PAGEVIEWERS


நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி?

 

செப்டம்பர் 5 - டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) தரப்படும். அது ஒரு மெல்லிய நகைச்சுவை. அப்போதும் எப்போதும் ஆசிரியர்களுக்கிடையில் "நல்லாசிரியர் விருது" பற்றி கேலியான பேச்சு நிகழும். அப்போதெல்லாம் ஓர் உரையாடலைப் பேசிப் பாரத்துக்கொள்வோம். அது என்ன உரையாடல் என்று கேட்கிறீர்களா? இதோ...
"சார், எனக்கு நல்லாசிரியர் விருது வேணும்."
"அதற்கென்ன வாங்கிட்டாபோது."
"கையில காசு இருக்கா. அவர பார்த்தாப்போச்சு. உனக்கென்ன! இந்த வருஷம் வாங்கிடலாம்."

மத்திய, மாநில அரசு தரும் "நல்லாசிரியர் விருது" பெற்ற ஆசிரியர்களைப் பார்க்கும்பொழுது ஒரு கேலியான சிரிப்பு, ஆசிரியர்களிடையே நிகழும். அதை வாங்கியவர்களுக்குக் கௌரவம் என்றாலும், வாங்கியவர்கள் பெரும்பாலும் கௌரவமான விருதுக்குரியவர்கள் இல்லை என்பதுதான் நிஜம்.
தகுதியற்றவர்கள் வாங்கியதைப் பார்த்து நேர்மையான ஆசிரியர்கள் சிரிக்கும்பொழுது, அவ்விருதுக்கே வெட்கம் வந்துவிடாலாம். ஆசிரியர்களுக்கு வராதா என்ன?
நூற்றுக்குப் இருபத்தைந்து ஆசிரியர்களே இவ்விருதுக்குத் தகுதியானவர்களாக இருப்பவர்கள். மற்றவர்கள் யாவரும் பணி அனுபவத்திலும், பொருளாதார, அதிகாரப் பலத்திலும் வாங்கியவர்களாக இருப்பவர்கள்தான்.

ஆசிரியர்நியமனத்திற்கு தடை உத்தரவுக்கு 

எதிராகஅரசு சார்பில் தாக்கல் 

செய்யப்பட்டமேல்முறையீட்டு 

மனுவின்விசாரணை இன்று விசாரணைக்கு வரும் 

எனஎதிர்ப்பார்த்த நிலையில்இவ்வழக்கை 

விசாரிக்கும் அமர்வில் உள்ளநீதியரசர்களில் 

ஒருவர் இன்று விடுப்பில்சென்றதால் ஆசிரியர் 

நியமனதடை வழக்கு விசாரணைக்கு 

 வரவில்லை,இதையடுத்து வருகிறபுதன்கிழமை 

வழக்கு விசாரணைக்கு வரலாம்என 

எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 இந்தவார பட்டியலில் 17 வது வழக்காக உள்ளது .


HIGH COURT OF JUDICATURE AT MADRAS
WEEKLY CAUSE LIST 
(For 08-09-2014 to 12-09-2014 )
 
 
                    COURT NO. 9           
                               HON'BLE  MR JUSTICE R.S.RAMANATHAN
                       TO BE HEARD FROM MONDAY THE 8TH DAY OF SEPTEMBER 2014
       TO FRIDAY THE 12TH DAY OF SEPTEMBER 2014
--------------------------------------------------------------------------------------------------
         WEEKLY LIST
 
 

17.    WP.33399/2013          M/S.AJMAL ASSOCIATES          MR.A. LECIMAN                         
       (Service)              C.VENKATESH KUMAR             SPL..GP. TAKES NOTICE         
                              M.NATARAJAN                                                 
                              H.MOHAMMED IMRAN  AND  K.PONNAIAH                               
 

TET Weightage முறைக்கு எதிராக 14ஆம் நாள் போராட்டம்! (05.09.2014 Status)

டெட் வெயிட்டேஜ் முறைக்கு எதிராக இன்று 14ஆம் நாள்போராட்டம் நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட தேர்வர்கள்கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழகதேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிராக கூடி கோஷமிட்டனர்.பிறகு தமிழக தேர்தல் ஆணையஅலுவலகத்திற்குள் சென்று, அங்கு இருந்த அதிகாரிகளிடம் ”வெயிட்டேஜ் முறை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு தங்கள் தேர்தல் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்தனர்.
          தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ”வாக்காளர் அடையாள அட்டைகளை இந்திய தேர்தல் ஆணையம் தான் வழங்கியது என்பதால் அங்கு சென்று தான் திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து டெட் தேர்வர்கள் பேரணியாக இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு செல்ல துவங்கினர். அப்போது காவல்துறை பேரணி செல்ல முறையாக அனுமதி பெறப்படாததால் தேர்வர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்வர்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்டும், தங்கள் கண்களை கருப்பு துணியால் கட்டியவாறும், தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.


           ஒரு கட்டத்தில் போராடுபவர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் லேசான தடியடி நடைபெற்றது. இதில் தேர்வர்கள் அணிந்து வந்த துணிகள் கிழிந்து காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தேர்வர்கள் திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டனர். அப்போது பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் திரு. மணி அவர்கள் திருமண மண்டபத்தில் தேர்வர்களை சந்தித்து ”தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு” என கூறி ஆறுதல் வழங்கினார். தற்போது 7 மணி அளவில் தேர்வர்கள் விடுவிக்கப்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளில் அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர். நாளை மீண்டும் 15ஆம் நாள் போராட்டம் நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
நமது TATA - சங்கம் சார்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துகள் .விருது பெரும் ஆசிரியர்களையும் வாழ்த்துகிறோம் .
 
CRC- பயிற்சி நாள்களை பணி நாளாக அறிவிக்க வேண்டும்  அல்லது ஈடு செய் தற்செயல் விடுப்பு வழங்கிட நமது TATA சங்கம் சார்பாக கோரிக்கை மனு .

06-09-2014 -CRC- மாற்றம் செய்திட நமது சங்கம் சார்பாக அனுப்பப்பட்ட மனு ..

TATA சங்கத்தின்  பரிசு போட்டி -பரிசு தொகை ரூ . 10,000 / ( ஆசிரியர் தினத்தன்று  ஆரம்பம் கலந்துக் கொள்ள தயார் ஆவீர். )

தலைப்பு ;- 

1989 ல் 5 வது ஊதிய குழு என்ன காரணத்திற்காய் இடை நிலை ஆசிரியருக்கு ரூ  1200-2040  மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கியது .காரணங்களை ஆதாரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் .

கலந்து கொள்ள தகுதியானவர்கள் ;- 

1989 ல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்தவர்கள், 
பணிஓய்வு பெற்ற சங்க தலைவர்கள்,
அகில உலக தலைவர்கள்,
அகில இந்திய தலைவர்கள் .....
 தங்கள் திறமையை நிருபிக்க நல்ல வாய்ப்பு நழுவ விட்டு விடாதிர்கள் 
முக்கிய குறிப்பு ;- 

2006 ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்ய முடியாது என திரு.ராஜி வ்  ரஞ்சன்  இ  .ஆ .ப.   ,,திரு .கிருஸ்ணன்  
 இ .ஆ.ப.தெரிவித்து உள்ளனர் .ஆனால் 1989 ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி .மாண்புமிகு .ஜி .ராமானுஜம் அவர்கள் இடைநிலை ஆசிரியர் ஊதியம்   1200 - 2040 என மத்திய அரசுக்கு இணையாக மாற்றம் செய்தார்கள் என ஆதாரத்துடன் அனுப்ப வேண்டும் .அரசு ஆணைகளை அனுப்பக்கூடாது.காரணங்களை மட்டும் தெரிவிக்க வேண்டும் 

பரிசு வழங்குபவர் ;-

 S.C.கிப்சன் -
1989. ல் 7 ம் வகுப்பு மாணவன் 
TDTA நடுநிலை பள்ளி .
நெய்விலை -நாசரேத் -
தூத்துக்குடி மாவட்டம் .

போட்டிக்கான காலவரம்பு ; 
செப்டப்பர் 5 முதல் 20 முடிய 

கடிதங்களையும் ஆதரங்களையும் அனுப்ப வேண்டிய முகவரி ;-

  S.C.கிப்சன் -
235.வடக்கு தெரு 
பரப்பாடி -627110
நாங்குநேரி 
திருநெல்வேலி .
செல் 9443464081.

பள்ளிக்கல்வி - 02.11.2007க்கு முன்னர் எம்.பில்., படிப்பில் சேர்ந்து 02.11.2007க்கு பின்னர் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் / தலைமையாசிரியர்களின் விவரம் கோரி உத்தரவு..

 


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் "ஆசிரியர் தின" வாழ்த்துச் செய்தி,,

 


பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை...

 

பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. தமிழரசன் உள்ளிட்ட 18 பேரின் மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வகை செய்யும் அரசாணை எண் 71க்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.
தமிழரசன் உள்ளிட்ட 18 பேரின் மனுவை விசாரிக்க நீதிபதி சசிதரன் உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணக்கு வந்தது. ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கை நடத்தி கொள்ள அனுமதித்துள்ள நீதிமன்றம் ஆசிரியர் பணிநியமன உத்தரவை வழங்க கூடாது என்று ஆணையிட்டுள்ளது.
 
செய்தி பகிர்வு : தினகரன்