PAGEVIEWERS


இரட்டைப்பட்ட வழக்கின் நடவடிக்கை விவரங்கள்

 இரட்டைப்பட்டடம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில்தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புதுதில்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவ்வழக்குஉச்ச நீதி மன்றம் 6வது அமர்வில் நீதியரசர்கள் இரதாகிருஷ்ணன்மற்றும் 
விக்ராம் சிங்சென் முன்னிலையில் 25வது வழக்காக கடந்த 02.05.2014அன்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசு மற்றும் பல்கலைகழகமானியக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கினைமுன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், இன்றைய மூத்தவழக்குரைஞரான கிரி அவர்கள் பங்கேற்று வாதாடினார். வழக்கைஏற்றுக்கொண்ட நீதி பதி அவர்கள் 7.5.2014 அன்று உத்தி வைத்தனர்.வழக்கானது மீண்டும் 9.05.2014 அன்று மீண்டும் விசாரணைக்குவந்தது. அதில் பங்கெடுத்த யு.ஜி.சி. 1010 102103101 என்றஅடிப்படையில் பயின்றால் அந்த படிப்பு தகுதியானது பதில்அளித்தது. இருந்தாலும் விரிவாக பதிலுரை தாக்கல் செய்ய காலஅவகாசம் தேவைப்படுவதாக யு.ஜி.சி. கேட்டுக்கொண்டது. தமிழகஅரசும் கால அவகாசம் கேட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவேஉச்ச நீதி மன்றத்தில் வழக்கை தாக்கல் செய்த அனைவருக்கும்வழக்கு குறித்த விபரம் அனுப்ப நீதி மன்றம் முனைந்துள்ளது. அதன்பின் வழக்குரைஞர்கள் மூலம் உச்ச நீதி மன்றத்தைநாடியுள்ளவர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும்.

இது குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் திரு.கலியமூர்த்தி அவர்கள்நம்மிடம் கூறியதாவது: இரட்டைப்பட்டம் வழக்கை உச்ச நீதி மன்றம்ஏற்றுக்கொண்டது என்பதே எங்களுக்கு கிடைத்த வெற்றியாககருதுகிறோம். ஏனென்றால் வழக்கியல் நியாயம் இல்லாமல் உச்சநீதி மன்றம் எந்த வழக்கையும் ஏற்றுக்கொள்வதில்லை. இதில்யு.ஜி.சியும் எங்களுக்கு சாதகமாக பதில் அளித்துள்ளது. இதில்யாருடைய பதவி உயர்வையோ அல்லது பணியமர்த்துவதையோதடுப்பது எங்கள் நோக்கம் அல்ல. ஆனால் அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடிள்ள அனைவருக்கும் 1.1.2012 முன்னுரிமையைபெறுவது என்பது உறுதியாகி விட்டது. எனவே நாங்கள் இந்த முறைஉறுதியாக வெற்றியடைவோம். இது குறித்து இரட்டைப்பட்டம்படித்து பதவி உயர்வை தவறவிட்டவர்கள் மற்றும் ஆசிரியர் தகுதிதேர்வில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் கூட்டம் சென்னைஅல்லது திருச்சியில் தேர்தல் முடிவுக்கு பின்பு நடத்துவதற்குஆலோசணை செய்து வருகிறோம் என்றார். மேல் விபரங்களுக்குகீழ் கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

1. திரு. கலியமூர்த்தி - 9894718859 (விழுப்புரம்)
2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162 (சிவகங்கை)
3.திரு.கணேஷ் - 9976105153 (சிவகங்கை)
4.திரு.கருணாலய பாண்டியன் - 9894192500 (திருவள்ளூர்)
5.திரு.இரவிச்சந்திரடுலு - 8608273362
6.திரு. விஸ்வநாத் - 9842942105

No comments:

Post a Comment