PAGEVIEWERS

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் CPS தொகை மற்றும் மாநில அரசு ஊழியர் எண்ணிக்கை RTI -இல் வெளியீடு .தமிழக அரசு PFRDA விடம்-ஒரு ரூபாய் கூட வழங்காத நிலை-RTI NEWS





அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களுக்கு டாட்டா வின் வணக்கங்கள் ........


தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர்களுக்கு 2010 ல் திரு .ராஜிவ் ரஞ்சன் அவர்கள் அறிக்கை படியும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை படியும் ஊதியம் மத்திய அரசுக்கு இணையாக வழங்கிவிட்டது என பொய்யான தகவல்கள் கூறி ஊதிய பிரச்சினை க்கு தடை ஆணை பெற்று விட்டது .
டாட்டா சங்கம் 2010 புதிதாக துவங்கியது முதல் ஆசிரியர்களுக்கு ஆக போராட்டம் செய்து வருகிறது .இடைநிலை ஆசிரியர் களுக்கு ஊதியம் மறுக்கப்பட்ட காரணம் டாட்டா சங்கம் முலமாக வெளி உலகுக்கு தெரிய வந்தது .RTI சட்டத்தை சரியான காரியங்களை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தி பல்வேறு ஆவணங்கள் அரசுக்கு எதிராக சேகரித்து இதுவரை 1989 முதல் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் பெற்று காரணம் எல்லாம் வரலாறு ஆவணங்கள் 4300 சேகரித்து சட்ட போராட்டம் உயர் நீதிமன்றத்தில் நடத்தி வந்தது .தற்போது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி தடை பெற்று உள்ளதால் நாமும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .நாம் உச்ச நீதிமன்றம் செல்லாவிட்டால் வருங்காலத்தில் ஊதியம் மிகவும் பாதிக்கப்படும் .இதை அறியாமல் நாம் சங்கத்தின் பெயரால் சண்டை போடுகிறோம் .இப்போது நமக்கு தேவை ஊதிய முரண்பாடு தீர்க்க படுதல் ஆகும் .
டாட்டா அனைத்து சங்கங்கள் நடத்தும் கள போராட்டம் வெற்றி பெற தனது பங்களிப்பு வழங்கும் .அதுபோல சங்க பாகுபாடு இல்லாமல் அனைவரும் சட்ட போராட்டம் வெற்றி பெற நிதியுதவி வழங்க வேண்டுகிறேன் .தற்போது காலம் கடந்து கொண்டே செல்கிறது வழக்கு தாக்கல் செய்திட வழக்கறிஞர் அவர்களுக்கு ரூபாய்.2,50,000வழங்க வேண்டியது உள்ளது .ஆனால் இதுவரை நிதியுதவி ரூபாய் 12,500 மட்டுமே கிடைத்துள்ளன .இன்னமும் தேவை அதிகம் .இடைநிலை ஆசிரியரே இழந்து உள் ள உரிமை மீட்க ஊதியம் 9300+4200 என மாற்றம் செய்திட தங்கள் பங்களிப்பு வழங்கிடுங்கள் .
இந்த பாதிப்பு நீங்காவிட்டால் அரசு அடுத்த ஊதிய குழு வில் இடைநிலை ஆசிரியர் களுக்கு ஊதியம் தற்போது பெறுவதில் இருந்து 20,000 உயர்த்தி வழங்குமாறு ? சிந்தனை செய்வீர் இழந்த உரிமை மீட்டிடுவோம்.

டாட்டா கிப்சன் .
இன்றைய01-08-2015 உண்ணாவிரதக் கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் வெளிப்படையாக செய்தனர். ஆசிரியர்களின் ஊதிய பிரச்சினை அரசியலாக்கப்பட்டதற்கு யார் காரணம்...?
ஊடகங்கள், ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்காக போராடுவதாக செய்திகள் பரப்புகின்றன.
நாங்கள் ஊதிய உயர்வுக்காக போராடவில்லை... மாதம் 10,000 த்துக்கும் மேல் இழந்து வருகிறோம். எங்கள் இழைப்பிற்காக தான் போராடுகிறோம்.
எங்கள் கல்வித்தகுதி 10th எனக் கூறி வழங்கிவரும் 2800 தர ஊதியத்தை, எங்கள் உண்மையான கல்வித்தகுதி +2 with Diploma, அதற்கு வழங்க வேண்டிய 4200 தர ஊதியம் பெற... எங்கள் தன்மானம் உயர்வுக்காவே போராடுகிறோம.

இந்த நிலைக்கு யார் காரணம்?
2009 ல் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியக்குழுவில் பெரும் இழைப்பு ஏற்பட்ட பிறகு, அன்று நடத்தப்பட்ட போராட்டங்களினால்...
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்காமல், 1.86 மட்டும் வழங்கி தற்காலிகமாக சப்புகட்டு கட்டியது... அன்றைய அரசா...? இல்லை... 1.86 வாங்கினால் ஊதியம் மட்டும் உயரம், தர ஊதியம் மற்றும் Entry pay குறைவது சங்க நிர்வாகிக்களுக்கு தெரியாமல் போயிற்றா...?

அதைத்தொடர்ந்து நடந்த போராட்டங்களினால் SP 500 மட்டும் வழங்கியது அரசின் தவறா..? இல்லை... அதற்கும் சம்மதித்தது சங்கங்களின் தவறா...?
பிறகு இலகரங்களில் ஆசிரியர்களை சென்னையில் திரட்டி நடத்தப்பட்ட பேரணியின் பலனாக... SP 500வுடன், 250ஐ மட்டும் சேர்த்து, அதை 750 PP ஆக வழங்கியது அரசின் தவறா... அதை பெற்றுக்கொண்டு வெற்றி எனக் கொண்டாடியது சங்கங்களின் கையாளாகாதா தன்மையா...?
2009லிருந்து எத்தனை போராட்டங்கள்...
ஊர்வலங்கள்... உண்ணாவிரதங்கள்... போதும் இவையெல்லாம்...
அனைத்து சங்கங்களும் ஒன்றுபட்டு ஒரு வலுவான போராட்டம்... அது வேலைநிறுத்தப் போராட்டமாக இருந்தால் நலம்...

என்று மாறும் எங்கள் நிலை...???
சம்பத் இடைநிலை ஆசிரியர்
வேலூர். 7845964964
சுடச்சுடச் செய்தி: தொடக்கக் கல்வித் துறை பொது மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 8 ஆம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதலில் தொடங்கி அனைத்து ஆசிரியர்களுக்கும் நான்கு கட்டமாக நடத்தப்பட உள்ளது.என தகவல் கிடைத்துள்ளது.

மேதகு அப்துல் கலாம் மறைவு - 30/07/2015 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - கல்வித்துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்களின் செயல்முறைகள்


பொது விடுமுறை - முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் இறுதிச்சடங்கு 30ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு

இன்று ( 25-7-2015 ) ,ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றம் தடை குறித்து நமது மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்களிடம் அரசின் அபிடவிட் காட்டி விவாதம் செய்யப்பட்டது .அவர்கள் இதில் நாம் கண்டிப்பாக வெற்றி பெற பல்வேறு சாத்தியம் உள்ளன .மேலும் வழக்கை டெல்லி யில் தங்கியிருந்து வழக்கு நடத்தும் வழக்கறிஞர் அவர்களை வைத்து கொள்ளுங்கள் என்றார் .நாம் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் திரு .ந்ந்தகுமார அவர்கள் நடத்த உள்ளார் என்றோம் .நல்லது. என்றார்கள் .மேலும் விரைவாக தடையை நீக்கம் செய்து ஆணை பெற்று வாருங்கள் .அதை வைத்து உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இறுக்கும் வழக்கு எண் 5301/2015;தீர்ப்பு பெற முடியும். என்றார் கள் .எனவே இறுதி வெற்றி இடைநிலை ஆசிரியர்களுக்கே .
இதுவரை உச்ச நீதிமன்றம் வழக்குக்கு நன்கொடை ₹.12,350/-மட்டுமே வரப்பட்டது .நமது தேவை ₹2,50,000ஆகும் .இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சினையில் இது இறுதி யுத்தம் ஆகும் .நாம் தற்போது விட்டு விட்டால் நம் ஆயுள் இறுதி வரை பாதிப்பு தொடருந்து வரும் .உணர்ந்து போராட்டம் சட்ட போராட்டம் செய்து வெற்றி பெறுவோம் ......டாட்டா கிப்சன் .

திருநெல்வேலி போராட்டத்தில் பத்திரிகை களுக்கு கொடுக்கப்பட்ட நோட்டீஸ்


தருமபுரி மாவட்டம்,அரசின்GO 200&232 எதிராக மாவட்ட தலைநகர் Deo அலுவலகம் முன்பு எங்கள் டாட்டாவின் இளம் சிங்கங்கள் ஆர்பாட்ட காட்சிகள்.

இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன் டாட்டா சார்பில் அரசு ஆணை 200 மற்றும் 232 ஐ எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன் டாட்டா சார்பில் அரசு ஆணை 200 மற்றும் 232 ஐ எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
 
 

ஆசிரியர் தகுதித்தேர்வு விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர்களை முற்றிலும் ஏமாற்றுகிறது - சிறப்பு கட்டுரை



மாயமாய் போன மறுசீராய்வு மனு வழக்கு:
கடந்த மாதம் பிப்ரவரி மாதம் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செ;யயதாதவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் மூலமாக சான்றிதழ்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது .. அப்போது ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் அவர்கள் பத்திரிக்கையாளருக்கு ஊடக நண்பர்களுக்கு கொடுத்த பேட்டி இணைக்கப்பட்டுள்ளது இதில் ' தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு 5சதவீதம் ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு வழக்கு நடைபெறுகிறது மேலும் இந்த வழக்கின் உத்தரவின் அடிப்படையில் 5சதவீதம் தளர்வு மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றோருக்கு பின்னர் சான்றிதழ் வழஙகப்படும் என அறிவித்தனர்

இன்னுமா வழக்கு முடியல :
இந்த மதுரை உயர்நீதிமன்ற மறுசீராய்வு மனு என்ன ஆனது என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் நேரிடையாக விளக்க வேண்டும்..இவ்வழக்கு இதுவரை விசாரிக்கப்பட்டதாகவும் எந்த ஒரு நாளிதளிலும் செய்தி வந்ததில்லை ... இந்த வெற்று அறிவிப்பு யாரை ஏமாற்ற?????
காற்றில் பறக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள் :
மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர் முன்தேதியிட்டு வழங்கிய 5சதவீதம் மதிப்பெண் தளர்வு செல்லாது என்ற உத்தரவு வழங்கிய பின்னரும் கூட.. அந்த உத்தரவின் மை காய்வதற்குள்ளாகவே
சேலம் விநாயகா மிசன் பல்கலை கலகத்தின் பட்டம் மற்றும் b.ed பட்டம் ஆகியவை அங்கிகாரம் செய்து ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டி சென்னை உயர் நீதிமன்ற கிளையில் தரும்புரி பெண்ணாகரம் ஒன்றிய ஆசிரியர் சார்பில் டாட்டா பொது செயலாளர் அவர்கள் தலைமையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளன .மேலும் வினாயகா மிசனில் படித்து பாதிக்கபட்டவர்கள் இருந்தால் டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்களை தொடர்பு கொள்ளவும் .

மேலும் பள்ளி கல்வி துறையில் சேலம் விநாயகா மிசன் பல்கலை கலகத்தின் பட்டம் மற்றும் b.ed பட்டம் ஆகியவை அங்கிகாரம் செய்துஊக்க ஊதியமும் ,பதவி உயர்வும் வழங்கப்படுகிறது .ஆசிரியர் தேர்வு வாரியமும் அங்கிகாரம் செய்து பணி நியமனம் வழங்குகிறது.ஆனால் தொடக்ககல்வி துறையில் மட்டுமே மறுக்கப்படுகிறது.இதனால் தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தாங்கள் படித்த சான்றுகள் மற்றும் உங்கள் ஒன்றிய பதவி உயர்வுக்கு ஆன பட்டியல் ( பேனல். ) தங்களை பட்டியலில் சேர்க வேண்டி Aeeo ., deeo அவர்களுக்கு விண்ணப்பம் செய்த மனு நகல்கள். பதிவு அஞ்சல் அட்டை ஆகியவை களுடன் தொடர்பு கொள்ளவும்

 

ஆசிரியர் தகுதித்தேர்வு: தமிழக அரசு மேல்முறையீடு; வழக்கு 2 வாரகாலத்துக்கு ஒத்திவைப்பு!

தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு, வெய்ட்டேஜை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தமிழக அரசு " மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போகிறோம் என்று கூறியது.
இந்த அறிவிப்பால் வழக்கை இரண்டு வாரகாலத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பக்கம் 3 ல் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை படி மத்திய அரசுக்கு இணையாக வழங்கி உள்ளதாக தனது அபிடவிட்டில்  கூறியுள்ளது .தமிழ் நாட்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 வது ஊதிய குழுவில் ஏற்கனவே பெற்று வந்ததை விட குறைவான ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது . உண்மையை  மறைத்து ஊதிய பிரச்சனையில்  உச்ச நீதிமன்றத்தில் அரசு நீதிமன்ற தடை பெற்று உள்ளது . இதை

   எமது இடைநிலை ஆசிரியர் சமுதாயம் எப்போது உணர்வடையுமோ?
 

ஊதிய பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் அரசு பெற்று இருக்கும் அரசின் தடை காரணமாக தான் அரசு ஆணை 200 வெளியிட்டு உள்ளது .

தமிழ் நாட்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 வது ஊதிய குழுவில் ஏற்கனவே பெற்று வந்ததை விட குறைவான ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது .அதற்கு எதிராக டாட்டா சங்கம் கடந்த 2012 முதல் பல்வேறு சட்ட போராட்டம் மற்றும் RTI தகவல் மூலம் போராடி வருகிறதை தங்கள் 
அறிவீர்கள் 




தற்போது அரசு ஆணை 200 மூலம் ஊதிய பிரச்சனை பற்றி கோரிக்கை வைக்க கூடாது . RTI  மூலம் தகவல் கோருதல் கூடாது. வழக்கு தாக்கல் செய்வதால் நிதித்துறை பணிகள் பாதிக்க படுவதாக கூறியுள்ளது .

 அரசு டாட்டா கிப்சன் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் டாட்டா சங்கம் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்திட வழிசெய்யப்பட்டு உள்ளது,அதன் அடிப்படையில் நாம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் 9300 + 4200 என மற்றம் செய்யப்பட விரைவில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

அரசு தனது அபிடவிட் டில் கூறியுல்லதை பக்கம் 14 ( N ) ல் உள்ளத்தின் அடிப்படையில் தான் அரசு ஆணை  200 வெளியிடப்பட்டு உள்ளது.  நமது மூத்த வழக்கறி ஞர்  அவர்கள்  உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்து உள்ள 2342 பக்கம் கொண்ட 4 வாலீம் ஆவணங்களை எடுத்து உள்ளார்கள் .அதில் ஆசிரியர்களை பற்றியும் அரசு கூறியுள்ளது.அரசின் அபிடவிட் நகல் டாட்டா கிப்சன் அவர்களுக்கு டெல்லியில் இருந்து மூத்த வழக்கறி ஞர்  அவர்கள் 400 பக்கம் அனுப்பப்பட்டு உள்ளது.

அதை படித்து பார்த்ததில் கண்டிப்பாக நாம் எளிதில் வெற்றி பெறலாம் .அரசு 3 ஊதிய குழு அமைத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய பிரச்சனை தீர்க்கப்பட வில்லை என்பதை நாம் எளிதில் உச்ச நீதிமன்றத்தில் நிருபித்து அரசு பெற்று இருக்கும் தடை நீக்கி விடலாம் .அல்லது 7 ஊதிய குழு விரைவில் நடைமுறை படுத்த உள்ளதை சுட்டிகாட்டி அவசர வழக்காக எடுத்து விரைந்து நமது ஊதிய பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரலாம் என கூறியுல்லார்  கள்  
நமக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தாக்கல் செய்திட மூத்த வழக்கறிஞர் .சமூக போராளி.திரு .நந்த குமார் அவர்கள் வாதிடுகிறார்
வழக்கறிஞர் பீஸ் ₹.2.5. இலட்சம்தேவையாக உள்ளது .
 இந்த விசயத்தை இடைநிலை ஆசிரியர் களின் பொது பிரச்சினை யாக நினைத்து அனைவரும் சேர்ந்து ஊதிய வழக்கில் வெற்றியை பெற்றிடுவோம் . நிதியுதவி அனுப்ப வேண்டிய முகவரி c.kipson.
235.north street .
Parappadi,627110.
Nellai -district
sbi .ambai .
A/c.no,30486085987.
Bank code no,804.
 அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதில் இருந்து சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு ...

 


IGNOU- B.Ed. Prospectus for January 2016

இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுக்கப்படும் ஊதியமும் இழைக்கப்படும் அநீதியும் :-


தமிழக அரசின் தொடக்க கல்வித்துறையின் கீழ் இடைநிலை ஆசிரியர்கள் ,
மொத்தம் 1,16,129, பேர் பணிபுரிந்து வருவதாக ஒருநபர் மற்றும்
மூன்று நபர் குழுக்கள் மூலம் அறிக்கை
சமர்பிககப்பட்டுள்ளது.
01-06-2009பின் பணிநியமனம் பெற்றவர்கள் ஏறக்குறைய 17000பேர்
ஆறாவது ஊதியக்குழுவின் மூலம் 01-06-2009 ல் அரசாணை 234 வெளியிடப்பட்டு (new revised scale)
(புதிய ஊதிய விகிதம்)
இடைநிலை ஆசிரியர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தை விட,
01-06-2009 பின்னர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள்
மாதம் ரூபாய் 8000/-
இன்று வரை இழந்து கொண்டு வருகின்றனர் .
ஒரே கல்வித் தகுதிக்கு இரு வேறுபட்ட ஊதியம் கூடாது என நீதிமன்றங்கள் பல தீர்ப்புகள் வழங்கியிருந்தாலும்
தொடர்ந்து.....
ஒருநபர் குழு மற்றும் 3 நபர் ஊதியக் குழுக்களாலும் ஏமாற்றமே மிஞ்சியது...
இடைநிலை ஆசிரியர்கள் கிராமப் புறங்களில் பணியாற்றுவதல் ,
விலை வாசி குறைவு என்றும் அவர்களின் கல்வித்தகுதி 10ம் வகுப்பு என்றும்
அதிக அளவில் ,அதாவது 1,16,129 இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றுவதால்
ஊதியம் வழங்க இயலாது என தவறான மற்றும் பொய்யான அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உண்மை அதுவல்ல,
இடைநிலை ஆசிரியர்கள் கல்வி தகுதியானது 10 + 12 + பட்டயச்சான்று ஆகும்.
மேற்கண்ட ஊதிய குழுக்களால் இடைநிலை ஆசிரியரின் ஊதியம்
மறுக்கப்பட்ட காரணத்தினால் சென்னை உயர்நீதி மன்றத்தில் எமது இயக்கம் இது சார்பாக வழக்கு தொடர்ந்தது.
1.06.2009 க்குப்பின் பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் அதிக அளவில்
பாதிக்கப்பட்டதோடு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்று கூறப்பட்ட
தேர்தல் வாக்குறுதியும் காணல் நீராக மாறிவிட்டது. ......
கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009 க்குப்பின் பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின்
கல்வித்தகுதி 10+12+பட்டயச்சான்று என பணிநியமன ஆணையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதை (TRB calling letter) சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்நிலையில் கடந்த 10.07.2015 அன்று அரசாணை 200யை அரசு வெளியிடப்பட்டிருப்பது
மீண்டும் இடைநிலை ஆசிரியர் சமுதாயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.....
மேற்படி அரசாணையில் ஊதியம் திருத்தம் சார்பான கோரிக்கைகள்
Pay revision commission,
அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அரசாணை 234இன்படி 1.06.2009க்குப்பின்பு பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டதோடு
ஒரு நபர் குழு PGRC (pay grievence redreffing cell) இன் மூலம் 4376 representation பெறப்பட்டு இன்று வரை ஊதியம் சார்பாக 89 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு 2இலட்சம் அரசு ஊழியர்கள் பயனடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் அதில் ஏமாற்றப்பட்டனர்
மேலும் தனிநபர் மற்றும் சங்கங்களால் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ஊதியம் சார்பாக பல்வேறு தகவல்கள்
தொடர்ந்து கோரப்பட்டு வருவதால் நிதிதுறைக்கு அதிகமான வேலைப்பளு ஏற்பட்டதாம்.
அதாவது தனிநபரோ அல்லது சங்கமோ அடுத்த ஊதிய குழு வரும் வரை ஊதியம் திருத்தம் கோரி வர வேண்டாமென்று மேற்படி அரசாணையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

" ஊதிய குழுக்களாலும், அரசாங்கத்தாலும் ஊதியம் மறுக்கப்படுவது வேதனையான விஷயம்
இந்நிலையில் 7வது ஊதியக் குழு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவுகின்றது......
எழுத்தறிவிக்கும் இடைநிலை ஆசிரிய சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியதாகவே கருத நேரிடுகிறது...........

டாட்டா கிப்சன் .

7வது ஊதியக்குழு பற்றி
எல்லா அரசு அலுவலகங்களும்
கனவு கண்டு கொண்டிருக்கும்போது பாவம்யா...
இடைநிலை ஆசிரியர்களோ
6வது ஊதிய குழுவால் இழைக்கப்பட்ட அநீதிக்காக
அழும் நிலை...

என்னம்மா... இப்டி பன்றேளம்மா...