PAGEVIEWERS

சென்னையில் பள்ளி நேரத்தை மாற்ற சென்னை போக்குவரத்து துறை செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சென்னை கந்தன்சாவடியில் பஸ் மீது பின்னால் வந்த லாரி மோதியதில், படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானார்கள். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று சென்னை போக்குவரத்து துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னையில் பள்ளி நேரத்தை காலை 7. 30 மணிக்கும், கல்லூரி நேரத்தை காலை 8 மணிக்கு துவக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 26 ம் தேதி முதல் கூடுதலாக 264 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் விபத்துகளை தடுக்க மாணவர்கள், போக்குவரத்து துறைஅதிகாரிகள் , போலீசார் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 1824 பஸ்கள் கதவுகள் இல்லாமல் உள்ளன என கூறினார்

No comments:

Post a Comment