PAGEVIEWERS

திருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் பங்கு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

பணிப்பதிவேட்டில் வாரிசுதாரராக இல்லாத நிலையிலும் அரசுஊழியர்களின் இறுதி பணப் பலன்களில் அவரது தாயாருக்கு பங்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், குமுழியேந்தலை சேர்ந்த எம்.முத்துலெட்சுமி (72) உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:


எனக்கு 5 மகன்கள், 3 மகள்கள். 8 குழந்தைகள் இருந்தும் என்னை யாரும் கவனிக்கவில்லை. என் மகன் கணேசன் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி யூனியனில் ஊரக நல அலுவலராக பணிபுரிந்தார். அவர் 2013-ல் இறந்தார். கணேசனுக்கும், அவரது மனைவி அன்புக்கரசிக்கும் பிரச்சினை இருந்தது. கணவனிடம் ஜீவனாம்சம் கோரி தேவகோட்டை நீதிமன்றத்தில் அன்புக்கரசி வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.
(TATA)

மாநில செயற்குழு கூட்ட அழைப்பு - 2016.
நாள் : 09.07.2016.
இடம் : ஹோட்டல்
அருண் மினி ஹால்.
திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில்.

நேரம் : மதியம் 2 மணி
அனைத்து மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். மாவட்டப் பொறுப்பாளர்கள் வட்டாரக் கிளை பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
....2016-- 17. கல்வி ஆண்டிற்கான உறுப்பினர் சந்தா புத்தகத்தின் அடிகட்டையுடன் மாநில இணைப்பு கட்டண பங்கு தொகை கொண்டு வரவும்..



அன்புடன்
S.C. கிப்சன்
பொது செயலாளர்.
TATA.

வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1:1என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டதில் அனைத்து சங்கங்களிலும் உள்ள வரலாறு பாட ஆசிரியர்கள் சார்பாக அவர்களிடம் இருந்து பெறப்பட்ட அன்பளிப்பு மூலம் போடப்பட்டு வெற்றி பெற்ற வழக்கு விவரம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வரலாறு பாடத்திற்கு பி.ஜி.Promotion வழங்கும் போது 1:1என வழங்க வேண்டும் என தொடுத்தவழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு விவரம்
=============
G.O.152ல் ஆங்கில பட்டதாரி ஆசியர்களுக்கு வழங்கியது போல் வரலாறு ஆசிரியர்களும் 1:1என்ற அடிப்படையில் பதவிஉயர்வு வழங்கவேண்டும்.


1:1என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி நடைமுறைபடுத்தி 70 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் தகவல் அளிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கபட்டுள்ளது.
 
 

இனி 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு

அனைவரும் கட்டாயத் தேர்ச்சி திட்டம் இனி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது கட்டாயத் தேர்ச்சி திட்டம் எட்டாம் வகுப்பு வரை செயல்படுத்தப்படுகிறது. எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெறச் செய்வதால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய வரைவு கல்விக் கொள்கையின் ஒரு பகுதியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக இந்த வரைவு கொள்கையின் ஒரு பகுதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு கருத்துக்கள்,

பள்ளிக்கல்வி - 2016 நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்தோர் பட்டியல் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

அரசு ஊழியர்கள் மீது லஞ்சப் புகார் குறித்த தமிழக அரசின் அரசாணை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக அரசு ஊழியர்கள் மீதான லஞ்சப் புகார் குறித்த தமிழக அரசின் புதிய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


அரசு ஊழியர்கள் மீது ஊழல் புகார் வந்தால் அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து புகழேந்தி தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தமிழக அரசின் புதிய அரசாணையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
7 வது ஊதியக் குழு பரிந்துரை பற்றிய செய்தி தொகுப்பு...

============================
7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.தர ஊதிய நடைமுறை அறவே கைவிடப்பட்டுள்ளது.குழு காப்பீட்டு நிதி வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
01.01.2016 முதல் பரிந்துரையை அமல்படுத்தி ஊதிய உயர்வு நிலுவைத் தொகையையும் ரொக்கமாக வழங்க அறிவித்துள்ளது.

ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு பற்றிய கணக்கீடுகள்
தற்போது பணியில் இருக்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக அவரவர் பெறும் அடிப்படை ஊதியத்தில் (Basic pay+Grade pay+pp) சேர்த்து 32 % த்தை பெருக்கினால் வருகிற தொகையினை புதிய ஊதியமாக வழங்கிட மத்திய அமைச்சரவை முடிவு செய்து அறிவித்துள்ளது. இந்த உயர்வு தற்போது அவரவர் பெறும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி 125 % சேர்த்து கணக்கிடும் போது 14.2 % சத உயர்வு வரும். ஒவ்வொருவரின் 01.01.2016ல் திருத்தப்பட்ட அடிப்படை ஊதியத்தினை கணக்கிட அவரவர் 01.01.2016ல் பெற்று வரும் அடிப்படை ஊதியத்தினை 2.57 % ஆல் பெருக்கினாலும் அதே உயர்வுதான் வரும்.அவ்வாறு கணக்கிடும் போது ஊதியம் குறைவாக இருந்தால் 7 வது ஊதியக் குழுவில் ஏற்பு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள தொகை இடைநிலை ஆசிரியர்களுக்கு
ரூ 29200 (entry pay) ஊதியமாகும்.பணியில் மூத்தவருக்கு ஊதியம் குறைந்தாலும் ரூ 29200 லிருந்து ஊதியம் நிர்ணயம் செய்து சர்வீஸ் வெயிட்டேஜ் முறையில் கணக்கிட்டு ஊதியம் நிர்ணயம் செய்யும் பழைய முறையே அமல்படுத்துவார்கள் என அறிகிறோம்.ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் மேற்காணும் நடைமுறையே பொருந்தும்.

குறைந்தபட்ச ஊதியம் 26,000 நிர்ணயம் செயதிட சங்கங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியது.மத்திய அரசு 18,000 மட்டுமே என்று அறிவித்துள்ளது. அடிபிறழாமல் ஊதியக் குழு பரிந்துரையை ஏற்பு செய்ய 6 மாத காலம் அவகாசம் எடுத்துக்கொண்டது தேவையில்லை. ஆனால் மத்திய அரசு 6 மாதத்திற்குள் வழங்கியுள்ளதாக பெருமிதம் கொள்வதை உணர முடிகிறது.
(நாளேடுகளில் 23.5 % ஊதிய உயர்வு என்பது பொருத்தமில்லாத செய்தியாகும்.23.5 % ஊதிய உயர்வு என்பது பெருநகரங்களில் பணிபுரிவோர் பெறுகின்ற இதர படிகள் சேர்த்து  ஆகும் .
PG VACANCY LIST in kanyakumari DT as on 31.05.2016.
TAMIL- 11
ENGLISH -2
SLB Nagercoil
Thenkaipattinam
PHYSICS - 1
kottaram
CHEMISTRY -1
Nattalam
MATHS-2
Munchirai
Vallankumaran vilai
BOTANY-4
Kollankodu
Thenkaipattinam
Kaattathurai
Agastheeswaram
ZOOLOGY-3
Kollankodu
SLP Nagercoil
Vadaseri
HISTORY-3
KDVP G Ngercoil
Marthandam B
Kurathiyarai
POLITICAL SCIENCE -1
Thackeray
ECONOMICS-4
Munchirai
Vilavankodu
Edalakkudi
KDVP G Nagercoil
PHYSICAL DIRECTOR -1
Marthandam
RTI ல் இவையெல்லாம் கேட்டால் தகவல் தர தேவையில்லை!
Right to information act 2005
R TI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள் :
| .துறை Website ல் உள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை
2. கட்டணம் செலுத்தி பெறக்கூடிய சேவை எனில் RTIல் தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை

3. கோப்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய காலம் முடிந்து, / அழிக்கப்பட்டிருப்பின் தெரிவிக்க வேண்டியதில்லை
4. கேள்விகளாய் இருந்தால் பதில் தெரிவிக்க வேண்டியதில்லை
5 கேட்ட தகவலுக்கான கோப்பு இருந்தால் நகலாக வழங்கலாம்.
6. நாமாக விளக்க மோ நாம் அறிந்தவற்றையோ கூறக் கூடாது.
7. தெளிவுரை, விளக்கம், மொழிபெயர்ப்பு செய்து தர வேண்டியதில்லை.
8. கோரிக்கை, புகார், யூகம் அடிப்படையிலான கேள்விகளுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை.
மனுதாரர் தன் மீதான புகார் குறித்து நகல் கேட்டால் கொடுக்கலாம்.
9. மனுதாரர் முன்பு கொடுத்த சாதாரண மனுவைக் கேட்டால் தெரிவிக்க வேண்டியதில்லை.
10. மனுதாரர் கேட்கும் படிவத்தில் தர வேண்டியதில்லை
11. பல்வேறு கோப்புகளை தொகுத்து தர வேண்டியிருப்பின், விதிப்படி தொகுத்து தர வேண்டியதில்லை.
12. ஏன் எப்படி, எங்கு எதனடிப்படையில் போன்ற கேள்விகளுக்கும், ஆம் எனில் பதில் ,இல்லை எனில் பதில் போன்ற உபகேள்விகளுக்கும் பதில் தர வேண்டியதில்லை
13. சாதாரண திட்டங்களில் தந்த மனு மீதான நடவடிக்கை குறித்து கேட்க முடியாது
14. மனுதாரருக்காக வேறொருவர் கேட்க கூடாது (வக்கீல் தன் கட்சிக்காரருக்காக)
15. மூன்றாம் நபர் குறித்த விபரம் , நமது அலுவலக பணியாளர் பற்றிய எந்த விபரமும் தர வேண்டியதில்லை.(சம்பளம், கிப்ட், IT, memo, ஒழுங்கு நடவடிக்கை)
மனைவி கூட மூன்றாம் நபர்
16. பட்டா ட்ரான்ஸ்பர், சிட்டா போன்ற விபரங்கள் தெரிவிக்க வேண்டியதில்லை
17.SR Copy தர வேண்டியதில்லை
18. பணி நியமனம் தொடர்பான நகல் தர வேண்டியதில்லை
19. பணியாளரது தனிப்பட்ட விபரங்கள் (அ) அலுவலக தொடர்பாக வரப் பெற்ற விண்ணப்பங்களில் உள்ள விண்ணப்பதாரரது விபரம், தெரிவிக்க வேண்டியதில்லை
20. வேண்டிய விபரங்களைப் பெற்று தொகுத்து அனுப்ப வேண்டியதில்லை
21. மிக அதிக அளவு விபரம் கோரப்பட்டால், தெரிவிக்க வேண்டியதில்லை
22. SR நகல் வழங்க வேண்டியதில்லை.
பொது நலன் எனக் கருதினால் முதல் பக்கம் மட்டும் தரலாம்
23. ஒரே மாதிரியான தகவல்களை திரும்ப திரும்ப கேட்க கூடாது
24. நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள போது, மனுதாரர் RTIல் தகவல் பெற முடியாது 
: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியை மனமொத்த மாறுதலில் வாடிப்பட்டி அலங்காநல்லுர் மதுரை மேற்கு பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளதால் தேவைப்படும் இடைநிலை ஆசிரியர் தொடர்பு கொள்ளவும்.9842108287
[7/1, 1:42 PM] +91 80128 09341: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டாங்கொளத்துர் ஒன்றியத்தில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியை விருப்ப மாறுதலில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் ,திருமங்கலம்,மதுரை கிழக்கு,வட்டாரங்களில் பணிபுரிய விருப்பம் தெரிவித்து உள்ளார் விருப்பம் உடைய ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும் .9842108287
பிடியாணை இன்றி கைது செய்ய கூடிய குற்றங்கள், பிடியாணைவுடன் கைது செய்ய கூடிய குற்றங்கள் என்னென்ன என்பதை இந்திய தண்டனை சட்டத்தில் தெரிந்துகொள்வது இவ்வாறு தான்.
அதாவது, இரண்டு வருடங்களுக்கு மேல் தண்டனை பெற கூடிய குற்றங்களை ஒரு நபர் செய்து இருந்தால்,அந்த நபரை பிடியாணையின்றி கைது செய்யலாம்.
அதே மாதிரி ஒரு நபர் இரண்டு வருடங்களுக்குள் தண்டனை பெற கூடிய குற்றங்களை செய்து இருந்தால் ,அந்த நபரை பிடியாணைவுடன் தான் கைது செய்ய வேண்டும்.



இவற்றை பற்றி குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 2(22) விளக்குகின்றது.
மேற்படி இந்திய தண்டனை சட்டத்தில் பிணையில் விடுவிக்கக்கூடிய குற்றங்கள் மற்றும் பிணையில் விடுவிக்கக்கூடாத குற்றங்கள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.

பிணையில் விட கூடிய குற்றங்களுக்கு எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் புலன் விசாரணை செய்து ,விசாரணைக்கு பின் எப்.ஐ.ஆர் தேவை என்றால் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்.

பிணையில் விட கூடாத குற்றங்களுக்கு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்படும்.
லோக் ஆயுக்தா தற்போது நடைமுறையில் உள்ள மாநிலங்களாக 

1.மகாராஷ்டிரா(1971),
 2.பீகார்(1973), 
3.ராஜஸ்தான்(1973), 4.உத்திரபிரதேசம்(1975),
 5.மத்திய பிரதேசம்(1981),
 6.ஆந்திரா(1983), 
7.ஹிமாச்சல் பிரதேசம்(1983), 8.கர்நாடகா(1985),
 9.அஸ்ஸாம்(1986),
10. குஜராத்(1986),
11. கேரளா(1988), 
12.பஞ்சாப்(1985),
13. டெல்லி(1996),
14. ஹரியான(1996)
 ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன.
Flash News:7ஆவது ஊதியக்குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.இனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000.
தில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது.ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்தது.

இதையடுத்து, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இன்று புது தில்லியில்நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.7-ஆவது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் அடிப்படையில், அதன் பரிந்துரைகள் சென்ற ஜனவரி 1-ஆம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும். இதனால், 50 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 58 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.7வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதால், மத்தியஅரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.7 சதவீதம்.7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியில் சேரும் அறிமுக நிலை பணியாளருக்கான மாத ஊதியம் தற்போதைய ரூ.7,000-லிருந்து, ரூ.18,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், அமைச்சரவை செயலரின் அதிகபட்ச மாத ஊதியம் தற்போதைய ரூ.90,000-லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் 6 வது ஊதியகுழு தவறுகளை சரி செய்திட இந்திய உச்ச நீதிமன்றத்தில் 158 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தமிழ்நாட்டில் தற்போது 7 வது ஊதிய குழு அமைக்க சாத்தியம் இல்லை. டாடா சங்க ஊதிய வழக்குபடி 6 ஊதிய குழு முறன்பாட்டை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மீண்டும் குழு அமைத்து சரி செய்த பின் தான் 7வது ஊதிய குழு ஊதியம் நிர்னயம் செய்ய முடியும். எனவே இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் 1.1.2006 முதல் 9300+4200 ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தான் இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் நிர்னயம் செய்யப்படும்....டாடா கிப்ஸன்

கல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ.,வின் இணை இயக்குனர் சசிகலா, தொடக்க கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு பணியாற்றும், இணை இயக்குனர் செல்வராஜ், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் வர்மா, எஸ்.எஸ்.ஏ.,வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு  அரசு  ஊழியர்  அடிப்படை விதிகள் 


             Tn   govt    F.R           Total    pages    328

                           Download   Here   F,R
      தமிழ்நாடு  அரசு ஊழியர் 

                     நடத்தை  விதிகள் -1973

                                          42  Pages



          DOWNLOAD  HERE  

பழைய முறையில் பென்சன் கொடுப்பது பற்றி தி.மு.க. உறுப்பினர் ஐ.பெரியசாமி கேட்ட கேள்விக்கு மாண்பு மிகு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில்

பழைய முறையில் பென்சன் கொடுப்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் .பன்னீர்செல்வம் தெரிவித்தார்*
சென்னை
சட்டசபையில் இன்று தி.மு.. உறுப்பினர் .பெரியசாமி பேசும்போது, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் .பன்னீர் செல்வம் பேசியதாவது:-

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் முறையை அமல்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கைகள் வந்தன. இதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் 22.2.2016 அன்றே வல்லுனர் குழு அமைக்க உத்தரவிட்டார். அதன்படி அமைக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அந்த குழுவின் பரிந்துரை அரசுக்கு கிடைக்க பெற்றவுடன் பழைய முறையில் ஓய்வூதியம் வழங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.



இடைநிலை ஆசிரியரே சிந்தனை செய்வீர்
2016 ஆண்டு முதல் நடைமுறை படுத்த இருக்கும் 7. வது ஊதியகுழுவில் விழப்போகுது மரண அடி .
நாம் தற்போது உள்ள பாதிப்பு நீங்க எந்த அளவு போராடி உள்ளோம் .
டாடா நடத்தி வரும் சட்ட போராட்டம் எந்த அளவு ஆதரவு கொடுத்து உள்ளோம்
மனதை தொட்டு உணர்ந்து உண்மை நிலை தெளிவாக அறிவோம் .
வரும் ஊதிய குழு வில் தற்போது பெறும் ஊதியம் +அகவிலைபடிவி --புதிய ஊதிய மாக நிர்ணயம் செய்ய படும்.
இதில் அடுத்த ஊதிய குழுவில் 2800₹2400 தர ஊதிய கட்டுகள் ஒன்றாக இணைக்க பட உள்ளன என செய்திகள் வெளிவந்தது உள்ளன .ஏற்கனவே நாம் இளநிலை உதவியாளர் பணியிடங்களை காரணம் காட்டி தமிழக அரசு நமது ஊதியத்தை ஏமாற்றம் செய்து வருகிறது .இந்த நிலை தொடர்ந்தால் ஏழாம் ஊதிய. குழுவில் நமக்கு மாபெரும் ஊதிய இழப்புகள் ஏற்படும் .தயவுசெய்து உணமை உணர்ந்து ஊதிய இழப்புகள் நீங்க டாட்டா சங்கத்திற்கு ஒத்தாசை தாருங்கள் . இனி வருங்காலங்களில் .

சட்ட போராட்டம் டாடாவின் தலைமையில் முன்னெடுத்து செல்ல முழுவதும் ஆதரவு வழங்க வேண்டுகிறேன் -----+டாட்டா கிப்சன் .
NELLAI  AEEO .FREE  BOOK   SALE  .....