PAGEVIEWERS
Tamil Nadu MLA list 2011.
அதிக நேரம் விண்வெளியில் நடந்து சுனிதா வில்லியம்ஸ் சாதனை
இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (படம்) அதிக நேரம் விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
சர்வதேச விண்வெளி மையத்தின் மின்சக்திப் பகுதியில் ஏற்பட்டிருந்த கோளாறைச் சரிசெய்ய 32வது விண்வெளிக்குழுவை நாஸா அனுப்பியது. இக்குழுவில் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பயணித்தார்.
இவர், ஜப்பானைச் சேர்ந்த சக விண்வெளி வீரர் அகிஹிகோ ஹொஷிடேவுடன் இணைந்து விண்வெளியில் நடந்து சென்று, பிரதான மின்சக்திப் பகுதியைச் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார். கடந்த வாரம் வியாழக்கிழமை 8 மணி நேரம் விண்வெளியில் நடந்த படி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
இந்நிலையில், இருவரும் இரண்டாவது முறையாக புதன்கிழமை 6 மணி நேரம் 28 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து, பிரதான மின்சக்திப் பகுதியில் ஏற்பட்டிருந்த பிரச்னையைச் சரிசெய்தனர்.
பள்ளி அமைக்க நன்கொடையாக நிலம் கொடுத்தவரின் பெயரை, அப்பள்ளிக்குச் சூட்ட முடியாது என, மதுரை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
திருச்சி மணச்சலூரை சேர்ந்த கைலாசம் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:
ஊரில் செயல்படும் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு, 1966ல், தாத்தா அய்யணன் செட்டியார், இரண்டு ஏக்கர் நிலமும், நான் ஓர் ஏக்கர் நிலமும் கொடுத்தோம். ஆக, மூன்று ஏக்கர் நிலமும் எங்களுக்குச் சொந்தமானது. நிலம் கொடுத்த என் தாத்தா பெயரை பள்ளிக்குச் சூட்டாமல், கேட் கொடுத்தவர்கள் பெயர்களை போட்டுள்ளனர். தாத்தா பெயர் சூட்ட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி சந்துரு:
நிலம் கொடுத்ததற்கு மட்டுமே தாத்தா பெயர் வைக்க உரிமை கோர முடியாது, இப்பள்ளிக்குத் தனியார் பெயர் வைத்தால், தனியார் பள்ளி மாதிரியாகும். கட்டடங்கள் கட்டும் போது கல்வெட்டுகள் வைக்க மட்டுமே அரசாணை உள்ளது.
நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.
திருச்சி மணச்சலூரை சேர்ந்த கைலாசம் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:
ஊரில் செயல்படும் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு, 1966ல், தாத்தா அய்யணன் செட்டியார், இரண்டு ஏக்கர் நிலமும், நான் ஓர் ஏக்கர் நிலமும் கொடுத்தோம். ஆக, மூன்று ஏக்கர் நிலமும் எங்களுக்குச் சொந்தமானது. நிலம் கொடுத்த என் தாத்தா பெயரை பள்ளிக்குச் சூட்டாமல், கேட் கொடுத்தவர்கள் பெயர்களை போட்டுள்ளனர். தாத்தா பெயர் சூட்ட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி சந்துரு:
நிலம் கொடுத்ததற்கு மட்டுமே தாத்தா பெயர் வைக்க உரிமை கோர முடியாது, இப்பள்ளிக்குத் தனியார் பெயர் வைத்தால், தனியார் பள்ளி மாதிரியாகும். கட்டடங்கள் கட்டும் போது கல்வெட்டுகள் வைக்க மட்டுமே அரசாணை உள்ளது.
நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.
மத்திய, மாநில அரசுப் பணித் தேர்வுகள்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., இந்திய வெளியுறவுப் பணி, இந்திய வருவாய் பணி, இந்திய பொறியியல் பணி, இந்திய வனப் பணி, இந்திய பொருளாதாரப் பணி முதலான பல மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய தேர்வாணயம் நடத்துகிறது. அதே போல, மாநில அரசில் சில பணிகளுக்கான தேர்வுகளை மாநில தேர்வாணையம் நடத்துகிறது. பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு, குறித்து சில விவரங்கள் இதோ...
சிவில் சர்வீஸ் தேர்வுகள்: (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், இந்திய வெளியுறவுப் பணி, இந்திய வருவாய்ப் பணி) :
அறிவிப்பு: டிசம்பர் இறுதி வாரம்.
தேர்வு: மே 2-வது வாரத்தில் முதல்நிலைத் தேர்வு.
சிவில் சர்வீஸ் தேர்வுகள்: (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், இந்திய வெளியுறவுப் பணி, இந்திய வருவாய்ப் பணி) :
அறிவிப்பு: டிசம்பர் இறுதி வாரம்.
தேர்வு: மே 2-வது வாரத்தில் முதல்நிலைத் தேர்வு.
பள்ளிக் கல்வித்துறை குறித்த புதிய இணையதளம் துவக்கம்!-06-09-2012
தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை குறித்த நிலை, தேர்வு தேர்ச்சி சதவீதம், மாணவ, மாணவியரை பற்றிய விவரம் அடங்கிய, புதிய இணையதளத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
இணையதளம் குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளில் பயிலும், 1.25 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் இந்த இணையத்தில் இடம் பெற்றுள்ளன.www.tnschools.gov.in என்பது அந்த இணையதளம்.
சென்னை பல்கலை: ஜியோ இன்பர்மேடிக்ஸ் படிப்புக்கு வரவேற்பு (06/09/2012) சென்னை பல்கலைக்கழகத்தில். எம்.எஸ்சி., ஜியோ இன்பர்மேடிக்ஸ் என்ற இரண்டு வருட படிப்புக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித்தகுதி: விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பி.ஏ., பி.எஸ்.... |
பாரதிதாசன் பல்கலை: முதுகலை இன்ஸ்டன்ட் தேர்வு முடிவுகள் (03/09/2012) திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், முதுகலை இன்ஸ்டன்ட் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.எம்.பி.ஏ., எம்.சி.ஏ., இன்ஸ்டன்ட் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட.... |
அண்ணாமலை பல்கலை: எம்.எஸ்சி., படிப்பிற்கு விண்ணப்பம் (31/08/2012) ஆக.,31: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., நேச்சுரல் புராடக்ட் கிளினிக்கல் ட்ரைல் படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தகுதி: இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பில.... |
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நட்ராஜ் தெரிவித்தார். கடந்த மாதம் குரூப் -2 தேர்வுகள் நடந்தன. இதில் கேள்வித்தாள் அவுட்டானதாக புகார் எழுந்தது .இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேள்வித்தாள் அவுட்டானதை தடு்க்க டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் சென்ளையில் நிருபர்களிடம் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் இனி தேர்வு மையங்களில் தான் கேள்வித்தாள்களை ஆன்லைனின் பதிவிறக்கம் செய்யமுடியும். இதன் மூலம் இனி முறைகேடுகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
DEPARTMENTAL EXAMINATIONS - ONLINE REGISTRATION
Month | Current Online Registration for... (Click to Apply Online) | Help | Current Status |
Sep 2012
| Departmental Examinations December 2012 | Tamil |English |
Online till 30 Sep 2012
|
சிறந்த ஆசிரியருக்கு, வரும் 5ம் தேதி வழங்கப்பட உள்ள ராதாகிருஷ்ணன் விருதுக்காக, ஆசிரியர் அனுப்பிய விண்ணப்பங்களுடன், ஆளுங்கட்சி பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இதனால் தர்மசங்கட சூழ்நிலை ஏற்பட்ட போதும், தகுதியான ஆசிரியர் பட்டியல் தயாரிப்பு பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.