PAGEVIEWERS

09.11.2014அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நடந்த தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் செங்கம், செய்யாறு ஒன்றியக் கிளை துவக்க விழாக் காட்சிகள் இங்கே. மாநிலப் பொதுச்செயலாளர் திரு. கிப்சன், மாநிலத் தலைவர் திரு. கார்த்திகேயன், மாவட்டச் செயலாளர் திரு. செந்தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைத் தலைவர் திரு. சபரிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவண்: செங்கம் ஒன்றியத் தலைவர்-D.சங்கர், செயலாளர்- R.அருண், பொருளாளர்-ஜெ.இராஜசந்துரு மற்றும் மண்டலச் செயலாளர்-N.நந்தகுமார், மாவட்டத் தலைவர்-A.அரசு.







 
 

மத்திய அமைச்சரவை -New list

 1 நரேந்திர மோடி பிரதமர்

2 ராஜ்நாத் சிங் உள்துறை

3 சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவுத்துறை மற்றும் அயல்நாட்டு விவகாரங்கள்

4 அருண் ஜேட்லி நிதி, கம்பெனி விவகாரங்கள், செய்தி ஒலிபரப்பு

5 எம்.வெங்கய்யா நாயுடு நகர்ப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வீட்டுவசதி, நாடாளுமன்ற விவகாரங்கள்

ஆசிரியர் நியமன தேர்வில் ‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து வழக்கு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

ஆசிரியர் நியமன தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீது 6 வாரத்துக்குள் பதில் அளிக்கும் படி தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்ற லாவண்யா என்பவர் மற்றும் பலர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–
தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசாணை 71–ல் ‘வெயிட்டேஜ்’ முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதிப்பெண் சலுகை என்பது எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியில்லை.
பாதிப்பு
‘வெயிட்டேஜ்’ முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு இருக்கும். இந்த விவகாரம் சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு சரி என உத்தரவிடப்பட்டது. அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒரே வழக்கில் நீதிமன்றத்தின் இதுபோன்ற கருத்து வேறுபாடு அச்சத்தை தருவதாக இருக்கிறது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு இந்த ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
தமிழக அரசுக்கு நோட்டீசு
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா மற்றும் நீதிபதி அபய் மனோகர் சப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வக்கீல்கள் ஹரிஷ் குமார், சங்கரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த மனுவின் மீது 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும் இதுவரை தமிழக அரசால் செய்யப்பட்ட நியமனங்கள் குறித்த இறுதி முடிவை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவையொட்டி அதன் அடிப்படையில் நியமனங்களை செய்ய வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

தருமபுரி மற்றும் கிரூஷ்ணகிரி மாவட்டத்தில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்குமற்றும் மிக மூத்த வழக்கறிஞர் மூலம் CPS திட்டம் ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்..

நாள்  ;   16-11-2014 அன்று நடைபெற உள்ளது ,

நேரம் ; மதியம் 1.30 மணி

 இடம் ; பெரியார் மன்றத்தில் (அவ்வையார் மகளிர் மேல் நிலைப்பள்ளி செல்லும் வழி,தருமபுரி .

 

தலைப்பு : -  ஊதிய வழக்கு தீர்ப்பும் அடுத்த கட்ட    

நடவடிக்கைகளும் மற்றும் மிக மூத்த 

வழக்கறிஞர்  மூலம் CPS திட்டம் ரத்து செய்திட  

வழக்கு  தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்.. 

தலைமை ; - ந .கார்த்திகேயன்  ( மாநில தலைவர்  )

சிறப்புரை ;- செ .கிப்சன்  ( பொது செயலாளர்  )

நாள்  ;-    23- 11 - 2014 - ஞாயிற்று கிழமை.  காலை  9 : 30 மணி

மேலும் புதிய கிளை துவங்கவும் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் தொடர்புக்கு 

 ;மூர்த்தி அவர்கள்- 9677701610 ,9751168696

திரு .சேட்டு  அவர்கள் - 9025320240//8675279520


திரு . செல்வம் அவர்கள் - 9626774999//8015606746.


திரு .தினகரன்  அவர்கள் -9940838385 


திரு.வெங்கடேசன் அவர்கள் - 7502221958


ஆசிரியர்கள் அனைவரும் சங்கம் பாகுபாடு இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்   ஊதிய பாதிப்பின் உண்மை நிலை அறிந்திட வாருங்கள் , வாருங்கள் 

உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் ஆதாரங்களுடன் தீர்வு வழங்கப்படும் 

ஊதிய வழக்குக்காக நாம் சேகரித்த அனைத்து ஆவணங்களும் உங்கள் பார்வைக்கு தரப்படும் .


மாபெரும் விபத்து ! TATA பொது செயலாளர் கிப்சன்  உயிர் பிழைத்தது இறைவனின் கருணை மற்றும் பல ஆசிரியர்களின் பிரார்த்தனை

இன்று ( 10.11.2014 ) அதிகாலை 3.15 மணிக்கு திருச்சியில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்தில் படிக்கு முன்பாக உள்ள இருக்கையில் நான்  அமர்ந்து திருவண்ணாமலை -செங்கம் -கூட்டத்தை முடித்து திருநெல்வேலி திரும்பிக்கொண்டு இருந்தேன் .மேற்படி பேருந்து துவரங் குறிச்சி அருகில்  உள்ள கைகாட்டி என்ற பகுதியில் வரும்போது நான் இருந்த பேருந்து முன்பாக சென்ற பேருந்து மீது மிக வேகமாக மோதியது அதில் நான் இருந்த இருக்கை முழுமையாக அப்பளம் போல் நொறுங்கியது .இரண்டு பேருந்திலும் பயணம் செய்த பலர் மிகுந்த காயங்களுடன் தப்பினார்கள் .ஆனால் நான் மட்டும் இறைவனின் கருணை மற்றும் பல ஆசிரியர்களின் பிரார்த்தனையால் எவ்வித ரத்த காயமும் இல்லாமல் காப்பாற்ற பட்டு உள்ளேன் .*(உன் பக்கத்தில் ஆயிரம் பெரும் உன் வலது பக்கத்தில் பதினாறாயிரம் பெரும் விழுந்தாலும் அது உன்னை அணுகாது .உன் கண்களால் மட்டும் காண்பாய் .உன்னை சேத படுத்தாது ) என்பது போல் சிறிய காயங்களுடன் காப்பாற்ற பட்டு உன்ளேன் .

அன்பார்ந்த ஆசிரியர்களே உங்களின் தனி பிராத்தனையில் இரவு பகல் பாராமல் இயக்க பணி செய்திட அடியேனுக்கு உடல் பலம் ,மன பலம் பாதுகாப்பு கிடைத்திட பிராத்திக்க வேண்டுகிறேன்

நான் இருந்த இருக்கை எந்த அளவுக்கு சேதமாகி உள்ளது என்பதற்கான புகைப்படங்கள் ..





தொடக்கக் கல்வி - கல்வி தகவல் மேலாண்மை முறை () தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பயிலும் மானவர்களுக்கு எடை மற்றும் உயரம் அறிதல் சார்பான இயக்குனரின் அறிவுரை...

DEE - EMIS - DIRECTORS INSTRUCTIONS REG TO MEASURE STUDENTS HEIGHT / WEIGHT CLICK HERE... (link rectified)

தொடக்கக் கல்வி - கல்விச்சுற்றுலாவின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவ்டிக்கைகள் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்

 

 

 

பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை - குறைத்தீர் மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது சார்பான அறிவுரைகள்

கல்வித்துறைக்கு எதிரான வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு: நிலுவையில் 2,000 வழக்குகள் இருப்பதால் சிக்கல்


பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி துறைக்கு எதிராக, வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்களால், 2,000த்திற்கும் மேற்பட்ட வழக்குகள், நிலுவையில்
இருப்பதாக கூறப்படுகிறது.

அரசு ஊழியர், 12 லட்சம் பேரில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர், கல்வித்துறையில் பணி புரிகின்றனர். பெரிய துறையாக, பள்ளி கல்வித்துறை இருப்பதாலோ என்னவோ, வழக்குகளுக்கும் பஞ்சம் கிடையாது.

வழக்குகள் எண்ணிக்கை :

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவது சார்பான கடிதத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மதிப்புமிகு நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டிய கடித நகல்...

 அன்பார்ந்த ஆசிரியர்களே  சங்கம் பாகு இல்லாமல் கீழ் கண்ட 2 மனுக்களையும் மாண்புமிகு  முதலமைச்சர் தனி பிரிவுக்கும் , நிதித்துறை செயலாளர் அவர்களுக்கும் அனைவரும் அனுப்பிடுவோம் ,இதில் அனுப்புனர் பகுதியில் தங்களது முகவரியை எழுதி இறுதில் கையொப்பம் செய்து ரூ 5 கவர் வங்கி அனுப்பிடுவோம்,.நமது பாதிப்பு நீங்கிட ரூ 10 செலவு செய்து 2 மனுக்களையும் அனைவரும் அனுப்பிடுவோம். இதன் மூலம் நமது ஊதிய பாதிப்பை நீக்கிட நமது கோரிக்கையை அழுத்தமாய் பதிவு செய்திடுவோம் . நாம் மட்டும் அல்லாது நமது ஆசிரிய நண்பர்கள் , ஆசிரியர் பயிற்சி பள்ளி தோழர்கள் மற்றும் ஆசிரிய உறவினர்கள் மூலமாகவும்  2 மனுக்களையும் அனைவரும் அனுப்பிடுவோம் - மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் ;- கிப்சன் -டாட்டா பொது செயலாளர் 9443464081.

TATA ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) திருவண்ணாமலை மாவட்டம் -செய்யாறு - ஒன்றிய கிளை 

தொடர்புக்கு மற்றும் மேலும் விபரங்களுக்கு ;- திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு.R.செந்தமிழ் செல்வன்-9787180750 மாவட்ட பொருளாளர் திரு.A.சபரி ராஜ்-9597627704 மற்றும்   

செய்யாறு ஒன்றியபொறுப்பாளர்கள் ;-

தலைவர் -R. அமரேசன் - 9715973255
செயலாளர் -T. முருகன்  - 9942169024
பொருளாளர் - P.கனபதி  - 7639493875.
மற்றும் -M. சுப்பிர மணியன் //G. அன்பு // P.ஜோதி // S.முருகேசன் இந்த பொறுப்பாளர்கள் செங்கம் ஒன்றிய கிளை துவக்க விழாஅன்று முறைப்படி அறிவிக்கப்பட உள்ளார்கள் 

வழக்கு நடத்திட நிதி வழங்கிட வேண்டுதல் ....

நமது - TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின் தீர்ப்பு வரப்பெற்று உள்ளதை அனைவரும் அறிவோம் .

மேற்படி வழக்கு நடத்திட இது வரை செலவு -வரவு விபரம் 

கடந்த 2013 அக்டோபர் மாதம் ஊதிய பிரச்சனைக்கு வழக்கு தாக்கல் செய்திட முடிவு செய்தது முதல் இன்று வரை 2,13,500 மொத்த செலவு ஆகியுள்ளது .

வரவு விபரம் ;-

அரியலூர் மாவட்டம் செங்குட்டுவன் அவர்கள் மூலம் வரவு  = 30,000

சேலம் மாவட்டம் மூலம் வரவு                                                                   = 5000

திருப்பூர் மாவட்டம் கந்தசாமிஅவர்கள் மூலம் வரவு                  =  15,000

காஞ்சிபுரம்  மேரி அவர்கள் மூலம் வரவு                                           = 15,000

தனி நபர்கள்மற்றும் விழுப்புரம் ஜெயசங்கர் மூலம் வரவு    = 15,000

                                                                                                                               ------------------------

மொத்த வரவு                                                                                                  = 80,000 மட்டும் .

 மொத்த செலவு                                                                   =  2,13,500  - 80,000  = 1,33,500 

தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடத்திட ஆகும் செலவு ரூ 25,000  ஆகும் 

அன்பு தோழர்களே இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கில் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடத்திட நிதி தேவை படுகிறது .- TATA -சங்கம் இது வரை எவரிடமும் நிதி வசூல் செய்தது இல்லை .எனது கை காசில் வழக்கு நடத்தி உள்ளேன் .மேலும் நமது வெற்றியை முழுமையாய் அனுபவிக்க நிதி கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் கீழ் கண்ட வங்கி கணக்கிற்க நிதியை அனுப்பிடவும் .அதன் விபரங்களை SMS மூலம் தெரிவிக்கவும் அந்த விபரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் ..மேலும் அதிக படியான நிதி CPS திட்டத்தை ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதால் அதில் வரவு வைக்கப்படும் .

                              டாடா கிப்சன் -9443464081..

C.KIPSON

SBI-AMBAI-NELLAI DIST, (

Tirunelveli
Branch :
Ambasamundram
IFSC Code :
SBIN0000804 (5th character is zero)
MICR Code :
Branch Code :
000804.

A/NO ; 30486085987

235.NORTH STREET

PARAPPADI 627110

NELLAI - DIST

E-mail ; kipson76@yahoo.in

                                                   

நமது - TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) ஊதிய வழக்கின் தீர்ப்பு படி இடைநிலை ஆசிரியரின்  '' டிப்ளமோ  ''  கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் 9300 + 4200 என 1.1.2006 முதல் மாற்றம் செய்யப்பட்டால் 2006 ல் தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்திற்கு வந்த  இடைநிலை ஆசிரியருக்கு கிடைக்கும் ஊதிய நிர்ணய மாதிரி பட்டியல் .உணர்வோம் ! உணர்வடைவோம் ! ஊதிய உரிமையை பெற்றிடுவோம் ! 

வேலூர் மாவட்டம்-அரக்கோணம் வட்டம்- பனப்பாக்கம் -01.11.2014
அன்று 10.00 மணிக்கு  சங்கம் சார்பு அல்லாமல் ஆசிரியர்களுக்கு ஊதிய
வழக்கின் தீர்ப்பும் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் CPS திட்டம் ரத்து செய்திட
வழக்கு தாக்கல் செய்வதற்கான் ஆலோசனை கூட்டம் நடை பெற உள்ளது .விருப்பம் உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்.

சிறப்பு அழைப்பாளர்கள் ;
TATA திருவண்ணாமலை,
மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்.

தொடர்புக்கு ;
சம்பத்
7845964964, 8940059975


 

TATA ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) திருவண்ணாமலை மாவட்டம் -செங்கம் ஒன்றிய கிளை துவக்க விழா


நாள் ; 09- 11 - 2014 ஞாயிற்று கிழமை  மதியம் 01;30 மணி 

இடம் ; - லதா ரவி சந்திரன் திருமண மண்டபம் - செங்கம் 

தொடர்புக்கு மற்றும் மேலும் விபரங்களுக்கு ;- திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு.R.செந்தமிழ் செல்வன்-9787180750 மாவட்ட பொருளாளர் திரு.A.சபரி ராஜ்-9597627704 மற்றும் செங்கம் ஒன்றியபொறுப்பாளர்கள் நந்தகுமார் 9600224345- அருண் 9894954027-அரசு 9487011595-இன்பராஜ் 9787496746-சங்கர் 9750455241

 

நமது - TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) ஊதிய வழக்கின் தீர்ப்பு படி இடைநிலை ஆசிரியரின்  '' டிப்ளமோ  ''  கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் 9300 + 4200 என 1.1.2006 முதல் மாற்றம் செய்யப்பட்டால் 2001 ல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியருக்கு கிடைக்கும் ஊதிய நிர்ணய மாதிரி பட்டியல் .உணர்வோம் ! உணர்வடைவோம் ! ஊதிய உரிமையை பெற்றிடுவோம் !

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் 02.11.2014 அன்று மதியம் 1.00 மணி க்கு CRC மையத்தில் வைத்து சங்கம் சார்பு அல்லாமல் ஆசிரியர்களுக்கு ஊதிய வழக்கின் தீர்ப்பும் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் CPS திட்டம் ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்வதற்கான் ஆலோசனை கூட்டம் நடை பெற உள்ளது .விருப்பம் உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம் 

சிறப்புரை ; டாடா கிப்சன் .
தொடர்புக்கு ;மூர்த்தி அவர்கள்- 9677701610 ,9751168696

தமிழக அரசில் அமைச்சு பணியாளர்களில் '' டிப்ளமோ '' பணி நியமன கல்வி தகுதியை காரணம் காட்டிபழைய ஊதிய விகிதம் 4000-100-7000 ல் இருந்து 9300+4200 உயர்த்தப் பட்டதற்கான அரசு கடிதம் மற்றும் அட்டவணை ;-

 



 

நமது சங்கத்தின் புதிய முகநூல் facebook டாடா கிப்சன் tatakipson என்ற பெயரில் உருவாக்கப்பட்டு உள்ளது .ஏன் என்றால் பலர் தேவையற்ற post ஐ kipsontata / facebook ல் பதிவேற்றம் செய்வதால் பல இடையூருகள் ஏற்படுகிறது .எனவே நமது சங்க செய்திகளை அறிந்திட புதிய முகநூல் facebook டாடா கிப்சன் tatakipson என்ற பக்கத்தை பார்க்கவும்


தமிழக அரசில் அமைச்சு பணியாளர்களில் '' டிப்ளமோ '' பணி நியமன கல்வி தகுதியை காரணம் காட்டி 5200+ 2800 ல் இருந்து 9300+4200 உயர்த்தப் பட்டதற்கான அரசு ஆணை ;-






நமது சங்கம் சார்பாக நிதித்துறை செயலாளர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் ...