PAGEVIEWERS

ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு


click here G.O 363,DT 23.08.2013 D.A Hike to those retired between 1.6.1988 and 31.12.1995 – Orders - Issued.
ஓய்வூதியர்களுக்கான பஞ்சப் படியை உயர்த்திதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி1988ஜூன் 1ம்
தேதியில் இருந்து, 1995டிசம்பர்31ம் தேதி வரை ஓய்வு பெற்றவர்களுக்குபஞ்சப் படியை உயர்த்திதமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படிகுறிப்பிட்ட ஆண்டில் ஓய்வு பெற்றவர்களுக்குமாதம்870 ரூபாய்கூடுதலாகக் கிடைக்கும்.

TNPSC GROUP -IV தேர்வு (25.08.2013)உத்தேச விடைகள் வெளியீடு.

யுஜிசி நெட் தேர்வு | ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் பாடப்பிரிவுகளில் இளநிலை ஆராய்ச்சியாளர் (JRF) மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர் பணிகளில் சேருவதற்கான நெட் தேர்வை சிஎஸ்ஐஆர் மற்றும் யுஜிசி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தகுதித் தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Chemical Sciences. Earth, Atmospheric, Ocean & Planetary Sciences, Physical Sciences. Engineering Sciences ஆகியவை தேர்வுக்கான பாடப்பிரிவுகளாகும்.

கடன் வாங்கிப் படித்தல்

“இனி கல்விக் கடனைப் பெறுவதற்கு மாணவர்கள் தலையைக் குனிந்து கொண்டு வங்கிகளுக்குள் நுழையத் தேவை இருக்காது. நிமிர்ந்த தலையோடும் கம்பீரத்தோடும் அவர்கள் வங்கிகளுக்குள் கல்விக் கடனுக்காக நுழையலாம்.

ஒரு காலத்தில் கல்விக் கடன் ஒரு சலுகை போல இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது கல்விக் கடன் என்பது மாணவர்களின் உரிமையாக மாறியிருக்கிறது,”

என்பது மதிரிப் பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் சிதம்பரம் . ஆக கல்வியோ, வேலையோ மாணவ்ர்களது உரிமையாக மாறாது போயினும் கல்விக் கடனேனும் அவர்களது உரிமையாய் போயிருக்கிறது. இந்த மட்டிலும் உரிமை என்று சொல்லிக் கொள்கிற மாதிரி மாணவர்களுக்கு ஏதோ ஒன்றைத் தந்தமைக்காக அவரைப் பாராட்டியேத் தீர வேண்டும்தான்.

மேலோட்டமாகப் பார்த்தால்,

“கல்விக் கட்டணம் செலுத்த இயலாத ஏழை மாணவர்களது படிப்பு இடையில் நின்றுவிடக் கூடாது என்பதற்காகத்தானே இவ்வளவையும் செய்கிறார்கள். அதையும் குறை சொன்னால் எப்படி?” என்றுகூடத் தோன்றும்.

“பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்றாள் அவ்வை. பிச்சை எடுத்தேனும் படி என்கிறாள் கிழவி. கொஞ்சம் இதை மாற்றிச் சொன்னால் கற்பதற்காக பிச்சை வேண்டுமானாலும் எடு என்றாகும்.

பச்சையப்பன் அறக்கட்டளையை(S.R.M.கல்வி நிறுவனங்களை ) அரசே ஏற்று நடத்த வேண்டும்: கல்வியாளர்கள்

பச்சையப்பன் அறக்கட்டளை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவியேற்பு தாமதமாவதால், அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரி நிர்வாகப் பணி முடங்கியுள்ளதால், பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குனர்கள் மீண்டும் மாற்றம்



               பள்ளிக்கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்களின், "டிரான்ஸ்பர்' திரும்ப பெறப்பட்டு உள்ளது. ஒருவர் மட்டும், வேறு பணியிடத்திற்கு, மீண்டும் மாற்றப்பட்டார்.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர், சேதுராம வர்மா, மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக, கடந்த, 12ம் தேதி மாற்றப்பட்டார். 

             மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனர், கார்மேகம், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உறுப்பினராக மாற்றப்பட்டார். தற்போது, இந்த மாற்றங்கள், "வாபஸ்' பெறப்பட்டு உள்ளன. ஏற்கனவே இருந்த இடங்களில், இருவரும் தொடர்ந்து பணியாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், டி.ஆர்.பி.,யில் உறுப்பினராக இருந்த உமா, தேர்வுத் துறை இணை இயக்குனராக மாற்றப்பட்டிருந்தார். 
இன்று தமிழகமெங்கும் தொடக்கப்பள்ளி 

ஆசிரியர்களுக்காக COMMUNICATIVE ENGLISH 

பயிற்சி நடைபெற்றது. எனவே இன்று மீண்டும் நம் 

ஆசிரியர்களுக்காக TRAINING MODULE FOR FIRST 

STANDARD ENGLISH TEACHERS என்ற பெயரில் நாம் 

முன்னரே வெளியிட்ட பதிவினை மீண்டும் 

உங்களுக்காக வெளியிடுகிறோம்.

TRAINING MODULE FOR FIRST STANDARD ENGLISH MEDIUM TEACHERS.

             

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோளினை உங்களுக்காக வெளியிடுகிறோம்.

நன்றி : www.aeeoassociation.blogspot.com

இனிய வணக்கம்
               AEEO நண்பர்களே...!! கல்வி சார் வலைபூ  நண்பர்களே...!! கல்வி சார் முகநூல் நண்பர்களே..!! மீண்டும் வணக்கங்கள்
                    
                     ஒரு வேண்டுகோள்

1.பள்ளிகளை பார்வை செய்யும்போது எந்த மாதிரியாக பார்வையிட வேண்டும் என்ன பதிவேடுகளை பார்க்கலாம் கற்றல் கற்பித்தல் சார்பாக வகுப்பறை பார்வை பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்

2.பள்ளி ஆண்டாய்வு செய்யும்போது எந்த மாதரியாக ஆண்டாய்வு செய்ய வேண்டும் என்ன என்ன பதிவேடுகள் பார்வையிட வேண்டும் ஆண்டாய்வுபடிவம்  மாதிரி , AEEO பூர்த்தி செய்து DEEO விடம் சமர்ப்பிக்க எதுவாக படிவம், முதலிய வற்றையும் உங்கள் கருத்துக்களையும் முன்னால்இயக்குனர்கள் வழிகாட்டுதல் அரசு ஆணைகள் முதலியவற்றை எங்களுக்கு அனுப்புங்கள்
          
                    முக்கிய அறிவிப்பு

364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: 27-ந் தேதி தேர்வுசெய்யப்படுகிறார்கள்


முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தையட்டி தமிழக அரசு சார்பில் 364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். நல்லாசிரியர் விருது ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி : ரூ.100 கோடியில் துவக்கம்

சென்னை: ஸ்ரீரங்கம் தாலுகாவிற்குட்பட்டநாவலூர் குட்டப்பட்டு கிராமத்தில்100 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள,தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியைமுதல்வர் ஜெயலலிதாநேற்று, "வீடியோ கான்பரன்ஸ்மூலம்திறந்து வைத்தார். தமிழ்நாட்டில்,
மேம்படுத்தப்பட்ட சட்ட உயர் கல்வி வழங்கதிருச்சி மாவட்டம்,ஸ்ரீரங்கம் தாலுகாவிற்குட்பட்டநாவலூர் குட்டப்பட்டு கிராமத்தில்,தேசிய சட்டப்பள்ளி அமைக்க2011ஜூலை7ம் தேதிமுதல்வர் ஜெயலலிதா தலைமையில்

போலி வினாத்தாள் மோசடி டி.ஆர்.பி ஊழியர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு-DINAKARAN

ஆசிரியர் தகுதித் தேர்வு போலி வினாத்தாள் மோசடி தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய(டி.ஆர்.பி) ஊழியர்களிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும்
கடந்த
17, 18ம் தேதிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வு (டெட்) நடந்தது. முதல் நாள் தேர்வுக்கு முன்னதாகவே வினாத் தாளை தருவதாக கூறி மோசடி நடந்தது.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் அசோக்குமார் என்பவர் புகார் செய்தார். அதில்ஒரு கும்பல் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் தருவதாக கூறி தன்னிடம் ரூ.1 லட்சத்தை பெற்றுக் கொண்டுதராமல் ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார். இதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் தர்மபுரி அருகே 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது.

ஆசிரியர் நல தேசிய நிதி நிறுவனம் - தொழிற்கல்வி பட்டப்படிப்பு / பட்டயப் படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2011-12 மற்றும் 2012-13ம் ஆண்டிற்கு உதவி தொகை வழங்க விண்ணபங்களை வரவேற்கப்படுகிறது.

பள்ளிக்கல்வி - SAVE PAPER - SAVE TREES - அறிவியல் செய்முறை பயிற்சி ஏடுகள் மற்றும் ஒப்படைப்புகளில் ONE SIDE பயன்படுத்துவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு


100நாள்  வேலை திட்ட பணியாளர் மூலம் பள்ளி ,அரசு நிலம் ,ரோடு ,தெரு முதலிய இடங்களில்  

மரம் வளர்க்க கோரிய TATA பொது செயலாளர் கோரிக்கை ஏற்பு 




கடித எண். 8764 நாள்: 18.4.2012  ஐ வைத்து தனி ஊதியம் சார்ந்து எழுந்துள்ள நிலைகளுக்கு விளக்கம்.

 திரு. தாமஸ் ராக்லேண்டு (TATA துணை பொதுச் செயலர் )
 

கடித எண்.8764 நாள் : 18.4.2012  பற்றி சிலர் விளக்கம் கேட்டுள்ளதாலும், மேலும் தனிக்கைத்தாளில் இக்கடிதத்தை குறிப்பிட்டுள்ளதாலும் இதுகுறித்தும் விளக்கிட விரும்புகிறோம்.

இந்த கடிதத்தில் பத்தி 2 (இ ) இல், " பார்வை இரண்டில் கண்டுள்ள அரசாணையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2010 முதல் அனுமதிக்கப்பட்ட சிறப்புப்படி ரூ.500/- , 1.1.2006 -க்கு முன்னர்  தேர்வுநிலை/  சிறப்புநிலை எய்திய மேற்கூறிய ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்." என்று உள்ளது.

        (பார்வை 2 இல் அரசாணை  270 நாள்.26.8.2010. உள்ளது.)

இதன் படி சிறப்புபடி GRANTED TO SECONDARY GRADE TEACHERS என இருந்ததால் இதனை பெற்றவர்கள் குறித்து நமது முந்தைய பதிவில் தெளிவாக விளக்கியுள்ளோம். 1.8.2010 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த அரசாணைப்படியான சிறப்புப்படியை டிசம்பர் 2010 வரை அனைத்துநிலை இடைநிலை ஆசிரியர்களும் பெற்றிருப்பர்.

  பின்னர் அரசாணை  23 நாள் 12.1.2011 இன் படி(பத்தி 4)   " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும்  இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுநிலை மற்றும்   சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." என்று உள்ளது. 

        இவ்வாறு சிறப்புபடியினை தொடர்ந்துபெற அனுமதிக்கப்பட்டவர்கள், 1.1.2006 -க்கு முன்னர் தேர்வு/சிறப்பு நிலை பெற்றவர்களே.

        இதனையே கடித எண் .8764 நாள்.18.4.2012 இல்  " பார்வை இரண்டில் (அரசாணை  270) கண்டுள்ள அரசாணையில் இடைநிலை ஆசிரியர் (GRANTED TO SECONDARY GRADE TEACHERS)  மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு,      01.08.2010 முதல் அனுமதிக்கப்பட்ட சிறப்புப்படி ரூ.500/- , 1.1.2006 -க்கு முன்னர்   தேர்வுநிலை/  சிறப்புநிலை எய்திய மேற்கூறிய ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்." என்று உள்ளது.

 இரட்டை பட்ட வழக்கு இன்று வரவில்லை செவ்வாயன்று (27-8-13) வருகிறது


இரட்டை வழக்கு விபரமாக சென்ற ஆசிரிய நண்பர் கூறியதாவது :
இன்று 152 வது வழக்காக இருந்தது. இன்று ஒரு நீதிபதி ஓய்வு
பெறுவதால் அமர்வு மதியம் 3-30 மணிக்கு மேல் நடைபெறவில்லை. மேலும் வரும் செவ்வாயன்று முதல் 10 விசாரணை வழக்கிற்கான இடத்திற்குள் வரும் என்று வழக்குரைஞர் கூறினார்-மேலும் செவ்வாயன்று வழக்கை அன்றைய தினம் கொண்டு வருவதற்கும் மற்றும் வழக்கை முடிப்பதற்கும் முழு முயற்சி செய்து வருகிறோம் என்று நண்பர் திரு .கலையரசன் கூறினார் .

நன்றி -திரு .கலையரசன் ஆசிரியர் -நாகப்பட்டினம் 
2009  நியமன இடைநிலை ஆசிரியர் வழக்கின் நிலை  




SUPREME COURT OF INDIA
Case StatusStatus : PENDING
Status of Appeal Civil    6186 -6187    OF   2008
STATE OF T.NADU & ANR.   .Vs.   UNEMPLOYED SEC.GRADE TECH.WELF.ASSN.&ORS
Pet. Adv. : MR. M. YOGESH KANNA   Res. Adv. : MR. SUMIT KUMAR
Subject Category : SERVICE MATTERS RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT
Appealed Against : WA 119/08 OF HIGH COURT OF MADRAS

Last Listed on : 06/08/2013         
Last updated on Aug 21 2013
Click Here for Latest Office Report
Click Here for Latest Order

Click here for Archive Orders
    



ITEM NO.3               COURT NO.7             SECTION XII


            S U P R E M E   C O U R T   O F   I N D I A
                         RECORD OF PROCEEDINGS


IA 12-13/2012 in CIVIL APPEAL NO. 6186-6187 OF 2008


STATE OF T.NADU & ANR.                            Appellant (s)

                 VERSUS

UNEMPLOYED SEC.GRADE TECH.WELF.ASSN.&ORS          Respondent(s)
(for direction and office report)


Date: 05/04/2013  These Appeals were called on for hearing today.


CORAM :
        HON'BLE MR. JUSTICE T.S. THAKUR
        HON'BLE MR. JUSTICE M.Y. EQBAL


For the appearing parties :

                        Ms. V. Prabhakar,Adv.
                        Mrs. Revathy Raghavan,Adv.
                        Ms. Jyoti Prashar,Adv.

                        Dr. A. Francis Julian,Sr.Adv.
                        Mr. Sumit Kumar,Adv.
                        Mr. Danish Z Khan,Adv.

                     Mr. Guru Krishna Kumar,Sr.A.A.G
                        Mr. M. Yogesh Kanna,Adv.
                        Mr. A Santha Kumaran,Adv
                        Ms. Sasikala,Adv.

                        Mr. K. Ramamoorthy,Sr.Adv.
                        Mrs. N. Shobha,Adv.
                        Mr. Sri Ram J Thalapathy,Adv.
                        Mr. V. Adhimoolam,Adv.

                        Mr. G. Sivabalamurugan,Adv.
                        Mr. Anis Mohal,Adv.
                        Mr. L.K. Pandey,Adv.

                        Mr. G. Umapathy,Adv.
                        Mr. S Ram Subramanian,Adv.
                        Mr. Rakesh K Sharma,Adv.


                        Mrs. V. Mohana,Adv.
                        Mr. B. Ragunath,Adv.
                        Mr. Vijay Kumar,Adv.

                        Mr. Jayanth Muth Raj,Adv.
                        Mrs. Malavika J.,Adv.
                        Mr. Sureshan P.,Adv.
(tata layars)



           UPON hearing counsel the Court made the following
                               O R D E R


        List all the appeals and connected matters along  with  these  I.As
     for final hearing on 6.8.2013.
        Pleadings  may  be  completed  in  the  meantime,  if  not  already
     completed.




    |(N.K. GOEL)                             | |(VEENA KHERA)                     |
|AR-CUM-PS                               | |COURT MASTER                      |

NIC



தற்போது 1.1.2011 -க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் அனுமதியில்லை எனவும் அதனால் பெற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வேலூர் பகுதி பள்ளிகளில் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிலவி வரும் தகவல்களுக்கு விளக்கமளிக்க உங்களுக்கு முதலாவது சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்களின்   17.5.2011 நாளிட்ட   கடிதத்தை உங்களுக்காக வெளியிட்டு எங்கள் கருத்தினையும் உங்கள் முன் பதிவு செய்ய விரும்புகிறோம். 

 திரு. தாமஸ் ராக்லேண்டு (TATA துணை பொதுச் செயலர் )
 

தற்போது எழுந்துள்ள நிலைகளை விளக்குவதற்கு முன்னர் S.A.மற்றும்  P.P பற்றிய தகவல்களை அரசாணைகளின் படி பார்ப்போம்.

SPECIAL ALLOWANCE  பற்றிய   விளக்கம் :

          இது ஒரு நபர் குழுவைத் தொடர்ந்து அரசாணை 270 நாள்.26.8.2010 இன் மூலம் இ.நி.ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது அரசாணையில் "Government direct that the Special Allowance of Rs.500/- per month be granted to the Secondary Grade Teachers and Headmaster High Schools" என்று உள்ளது. மேலும் இறுதியில் " The Special Allowance sanctioned in Para - I above shall take effect from 1.8.2010. 

    இதில் Secondary Grade Teachers என்று குறிப்பிடப்பட்டதால் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் S.A. பெற தகுதியாகி 1.8.2010 முதல் பெற்றனர். 

பின்னர் 12.01.2011 இல் அரசாணை  23 இன் படி தனி ஊதியம்.

   இதில் பத்தி  4 - இல்   "  இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பென்ஷனை நிறுத்தி வைக்க உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு


               "பென்ஷன் என்பது, ஒருவர், நீண்ட காலம் பணியாற்றியதற்காக கொடுக்கப்படும் நிதி; அது, அவரின் உரிமை. ஒருவர் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள், வழக்குகள் ஆகியவற்றை காரணமாக வைத்து, அவரின் பென்ஷனை நிறுத்தி வைக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட், உத்தரவிட்டுள்ளது.


           ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர், ஜித்தேந்திர குமார் ஸ்ரீவத்சவா மீது, குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இதை காரணமாக வைத்து, அவருக்கான பென்ஷன் மற்றும் பணிக் கொடையை கொடுக்காமல், அம்மாநில அரசு நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து, அவர், ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு செய்தார்.