PAGEVIEWERS

தமிழகத்தில் காற்று வாங்கும் தொடக்கப்பள்ளிகள் : 4 மாணவர்களுக்கு பாடம் நடத்த 2 ஆசிரியர்கள்

அரசு சார்பில் ஏராளமான நலத்திட்டங் கள் வழங்கினாலும் தமிழகத்தில் உள்ளபல தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்க எண்ணிகையிலேயே மாணவர்கள் படிக்கின்றனர். சேர்க்கையை அதிகரிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஆங்கில வழிக் கல்விமுறையும் கைகொடுக்கவில்லை.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்தவும், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக காலணியில் தொடங்கி நோட்டுப்புத்தகம், சீருடை, கல்வி உபகரணபெட்டி, உலக வரைபட புத்தகம், மதிய உணவு என 15க்கும் மேற்பட்ட இலவச திட்டங்களை வழங்கி வருகிறது.மேலும் கடந்த 2 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விமுறையும் அறிமுகம் செய்யப்பட்டது.
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க சிறப்பு பிரசார இயக்கங்களும் நடத்தப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில் பலவற்றின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.

1.86 ஆசிரியர்கள்
1.86 பெறாத ஆசிரியர்கள்
State Seniority ஆசிரியர்கள்
TET Appointment ஆசிரியர்கள்
New Appointment ஆசிரியர்கள்
இவ்வாறு பல
பிரிவு பட்ட,
பிளவு பட்ட ஆசிரியர்கள்
அனைவரும் 2800 பெற்றுவரும் ஆசிரியர்கள் என்பதை முதலில் உணர, உணர்த்த வேண்டும்..

6வது ஊதியக்குழுவில் இப்போதைக்கு பெற்றுவரும் சப்பைகட்டு ஊதியம்
அடுத்து வரவிருக்கும் 7ல் ஒன்றாகிவிடும் என்ற தெளிவு பெறவேண்டும்..

6ஐத்தாண்டி 7க்கு கணக்கிட தயாராய் மடிக்கணினியை தூக்கிக்கொண்டு அலைபவர்களுக்கு மத்தியில் 6ல் தவழ்ந்து கொண்டு தள்ளாடும் இடைநிலை ஆசிரியர்களாகிய நமது நிலையை நமக்கு (பாதிப்பு பற்றி அறியாத, தெரியாத, புரியாத இடைநிலை ஆசிரியர்களுக்கு) விளக்கமாய் விளங்க வைக்க வேண்டும்..
ஒரே பணிநிலைக்கு (இடைநிலை ஆசிரியர்) தற்போது பெற்றுவரும் பலவித மாறுபட்ட, முரண்பட்ட ஊதியமானது அடுத்து வரும் 7ல் சங்கமித்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கான பேரிடியாக, ஒரே ஊதியமாக இருக்கப்போகிற உண்மையை அறியச்செய்ய வேண்டும்..
பெற்றவரும்
ஊதிய கட்டு (தர ஊதியம்) கொண்டு தான் அடுத்தடுத்து வரவிருக்கும் ஊதியக்குழுவில் ஊதிய நிர்ணயம் செய்யப்படும் என்ற உண்மையை உணரச்செய்ய வேண்டும்..

பொழுதுபோக்கான,
வேடிக்கையான,
வினோதமான,
விரும்பத்தக்க விசயங்களை பகிர விடாதபடி
இடைநிலை ஆசிரியர்கள் விழித்தெழ வைக்க இப்படியான விழிப்புணர்வு விசயங்களை பகருகின்ற இந்த அவலத்தின் தேவை மற்றும் அத்தியாவசிய அவசியத்தை பிரிந்து கொண்டு புரிய வைக்க வேண்டும்..

இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் இயக்க வேறுபாடு பார்க்காமல் "நமக்காக நாம்" என்று நமது ஊதிய முரண்பாடு களைய தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்க, முடிவெடுக்க, ஊதிய முரண்பாடு மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஒற்றுமையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒன்றிணைய ஆயத்தமாக வேண்டும்..
ஊதிய முரண்பாடு களைய முதலில் இயக்க வேறுபாடு களைய நாம் ஒவ்வொருவரும் நம்மைப்போன்ற பாதிக்கப்பட்ட அனைவரையும் ஆர்வமூட்ட, ஆயத்தப்படுத்த வேண்டும்..
இதற்கு பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒற்றுமையாக ஒன்றிணைய வேண்டும்..
We Must Conduct
"GP:2800 Teachers Meeting"
Very Soon

வரவிருக்கும் CRC Meeting-ஐ களமாக்கி அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்ய வேண்டும்..
நமக்காக நாம்..

CONTRIBUTORY PENSION SCHEME....


S.NO.
SUBJECT
G.O. NO.
1
2
3
4
 
5
6 Contributory Pension Scheme (CPS) – payment under Contributory Pension Scheme in case ofdeath of an employee – clarification
Letter No.29593A / Finance (Pension) Department / 2009, date:25.8.2009
7 Contributory Pension Scheme – Mode of recovery of subscription and arrear amount under the Contributory Pension Scheme -Clarifications
Letter No. 35574/PGC/2011-3, dated: 23.04.2012
8 Extension of Old Pension Scheme to the Secondary Grade Teachers appointed during 1996, 1997 and 1998 in the aided schools – Implementation of the order of the Hon’ble High Court in W.P.Nos.26933 & 26934 of 2007 and other similar cases – Orders G.O.No. 413 Finance (PGC)
Department  Dated : 4th November, 2010

9 Mobility of personnel amongst Central / State Universities and Autonomous Bodies while working under pensionable establishments after 1.4.2003– Continuance in the Old Pension Scheme – Orders G.O.No. 424   Finance (PGC) Department  Dated: 29th November, 2011 
10 Contributory Pension Scheme – Maintenance of Accounts – Revised orders   G.O.No.463 Finance (PGC) Dept.  Dated 27th December, 2013
11  Contributory  Pension  Scheme  –Allotment  of    CPS    Numbers  to  existing employees/ newly  joined    employees  –  Further instructions  Letter No.63734/FS/T/PGC/2013  Finance (PGC) Dept. dated:  23.05.14
12 Frequently  Asked  Questions  (FAQs) on   Tamil Nadu     Contributory  Pension Scheme (CPS)  with relevant answers/ clarifications given by Principal Accountant General (A & E), Tamil Nadu 
 Frequently  Asked  Questions  (FAQs) on CPS 
13   Allotment of CPS Numbers to existing employees  /  newly joined employees – Further instructions  Letter No.63734/FS/T/PGC/2013, dated :11.09.2014

நமது - TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) சார்பில் இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனையில் வழக்கு எண் 33399/13 மூலம் வழக்கு தாக்கல் செய்து 12.09.14 நீதியரசர் மாண்புமிகு .R.S. ராமநாதன் அவர்கள் முலம் தீர்ப்பு வழங்கப்பட்டது .அந்த தீர்ப்பு நகல் தமிழக அரசுக்கு 09.10.2014 அன்று நீதி மன்றம் மூலமும் நமது சங்கம் மூலம் பதிவு அஞ்சல் மூலமும் அனுப்பப்பட்டு உள்ளது .அந்த தீர்ப்பு அரசுக்கு கிடைத்ததில் இருந்து 8 வார காலம் வரும் டிசம்பர் மாதம் 10 ம் நாள் முடிவுக்கு வருகிறது .அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வில்லை 

மேல் முறையீடு கால கெடு 10.11.2014 அன்றோடு முடிந்து விட்டது .இதுவே நமக்கு முதல் வெற்றிதான் .விரைவில் 9300+4200 என ஊதிய மாற்றத்திற்கான அரசு ஆணையை எதிர் பார்க்கிறோம் . இன்னமும் 3 வாரம் மட்டுமே உள்ளது . அதற்குள் அரசு முடிவு வரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க நமது சங்கம் தயார் நிலையில் உள்ளது 

TATA-மாநில அமைப்பு .

தொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தணிக்கை - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகளை 31.03.2014 அன்றைய நிலையில் ஆசிரியர் சேம நல நிதியில் இருப்பிலுள்ள முடிவிருப்பத் தொகை மென்பொருளில் ஏற்றம் செய்து அரசு தகவல் தொகுப்பு மைய ஆணையாளரிடம் ஒப்படைக்க இயக்குனர் உத்தரவு

DEE - TPF / CPS AUDIT REG PROC CLICK HERE...

அகஇ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "பயிற்சிகளின் தாக்கம்" (TRAINING IMPACT) என்ற தலைப்பில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 22.11.2014 அன்று குறு வளமைய பயிற்சி நடைபெறவுள்ளது.

 

T.V.MALAI


தருமபுரி  மாவட்டத்தில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்கு மற்றும் மிக மூத்த வழக்கறிஞர் மூலம் CPS திட்டம் ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்..16.11.2014 அன்று நடை பெற்றது .

அதன் புகைப்படங்கள்








இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு

மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவது சார்பான கடிதத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மதிப்புமிகு நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டிய கடித நகல்...
அன்பார்ந்த ஆசிரியர்களே சங்கம் பாகு இல்லாமல் கீழ் கண்ட 2
மனுக்களையும் மாண்புமிகு முதலமைச்சர் தனி பிரிவுக்கும் , நிதித்துறை செயலாளர் அவர்களுக்கும் அனைவரும் அனுப்பிடுவோம் ,இதில் அனுப்புனர் பகுதியில் தங்களது முகவரியை எழுதி இறுதில் கையொப்பம் செய்து ரூ 5 கவர் வங்கி அனுப்பிடுவோம்,.
நமது பாதிப்பு நீங்கிட ரூ 10 செலவு செய்து 2 மனுக்களையும் அனைவரும் அனுப்பிடுவோம். இதன் மூலம் நமது ஊதிய பாதிப்பை நீக்கிட நமது கோரிக்கையை அழுத்தமாய் பதிவு செய்திடுவோம் .
நாம் மட்டும் அல்லாது நமது ஆசிரிய நண்பர்கள் , ஆசிரியர் பயிற்சி பள்ளி தோழர்கள் மற்றும் ஆசிரிய உறவினர்கள் மூலமாகவும் 2 மனுக்களையும் அனைவரும் அனுப்பிடுவோம் - மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் ;- கிப்சன் -டாட்டா பொது செயலாளர் 9443464081.

நமது - TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) சார்பில் வழக்கு

CPS சட்டம் பாராளுமன்றத்தில்  06.9.2013  ல் தாக்கல் செய்து    நிறைவேற்றப்பட்டு 19.9.2013 ல் இந்திய அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டு உள்ளத்தாலும் மேலும் இந்த சட்டம் இது வரை தமிழக அரசு கெஜட்டில்  வெளியிடப்படாமல் உள்ளதாலும் தற்போது வரை பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியம்நடைமுறை படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது பற்றி தீர்மானிக்கப்பட்டது  

மேற்படி வழக்குக்கு தேவையான ஆவணங்கள் , மற்றும் நிதி தேவைகளை கவனிக்கவும்  TATA  சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது .அதற்கு என தனி வங்கி கணக்கும் துவங்கப்பட்டு உள்ளது . அதன் விபரம் வருமாறு ...

 CPS தொடர்பாக வழக்கு தொடர்ந்திட  நிதி வழங்கிடுவீா்

 
TATA  CPS TEAM பொறுப்பாளா்கள்                              CELL NO

1.C.KIPSON ( GENERAL SEC)    :                               9443464081, 9840876481

2. S.YOVEL ( PUDUKKOTTAI DIS SEC )  :                  9488294050 ,7373327156

3. A.XAVIER RAJESH  ( PUDUKKOTTAI DIS TRES ): 9486493604 ,8098690080

4. M.SURESH RAJ ( TRY- MARUNKAAPURI UNION SEC )  : 7200116061

BANK DETAILS

NAME  : S.YOVEL

BANK A/C NO :  1196115000013938

 BANK :  KVB, CONTONMENT, TRICHY

IFSC  : KVBL0001196

MICR  :  620053003

CPS  TATA  MAIL  ID  :  cpsteamtata@gmail.com


TATA ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) மாவட்டம் விழுப்புரம் - கிளை துவக்க விழா .

  தலைப்பு : -  ஊதிய வழக்கு தீர்ப்பும் அடுத்த கட்ட    

                          நடவடிக்கைகளும் மற்றும் மிக மூத்த 

                          வழக்கறிஞர்  மூலம் CPS திட்டம் ரத்து செய்திட  

                         வழக்கு  தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்.. 

தலைமை ; - ந .கார்த்திகேயன்  ( மாநில தலைவர்  )

சிறப்புரை ;- செ .கிப்சன்  ( பொது செயலாளர்  )

நாள்  ;-    23- 11 - 2014 - ஞாயிற்று கிழமை.  காலை  9 : 30 மணி 

இடம் ; - A.S.G. திருமண மண்டபம்,புதிய பேருந்து நிலையம் 

                 எதிரில் -  விழுப்புரம்.

தொடர்புக்கு மற்றும் மேலும் விபரங்களுக்கு ;-

                 திரு.ஜெயசங்கர் -  9543645115.

ஆசிரியர்கள் அனைவரும் சங்கம் பாகுபாடு இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்   ஊதிய பாதிப்பின் உண்மை நிலை அறிந்திட வாருங்கள் , வாருங்கள் 

உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் ஆதாரங்களுடன் தீர்வு வழங்கப்படும் 

ஊதிய வழக்குக்காக நாம் சேகரித்த அனைத்து ஆவணங்களும் உங்கள் பார்வைக்கு தரப்படும் .

வேலூர் மாவட்டத்திற்கு வரும் ஞாயிறு 16/11/2014 அன்று காலை 8 மணிக்கு,
TATA மாநிலத் தலைவர் 

மதிப்புமிகு திரு.கார்த்திகேயன் அவர்கள், வருகிறார். அவர் மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களை நியமித்து அவர்களிடம் ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்.
ஒன்றிய அளவில் பொறுப்பேற்கும்... பொறுப்பேற்க விரும்புவோர் (துடிப்புடன் செயல்படக் கூடிய ) அனைவரும் வருகை தாரீர்...
இடம்: கோட்டை, வேலூர்.
தொடர்புக்கு:
சம்பத்
7845964964

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவது சார்பான கடிதத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மதிப்புமிகு நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டிய கடித நகல்...


 அன்பார்ந்த ஆசிரியர்களே  சங்கம் பாகு இல்லாமல் கீழ் கண்ட 2 மனுக்களையும் மாண்புமிகு  முதலமைச்சர் தனி பிரிவுக்கும் , நிதித்துறை செயலாளர் அவர்களுக்கும் அனைவரும் அனுப்பிடுவோம் ,இதில் அனுப்புனர் பகுதியில் தங்களது முகவரியை எழுதி இறுதில் கையொப்பம் செய்து ரூ 5 கவர் வங்கி அனுப்பிடுவோம்,.நமது பாதிப்பு நீங்கிட ரூ 10 செலவு செய்து 2 மனுக்களையும் அனைவரும் அனுப்பிடுவோம். இதன் மூலம் நமது ஊதிய பாதிப்பை நீக்கிட நமது கோரிக்கையை அழுத்தமாய் பதிவு செய்திடுவோம் . நாம் மட்டும் அல்லாது நமது ஆசிரிய நண்பர்கள் , ஆசிரியர் பயிற்சி பள்ளி தோழர்கள் மற்றும் ஆசிரிய உறவினர்கள் மூலமாகவும்  2 மனுக்களையும் அனைவரும் அனுப்பிடுவோம் - மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் ;- கிப்சன் -டாட்டா பொது செயலாளர் 9443464081.

2014-2015 கல்வியாண்டில் பயிலும் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் மட்டும் ஆன்லைனில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் இடமாறுதலில் அமைச்சர் தலையீடா : இயக்குனருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

பரமக்குடி ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிக்கு, அமைச்சகத்தின் சிபாரிசு அடிப்படையில் இடமாறுதல் நடந்ததாக தாக்கலான வழக்கில் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டது.

தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி மகளி்ர் மேம்பாடு குழு நிர்வாக ஆணையராக அமுதவள்ளி நியமி்க்கப்பட்டுள்ளார். மேலும் கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்து வந்த கணேஷ் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாடநூல் கழக நிர்வாக இயக்குனராகக மைதிலி கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமி்ழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு உறுப்பினர் செயலராக சாம்புவேல் கலோலிகர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மின் நிதிநிறுவனம் கட்டமைப்பு மேம்பாட்டுகழக மேலான் இயக்குனராக ஜெயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
09.11.2014அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நடந்த தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் செங்கம், செய்யாறு ஒன்றியக் கிளை துவக்க விழாக் காட்சிகள் இங்கே. மாநிலப் பொதுச்செயலாளர் திரு. கிப்சன், மாநிலத் தலைவர் திரு. கார்த்திகேயன், மாவட்டச் செயலாளர் திரு. செந்தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைத் தலைவர் திரு. சபரிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவண்: செங்கம் ஒன்றியத் தலைவர்-D.சங்கர், செயலாளர்- R.அருண், பொருளாளர்-ஜெ.இராஜசந்துரு மற்றும் மண்டலச் செயலாளர்-N.நந்தகுமார், மாவட்டத் தலைவர்-A.அரசு.







 
 

மத்திய அமைச்சரவை -New list

 1 நரேந்திர மோடி பிரதமர்

2 ராஜ்நாத் சிங் உள்துறை

3 சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவுத்துறை மற்றும் அயல்நாட்டு விவகாரங்கள்

4 அருண் ஜேட்லி நிதி, கம்பெனி விவகாரங்கள், செய்தி ஒலிபரப்பு

5 எம்.வெங்கய்யா நாயுடு நகர்ப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வீட்டுவசதி, நாடாளுமன்ற விவகாரங்கள்

ஆசிரியர் நியமன தேர்வில் ‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து வழக்கு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

ஆசிரியர் நியமன தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீது 6 வாரத்துக்குள் பதில் அளிக்கும் படி தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்ற லாவண்யா என்பவர் மற்றும் பலர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–
தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசாணை 71–ல் ‘வெயிட்டேஜ்’ முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதிப்பெண் சலுகை என்பது எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியில்லை.
பாதிப்பு
‘வெயிட்டேஜ்’ முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு இருக்கும். இந்த விவகாரம் சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு சரி என உத்தரவிடப்பட்டது. அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒரே வழக்கில் நீதிமன்றத்தின் இதுபோன்ற கருத்து வேறுபாடு அச்சத்தை தருவதாக இருக்கிறது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு இந்த ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
தமிழக அரசுக்கு நோட்டீசு
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா மற்றும் நீதிபதி அபய் மனோகர் சப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வக்கீல்கள் ஹரிஷ் குமார், சங்கரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த மனுவின் மீது 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும் இதுவரை தமிழக அரசால் செய்யப்பட்ட நியமனங்கள் குறித்த இறுதி முடிவை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவையொட்டி அதன் அடிப்படையில் நியமனங்களை செய்ய வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

தருமபுரி மற்றும் கிரூஷ்ணகிரி மாவட்டத்தில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்குமற்றும் மிக மூத்த வழக்கறிஞர் மூலம் CPS திட்டம் ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்..

நாள்  ;   16-11-2014 அன்று நடைபெற உள்ளது ,

நேரம் ; மதியம் 1.30 மணி

 இடம் ; பெரியார் மன்றத்தில் (அவ்வையார் மகளிர் மேல் நிலைப்பள்ளி செல்லும் வழி,தருமபுரி .

 

தலைப்பு : -  ஊதிய வழக்கு தீர்ப்பும் அடுத்த கட்ட    

நடவடிக்கைகளும் மற்றும் மிக மூத்த 

வழக்கறிஞர்  மூலம் CPS திட்டம் ரத்து செய்திட  

வழக்கு  தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்.. 

தலைமை ; - ந .கார்த்திகேயன்  ( மாநில தலைவர்  )

சிறப்புரை ;- செ .கிப்சன்  ( பொது செயலாளர்  )

நாள்  ;-    23- 11 - 2014 - ஞாயிற்று கிழமை.  காலை  9 : 30 மணி

மேலும் புதிய கிளை துவங்கவும் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் தொடர்புக்கு 

 ;மூர்த்தி அவர்கள்- 9677701610 ,9751168696

திரு .சேட்டு  அவர்கள் - 9025320240//8675279520


திரு . செல்வம் அவர்கள் - 9626774999//8015606746.


திரு .தினகரன்  அவர்கள் -9940838385 


திரு.வெங்கடேசன் அவர்கள் - 7502221958


ஆசிரியர்கள் அனைவரும் சங்கம் பாகுபாடு இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்   ஊதிய பாதிப்பின் உண்மை நிலை அறிந்திட வாருங்கள் , வாருங்கள் 

உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் ஆதாரங்களுடன் தீர்வு வழங்கப்படும் 

ஊதிய வழக்குக்காக நாம் சேகரித்த அனைத்து ஆவணங்களும் உங்கள் பார்வைக்கு தரப்படும் .


மாபெரும் விபத்து ! TATA பொது செயலாளர் கிப்சன்  உயிர் பிழைத்தது இறைவனின் கருணை மற்றும் பல ஆசிரியர்களின் பிரார்த்தனை

இன்று ( 10.11.2014 ) அதிகாலை 3.15 மணிக்கு திருச்சியில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்தில் படிக்கு முன்பாக உள்ள இருக்கையில் நான்  அமர்ந்து திருவண்ணாமலை -செங்கம் -கூட்டத்தை முடித்து திருநெல்வேலி திரும்பிக்கொண்டு இருந்தேன் .மேற்படி பேருந்து துவரங் குறிச்சி அருகில்  உள்ள கைகாட்டி என்ற பகுதியில் வரும்போது நான் இருந்த பேருந்து முன்பாக சென்ற பேருந்து மீது மிக வேகமாக மோதியது அதில் நான் இருந்த இருக்கை முழுமையாக அப்பளம் போல் நொறுங்கியது .இரண்டு பேருந்திலும் பயணம் செய்த பலர் மிகுந்த காயங்களுடன் தப்பினார்கள் .ஆனால் நான் மட்டும் இறைவனின் கருணை மற்றும் பல ஆசிரியர்களின் பிரார்த்தனையால் எவ்வித ரத்த காயமும் இல்லாமல் காப்பாற்ற பட்டு உள்ளேன் .*(உன் பக்கத்தில் ஆயிரம் பெரும் உன் வலது பக்கத்தில் பதினாறாயிரம் பெரும் விழுந்தாலும் அது உன்னை அணுகாது .உன் கண்களால் மட்டும் காண்பாய் .உன்னை சேத படுத்தாது ) என்பது போல் சிறிய காயங்களுடன் காப்பாற்ற பட்டு உன்ளேன் .

அன்பார்ந்த ஆசிரியர்களே உங்களின் தனி பிராத்தனையில் இரவு பகல் பாராமல் இயக்க பணி செய்திட அடியேனுக்கு உடல் பலம் ,மன பலம் பாதுகாப்பு கிடைத்திட பிராத்திக்க வேண்டுகிறேன்

நான் இருந்த இருக்கை எந்த அளவுக்கு சேதமாகி உள்ளது என்பதற்கான புகைப்படங்கள் ..





தொடக்கக் கல்வி - கல்வி தகவல் மேலாண்மை முறை () தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பயிலும் மானவர்களுக்கு எடை மற்றும் உயரம் அறிதல் சார்பான இயக்குனரின் அறிவுரை...

DEE - EMIS - DIRECTORS INSTRUCTIONS REG TO MEASURE STUDENTS HEIGHT / WEIGHT CLICK HERE... (link rectified)

தொடக்கக் கல்வி - கல்விச்சுற்றுலாவின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவ்டிக்கைகள் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்