PAGEVIEWERS

Direct recruitment of Graduate Assistant (Backlog Vacancies) through Employment Registration seniority for the year 2010 – 2011

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006
Direct recruitment of Graduate Assistant (Backlog Vacancies) through Employment Registration seniority for the year 2010 – 2011
RELEASE OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERFICATION
The Teachers Recruitment Board is now releasing the details of the candidates who are called for the said certificate verification. The list is being released to help the right candidates, who are not in receipt of the intimation letter sent by the Board and also having their name in this list may attend the scheduled date at Teachers Recruitment Board by taking a printout from this website. This list is released based on the details received from the director of employment and Training. If any discrepancy found in list, All Queries / Clarifications relating to Employment Seniority and other issues may be got from the Director of Employment and Training, Guindy, Chennai-600 032. Ph: 22501002 / 22501006 / 22500911 / 22500900  Website: tnvelaivaaippu.gov.in
This list is being released to help the right candidates who are not in receipt of the C.V. call letter sent by this Board. The details of the candidates may be verified by giving their Employment number in the following format.
Example for Employment No: 011991F12345
292001M00123
In the format the first 2 digits represents the District code number(01) which are given here under. The second is the year of registration (1991) which is a 4 digit numbers represents their year of registration, next is the sex of the candidate ie (Male/ Female) and the last number is a 5 digit number which was written in the Employment card, this should be 5 digit number, necessary zeros should be used as prefix if it is less than 5 digit.
DISTRICT CODES
District Code No.
District
 
District Code No.
District
01
KANYAKUMARI
 
17
KARUR
02
TIRUNELVELI
 
18
PERAMBALUR
03
TUTICORIN
 
19
TIRUCHIRAPALLI
04
RAMANATHAPURAM
 
20
NAGAPATTINAM
05
SIVAGANGAI
 
21
THIRUVARUR
06
VIRUDHUNAGAR
 
22
THANJAVUR
07
THENI
 
23
VILUPPURAM
08
MADURAI
 
24
CUDDALORE
09
DINDIGUL
 
25
THIRUVANNAMALAI
10
NILGIRIS
 
26
VELLORE
11
COIMBATORE
 
27
KANCHEEPURAM
12
ERODE
 
28
THIRUVALLUR
13
SALEM
 
29
CHENNAI
14
NAMAKKAL
 
30
KRISHNAGIRI
15
DHARMAPURI
 
31
ARIYALUR
16
PUDUKOTTAI
 
32
TIRUPUR
Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.

 
Dated: 19-06-2012
 

தொடக்கக் கல்வி - முப்பருவ மற்றும் முழுமையான தொடர் மதிப்பீட்டு முறைக்கான முதல் பருவ பாடத்திட்டம் வகுப்பு I முதல் VIII வரை

தற்போது முதல் மூன்று வகுப்புகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது மீதி வகுப்புகளுக்கான பாடத்திட்டம் இன்னும் ஒரு சில நிமிடங்களில் வெளியிடப்படும்.

1,040 மையங்களில் டி.இ.டி. தேர்வு: ஹால் டிக்கெட் அனுப்பும் பணி துவக்கம்.

ஜூலை 12ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு, 1,040 மையங்களில் நடக்கிறது. இதற்கான, "ஹால் டிக்கெட்&' அனுப்பும் பணி, நேற்று முதல் துவங்கியது.
அரசு பள்ளிகள், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, டி.ஆர்.பி., (தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்) செய்து வருகிறது. கடந்த காலங்களில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு நடந்து வந்த நிலை மாறி, ஓராண்டாக, தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

பொதுவாக, 100, 200 மையங்களில் தான் தேர்வுகள் நடக்கும். ஆனால், டி.இ.டி., தேர்வுக்கு, 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால், அதிகபட்சமாக, 1,040 மையங்களில் தேர்வு நடக்க இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும், 400 முதல் 500 பேர் வரை தேர்வெழுதுவர்; ஒரு அறையில் 20 பேர் வரை எழுதுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியர்), 3 லட்சத்து, 4 ஆயிரத்து, 248 பேரும்; இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வை, 3 லட்சத்து, 51 ஆயிரத்து, 836 பேர் என, மொத்தம், 6 லட்சத்து, 56 ஆயிரத்து, 84 பேர் எழுதுகின்றனர். ஹால் டிக்கெட் தேர்வர்களுக்கு, நேற்று முதல் ஹால் டிக்கெட் அனுப்பப்படுகிறது.
முதலில், தென் மாவட்டங்களுக்கும், கடைசியாக, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அனுப்பப்படும். 22ம் தேதிக்குள், அனைவருக்கும், ஹால் டிக்கெட் அனுப்பப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹால் டிக்கெட் பின்புறம், விண்ணப்பத்தில், மொழிப்பாடத்தை குறிப்பிடாமல் இருந்தால், தேர்வு அறையில் தேர்வு செய்து, ஓ.எம்.ஆர்., ஷீட்டில் பதிவு செய்ய வேண்டும். இரண்டாம் தாள் தேர்வில், விருப்பப் பாடத்தை மாற்றி எழுதியிருந்தால், விடைத்தாளில் சரியாக எழுத வேண்டும் போன்ற முக்கிய அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட, அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் அமைப்புகள் நடத்தும் அனைத்து தேர்வுகளும், பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நடக்கும். ஆனால், டி.இ.டி., தேர்வு, வியாழக்கிழமை நடக்கிறது.
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறும் போது, ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களில் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பல்வேறு தேர்வுகளை நடத்த, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, வேறு வழியின்றி, வியாழக்கிழமை நடத்துகிறோம். ஆகஸ்டில் நடத்தினால், மேலும் கால தாமதம் ஏற்படும்&' என்றனர்.
டி.இ.டி., தேர்வுக்கு, "கீ-ஆன்சர்&' வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. விடைகளில் வரும் ஆட்சேபங்களைப் பார்த்த பின், இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிடவும் டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.
தொடக்கக் கல்வி துறையில்  மாநில அளவில்

பதவி உயர்வு கோரியும்  ஒன்றிய அளவில் பதவி உயர்வுக்கு 

தடை கோரியும் பணி மாறுதல் G.O. க்கு  சென்னை 

 உயர்நீதி மன்றத்தில் 18.6.2012 ல் வழக்கு 

தாக்கல் செய்யப்பட்டுள்ளது   முடிவு 21.06.2012 ல் தெரியும்  .தங்கள்  ஆதரவை 9443464081   க்கு தெரியப்படுத்தவும் 

CCE - கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிடுதல் - அறிக்கை சமர்பித்தல் குறித்த செயல்முறைகள்

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை - பார்வை அறிக்கை படிவம்...
சென்னை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் ந.க.எண். 796 / ஈ2 / 2012 , நாள். 15.06.2012 
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பாக தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்கள் தற்பொழுது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் வகுப்புகளை இக்கல்வியாண்டில் கையாண்டு வருகின்றனர்.
இம்முறையினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் வலுவூட்டதல் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.எனவே அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், மெற்றிக் பள்ளி ஆய்வாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனைவரும் 2012 ஜூன் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களில் ஐந்து பள்ளிகளுக்கு சென்று தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு நடைமுறைப்படுத்தும் முறையினை உற்றுநோக்கி, இம்முறையினை செயல்படுத்தும் பொழுது ஆசிரியர்களுக்கு எழும் ஐயங்களையும், இடர்பாடுகளையும் கண்டறிந்து அவற்றை அறிக்கையாக தயார் செய்து அவ்வறிக்கையினை ஒன்றிய மேற்பார்வையாளர்கள் மூலம் 22.06.2012 அன்று தனி நபர் மூலம் படிவங்களின் தொகுப்பினை முதல்வர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அவர்களிடம் சமர்பிக்கவ்வும், சமர்ப்பித்தற்கான அறிக்கையினை அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீக்கம்


இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று நீக்கியுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களைப் போல இடைநிலை ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த மனுவில், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று 7.3.2012 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், இது 15.12.2011 தேதியன்று இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். எனவே, இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியரர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து, இது குறித்து தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில், மதுரை கிளை நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை தாக்கல் செய்ததோடு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7,903 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தது.
தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி கே. வெங்கட்ராமன், வழக்குத் தொடர்ந்துள்ள 2 பட்டதாரிகளுக்கான பணியிடங்களை மட்டும் காலியாக வைத்துவிட்டு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து
, அரசுத் தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுகூட்டல் செய்ய ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, இந்தாண்டு முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேவையான நடவடிக்கையை, தேர்வுத் துறை எடுத்துள்ளது. மாணவர்கள், விடைத்தாளின் நகல் கிடைக்கப்பெற்ற ஐந்து நாட்களுக்குள், "கோர் பேங்கிங் சர்வீஸ்' வசதி உள்ள, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏதாவது ஒரு கிளை மூலம் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள்கள் நகல்கள் கேட்டு
, விண்ணப்பித்து, நகல்கள் பெற்றவர்கள் மட்டுமே மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுகூட்டலுக்குத் தகுதியானவர்கள். ஒரு பாடத்திற்கு மேல் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல், கட்டணத் தொகையையும் தனித்தனியாக செலுத்த வேண்டும்.

ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தனித் தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. ஜூன் 25ம் தேதி முதல், ஜூலை 12ம் தேதி வரை, முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தனித் தேர்வுகள் நடைபெறும். தூத்துக்குடி, மதுரை, நாமக்கல், கோவை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, இதே ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 13ம் தேதி மாலைக்குள் வழங்க வேண்டும். உரிய தேர்வுக் கட்டணங்களுடன், சிறப்புக் கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். தகுதியான மாணர்களுக்கு, இதே மையங்களில், "ஹால் டிக்கெட்'டுகள் வழங்கப்படும்.


மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 18.06.2012 முற்பகல் 10.00  மணி இடம் : அசோக்நகர்
மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 18.06.2012 பிற்பகல் 2.00  மணி இடம் : அசோக்நகர்
மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 20.06.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர்
உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 25.06.2012 | முற்பகல் 10.00 மணி   இடம் : அசோக்நகர் 
உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 25.06.2012 | பிற்பகல் 2.00 மணி  இடம் : அசோக்நகர் 
உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 28.06.2012 மற்றும் 29.06.2012 | முற்பகல் 10.00 மணி மணி  இடம் : அசோக்நகர் 
முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) 04.07.2012 முற்பகல் 10.00 மணி இடம் : சம்மந்தப்பட்ட மு..அ. 
முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்  மாறுதல்)  05.07.2012 (வியாழக்கிழமை)  முற்பகல் 10.00மணி  இடம் : சம்மந்தப்பட்ட மு..அ.
முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு      11.07.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர் 

* டி.ஆர்.பி.தேர்வு மூலம் தேர்வான, 185 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங், 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
பதவி உயர்வு மூலம்பிரிவு கண்காணிப்பாளர்களாக பணி நியமனம் செய்யப்படும், 75 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10.30 மணிக்கும்இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெறும், 45 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10 மணிக்கும் நடைபெறுகிறது.
சத்துணவு பணியாளர்களில்பட்டதாரி ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு, 136 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், 23ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
டி.என்.பி.எஸ்.சி.மூலம்பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 36இளநிலை உதவியாளர் மற்றும் 16 தட்டச்சர்களுக்கு பணி நியமனம் வழங்கும் கவுன்சிலிங், 23ம் தேதி பகல் மணிக்கு நடக்கிறது.
அனைத்து கவுன்சிலிங் நிகழ்ச்சிகளும்
சென்னைடி.பி.ஐ.வளாகத்தில் உள்ள மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நடக்கும் எனபள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். 

பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை, "ஹால் டிக்கெட்' வழங்கப்படுகிறது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிக்க சேர்வதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தால் போதும். அவர்கள் 3 வருடம் பாலிடெக்னிக் படிக்க வேண்டும். பிளஸ்-2 முடித்த மாணவர்கள பாலிடெக்னிக் படிக்கும்போது அவர்கள் முதலாம் ஆண்டு படிக்காமல் நேரடியாக 2-வது ஆண்டில் சேரலாம். இது நடைமுறையில் உள்ளது.

இப்போது பிளஸ்-2 படிக்கும் போது தொழில்கல்வி படித்தவர்கள் மட்டும்தான் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-வது ஆண்டில் நேரடியாக சேரமுடியும் என்றும், வேறு குரூப் எடுத்தவர்கள் சேரமுடியாது என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.


பள்ளிக்கல்வி - பதவிஉயர்வு - அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு.

மதுரை ஆலங்குளத்தை சேர்ந்த திருவாசகமணி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறேன். 2012& 2013ம் ஆண்டிற்கான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி மூப்பு பட்டியலை தயாரிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். அதில், மொழி ஆசிரியர்களில் அரசு பள்ளியில் 2001 டிசம்பர் 31க்கு முன்பு பணிக்கு சேர்ந்து, 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட் அல்லது பிடி முடித்தவர்களின் பெயர்களை மட்டும் தலைமை ஆசிரியர் பணி மூப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
தற்காலிக பணி மூப்பு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2009ம் ஆண்டில் பிஎட் முடித்ததால் எனது பெயரை பணி மூப்பு பட்டியலில் சேர்க்கவில்லை.
எனக்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த பலரது பெயர்கள், பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட் முடித்தவர்கள் பெயர்களை மட்டும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதம் என அறிவித்து, என் பெயரை பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும். தற்காலிக பணி மூப்பு பட்டியல் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கவும், இறுதி பட்டியல் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி விசாரித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க பள்ளி கல்வி இயக்குனர், மதுரை முதன்மை கல்வி அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணை எண். 137 பள்ளிக்கல்வி(மேநிக)துறை நாள்.08.06.2012  
பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 


அரசாணை எண். 137 பள்ளிக்கல்வி(மேநிக)துறை நாள்.08.06.2012  

பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்

பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத் தலைவர் எஸ்.சண்முகம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் பதவி உயர்வுகளில் இந்த ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது என்றும், ஆகவே பதவி உயர்விலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே.சந்துரு, வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது எனவும், ஆனால் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் எதுவும் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பள்ளி மாணவர்களுக்கு நவீன பஸ் பாஸ்: தமிழக அரசு திட்டம்


தற்போது மாணவர்கள் சேர்க்கை நடப்பதால், அதன்பின் "ஸ்மார்ட் கார்டு" பஸ் பாஸ் தரப்படும் என போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் செல்ல தமிழக அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அட்டை வடிவில் உள்ள பாஸை, மாணவர்கள் கல்வி ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க முடியவில்லை. இரண்டாக கிழிவதால் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.
இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு புகைபடத்துடன் கூடிய "ஸ்மார்ட் கார்டு&' பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களின் புகைப்படம் எடுத்து "ஸ்மார்ட் கார்டு&' பாஸ் வழங்க உள்ளனர்.

புதுக்கோட்டை இடைத் தேர்தல்: அதிமுக 71448 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

புதுக்கோட்டை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க 1,01,948 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளது.இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. 23-வது மற்றும் இறுதிச் சுற்று முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 1,01,948 வாக்குகளும், தே.மு.தி.க வேட்பாளர் ஜாகீர் உசேன் 30,500 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து 71448 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

                            Text Books Online : Minority Languages Text Books

Welcome to TEXTBOOKS ONLINE !
Textbooks published by the
Department of School Education, Govt. of Tamil Nadu, India
What's New ? Minority Languages (Arabic, Sanskrit, Kannada, Malayalam, Telugu and Urdu) Text Books (revised in 2012) for the Classes : 1 to 8
           
Class 1 Class 2 Class 3 Class 4 Class 5 Class 6
           
Class 7 Class 8 Class 9 Class 10 Class 11 Class 12
           
    Diploma in Teacher Education - First Year Diploma in Teacher Education - Second Year    
 
Search in all English Titles Accessibility Options
           
Send  feedback View select feedback

TNPSC - CSSE - I,EXECUTIVE OFFICER GR-III & SUPERINTENDENT OF BOYS APPROVED SCLS - NOTIFICATIONS RELEASED.

List of Current Notifications
S No. Advt. No./ Date of Notification Name of the Post Online Registration Date of Examination Activity
From To
1
19/2012
13.06.2012
Posts included in CSSE-I
13.06.2012 13.07.2012 12.08.2012 Apply Online
2
19/2012
13.06.2012
Executive Officer 
Grade-III- (Group-VII-B)
13.06.2012 13.07.2012 12.08.2012 Apply Online
3
19/2012
13.06.2012
13.06.2012 13.07.2012 12.08.2012 Apply

IGNOU -2013 M.Ed.,(Regular) & B.Ed., M.Ed.,(Spl Edn) Admission.

அரசு மேல்நிலைப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி மாற்றம்.

அரசு மேல்நிலைப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு திங்கட்கிழமை (ஜூன் 18) முதல் பணிமாறுதல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் திரு. ப. மணி கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஜூன் 16 முதல் இந்தக் கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பள்ளி மாணவர்களுக்கு நவீன பஸ் பாஸ்: தமிழக அரசு திட்டம்


தற்போது மாணவர்கள் சேர்க்கை நடப்பதால், அதன்பின் "ஸ்மார்ட் கார்டு" பஸ் பாஸ் தரப்படும் என போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் செல்ல தமிழக அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அட்டை வடிவில் உள்ள பாஸை, மாணவர்கள் கல்வி ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க முடியவில்லை. இரண்டாக கிழிவதால் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.
இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு புகைபடத்துடன் கூடிய "ஸ்மார்ட் கார்டு&' பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களின் புகைப்படம் எடுத்து "ஸ்மார்ட் கார்டு&' பாஸ் வழங்க உள்ளனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மாற்று திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி - சிறப்பு ஆசிரியர்கள் - கல்வித் தகுதி ஆய்வு செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 1001 / அ2 / மாகுஉக / அகஇ / 2012, நாள். 12.06.2012
அனைவருக்கும் கல்வி இயக்கம், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வியின் கீழ், நன்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே சிறப்பு ஆசிரியர்கள் தெரிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TNTET 2012

horizontal rule
I.  List of Candidates
    enter your Application No. (eg.00100001)
          (for all the candidates who have applied for Examination)
                                                      App No.     

தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 355 பேர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 170 பேர்தான் உள்ளனர். இதேபோல், 259 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் 108 பேர்தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்ற அதிர்ச்சிïட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசின் நிர்வாக சக்கரத்தை சுழற்றுவதில் பெரும் பங்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உள்ளது. ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய தேர்வாணையம் நடத்துகிறது. இதில் உயர் மதிப்பெண் பெறுபவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், அடுத்த மதிப்பெண் பெறுபவர்கள் ஐ.பி.எஸ்.

பள்ளிக் கல்வித் துறையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தினக்கூலி மற்றும் பகுதிநேர அடிப்படையில் பணியாற்றி வந்த, 614 பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், தினக்கூலி அடிப்படையில், துப்புரவுப் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். கடந்த 2006, ஜனவரி முதல் தேதியன்று வெளியிடப்பட்ட உத்தரவில், தினக்கூலி அடிப்படையில்,

அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேருகின்ற எஸ்.சி., எஸ்.டி. மாணவ-மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அந்த மாணவர்கள் இலவசமாக படிக்கலாம். அதாவது அவர்கள் மாணவர் சேர்க்கையின்போது பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழை சமர்ப்பித்தால் கல்வி கட்டணம், சேர்க்கை கட்டணம், விளையாட்டு கட்டணம், நூலக கட்டணம் முதலிய கட்டணங்களில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவார்கள். இது பல மாணவர்களுக்கு தெரியாமல் உள்ளது. இந்த தகவலை கல்வியாளர் பேராசிரியர் மூர்த்தி செல்வக்குமரன் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் இனி கல்வி கடன் பெற கண்டிப்பாக பான் கார்டு (வருமானவரி நிரந்தர கணக்கு எண்) இணைக்க வேண்டும் என்று வங்கிகள் அறிவித்து உள்ளன. நடப்பு 2012-2013-ம் ஆண்டிலே இது அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.
தற்போது நாடு முழுவதும் மாணவர்களின் உயர்கல்விக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி பெறும் மாணவர்கள் படிப்பு காலத்தில் வட்டி மட்டும் செலுத்த வேண்டும். வேலைக்கு சென்ற