PAGEVIEWERS

ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றம் தடை - நீக்கம் செய்திட TATA சங்க பொது செயலாளர் தலைமையில் 4 பேர்  செப்டம்பர் 5 ல் ஆசிரியர் தினத்தில் டெல்லி பயணம் .

நமது சங்கம் சார்பாக இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனையில் முதலில் 33399/2013 வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .அதற்கு தமிழக அரசு கடித எண் 60473/ஊ.கு.தீ.பி./2014. மூலம் ஊதியம் வழங்க முடியாது என அறிவித்தது.
                           அதற்கு எதிராக 2 வது வழக்கு 1612/2015 வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.அதற்கு தமிழக அரசு கடித எண் .12925/ஊ.கு.தீ.பி./2015.நாள் .27.5.2015 மூலம் அரசு உச்ச நீதிமன்றத்தில் ஊதிய முரண்பாட்டை தீர்க்க தடை பெற்று உள்ளது .எனவே 9300+4200 வழங்க முடியாது என தெரிவித்து உள்ளது.
மேலும் நமது சங்கம் சார்பான வழக்கு 5302/2015.தற்போது மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ளது,.
                              அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர்களுக்கு 2010 ஆண்டிலேயே மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கி விட்டோம் என தனது அபிடவிட்டில் பொய்யான தகவலை கூறி தடை பெற்று உள்ளது .மேலும் தடை நீக்க பட வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நமது உண்மை நிலையை கூறி உரிமையை நிலைநாட்டிட தெளிவான தீர்ப்பு பெற்றால் மட்டுமே 7 வது ஊதிய குழுவிலும் பாதிப்பு வராமல் தடுக்க முடியும் .ஆனால் 80 % பேர் வரும் பாதிப்பு அறியாமல் உள்ளனர் .பலர் ஏளனம் பேசுகிறார்கள் .பலர் டாட்டா சங்கம் மூலம் ஊதிய பிரச்சனை தீர்ந்து விட கூடாது என செயல்படுகிறார்கள் .
                       யார் தடுத்தாலும் 8 வருடம் இழந்து வருகிற ஊதிய உரிமை மீட்கப்பட அனைவரும் டாட்டா சங்கத்தின் சட்ட போராட்டம் வெற்றிப்பெற ஆதரவு தாருங்கள் .வருகிற சி.ஆர் .சி .கூட்டத்தில் உரிமை மீட்கப்பட விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் .உணர்வுள்ள அன்பர்களே உண்மை நிலை அனைவரும் அறிந்திட .......இறுதி வெற்றி என்றும் இடைநிலை ஆசிரியருக்கே ..டாட்டா கிப்சன்.

No comments:

Post a Comment