பது கவுரவமாக வாழும் உரிமையின் உத்தரவாதம் என மனித உரிமை ஆணையமும் தீர்ப்பு வழங்கி யுள்ளது.
பணி ஓய்வு பெற்ற பிறகு கவுரவ மாகவும் சுதந்திரமாகவும் வாழ உத்தர வாதம் அளிக்க வேண்டும். ஒருவர் தனது வாழ்வில் முதுமைத் தளர்ச்சியினையும், வறுமையையும் எதிர்த்திட வழங்கப் படுவதுதான் ஓய்வூதியம்.
எனவே, ஓய்வூதியம் என்பது கருணைத் தொகையல்ல. அது சட்டரீதியானது. இது நிர்வாக விருப்பு வெறுப்புகளாலோ அல்லது கருணை கொண்டோ வழங்கப் படுவதில்லை.
பென்சன் திட்டமே பென்சன் நிதியிலிருந்து வழங்கப்படுவதில்லை. பென்சன் நிதி என்று ஒன்று இல்லை. ஓய்வூதியம் என்பது ஒரு செலவினம் என நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும். பென்சன் என்பது மத்திய -மாநில அரசுகள் ஏற்றுக்கொண்ட பொறுப்பாகும். அதை வழங்கவேண்டியது கடமையாகும். மத்திய - மாநில அரசுகள், தங்களுக்கு ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கத்தான் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள் ளன.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு தமிழகத்தில் 1.4.2003லிருந்தும் 1.1.2004 ல் மத்திய அரசு பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கும் புகுத்தப்பட்டது.
இதற்கிடையில், 6வது ஊதியக்குழு ஓய்வூதியம் பற்றி ஆய்வு நடத்த டாக்டர் காயத்திரி குழுவை அமைத்தது. அக்குழு ஓய்வூதியத்தில் 54.75 விழுக்காடு பாதுகாப்பு துறையினருக்கே செலவு செய்யப்படுகி றது எனவும், எதிர்காலத்தில் ஊதியம், ஓய்வூதியத்திற்கான செலவினம் குறையும் எனவும் அறிக்கை அளித்தது.
இந்த உண்மைகளை அறிந்த அரசுகள், புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி 30, 35 ஆண்டு காலம் ஊழியர்களின் சேமிப்பையும், அரசின் நிதியையும் பங்குச் சந்தை மூலதனமாக உலக நிதி நிறுவனங் களின் ஆணைகளுக்கேற்ப உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு வாரி வழங்குகிறது.அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம், ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.
அதன்படி அமைக்கப்பட்டுள்ள 7வது ஊதியக்குழு விரைவில் பரிந்துரையை அறிவிக்க உள்ளது. அதற்குள், “ஏழைகளைப் பார், அவர்களது வருவாயை ஒப்பிட்டு பார்த்து பரிந்துரை செய்ய வேண்டும்” என ஊடகங்கள் முழங்குகின்றன.
ஆனால், பெரு முதலாளிகளுக்கு வரிச் சலுகை, வாராக் கடன் தள்ளுபடி செய்யும்போது இந்த ஊடகங்கள் வாய் மூடி மவுனம் காக்கின்றன. போதாக் குறைக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் வயிற்றெரிச்சலை கொட்டியுள்ளார்.
புதிய பொருளாதாரக்கொள்கைகளை அமல்படுத்தும் உலக நாடுகள் அனைத்துமே முதலில் ஓய்வூதியத்தை வெட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளன.
ஆரம்பத்தில் சிலி துவக்கி வைத்தது. அடுத்து அர்ஜெண்டினாவிலும் அமல்படுத்தப்பட்டது. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியபோது அந்நாடுகளில் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட மிகப்பெரும் வேலை நிறுத்தங்கள் நடைபெற்று நாடே ஸ்தம்பித்தன.
லத்தீன் அமெரிக்காவில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது.இந்தியா ஜனநாயக நாடு. நாட்டின் வளர்ச்சி மட்டுமல்ல நாட்டின் சமூகப் பாதுகாப்பு எல்லையும் விரிந்துகொண்டே செல்கிறது.
நமது அரசு சமதர்ம சோசலிச பாதையில் பீடு நடைபோடும் அரசாகும். சமூக நலக் குடியரசாக பாடுபட்டுக்
. இதைத்தான் இந்திய அரசியல்அமைப்பு சட்டம் பிரகடனப்படுத்தி யுள்ளது. நம் நாட்டில் தொடர்ந்து விலை வாசி உயர்வால் ஏற்படும் தடுமாற்றங்கள். பணவீக்கத்தால் ஏற்படும் ஊதியக் குறைவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இவைகளை அறிந்த நம் நாட்டு பொருளாதார நிபுணர்களில் பெரும்பாலோனர் பொருளாதார சமத்துவம் பற்றியோ, வருவாய் சமப் பங்கீடு குறித்தோ இந்திய அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள சமத்துவ நியதியையோ சிந்திப்பதில்லை. மாறாக, ஓய்வூதியம் வழங்குவதால் அரசு திவாலாகும் என முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
--------------------நன்றி---------------டாட்டா கிப்சன் ........