PAGEVIEWERS

நீதி வென்றது அநீதி அடி பணிந்தது............

நீதி வென்றது அநீதி அடி பணிந்தது தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் திருமதி இரா. திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு.
திருமதி இரா. திருவளர்செல்வி அவர்கள் கரூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராகப் பணி புரிந்த போது, கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்த ஆசிரியர் திரு .என். வடிவேல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி இரா.திருவளர்செல்வி அவர்கள் தொடர்பான தகவல்களை கோரியிருந்ததால் ஆசிரியர் திரு. வடிவேல் என்பவரை முதன்மை கல்வி அலுவலர் தொலைபேசியில் மிரட்டியதால் ,முதன்மை கல்வி அலுவலர் திருமதி திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ஆசிரியர் வடிவேல் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றம் மதுரைக் கிளையில் வழக்கு எண் Crl.O.P.(MD)No.12859 of 2015 என்ற வழக்கு தொடர்ந்த வழக்கில் தற்போதைய தஞ்சாவூர் முதன்மை க் கல்வி அலுவலர் திருமதி. இரா.திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதி மன்றம. மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment