PAGEVIEWERS

மாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம்
எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர,
மொத்த சம்பளம் எவ்வளவு?
அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்?
எதற்கு பிடிக்கிறார்கள்? என்பது தெரியாது.

வருமான வரிக்காக பிடிக்கிறார்களா? அல்லது
வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்) பிடிக்கிறார்களா? என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள்? என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன? என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர்.

இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை.
எவ்வளவு பிடிக்கிறார்கள்?
***************************************
பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். பணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் தொகையில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும் 3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும். ஆனால் சமீப காலமாக சிடிசி (cost to company) முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள்.

சம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந் தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. இந்த தொகையையும் நிறுவனங்கள் பென்ஷன், காப்பீடு என்று பிரித்து முதலீடு செய்கின்றன.
நிரந்தர கணக்கு எண்
*******************************
புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு ஆரம்ப காலங்களில் செய்த முக்கியமான பணி நிரந்தர வைப்பு நிதி எண் ( யுஏஎன் - Universal Account Number) கொண்டுவந்ததுதான். இதன் மூலம் பி.எஃப். தொகையை கையாளுவது எளிதாகிவிட்டது. பலர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால் புதிய நிறுவனத்துக்கு சென்றவுடன் பழைய பிஎஃப் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் தொகை யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யுஏஎன் கொண்டுவரப்பட்டது. இதனால் புதிய நிறுவனத்துக்கு செல்லும் போது யுஏஎன் எண்ணை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் சேர்ந்துவிடும். பயனாளிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் தொகையை கையாளலாம்.

தெரிந்துகொள்வது எப்படி?
****************************************
சில வருடங்களுக்கு முன்பு பி.எஃப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யுஏஎன்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் இணையத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, வட்டி எப்போது வரவு ஆனது. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல் களையும பார்த்துக்கொள்ள முடியும்.

இணையதளம் தவிர பி.எஃப் கணக்கை நிர்வகிக்க செயலி இருக் கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்மு டைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். தவிர அந்த இணையதளத்தில் இருக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் கணக்கில் இருக்கும் தொகையை அறிந்துகொள்ளலாம்.
பணம் எடுப்பது எப்படி?
***********************************
பி.எஃப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக் காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பிஎஃப் தொகை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

பணியில் சேர்ந்து ஐந்து வருடத் துக்குள் பி.எஃப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எஃப். தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். பணம் எடுப் பதை தவிர சில தேவைகளுக்கு முன் பணம் கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம், குழந்தைகளில் கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு எடுத்து கொள்ளலாம்.
ஆன்லைன் பரிவர்த்தனை
******************************************
வரும் மார்ச் மாதம் முதல் ஆன் லைனிலேயே பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். மூன்று மணி நேரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பி.எஃப். தொகை அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும். இந்த வசதியை பிஎஃப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்திருக்கிறார். தற்போது ஆதார் எண் இருப்பவர்கள் 3 நாட்களில் தங்களது தொகையினை பெற்றுக் கொள்ள முடியும்.

பங்குச் சந்தையில் பி.எஃப்.
***************************************
ஓய்வு காலத்துக்காக சேமிக்கப்படும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்களே என்று அச்சப்பட தேவையில்லை. இப்போது பி.எஃப். ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் தொகை இருக்கிறது. இவை அரசாங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக பி.எஃப். அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தொகையில் முக்கியமான குறியீடுகளாக பிஎஸ்இ இடிஎப் மற்றும் என்எஸ்இ இடிஎப்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் அதிகபட்சம் 15 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்
**********************
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர் ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.

ஓய்வுகாலத்துக்கு இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தவிர இன்னும் அதிகமாக பிடிக்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் பணி யாற்றும் நிறுவனத்திலேயே எழுதி கொடுத்து பிடித்தம் செய்யலாம். இந்த விருப்ப தொகை விபிஎப் ஆக முதலீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சேமிக்கும் பழக்கம் இல்லாத மாத வருமானம் கொண்டவர்கள் தங்களது ஓய்வு காலத்தை பொருளாதார சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பிஎஃப் திட்டம் உண்மையிலேயே ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் திட்டம்தான்.
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.
நன்றி : தி இந்து நாளிதழ் - 26.10.2015
டாட்டா சங்கத்தின் உச்ச நீதிமன்றம் ஊதிய வழக்கு எண் SLP . C. 9109/2015. I. A. No. 6/2015 விசாரணை விபரம் .
இன்று உச்ச நீதிமன்றத்தில் 6 வது ஊதியகுழு இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சினை மற்றும் இரு வேறுபட்ட ஊதிய முறையை ரத்து செய்து 1.1.2015 முதல் டிப்ளோமா கல்வி தகுதி படி 1-6-88 முதல் பெற்று வந்த ஊதியம் ஆறாம் ஊதிய குழுவில் மறுக்கப்பட்டுள்ளது .இதை ரத்து செய்து ஊதியம் 9300+4200 வழங்கிட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .அதன் விசாரணை இன்று 5-11-2015 நடைபெற்ற இருந்து .ஆனால் விசாரணை பட்டியலில் இன்று இடம்பெற வில்லை .நமது மூத்த வழக்கறிஞர் .திரு.ந்ந்தகுமார் அவர்கள் தெரிவித்த படி நாளை அல்லது 14-11-2015 அன்று விசாரணைக்கு வரும் என தெரிவித்தார்கள் .நல்லது நடக்கும் இடைநிலை ஆசிரியர் ஊதியம் டாட்டா சங்க வழக்கில் மாற்றம் கிடைக்கும் .அனைவரும் ஆதரவு தாரீர் .இழந்த உரிமை மீட்போம் ........டாட்டா கிப்சன் .9443464081.
நெல்லை மாவட்டம் முக்கூடல் சொக்கலால் மேல்நிலை பள்ளியில். பணி செய்து வந்த திருமதி .மரகதவல்லி .இடைநிலை ஆசிரியர் .பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கேட்டதனால் இடைநிலை இரண்டு மாத காலம் தற்காலிக பணிநீக்கம் செய்ய பட்டார் .டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள் வழிகாட்டுதல் படி 3-11-2015 பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக DEO. அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது .அவர்களுக்கு ஆதரவாக டாட்டா கிப்சன் அவர்கள் கலந்து கொண்டார் .போராட்டம் மாலை 6.45 மணி வரை நடைபெற்றது .இறுதியாக CEO .and DEO மற்றும் காவல்துறையினர் ஆகியோர் முன்னிலையில் பொது செயலாளர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை படி எவ்வித நிபந்தனைகள் இல்லாமல் மீண்டும் பணியில் சேர நிர்வாகம் ஆணை வழங்கியது .மேற்படி ஆசிரியர் பணியில் சேர செய்தி வெளியிட்ட( 3-11-2015 மற்றும் 4-11-15 ) அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் அனைவருக்கும் டாட்டா சங்கம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கிறோம் .மேற்படி ஆசிரியர் இன்று 5-11-15 பணியில் சேர்ந்து உள்ளார்கள்
ஓ!இடைநிலை ஆசிரியப் பேரினமே! 🌺
அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்கிறார்களே!
நீங்களோ எத்தனைதான் அடி அடித்தாலும் அசையாமல் நிற்பது ஏனோ?
ஆறாவது ஊதியக்குழு இடைநிலை ஆசிரியர் வயிற்றில் அடித்திருக்கிறதே?
உனது வயிறு பற்றிக்கொண்டு எரியவில்லையா?
பொறுமை கடலினும் பெரிது எனும் வள்ளுவன் வாக்குக்கிணங்க பொறுமை காக்கிறாயோ?
இது பொறுமையாக இருக்க வேண்டிய காலமா? இல்லை!இல்லவே இல்லை!
🌺இந்தக் காலத்தில் நீ மௌனமாக இருந்தால் உன் எதிர்கால ஆசிரிய சமுதாயத்தை யாராலும் மீட்டெடுக்க முடியாது என்பதை அறிவாயோ?
🌺ஆறாவது ஊதியக்குழுவில் ₹10,000 பாதிப்பு என்றால் 2016-ல் ஏழாவது ஊதியக்குழுவில் உனது பாதிப்பு ₹20,000 என்பதைஅறிந்தும் மௌனம் காக்கிறாயோ?
நமக்கு காலம் கை கொடுக்கவில்லை.இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது.அதற்குள் ஏதாவது செய்ய வேண்டுமே!
பொங்கியெழு.......
வீறுகொண்டெழு......
🌺👍ஊதியம் பெறும் வரை ஓய மாட்டேன் என உள்ளத்தில் உறுதிகொள்.......
👍🍀
உனக்காக நீ உழைக்காமல் வேறு யார் உழைப்பார்?
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை உலகுக்கு உணர்த்துவோம்!ஒற்றுமையின் பலத்தை உலகுக்கு பறைசாற்றுவோம்!
🍀பாதிக்கப்பட்டவனுக்கே அந்த பாதிப்பின் வலி தெரியும்.உள்ளத்தில் வலி இருந்தால் நிச்சயம் வழி பிறக்கும்.
நம்முடைய தர ஊதியம் ₹2800 காட்டுகிறது நாம் தரம் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்பதை.
நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமானால்,நம் தர ஊதியம் உயர வேண்டும்.
இன்னும் ஏன் பொறுமையாக இருக்கிறாய்?
😛😝யாரோ நமக்காக போராடி வாங்கித் தருவார்கள் என பகல் கனவு காண்கிறாயோ!
😳பகல் கனவு என்றும் பலித்ததில்லையே! இதை நீ அறியாயோ!
யாரும் நமக்காக போராடவில்லை.அவர்கள் அவர்களுக்காக மட்டுமே போராடுகிறார்கள்.அவர்கள் நமக்கு ஒன்றும் பெற்றுத் தரப்போவதுமில்லை.
🐎🐎விரைவாக பாதிக்கப்பட்ட 2009 மற்றும் Tet ஆசிரியர்களை ஒன்று சேர்ப்போம்.நாம் ஒன்றுபட்டால் நிச்சயம் நமக்கு தீர்வு உண்டு......
🙏🙏🙏
🍄🍄ஒவ்வொவரும் நிச்சயம் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையில்....
🌸🍁 👍👍 உங்களில் ஒருவன்.👍
டாட்டா சங்கத்தின் உச்ச நீதிமன்றம் வழக்கு .SLP(C)No.9109/2015ல் I.A.No.6/2015. அபிடவிட் உங்கள் பார்வைக்கு ......
20 துறைகள் சார்ந்த 52 வகை பணியிடங்களுக்கு அரசு ஆணை எண்.71.நிதி .நாள் .26.2.11 மூலம் ஊதிய குறைப்பு செய்து ஆணையிட பட்டது .அதே அரசு ஆணையில் ஊதிய குறைதீர்ப்பு பிரிவு அமைக்க பட்டது .இந்த பிரிவில் ஊதிய பாதிப்பு மற்றும் முரண்பாடு உள்ளவர்கள் மனு செய்து பாதிப்பை சரி செய்து கொள்ளலாம் .என ஆணையிடப்பட்டது .ஊதிய குறைப்பால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் பல சங்கம் நீதிமன்றம் நாடி தடைகள் பெற்றனர் .இதன் தொடர்ச்சியாக நடந்த வழக்கு விசாரணை W.A.No.504/2012.ன் முடிவில் 27.2.2014.அன்றுசென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழக அரசின் ஒருநபர் குழு அறிக்கை மற்றும் ஊதியகுறை தீர்க்கும் பிரிவு அறிக்கைகள் ரத்து செய்தது மட்டும் அல்லாமல் ஓய்வு பெற்ற தலைமை நீதி திரு .வெங்கடாசலம் மூர்த்தி அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்து தீர்ப்பு வழங்கப்பட்டது .
இந்த ஆணையம் தமிழக அரசு உழியர்களுக்கு ஆறாவது ஊதிய குழு வில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வுகள் செய்து அரசுக்கு அறிக்கைகள் கொடுக்க வேண்டும் .மேலும் 20 துறைகள் சார்ந்த 52. வகையான பணியிடங்களுக்கு ஊதிய குறைப்பு செய்து சரியா ?.தவறா ?என ஆய்வுகள் செய்து அறிக்கை கொடுத்து அதன்படியே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .இந்த பணியிடங்களுக்கு ஒருநபர் குழு அறிக்கை படி மத்திய அரசு உழியர்களைவிட அதிக ஊதிய நாளது தேதி வரை வழங்கப்படுகிறது .
தற்போது தமிழக அரசுழியர்கள் ஊதிய பிரச்சினை வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது .இந்த வழக்கில் அரசு வெற்றி பெற வேண்டும் என்றால் இடைநிலை ஆசிரியர் களுக்கு பொய்யான காரணம் கூறி 1989 முதல் பெற்று வந்த ஊதியத்தை மீண்டும் வழங்கி ட வேண்டும் .என்ற இக்கட்டான நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது .டாட்டா சங்கத்தின் சட்ட போராட்டத்திற்கு கள போராட்டம் வழு சேர்ந்து உள்ளது நமது சங்கம் மட்டுமே ஆறாம் ஊதிய குழு அறிக்கைகள் சட்ட விரோதமானவை உண்மையில்லாதவை என பல்வேறு ஆதாரம் தாக்கல் செய்து உள்ளது ..இதனால் நமது ஊதிய பிரச்சினை யை தீர்த்தால் தான் 52 வகையான பணியிடங்களுக்கு ஊதிய குறைப்பு செய்தது சரி என அரசு வழக்கில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை டாட்டா சங்கத்தின் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு ஏற்படுத்தி உள்ளன .இதன் காரணமாக தான் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 என மாற்றம் செய்திட நடவடிக்கை எடுத்து வருகிறது .
இந்த அபிட்விட் டை பிரின்டு எடுத்து வருகிற CRC.7-11-15 ல் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன் .....
G o.71.date .26.2.11.and G.o.242 date .22-7-2013
ன் படி ஊதிய குறைப்பு செய்யப்பட்ட 20 துறைகள்

வேளாண்மை துறை .
வேளாண்மை பொறியியல் துறை
கால்நடை பராமரிப்பு துறை .
மீன் வளத்துறை .
நெடுஞ்சாலை துறை .
ஊரக வளர்ச்சி துறை .
போக்குவரத்து துறை.
கைத்தறி துறை.
அரசு வாகனங்கள் பராமரிப்பு துறை .
பொதுப்பணி துறை .
இன்டஸ்ட்ரீஸ் துறை
அரசு இல்லங்கள் துறை .
மருத்துவ போக்குவரத்து துறை .
உடல் உனமுற்றோர் நல துறை .
நகர பஞ்சாயத்து துறை .
மின்சார வாரியம் .சென்னை மாநகராட்சி .
வருவாய் துறை .
காவல் துறை .
வனத்துறை.

டாட்டா கிப்சன் .
பொது செயலாளர் .
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் .
9443464081.
கல்வித்தரம் எப்போது மேம்பாடு அடையும் ?
தற்போது உள்ள நடைமுறைக்கு ஏபில் அட்டை தேவையா? ஏபில் ஏன்?
1.மாணவர்கள் தன் சுய வேகத்தில் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
2. வகுப்புகளுக்கு முக்கியத்துவம் இல்லை. மாணவர்களின் அடைவுத்திறனே முக்கியம்
3. இதனால் 5ஆம் வகுப்புக்குள் எழுத்துக்கள் தெரியாத மாணவர்களே இருக்க முடியாது. அதாவது மிகவும் பின்தங்கி இருக்கும் 5 ஆம் வகுப்பு மாணவன் தன் திறன் 3ஆம் வகுப்பிற்குண்டான திறன் எனில் அவன் 3ஆம் வகுப்பு படிக்கலாம். அதற்காகதான் ஏணிபடிகள்.
4. ஒரு 2 ஆம் வகுப்பு மாணவன் திறன் இருந்தால் நேரடியாக ஏணிப்படிகளை முடித்து 3 ஆம் வகுப்பிற்கு கூட செல்ல முடியும்.
இப்படி மாணவர்களின் குறைந்த பட்ச கற்றல் அடைவை உறுதி செய்ய அப்போதைய Chennai Corporation Commissioner Mr.விஜயகுமார் IAS அவர்களால் உருவாக்கப்பட்டது.
ஏபில் ஏன் வேண்டாம்?

தவறாமல் பங்கு பெறுங்கள் .....

6 வது ஊதிய குழு பிரச்சணை ---ஊதிய வழக்கு --- போரடகளம் --கருத்தரங்கம் ..

இடம் ;- இராமநாதபுரம் ;  நாள் .11.10.2015  மாலை .2.30 மணி .


08.10.2015 . போராட்டத்தில் மாநில அளவில் கலந்து கொண்டோர் விவரம்
(-இயக்குனரிடமிருந்து பெறப்பட்ட தகவல்)

தொடக்கக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை - 1,12,742
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 33,061
* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 79,681
* பங்கேற்றோர் % -70.68 %

பள்ளிக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை- 1,07,473
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 84,408
வேலை நிறுத்தத்தில்
* ஈடுபட்டவர்கள்- 23,065
* பங்கேற்றோர் % -21.46 %

ஒட்டு மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை- 2,20,215
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 1,17,469
* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 1,02,746
* பங்கேற்றோர் % - 46.65 %

ஆசிரியர்கள் ஸ்டிரைக் அபாரம் -அரசு மெகா ஷாக்.......

8.10.2015 போராட்டத்தில் டாட்டா சங்கம் ..ஆழைக்கப்படாத விருந்தினர் ஆக கலந்து கொண்டது . ஜேக்டோ வில் எண்ணிக்கை அதிகமாக பள்ளிகல்வி துறை சார்ந்த சங்கம் இருந்தாலும் பள்ளிகல்வி துறை யில் பணிபுரியும் ஆசிரியர் கள் அதிகம் பங்கு பெற வில்லை .20% மட்டுமே பங்களிப்பு செய்தனர் .ஜேக்டோ நிர்வாகிகள் அடுத்த கட்ட போராட்டம் செய்யும் முன்னர் தொடக்க கல்வி துறையில் உள்ள அனைத்து சங்கங்கள் இணைத்து இதைவிட வலுவான போராட்டம் உருவாக்க வேண்டும் .நான் பெரியவர் நீ சிறியவர் என்பதை மறக்க வேண்டும் .போராட்டம் செய்ய வராத பள்ளிகல்வி சங்கங்கள் ஒதுக்கப்பட்ட. வேண்டும் .
👥வேறுபாடு கருதாது அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் எனபதில் மாற்றுக் கருத்து இல்லை .
👥 பெரியவர்/ன் என்ற எண்ணம் உண்டான போதே எல்லாம் துண்டாகி விட்டது. இதை உணர வேண்டும்.
👥ஈகோ வை விடுத்து அனைவரும் ஒன்றினையும் போது மட்டுமே வெற்றி சாத்தியப்படலாம்.
👥பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிக்கையில் வெகு சுலபமாக "சில சங்கங்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபடுகிறது" என்று கூறியுள்ளது நமக்குள் ஒற்றுமையில்லை என்பதையே உலகுக்குத் தெரிவிப்பதாக உள்ளது.
👥 இனி வரும் காலத்தில் "ஒரு சில" என்பதற்குப் பதிலாக "அனைத்து சங்கங்களும்" என்று குறிப்பிடும் நிலையை உருவாக்கினால் மட்டுமே கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகாமலிருக்க ஒற்றுமை அவசியம்.
👥ஒன்று படுவோம் போராடுவோம் என்பது வெறும் வார்த்தையாக மட்டும் இருந்தால் போதாது. மனதிலும் உணர்விலும் இருக்க வேண்டும்.....

.டாட்டா கிப்சன் .பொது செயலாளர் .
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் .9025054081.

பள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் PASSPORT பெற NOC - தெளிவுரை வழங்கி இயக்குனர் செயல்முறைகள்,,,,,,,,,,,,

அக்டோபர் 8 போராட்டம் ---டாட்டா வின் அறிவிப்பு ...


1. 6 வது ஊதிய குழு முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும் .இடைநிலை ஆசிரியரின் இரு வேறு பட்ட ஊதிய முரண்பாடுதீர்க்கப்பட வேண்டும்

2. CPS திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் 

3.2003--2006 தொகுப்பூதிய பணிக்காலம் பணிகலமாக ஏற்கப்பட்டு பணி நியமன நாள் முதல் பணிவரன்முறை செய்யப்பட வேண்டும் .

என்ற கோரிக்கைகளை மட்டும் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( டாட்டா  ) அக்டோபர் 8 போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கி   போராட்டத்தில் கலந்து கொள்கிறது மேலும் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு வலு சேர்க்க கேட்டுக்கொள்ள படுகிறது.டாட்டா சங்கம் போராட்டத்திற்கு தடை வேண்டி நீதி மன்றத்தில் வழக்கு ஏதும் தாக்கல் செய்ய வில்லை .

மாநில அமைப்பு ....டாட்டா கிப்சன் .

பள்ளிக்கல்வி இயக்குனர் அளவிலான பேச்சுவார்த்தை தோல்வி; திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ அறிவிப்பு

சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இன்று மாலை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதையடுத்து திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ அறிவித்துள்ளது.
ஊதிய பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தடை காரணமாக 6 வது ஊதிய முறன்பாடு அரசு தீர்க்க முடியாது .கல்வி  துறை சார்பாக  டாட்டா சங்க சங்கம் SLP-9109/2015. ல்   I.A.NO.6/2015.வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

உச்ச நீதிமன்ற தடையால் தமிழ் நாட்டடில் 7 வது ஊதிய குழு அமைப்பது கேள்வி குறியே ? இதோ தடை ஆணை ...


யார் கள போராட்டம் செய்தாலும் சென்னை மாநில செயற்குழுவில் எடுத்த முடிவு படி டாட்டா முழு ஆதரவு .

               தமிழ் நாட்டில் 6 வது ஊதிய குழு அரசு ஆணை 234 நிதி நாள் .1.6.2009 ன் படி நடைமுறை படுத்தப் பட்டது .அதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே  பெற்று வந்ததை விட ரூ 370 குறைவாக நிர்ணயம் செய்யப் பட்டது.தற்காலிக தீர்வாக அரசு ஆணை 258 நிதி .நாள் 27.6.2009 ன் படி 1.1.2006 முதல் 31.5.2009 முடிய பணி நியமனம் பெற்றவர்கள் 1.86.என்ற விதியை பயன் படுத்தி ஊதியத்தை பெருக்கி நிர்ணயம் செய்து கொள்ள ஆணையிடப்பட்டது .அதன் பின் அரசு ஆணை 444 ன் படி ஊதிய பிரச்சனையை தீர்க்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.இந்த குழு அரசின் கைபாவையாக செயல் பட்டு முரண்பாடான அறிக்கையை அரசிடம் சமர்பித்தது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிதிமன்றத்தை நாடினர் .நீதிமன்ற தீர்ப்பு படி அரசு ஆணை 123 ன் படி 3 நபர்களை கொண்ட ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டது .இந்த குழுவும் 4342 பேரிடம் 4 நாளில் விசாரணை செய்து முரண்பாடான பொய்யான அறிக்கை அரசிடம் கொடுக்கப்பட்டது..டாட்டா சங்கம் தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் பல்வேறு ஆதரங்களை சேகரித்து வழக்கு தாக்கல் செய்தது..மேலும் இணையம் மூலம் சேகரித்த தகவலை வெளியிட்டு அனைவரயும் விழிப்படைய செய்த சங்கம் டாட்டா மட்டுமே .
                27.2.2014 ல் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு படி 6 வது ஊதிய குழு அறிக்கையை ரத்து செய்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 6 ஊதிய குழு முரண்பாடுகளை தீர்க்க ஆனையிடப்பட்டது..தமிழக அரசின் 6 வது ஊதிய குழு தவறானது என உயர் நீதிமன்றத்தில் 3642 பேர் வழக்கு நடத்தி உள்ளார்கள் .மேலும் 72,000 இடைநிலை ஆசிரியர்கள் பிரச்சனைக்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு  டாட்டா வும் ,எஸ் எஸ்.டி எ மட்டுமே நடத்தியது .தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு டாட்டா மட்டுமே சென்று உள்ளது. 5.5 இலச்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்தாலும் 6 வது ஊதிய குழு வுக்கு எதிராக சமரசம் இல்லாமல் வழக்கு நடத்துவது டாட்டா சங்கம் மட்டுமே .

                            அன்பர்களே ஜேம்ஸ் என்ற ஒரே ஒரு உதவி தொடக்க கல்வி அலுவலர் மட்டுமே 2011 ல் இருந்து சட்ட போராட்டம் நீதிமன்றத்தில் நடத்தி இன்று தர ஊதியத்தில் 200 ரூபாய் உயர்வு பெற்று உள்ளார்கள் ஒட்டு மொத்த உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்பட வில்லை .எனவே சாட்சி டாட்டா சட்ட போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெரும் .அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் 9300+4200 என ஊதிய மாற்றம் ஏற்படும் .
                                மேலும் TET வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தமிழ் நாட்டில் தகுதி தேர்வு நடத்த முடியவில்லை ,பணி நியமனம் செய்ய முடியவில்லை .அது போல் 2009 ல் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்குவழக்கு முடியும் வரை பணிமாறுதல் முடியவில்லை .அது போல் 6 வது ஊதிய பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதி முடிவு ஏற்படாத வரையில் தமிழ் நாட்டில் 7 ஊதிய குழு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது .இந்த நிலை ஏற்பட காரணம் தமிழக அரசு தான் கரணம் ஆகும் .
                                    மகிழ்ச்சியான செய்தி என்ன வென்றால் 6 ஊதிய குழு பிரச்சனைக்கு இறுதி முடிவு வந்த பின்புதான் 7 ஊதிய குழு தமிழ் நாட்டில் அமைக்க முடியும் .இதற்கு காரணம் டாட்டா வின் சட்ட போராட்டம் தான் .எனவே கண்டிப்பாக நமக்கு சட்ட போராட்டத்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்பதை அனைவருக்கும் தெருவித்து கொள்கிறேன் .

                                                         டாட்டா  கிப்சன்            
                                                     .9025054081//9443464081..


அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாற்றம்

அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 14 ஆசிரியர்கள், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இருக்க வேண்டும்; சில பள்ளிகளில், குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள நிலையில், அதிக ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
சில பள்ளிகளில், அதிக மாணவர் இருந்தும், போதிய ஆசிரியர் இல்லாமல், கல்வித்தரம் பாதிக்கிறது.அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு நடத்தி, ஆசிரியர் பற்றாக்குறை பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் மூன்று, மேல்நிலைப்பள்ளிகள், 18 என, மொத்தம், 21 பள்ளிகள் உள்ளன. கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில், கூடுதலாக இருந்த, 14 ஆசிரியர்கள், பற்றாக்குறையான பணியிடங்களுக்கு, இடமாறுதல் செய்யப்பட்டனர்.
*** கல்வி இயக்கக தெளிவுரைகளுடன்
உள்ள பதிவு...

தொடக்கக் கல்வித் துறை இடைநிலை ஆசிரியர்களின்
பி.எட்., கற்பித்தல் பயிற்சிக்கு---
ஊதியமில்லா விடுப்பு எனும் நிலையை மாற்றி
முழு ஊதியம் வழங்கிட வேண்டும். ***

** அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 180 நாட்கள்
சொந்த அலுவலின் பேரிலான ஈட்டா விடுப்பு
( UEL PA )உள்ளது. **

* இந்த 180 நாட்களை ஓய்வு பெறும் போது ஒப்புவிப்பு
செய்து 180 நாட்களுக்கு அரைச் சம்பளம் வீதம்
90 நாட்களுக்கு ஊதியம் பெறலாம். *

** ஆசிரியர்கள் இந்த 180 நாட்களில்
சுமார் 30 நாட்கள் கற்பித்தல் பயிற்சிக்கு சென்றால்,
நாம் எடுக்கும் 30 நாள் UEL PA விடுப்புக்கு,
15 நாள் ஊதியம் கிடைக்கும். **

** நம்முடைய இருப்பு 180-30=150 ஆக குறையும்.
எனவே ஓய்வு பெறும் போது, 75 நாட்களுக்கு
மட்டுமே ஊதியம் பெற முடியும்.
கற்பித்தல் காலம்-15 நாள் ஊதியம்+
ஓய்வு சமயம். -75 நாள் ஊதியம்=
மொத்தம். -90 நாள் ஊதியம் **

* கற்பித்தல் பயிற்சிக்கு LLP எடுத்து விட்டால்,ஓய்வு சமயம்
180 நாள் UEL PA க்குரிய 90 நாள் ஊதியம் பெறலாம். *

** எனவே கூட்டிக் கழித்துப் பாருங்களேன்...
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு...
அப்போ...அந்த ஒரு மாத ஊதியம்....?
Loss of pay தான். **

* எனவே நாம் பெறுவது அரைச் சம்பளம் அல்ல.
நமக்கு ஒரு மாத ஊதியம் இழப்பு ஏற்படுகிறது
என்பதை நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம். *

**** பள்ளிக் கல்வித்துறை
அரசுக் கடித எண்.48269/எம்2/94 நாள்.28.12.95

பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
3849/சி32/96 நாள்.3.2.96

ஆகியவற்றின் படி
அரசு உயர்நிலை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள்,தமிழாசிரியர்கள்,
உடற்கல்வி ஆசிரியர்கள்,தொழிலாசிரியர்கள்
ஆகியோர்கட்கு

பி.எட்., கற்பித்தல் பயிற்சிக்கு முழு ஊதியம்
வழங்க உத்தரவிடப்பட்டது. ****

*** எனவே தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும்
கற்பித்தல் பயிற்சிக்கு
LLP - Leave On Loss Of Pay என்பதை மாற்றி
முழு ஊதியம் பெற்றுத் தர வேண்டும். ***

👆 * மேற்காணும் செயல்முறைகளின் படி...
ஓய்வு நேரம் பயிற்சி எடுக்கலாம்.
பிஎட்., கற்பித்தல் பயிற்சி வகுப்பு எடுத்தல் காரணமாக
1.பள்ளி பாடநேரம் பாதிக்கப் படக் கூடாது.
2.பாடக் குறிப்பு எழுதுவது பாதிக்கக் கூடாது
3.பயிற்சி ஏடுகள் சரிபார்க்க வேண்டும்
4.தேர்வுகள் வைக்க வேண்டும்
5.கற்பித்தல் பாதிக்கக் கூடாது
என்ற நிபந்தனையின் பேரில் பள்ளிக் கல்வித்துறையில்
முழு ஊதியம் வழங்கப்படுகிறது. *

** தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்
படிக்க அனுமதி பெறும் போது...
மேலே காணும் இது போன்ற நிபந்தனைகளுடன்
அனுமதி தரப்படுகிறது. **

* தொடக்கப் பள்ளிகளில் 1-5 வகுப்புகளுக்கு
வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இல்லை.
பெரும்பாலான பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும்,
சில பள்ளிகள் மூன்று ஆசிரியர் பள்ளிகளாகவும்,
சில பள்ளிகள் மூன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர் உள்ள
பள்ளிகளாகவும் உள்ளன. *

* எனவே தொடக்கக் கல்வித் துறையில்...
விடுப்பு முடிந்து வந்து மீண்டும்
சம்பந்தப்பட்ட இடைநிலை ஆசிரியர் தான்
பாடங்களை நடத்தணும்,
பாட நோட்டுக்களையும் திருத்தணும்,
தேர்வும் வைக்க வேண்டும்,
பாடம் சார்ந்த பதிவேடுகளை
சம்பந்தப்பட்ட விடுப்பு ஆசிரியர் தான்
பராமரிக்க வேண்டும். *

* எனவே முழு பணி செய்தாலும் ஊதியமில்லை. *

** நடுநிலைப் பள்ளியில் பணிசெய்து, அங்கேயே
கற்பித்தல் பயிற்சி செய்தால் முழு ஊதியம்
தரப்படுகிறது.

உயர்நிலை/மேல்நிலைப் பள்ளியில் பணி செய்து
அங்கேயே கற்பித்தல் பயிற்சி செய்தால் முழு ஊதியம்
தரப்படுகிறது. **

* ஆனால் தொடக்கப் பள்ளி/நடுநிலைப் பள்ளியில்
பணிசெய்து , உயர்நிலைப் பள்ளியில் கற்பித்தல் செய்தால்
முழு ஊதியம் தரப்படுவதில்லை. *

*** Primary Teacher க்கு
Full work உண்டு.
But
No pay
For
Teaching practice... ***

** ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர்கட்கு ஊதியம் வழங்க
அந்த கணக்குத் தலைப்பின் கீழ் அரசால் நிதி
விடுவிக்கப்படுகிறது.

எனவே நாம் கற்பித்தல் பயிற்சிக்கு செல்லும் போது,
வழங்கப்பட்ட ஊதியம் போக, எஞ்சிய ஊதியம்
அரசிடம் ஒப்புவிப்பு செய்யப்படுகிறது.

எனவே இது நிதிச்சுமை சாராத கோரிக்கை. **
**** பள்ளிக் கல்வித் துறை,நிதித் துறை,
பணியாளர் & நிர்வாக சீர்திருத்தத் துறைகளின்
பார்வைக்கு எடுத்துச் சென்று,
தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கட்கு
கற்பித்தல் பயிற்சிக்கு முழு ஊதியம் பெற
நடவடிக்கை எடுக்க வேண்டும். *** .

ஓய்வூதியம் என்பது சலுகையா சிந்திப்பீர்...........

ஓய்வூதியம் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்தில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
ஆரம்பத்தில் 1891ல் டென்மார்க்கும், 1898ல் நியூசிலாந்தும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தின.1917க்குப் பிறகு, சோவியத் ஒன்றியம்தான் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் போன்ற உரிமைகளை உலகில் முதன் முதலில் சட்டப்பூர்வமாக அறிவித்து அமல்படுத்தியது.
இத்தகைய சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் உலகில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் புதிய உத்வேகத்தை அளித்தன. சர்வதேச சங்கமும், அதன் துணை அமைப்பான தொழிலாளர் ஸ்தாபனமும் உழைப்பாளி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான வரைமுறைகளை வகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒருவர் வயது முதிர்வின் காரணமாகப் பணி ஓய்வுபெறும்போது எஞ்சிய கால வாழ்வாதாரத்திற்காக வைப்பு நிதி திட்டம் உருவாகியது.இத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள் தனது பங்களிப்பை செலுத்துவதோடு நிர்வாகமும் தனது பங்களிப்பை செலுத்த வேண்டும்.
1930 களில் உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எஸ்.எம். கெய்ன்ஸி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி மக்களின் வாங்கும் சத்தியைப் பெருக்க அரசுத்துறையில் நலத்திட்டங்களை உருவாக்கி வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டங்களை உருவாக்கிய அரசுகள் சேமநல அரசுகள் என அழைக்கப்பட்டன.
அந்த அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு பங்களிப்பு வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தின. இத்திட்டத்திற்கு அரசுகள் அளிக்க வேண்டிய பங்குத்தொகை மாதம்தோறும் அளிக்காமல் அந்த நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு மடைமாற்றப்பட்டது.
இந்திய நாட்டில் முதலாவது ஊதியக் குழுவின் விளைவாக தளர்த்தப்பட்ட ஓய்வூதிய விதிகள் 1950 ஏப்ரல் 17ம்தேதி அமல்படுத்தப்பட்டன. அதன்படி, பொது வருங்கால சேமிப்பு நிதி உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் மத்திய-மாநில அரசுகள் ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும் தாங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை ஓய்வூதியமாக வழங்கத் துவங்கின. பின்னர், ஊழியர்களிடம் எவ்விதமான பங்களிப்பும் பெறாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வூதியச் சலுகை வழங்குவதில் முன்னர், பின்னர் என வேறுபடுத்தி பாரபட்சம் காட்டத்துவங்கியது மத்திய அரசு. அதனை எதிர்த்து டி.எஸ்.நகரா மற்றும் இதரர் பதிவு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் 17.12.1982ல் அளித்த தீர்ப்பு நாளையே ஓய்வூதியர்களின் ‘உரிமை’ தினமாக கொண்டாட படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு மகா சாசனமாகும். ஓய்வூதியம் என்பது கவுரவமாக வாழும் உரிமையின் உத்தரவாதம் என மனித உரிமை ஆணையமும் தீர்ப்பு வழங்கி யுள்ளது.
பணி ஓய்வு பெற்ற பிறகு கவுரவ மாகவும் சுதந்திரமாகவும் வாழ உத்தர வாதம் அளிக்க வேண்டும். ஒருவர் தனது வாழ்வில் முதுமைத் தளர்ச்சியினையும், வறுமையையும் எதிர்த்திட வழங்கப் படுவதுதான் ஓய்வூதியம்.
எனவே, ஓய்வூதியம் என்பது கருணைத் தொகையல்ல. அது சட்டரீதியானது. இது நிர்வாக விருப்பு வெறுப்புகளாலோ அல்லது கருணை கொண்டோ வழங்கப் படுவதில்லை.
பென்சன் திட்டமே பென்சன் நிதியிலிருந்து வழங்கப்படுவதில்லை. பென்சன் நிதி என்று ஒன்று இல்லை. ஓய்வூதியம் என்பது ஒரு செலவினம் என நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும். பென்சன் என்பது மத்திய -மாநில அரசுகள் ஏற்றுக்கொண்ட பொறுப்பாகும். அதை வழங்கவேண்டியது கடமையாகும். மத்திய - மாநில அரசுகள், தங்களுக்கு ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கத்தான் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள் ளன.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு தமிழகத்தில் 1.4.2003லிருந்தும் 1.1.2004 ல் மத்திய அரசு பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கும் புகுத்தப்பட்டது.
இதற்கிடையில், 6வது ஊதியக்குழு ஓய்வூதியம் பற்றி ஆய்வு நடத்த டாக்டர் காயத்திரி குழுவை அமைத்தது. அக்குழு ஓய்வூதியத்தில் 54.75 விழுக்காடு பாதுகாப்பு துறையினருக்கே செலவு செய்யப்படுகி றது எனவும், எதிர்காலத்தில் ஊதியம், ஓய்வூதியத்திற்கான செலவினம் குறையும் எனவும் அறிக்கை அளித்தது.
இந்த உண்மைகளை அறிந்த அரசுகள், புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி 30, 35 ஆண்டு காலம் ஊழியர்களின் சேமிப்பையும், அரசின் நிதியையும் பங்குச் சந்தை மூலதனமாக உலக நிதி நிறுவனங் களின் ஆணைகளுக்கேற்ப உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு வாரி வழங்குகிறது.அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம், ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.
அதன்படி அமைக்கப்பட்டுள்ள 7வது ஊதியக்குழு விரைவில் பரிந்துரையை அறிவிக்க உள்ளது. அதற்குள், “ஏழைகளைப் பார், அவர்களது வருவாயை ஒப்பிட்டு பார்த்து பரிந்துரை செய்ய வேண்டும்” என ஊடகங்கள் முழங்குகின்றன.
ஆனால், பெரு முதலாளிகளுக்கு வரிச் சலுகை, வாராக் கடன் தள்ளுபடி செய்யும்போது இந்த ஊடகங்கள் வாய் மூடி மவுனம் காக்கின்றன. போதாக் குறைக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் வயிற்றெரிச்சலை கொட்டியுள்ளார்.
புதிய பொருளாதாரக்கொள்கைகளை அமல்படுத்தும் உலக நாடுகள் அனைத்துமே முதலில் ஓய்வூதியத்தை வெட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளன.
ஆரம்பத்தில் சிலி துவக்கி வைத்தது. அடுத்து அர்ஜெண்டினாவிலும் அமல்படுத்தப்பட்டது. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியபோது அந்நாடுகளில் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட மிகப்பெரும் வேலை நிறுத்தங்கள் நடைபெற்று நாடே ஸ்தம்பித்தன.
லத்தீன் அமெரிக்காவில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது.இந்தியா ஜனநாயக நாடு. நாட்டின் வளர்ச்சி மட்டுமல்ல நாட்டின் சமூகப் பாதுகாப்பு எல்லையும் விரிந்துகொண்டே செல்கிறது.
நமது அரசு சமதர்ம சோசலிச பாதையில் பீடு நடைபோடும் அரசாகும். சமூக நலக் குடியரசாக பாடுபட்டுக்
. இதைத்தான் இந்திய அரசியல்அமைப்பு சட்டம் பிரகடனப்படுத்தி யுள்ளது. நம் நாட்டில் தொடர்ந்து விலை வாசி உயர்வால் ஏற்படும் தடுமாற்றங்கள். பணவீக்கத்தால் ஏற்படும் ஊதியக் குறைவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இவைகளை அறிந்த நம் நாட்டு பொருளாதார நிபுணர்களில் பெரும்பாலோனர் பொருளாதார சமத்துவம் பற்றியோ, வருவாய் சமப் பங்கீடு குறித்தோ இந்திய அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள சமத்துவ நியதியையோ சிந்திப்பதில்லை. மாறாக, ஓய்வூதியம் வழங்குவதால் அரசு திவாலாகும் என முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
--------------------நன்றி---------------டாட்டா கிப்சன் ........

பள்ளிக்கல்வி - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு மற்றும் பதவி உயர்வு முறையாக வழங்க இயக்குனர் உத்தரவு

TATA--சங்கத்தின் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு ...

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 1.6.2009 ல் அரசு ஆணை 234 மூலம் 6 வது ஊதிய குழு ஊதியம் நடைமுறை படுத்தப்பட்டது .அப்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு பெற்று வந்த ஊதியத்தை விட ரூ .370 குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது .மேலும் தற்காலிக தீர்வாக அரசு ஆணை 258 ன் மூலம் 1.1.2006 முதல் 1.6.2009 முன்னர் நியமனம் பெற்றவைகள் மட்டும் 1.86.ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்திட அனுமதி வழங்கப்பட்டது.

     2012 ல் நீதிமன்ற தீர்ப்பு படி  திரு.கிருஷ்ணன்  IAS.அவர்கள் தலைமையில் 3 நபர்களை கொண்ட ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டது .இந்த குழு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட மறுத்து கிழ்க்கண்ட காரணங்களை கூறியது 1.தமிழக இடைநிலை ஆசிரியர் கல்வி தகுதி SSLC+சான்றிதழ் படிப்பு மட்டுமே .மத்திய அரசில் +2 வுடன் டிப்ளமோ ஆகும் .2.தமிழ் நாட்டில் பணி நியமனம் ஒன்றிய அளவில் .மத்திய அரசில் தேசிய அளவில் .3.ஆங்கிலம் , இந்தி கற்பிக்க தெரியாது ..4.கணினி அறிவு இல்லை .என்ற பொய்யான காரணங்களை கூறி  மறுத்து விட்டது,உண்மையில் 1989 முதல் நீதிபதி .திரு,ராமானுஜம் அவர்கள் அறிக்கை படி டிப்ளமோ கல்வி தகுதிக்கு தான் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது..
                           சென்னை உயர் நீதிமன்றம் 27.2.2014 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு படி தமிழகத்தின் 2010 ஒரு நபர் குழு அறிக்கை மற்றும் 2012 ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை ஆகியவை பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி .நீதிபதி .திரு.பால் வசந்த குமார் அவர்கள் தலைமையிலான இரு நபர்கள் அமர்வு ரத்து செய்து விட்டது மேலும் ஊதிய பிரச்சனை தீர்க்கப்பட ஓய்வு பெற்ற நீதிபதி.திரு.வெங்கடாசல மூர்த்தி அவர்கள் தலைமையில் ஊதிய குறை தீர்க்கும் ஆணையம் அமைத்து ஆணை வழங்கப்பட்டது..
                                     தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம் ( டாட்டா ) சார்பாக தமிழக இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சனை தீர்க்கப்பட சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு எண் 33399/2013 தாக்கல் செய்யப்பட்டது.அதில் 10.9.2014 ல் தீர்ப்பு வழங்கப்பட்டது .ஆனால் தமிழக அரசு கடித எண் 60473/2014.படி ஊதிய மாற்றம் செய்திட மறுத்து விட்டது .மேலும் அரசு கடிதத்தை ரத்து செய்து  ஊதிய குறை தீர்க்கும் ஆணையம்  9300+4200 என்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண் .1612/2015.தாக்கல் செய்யப்பட்டது .இதற்கு தமிழக அரசு ஊதிய பிரச்சணை தீர்க்க முன் வராமல் உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்று உள்ளது என்பதால்  தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம் ( டாட்டா ) வும் உச்ச நீதிமன்றம் சென்று உள்ளது .உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் கண்டிப்பாக இழந்த ஊதிய உரிமை மீட்கப்படும் அன்று இடைநிலை ஆசிரியர் ஊதியம் 1.1.2006 முதல் 9300 + 4200 என மாற்றம் செய்யப்படும்.

இவன்  
டாட்டா. கிப்சன் .பொது செயலாளர் .தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம்




 
டாட்டா மாநில அமைப்பின் அறிவிப்பு ....
நமது சங்கத்தின் உயர் மட்ட நிர்வாக குழுவின் கூட்டம் மதுரை ....ஆரப்பாளையம் ......ஹோட்டல் சிவ சத்யாவில் வைத்து ..16.08.2015 ..ஞாயிறு பிற்பகல் 3.30.மணிக்கு நடைபெற்றது ....
உயர் மட்ட நிர்வாக குழுவில் மாநில தலைவர். திரு. கார்த்திகேயன் அவர்கள் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுவது குறித்து மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்தை பொது செயலாளர் முகவரிக்கு எழுதி 31-08-2015 க்குள் அனுப்பி வைக்க முடிவு செய்ய பட்டது ...அதன்படி
மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களின்  பெரும்பான்மை முடிவின் படி மாநில தலைவர் ராஜினாமா ஏற்கப்பட்டது என அறிவிக்கப்படுகிறது ....

வெற்றியை நிர்ணயிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு

முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழு வெளியிட்டுள்ளது. இம்முடிவுகளின்படி ஆளும் அ.தி.மு.கவுக்கும் எதிர்க்கட்சியான தி.மு.கவிற்கும் இடையேயான போட்டி கடுமையானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவில் ஆளும் அ.தி.மு.க வே 2%, 3% வாக்குகள் அதிகம்
பெற்று வெற்றிபெறும் என்றும் கூறியுள்ளது.
இவற்றிற்கிடையே ஒவ்வொறு தொகுதியிலும் கணிசமான
ஓட்டுகளை வைத்துள்ள அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,அவர்களது
குடும்ப உறுப்பினர்களின் வாக்குகள் யாருக்குச் செல்லும்
என்பதைப் பொறுத்தே வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படக்
கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,ஆளும் அ.தி.மு.க மீது
அவர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரே ஒரு
அதிருப்தி மட்டுமே இருப்பதாகவும் அது என்னவெனில் கடந்த
சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்த மீண்டும் பழைய
பென்சன் திட்டம்,6வது ஊதியக்குழு முரண்பாடு களையப்படும்
என்பது களையப்படாதது மட்டுமே ஆகும்.ஒருவேளை மீதமுள்ள
நாட்களில் அவை நிறைவேற்றப்பட்டால் இவர்களின் (அரசு
ஊழியர்களின்) வாக்குகள் அ.தி.மு.க.விற்கே செல்லும்
என்பதால் போட்டி எளிமையாகலாம் என்ற எதிர்பார்ப்பும்
எழுந்துள்ளது.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் நடந்த
ஆசிரியர்கள் பேரணியில் பேசிய தி.மு.க.பொருளாளர்,
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மேலே சொன்ன கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும்............
இடைநிலை ஆசிரியர் ..ஆன் ..லைன் ...பணி மாறுதல் கலந்தாய்வு ...டாட்டா. .பொது செயலாளர் கிப்சன் அவர்கள் தொடர்ந்த கிரிமினல் வழக்கு எண் ;-17064/2014. காலிபணியிடங்கள் மறைக்க பட்டதை ஊழல் தடுப்பு காவல்துறை விசாரணை நடத்திட உயர் நீதிமன்றம் தீர்ப்பு  .காரணமாக 30-08-2015. ஆன் லைன் கலந்தாய்வு நேர்மையான முறையில் தொடக்க கல்வி துறையில்  நடந்ததாக தகவல் கிடைத்தது .டாட்டா சங்கத்தின் மாபெரும் வெற்றி ஆகும் .நேர்மையான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற காரணமான தொடக்க கல்வி இயக்குநர் அவர்களுக்கு நன்றி .


இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல்!!!..............

2015 - BT TEACHER - DISTRICT TRANSFER ONLINE COUNSELLING SENIORITY LIST [ Tentative ] - REVISED,,,,,,,

CRC பயிற்சி நாட்களுக்கு வழங்கப்படும் ஈடுசெய்யும் விடுப்பு அரசாணை பற்றிய ஓர் பார்வை:

CRC பயிற்சியில் கலந்து கொண்டதற்கு ஈடுசெய்யும் விடுப்பு எடுத்தல் சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை 62 நாள்:13.03.15 என்பது 12.02.2008 ல் CRC பயிற்சிக்கு அனுமதித்த  ஈடுசெய்யும் விடுப்பு சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை 29 க்கு வெளியிடப்பட்ட திருத்த அரசாணை மட்டுமே. அதனை அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் வரிகள் மூலம் அறியலாம்.

"தொடக்க கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து ஏற்று, அரசாணை (நிலை) எண்:29, பள்ளிக்கல்வி, நாள்: 12.2.2008-ல் கீழ்வருமாறு திருத்தம் செய்து வெளியிடுகிறது, இவ்வாறு குறிப்பிட்டு திருத்தம் என்று தலைப்பிட்டு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

CRC யில் கலந்து கொண்டதற்கு ஈடுசெய்யும் விடுப்பு அனுபவிக்க அரசாணை 62 நாள்: 13.3.15 வெளியிடப்பட்ட பின்னர் கலந்து கொண்ட CRC நாட்களுக்கு மட்டுமே ஈடுசெய்யும் விடுப்பு எடுக்க வேண்டுமெனவும், அதற்கு முன்னர் கலந்து கொண்ட CRC நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்பு எடுத்திருக்கக் கூடாதென்று சில ஒன்றியங்களில் கூறப்படுவதாக அறிய வருவதால் இவ்விளக்கத்தினை ஆசிரியர்கள் முன் வைத்துள்ளோம். இதனடிப்படையில் உரிய கோரிக்கை மனு ஒன்றை TATA பொது செயலாளர் திரு.கிப்சன் அவர்கள் வரும் செப்டம்பர் 4 அன்று தொடக்க கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து அளிக்க உள்ளார் என்பதையும் தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 4393 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஆக மொத்தம் 6157 பணியிடங்களுக்கு மே-2015 முதல் ஆகஸ்ட் 2015 வரை ஊதியம் பெற ஆணை வெளியீடு

சிவகங்கை : பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி.......

7வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் நீதிபதி ஏ.கே. மாத்தூர் அறிவிப்பு



7வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் நீதிபதி ஏ.கே. மாத்தூர் அறிவிப்பு

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி சம்பள கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.

7–வது சம்பள கமிஷன், தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நீதிபதி ஏ.கே. மாத்தூர், டெல்லியில் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசினார். அப்போது அவர், ‘‘7–வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்படும்’’ என கூறினார். இந்த சம்பள கமிஷனின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும்.

ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றம் தடை - நீக்கம் செய்திட TATA சங்க பொது செயலாளர் தலைமையில் 4 பேர்  செப்டம்பர் 5 ல் ஆசிரியர் தினத்தில் டெல்லி பயணம் .

நமது சங்கம் சார்பாக இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனையில் முதலில் 33399/2013 வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .அதற்கு தமிழக அரசு கடித எண் 60473/ஊ.கு.தீ.பி./2014. மூலம் ஊதியம் வழங்க முடியாது என அறிவித்தது.
                           அதற்கு எதிராக 2 வது வழக்கு 1612/2015 வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.அதற்கு தமிழக அரசு கடித எண் .12925/ஊ.கு.தீ.பி./2015.நாள் .27.5.2015 மூலம் அரசு உச்ச நீதிமன்றத்தில் ஊதிய முரண்பாட்டை தீர்க்க தடை பெற்று உள்ளது .எனவே 9300+4200 வழங்க முடியாது என தெரிவித்து உள்ளது.
மேலும் நமது சங்கம் சார்பான வழக்கு 5302/2015.தற்போது மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ளது,.
                              அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர்களுக்கு 2010 ஆண்டிலேயே மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கி விட்டோம் என தனது அபிடவிட்டில் பொய்யான தகவலை கூறி தடை பெற்று உள்ளது .மேலும் தடை நீக்க பட வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நமது உண்மை நிலையை கூறி உரிமையை நிலைநாட்டிட தெளிவான தீர்ப்பு பெற்றால் மட்டுமே 7 வது ஊதிய குழுவிலும் பாதிப்பு வராமல் தடுக்க முடியும் .ஆனால் 80 % பேர் வரும் பாதிப்பு அறியாமல் உள்ளனர் .பலர் ஏளனம் பேசுகிறார்கள் .பலர் டாட்டா சங்கம் மூலம் ஊதிய பிரச்சனை தீர்ந்து விட கூடாது என செயல்படுகிறார்கள் .
                       யார் தடுத்தாலும் 8 வருடம் இழந்து வருகிற ஊதிய உரிமை மீட்கப்பட அனைவரும் டாட்டா சங்கத்தின் சட்ட போராட்டம் வெற்றிப்பெற ஆதரவு தாருங்கள் .வருகிற சி.ஆர் .சி .கூட்டத்தில் உரிமை மீட்கப்பட விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் .உணர்வுள்ள அன்பர்களே உண்மை நிலை அனைவரும் அறிந்திட .......இறுதி வெற்றி என்றும் இடைநிலை ஆசிரியருக்கே ..டாட்டா கிப்சன்.

இடைநிலை காலிப் பணியிடங்கள் :- 22-08-2015


📲📲📲📲📲📲📲📲📲📲
தற்போதைய தகவல்:
காஞ்சிபுரம் மாவட்டம்,

🌻மதுராந்தகம் ஒன்றியம் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடம் விவரம்;-
1)பவுந்தங்கரணை,
2)மேல்வசலை,
3)அத்திவாக்கம்,
4)குருவாபதன்மேடு,5)ஓணம்பாக்கம்,
6)ஜமின் எண்டத்தூர்,
7)குன்னத்தூர்

Pudukottai vacant place 101 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Aranthangi 11
Arimalam 4
Annavasal 19
Kundrandar koil 8
Avudayar koil 11
Manamel kudi 7
Viralimalai 15
Karambakudi 17

Erode Dt: 🌷🌷🌷🌷🌷🌷🌷
Nambuyur block vacant:
Mettukadu..1l.
sanarpalayam2
Sengalipalayam1
Polavapalayam 1
Semmampalayam 1
Kannakattupalayam1
Vemandampalayam1
Arasankuttaipudur1
Thottipalayam1
Theethampalayam1
Varappalayam 1
Alagegoundampalayam1

Modakkurichi Block:
1.pups-Utharankattupudur
2.pups-kovilpalayam
3.pums-muthugoundanpalayam.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கு தகுதியான இடைநிலை ஆசிரியர் காலிபணியிடம் பட்டியல் ( 17 ). 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
ஆலங்குளம் ஒன்றியம் :
1.மாவிலியூத்து.
2.தங்கம்மாள்புரம்.
3.கருப்பினான்குளம்.

குருவிகுளம் ஒன்றியம் :
4.ஓடைகாரன்பட்டி.
5.ஆராய்ச்சி பட்டி.
6.கணபதி பட்டி.
7.மேல நாலாந்தலா .

பாப்பாக்குடி ஒன்றியம் :
8.மருதம்புதுர்.

சங்கரன்கோவில் ஒன்றியம் :
9.வடந்த்தம்பதூர்.
10.பெரீயூர்.
11.வேலாயுதபுரம் .

கடையநல்லூர் ஒன்றியம் :
12.குழையநேரி.

கடையம் ஒன்றியம் :
13.பொட்டல்புதூர்.
14.நாலான் கட்டளை.

செங்கோட்டை ஒன்றியம்:
15.தவனை .
16.சாம்பார் வடகரை.

மேலநீலிதநல்லூர் ஒன்றியம் :
17. புதுகிராமம்

தூத்துக்குடி மாவட்ட sec.gr காலிப் பணியிடம்: 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 .
புதூர.ஒன்றியம்: ,1.கழுகாசலபுரம் .2.தாப்பாத்தி 3. கீழ் அருனாசலபுரம் 4.முத்துசாமி புரம்.

BT vacant ,,,1.(maths)singilipatty.
விளாத்திகுளம் ஒன்றியம்.sec.Gr:
1.கந்தசாமிபுரம் 2.மாமூநயினார்புரம்
Krishnagiri Dt :
📲📲📲📲📲📲📲📲📲
In veppanapalli block there are SG vacants the list of scls follows with
kilo meters.
From krishnagiri-

*veppanapalli
(23km)-3
*Kattaiyambedu
(43km)-1
*Periya Bathlapalli(36km)-1
*chenna santhiram20km-1
Next year deployment.
*Ipiganapalli30km-1 Next year deployment.
*Edipalli40km-1
*M.Gollapalli35km-1
*K.N.Podur38km-1
*Theertham36km-2.
*Chinna kothur25km-2
*Gangamadugu
36km-1
*veppanapalli Teludu 1
*P.Thammandarapalli
33km-1
*Manavaranapalli
33km-2
*Nerlagiri 33km-1
*Naduvanapalli
23km-1
*Jedukothur31km-2
*Nallur31km-1
*Viruppasanthiram 21km-1
*Kuriyanapalli-30km-1
*Bathimadugu 45km-1
*Varagasanthiram
23km-1
*Nedusalai21km-1
*Marasanthiram
20km-1
Ramasanthiram

20km-1.

நீதி வென்றது அநீதி அடி பணிந்தது............

நீதி வென்றது அநீதி அடி பணிந்தது தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் திருமதி இரா. திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு.
திருமதி இரா. திருவளர்செல்வி அவர்கள் கரூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராகப் பணி புரிந்த போது, கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்த ஆசிரியர் திரு .என். வடிவேல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி இரா.திருவளர்செல்வி அவர்கள் தொடர்பான தகவல்களை கோரியிருந்ததால் ஆசிரியர் திரு. வடிவேல் என்பவரை முதன்மை கல்வி அலுவலர் தொலைபேசியில் மிரட்டியதால் ,முதன்மை கல்வி அலுவலர் திருமதி திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ஆசிரியர் வடிவேல் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றம் மதுரைக் கிளையில் வழக்கு எண் Crl.O.P.(MD)No.12859 of 2015 என்ற வழக்கு தொடர்ந்த வழக்கில் தற்போதைய தஞ்சாவூர் முதன்மை க் கல்வி அலுவலர் திருமதி. இரா.திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதி மன்றம. மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
,ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றம் தடை குறித்து நமது மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்களிடம் அரசின் அபிடவிட் காட்டி விவாதம் செய்யப்பட்டது .அவர்கள் இதில் நாம் கண்டிப்பாக வெற்றி பெற பல்வேறு சாத்தியம் உள்ளன .மேலும் வழக்கை டெல்லி யில் தங்கியிருந்து வழக்கு நடத்தும் வழக்கறிஞர் அவர்களை வைத்து கொள்ளுங்கள் என்றார் .நாம் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் திரு .ந்ந்தகுமார அவர்கள் நடத்த உள்ளார் என்றோம் .நல்லது. என்றார்கள் .மேலும் விரைவாக தடையை நீக்கம் செய்து ஆணை பெற்று வாருங்கள் .அதை வைத்து உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இறுக்கும் வழக்கு எண் 5301/2015;தீர்ப்பு பெற முடியும். என்றார் கள் .எனவே இறுதி வெற்றி இடைநிலை ஆசிரியர்களுக்கே .
இதுவரை உச்ச நீதிமன்றம் வழக்குக்கு நன்கொடை ₹.12,350/-மட்டுமே வரப்பட்டது .நமது தேவை ₹2,50,000ஆகும் .இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சினையில் இது இறுதி யுத்தம் ஆகும் .நாம் தற்போது விட்டு விட்டால் நம் ஆயுள் இறுதி வரை பாதிப்பு தொடருந்து வரும் .உணர்ந்து போராட்டம் சட்ட போராட்டம் செய்து வெற்றி பெறுவோம் ......டாட்டா கிப்சன்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 4393 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஆக மொத்தம் 6157 பணியிடங்களுக்கு மே-2015 முதல் ஆகஸ்ட் 2015 வரை ஊதியம் பெற ஆணை வெளியீடு

ஆசிரிய பேரினம் கட்டாயம் அறிய வேண்டிய பதிவு உங்களுக்கு எளிமையாக்கவே இரு பகுதியாக்கி வெளியிடுகிறேன்.
களவு போகும் கல்வி துறை | தொடர் | 3
(பகுதி−2)

- மு. நியாஸ் அகமது.
நண்பர்களே.... உங்கள் வீட்டில் பக்கத்து வீட்டுகாரர் வந்து உட்கார்ந்துக் கொண்டு, நீங்கள் இதை தான் சமைக்க வேண்டும், இப்படி தான் தூங்க வேண்டும், இந்த நேரத்தில் தான் புணர வேண்டும் என்று அதிகாரம் செலுத்தினால்... நீங்கள் கோபப்படுவீர்களா... இல்லை, அவர் சொல்வதை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவீர்களா....? சொரணை உள்ள அனைவருக்கும் கோபம் வரும், ஆதிக்கம் செலுத்துபவரை கழுத்தைப் பிடித்து வீட்டிற்கு வெளியே தள்ளுவோம்.
ஆனால், நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசே... உங்கள் பக்கது வீட்டுகாரருக்கு சாதகமாக நடந்து கொண்டால்...? இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் அது தான் நடக்கும் நண்பர்களே...
அதாவது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இங்கே செயல்பட வரும் போது என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் உலக வர்த்தக கழகத்தால் இறுதிசெய்யப் படும். அவ்வாறு இறுதி செய்யப்பட்ட ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிராக உள்நாட்டு சட்டங்கள் இருக்க கூடாது. இதனை கண்காணிக்க ‘வணிக கொள்கை மேற்பார்வை பொறியமைவு’ (Trade Policy Review Mechanism) நிறுவப்படும் . இதன் பிரதிதிகள், ஆண்டுக்கொரு முறை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வி தொடர்பான சட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வார்கள்.
இது இழிவில்லையா...? உங்கள் வீட்டில் என்ன சமைக்க வேண்டும் என்று பக்கத்து வீட்டுகாரன் ஆணையிட்டாலே வரும் கோபம் , ஒரு அமைப்பு உங்கள் தேசத்தின் கல்வி கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்தினால் ஏன் வரமாட்டேன் என்கிறது.
உங்கள் தந்தை உங்கள் குடும்ப சொத்தை விற்பனை செய்கிறார் என்றால் உங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று எதிர் பார்ப்பீர்கள்...? அந்த சொத்து பத்திரத்தை காண வேண்டும் என்பது உங்கள் நியாயமான எதிர்பார்ப்பு. ஆனால். இந்த திருநாடு உங்களிடம் எந்த அனுமதியும் பெறாமல், உயர் கல்வியை விற்பனை செய்ய போகிறது. புதிதாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்றால், அதன் மாதிரியை இணையத்தில் இந்திய மொழிகளில் வெளியிட வேண்டும். ஆனால், இது நாள் வரை இந்திய அரசு இந்திய மொழிகளுக்கு முக்கியதுவம் கொடுத்து, தமிழிலோ, தெலுங்கிலோ, மலையாளத்திலோ வெளியிட்டதில்லை. இந்தியில் மட்டுமே வெளியிடும். இம்முறை, இந்தியில் கூட வெளியிடாமல், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டுள்ளது.
தம் குடிகளுக்கு இந்த ஒப்பந்தம் குறித்து எதுவும் தெரிய கூடாது என்று நினைப்பதிலிருந்தே, நம் அரசுகளின் அயோக்கியதனம் பட்டவர்த்தனமாக தெரிகிறது.
ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கல்வியிலாளர்கள் எல்லாம் ஒன்றிணைந்து GATS ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து, இந்த GATSன் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொள்ள கூடாது. ஆப்பிரிக்க அரசு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூடாது என பரிந்தளித்துள்ளார்கள். இந்திய பொது புத்தி நம்மை விட கீழானவர்களாக நினைக்கும் ஆப்பிரிக்காவே, இந்த விஷயத்தில் விழிப்பாக உள்ளது. நாம் என்ன செய்ய போகிறோம் நண்பர்களே...?
கென்யா நாட்டு நைரோபியில், வரும் திசம்பர் 15 -18 வரை WTO - GATS மாநாடு நடக்கிறது. அதற்குள் உயர்கல்வியை வணிகமயமாக்கும் ஒப்பந்தத்திற்கு இந்தியா அளித்துள்ள வாக்குறுதிகளை திரும்ப பெறவில்லை என்றால், இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஆபத்துகள் எல்லாம் நிஜமாகும்.
நம் குழந்தைகளின் நல் எதிர்காலத்திற்காக, இந்தியா அரசிற்கு அழுத்தம் தந்து, வாக்குறுதிகளை திரும்ப பெற வைப்போம்.
(முற்றும்)
-----பதவி உயர்வு லாபமா? ------
இன்றைய சூழ்நிலையில் பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா?
ஓர் கணணோட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் இவ்வ்ண்டு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் வழக்கமாக பதவி உயர்வு என்றாலே போட்டி போட்டுக் கொண்டு செல்வர். ஒன்றிய முன்னுரிமை யில் தங்களது பெயர் மற்றும் வரிசை
யை எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருப்பர். ஆனால் நேற்று 11பேர் பதவி உயர்வு வேண்டாம் என்று கூறி 3 ஆண்டு பணித் துறப்பு செய்து விட்டனர்.
காரணம் இவர்கள் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் சிறப்பு
நிலை பெற்று 6% கூடுதலாக ஊதியம் பெறுவது தான். இன்றைய நிலை களில் பதவி உயர்வு சென்றால் 3% மட்டுமே கூடுதலாக ஊதியம் கிடைக்கும். மேலும் தற்போது பெறும் சிறப்பு ப்படி ₹500 ரத்தாகி விடும். விலையில்லா பொருட்கள் பெற்று வழங்குவது உள்ளிட்ட தலைமை ஆசிரியர் பணிச்சுமையும் கூடுதலான வேலை.
மேலோட்டமாக இவ்வாறு முடிவு எடுப்பதற்கு முன் கீழ் கண்ட அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

TET வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரனை தேதி மீண்டும் மாற்றம்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரியும் 5% மதிப்பெண் தளர்வு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதையும் எதிர்த்து லாவண்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரனை இந்த மாதம் இறுதியில் வரவுள்ளதாக இருந்தது இவை தற்போது மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாதம் செப்டம்பர் 1 ம் தேதி விசாரனைக்கு வரவுள்ளது.

Listed on. 19.1.2015
Ld. Registrar's Court No. 2
Item No. 89
Tata சங்கம் சார்பாக மாநில அளவில் பதவி உயர்வு வழங்கிட 2010,2012 ஆகிய வருடங்களில்3 வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .நிதி இன்மையால் வழக்கு முடியாமல் நிலுவையில் உள்ளது .விரும்பும் நபர்கள் இந்த வழக்கை எடுத்து நடத்தலாம்.......டாட்டா கிப்சன்

வழிதவறி செல்லும் திருநெல்வேலி சி .எஸ். ஐ .கிறித்தவ கல்வி நிறுவனம் கடந்த 3 மாதமாக ஊதியம் இல்லாமல் தவிக்கும் T.D.T.A. பள்ளி ஆசிரியர்கள்


திருநெல்வேலி மாவட்டத்தில் சி.எஸ்.ஐ. கிறித்தவ பேராயத்தின் கட்டுப்பாட்டில் பல்வேறு பள்ளிகள் செயல்டு வருகிறது. இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கு நிர்வாக பிரச்சினை காரணமாக கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்க வில்லை .இதனால் ஆசிரியர்கள் பெறிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு காரணம் கிறித்தவ அரசியல் ஆகும் .முந்தைய காலத்தில் நீண்டகால தொலைநோக்கு திட்டத்தால் உருவான நிறுவனம் இன்று பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட காரணமாக கிறித்தவ நிறுவன செயல்பாடு உள்ளன. மேலும் இந்த பள்ளிகள் தொப்பி யில் கூல் வாங்கி குடித்து கிறித்தவ மிஷனரி மூலம் உருவானவை ஆகும் .ஏழைகள் வாழ்வு உயர உருவான நிறுவனம் இன்று பணம். படைத்தவர் மட்டுமே பணியில் சேர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது .
இந்த நிறுவனம் உருவான நோக்கத்தை விட்டு விலகி செல்கிறது எனவே இந்த கல்விநிறுவனம் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும் .ஆசிரியர் கிறித்தவ சிறுபான்மை மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு இந்த முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.
இந்த நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் பாதிக்க பட்டு இருந்தால் டாட்டா சங்கத்தை தொடர்பு கொள்ளவும் .இந்த நிறுவன அரசுடைமை யாக சட்டத்தில் இடமும் உண்டு .

உங்கள் பிரச்சினை தீர தொடர்பு கொள்ளவும்
 ... டாட்டா கிப்சன் .
9443464081

நீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக "சிறப்பாசிரியர்கள்" வேலைவாய்ப்பு அலுவலகம் மூப்பின் படி நியமிக்க இயலாது - TRB அறிவிப்பு

Click here for Trb Notification 

TRB: போட்டித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 1,400 சிறப்பாசிரியர்கள் நியமனம்:அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
      அரசு பள்ளிகளில் ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவி யம்,
உடற்கல்வி) போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்புவிரைவில் வெளியாகிறது.பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளிலும், மாநக ராட்சிப் பள்ளிகளிலும் தையல், ஓவியம், இசை, உடற்க

தூங்குங்க! மக்களே தூங்குங்க!


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்!
தொகையை நடுவணரசிடம் செலுத்தாத தமிழக அரசு.
தகவலறியும் உரிமைச்சட்டத்தால் அம்பலம்!

1.1.2004 முதல் அரசுப்பணியில் சேரும் அனைவருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்
கட்டாயம். இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் அறிமுகப்படுத்தியது.2006 ஜூன்1 முதல் 10சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது.
இந்தியாவில்உள்ள
29 மாநிலங்களில் தமிழகம் தவிற பிற மாநிலங்கள் 33ஆயிரத்து 121 கோடி யை ஓய்வூதிய ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் அளித்துள்ளன.

பிற மாநிலங்களில் 13ஆயிரத்து 488பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7ஆயிரம் பேருக்கு ஓய்வூதிய நிதிகொடுக்கப்பட்டுள்ளது.இதில் 533பேர் இறந்தவர்.
ஆனால் தமிழகத்தில் 5000 கோடி பிடித்தம் செய்தும் , இதுவரை ஆணையத்திடம் செலுத்தவில்லை. பணம் என்ன ஆயிற்று என்ற தகவலும் இல்லை.

திட்டம் தொடங்கி
12 ஆண்டுகள் ஆகியும் பணம் செலுத்தப்படாதது
வெளிப்பட்டுள்ளது.தகவல் திரட்டியவர் திண்டுக்கல் பிரடெரிக் ஏங்கல்ஸ். (நன்றி:விடுதலை 26.7.15 நாளிதழ்)
திட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரிய மக்களே!
தூங்குங்க! நல்லா தூங்குங்க!
விழித்திருந்தால் விருந்தினர் மாளிகை இருந்த இடம் தெரியாது செய்திருக்க வேண்டாமோ!
-இவன் டாட்டா .

ஊதிய முரண்பாட்டைக் குறிப்பிட்டு நேரடிக் கோரிக்கை வேண்டும்


ஆட்சி மாறினால்
கிடைக்குமாம்

மாறாவிட்டால்
மாறியும்
கேட்காவிட்டால்
கிடைக்காவிட்டால்

உறுதியாகச்
சொல்கிறேன்
2800-4200 ஐக்
கேட்க மனமில்லை
எங்கே
கிடைக்கப்போகிறது

கோரிக்கைகளை
மாற்றுங்கள்

போராட்டக்களத்தை
மாற்றுங்கள்



அதைவிட முக்கியமான செயல் அரசு உச்ச நீதிமன்றத்தில் பெற்று இருக்கும் தடையை நீக்கம் செய்திட பண பலம் படைத்த பெரிய சங்கம் என்று கூறும் தலைமை யை நிற்பந்திப்போம். டாடா கிப்சன் அவர்களால் கடந்த 4 வருட சட்ட போராட்டம் காரணமாக கிடைத்த 3400 பக்கம் கொண்ட ஆவணங்களை இடைநிலை ஆசிரியர் நலன் கருதி பெரிய சங்கங்களுக்கு  வழங்க தயார் .பெரிய சங்கம் அதை வைத்து அரசுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்திட தயாரா ?.
டாட்டா சட்ட போராட்டம் கண்டிப்பாக மாபெரும் வெற்றி பெறும் .அன்று இடைநிலை ஆசிரியர் அனைவரும் டாட்டா வில் இருப்பார்கள் .

நமக்கு
கிடைக்கும் 9300+4200

எனக்கும் கிடைக்கும்
ஆடுவோமே
பள்ளு பாடுவோமே
4200 g p
பெற்றுவிட்டோம் என்று.

_
ஆசிரியர்களுக்காக..............

டாட்டா கிப்சன் .9443464081.
கலை அவர்களே டாட்டா கள போராட்டம் தவறானது என்று எங்கும் கூறவில்லை ..காலம் கடந்த போராட்டம்.................?  ....??? மனித சக்தியை விரையம். செய்வதை விட அரசு உச்ச நீதிமன்றத்தில் 2010 லேயே ஆசிரியர் அனைவருக்கும் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கிவிட்டதாக பொய் சொல்லி தடைஆனண பெற்று உள்ளதை   நீக்கம் செய்திட பலம் படைத்த தங்கள் சங்கத்தை நிற்பந்தியுங்கள்.

அரசியல் ஆக்கப்படுகிறதா ஆசிரியர்கள் .....பிரச்சனை ..........


மேற்கண்ட தலைப்பில் தந்தி தொலைக்காட்சி ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.
கூடவே தமிழக நிதிநிலை பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இதில் சிறப்பு என்னவென்றால் ஆளும் கட்சி ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர் திரு.மாஃபா பாண்டியரஜன் பேசியபோது ஆசியர்கள் போராட்டம் கோரிக்கைகள் நியாயமில்லை என்று சொல்லமாட்டேன் என்றும் ஆனால் அவர்கள் போராடும் முறை சரியில்லை என்று கூறினார்
ஆனால் சரியான முறையைக் கூற மறந்துவிட்டார்.

தி.மு.க சார்பில் பேசிய திரு. ஜெயராஜ்
அவர்கள் எங்கள் ஆட்சியில் 750ரூ.கொடுத்தோம் என்றார்.ஆனால் இப்பிரச்சனை எங்கள் ஆட்சியிலேயே தொடங்கியது எனக் கூற மறந்துவிட்டார்.

CPS பிரச்சனைப் பற்றி பேசியபோது அது அரசின் கொள்கை முடிவு என்றார்கள். ஆனால் அதை தமிழக அரசு மாற்ற முடியும் என்றார் தி.மு.க சார்பானவர்
அதை நீங்கள் ஏன் மாற்றவில்லை? அதை மத்திய அரசு கொண்டுவந்த போது ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்வி வந்தவுடன் அவர் டெஸ்மா எஷ்மாவிற்குச் சென்றுவிட்டார்.

ஒரே பணி ஆனால் மாறுபட்ட ஊதியம் என்ற கருத்தைப் பதிவு செய்யவே கடைசியாகப் போராடி நேரம் பெற்றார் தலைமையாசிரியர்கள் சங்க பொருப்பாளர் திரு.நடராஜன் அவர்கள்.
ஆனால் நெறியாளர் அதற்கு வேறொரு கேள்வியான இராணுவ வீரருக்கும் காவல்துறைக்குமான ஊதிய முரண்பாட்டைக் கேட்பார்களே அதுவும் ஒரே பணிதானே என்றார்.அதற்கு ஆசிரியர் சங்க நிர்வாகி முன்பெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் இப்பொழுது எடுத்துக் கொண்டுவிட்டார்கள் புதிதாகக் கேட்கவில்லை என்று பதில் சொல்ல விடவில்லை நெறியாளர்.
பொருளாதார நிபுணர் ஒருவர் பேசியது சற்று ஆறுதல் தந்தது என்னவெனில் கல்விக்கு வழங்கப்படும் நிதி செலவு இல்லை, மூலதனம் என்றார். ஆனால் இக்கருத்து கோரிக்கைகளை நிறைவேற்றினால் 2500கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று தொடக்கத்திலே பேசிய பாண்டியராஜனுக்கு கேட்காமல் போய்விட்டது.
மொத்தத்தில் ஆசிரியர்கள் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் ஆதரிப்பது அதுவும் தேர்தல் நேர போராட்டங்களை ஆதரிப்பது இயல்பானதுதான் எனினும் இன்றைய விவாதத் தலைப்பை கடன் சுமையோடு சேர்த்து விவாதித்தது சரிதானா? என்பதும் அரசியல் ஆக்கப்படுவது யாரால் என்பதை மனச்சாட்சி உள்ளோரும்,ஆசியர்கள் கோரிக்கைகளின் நியாயங்களை உணர்ந்தவர்களுமே முடிவு செய்யட்டும்.
T.A.T.A Kumbakonam
Training of primary and upper primary school teachers in teaching English
(Developing reading, writing skills in english)

Primary: 4 days
I II III
17.08.15. 18.08.15. 19.08.15
24.08.15. 25.08.15. 26.08.15
31.08.15. 01.09.15. 02.09.15
07.09.15. 08.09.15. 09.09.15

Upper primary:2 days
I II III
14.09.15. 15.09.15. 16.09.15
21.09.15. 22.09.15. 23.09.15

என்சிடிஇ புதிய விதிமுறை எதிரொலி: தொலைதூரக்கல்வி பி.எட். சேர்க்கையில் விரைவில் மாற்றம்



தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பி.எட். மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்.

என்சிடிஇ எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அமைப்பு, ஆசிரியர் கல்வி பயிற்சியில் பல் வேறு மாற்றங்களை கொண்டுவந் துள்ளது. பிஎட், எம்எட் படிப்புக் காலத்தை ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பிஎட் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் என்சிடிஇ-யின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பிஎட் மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார். கோவை பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் தொலைதூரக்கல்வியில் பி.எட். படிப்பை வழங்கி வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவத் துடன் பணியில் இருக்கின்ற பட்டதாரிகள் இதில் சேரலாம். பல்கலைக்கழகத்துக்கு ஏற்ப நுழைவுத்தேர்வு அல்லது பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
என்சிடிஇ-யின் புதிய விதிமுறை யின்படி, தொலைதூரக்கல்வியில் பிஎட் படிப்பில் சேர இடைநிலை ஆசிரியர் பயிற்சி (ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு) அவ சியம். அத்துடன் பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும். என்சிடிஇ- யின் இந்த புதிய விதிமுறை யின்படிதான் அடுத்த ஆண்டு தொலைதூரக்கல்வி பி.எட். படிப் பில் மாணவர்களைச் சேர்க்க முடிவுசெய்திருப்பதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்லைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியை சந்திரகாந்தா ஜெயபாலன் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
2014-15ம் நிதியாண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பிடித்தங்களில் விடுபட்ட தொகையினை (CPS MISSING CREDITS) விரைவில் ஏற்றிட கோரப்பட்டுள்ளது
குறிப்பு:
1. தங்கள் பள்ளி / அலுவலகங்களின் USER ID, PASS WORD மூலம் உள்ளே சென்று MISSING CREDITS என்ற தலைப்பில் 4வதாக உள்ள 2014-15 MC ல் செல்ல வேண்டும்.
2. அதில் SELECT TOKEN NO என்பதை கிளிக் செய்தால் அதில் விடுபட்ட தொகைக்கான டோக்கன் எண்கள் வரும்.
3. அதில் ஒரு டோக்கனை செலக்ட் செய்தால் அதன் விபரங்கள் வரும். அதில் வலது ஓரத்தில் ADD NEW TRANS DETAILS என்பதை கிளிக் செய்து குறிப்பிட்ட டோக்கனில் உள்ளவர்களின் விபரங்கள் ஒவ்வொன்றாக ஏற்ற வேண்டும்.

CLICK HERE TO GO THE CPS SITE.....
http://218.248.44.123/auto_cps/index.php/login

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் CPS தொகை மற்றும் மாநில அரசு ஊழியர் எண்ணிக்கை RTI -இல் வெளியீடு .தமிழக அரசு PFRDA விடம்-ஒரு ரூபாய் கூட வழங்காத நிலை-RTI NEWS





அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களுக்கு டாட்டா வின் வணக்கங்கள் ........


தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர்களுக்கு 2010 ல் திரு .ராஜிவ் ரஞ்சன் அவர்கள் அறிக்கை படியும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை படியும் ஊதியம் மத்திய அரசுக்கு இணையாக வழங்கிவிட்டது என பொய்யான தகவல்கள் கூறி ஊதிய பிரச்சினை க்கு தடை ஆணை பெற்று விட்டது .
டாட்டா சங்கம் 2010 புதிதாக துவங்கியது முதல் ஆசிரியர்களுக்கு ஆக போராட்டம் செய்து வருகிறது .இடைநிலை ஆசிரியர் களுக்கு ஊதியம் மறுக்கப்பட்ட காரணம் டாட்டா சங்கம் முலமாக வெளி உலகுக்கு தெரிய வந்தது .RTI சட்டத்தை சரியான காரியங்களை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தி பல்வேறு ஆவணங்கள் அரசுக்கு எதிராக சேகரித்து இதுவரை 1989 முதல் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் பெற்று காரணம் எல்லாம் வரலாறு ஆவணங்கள் 4300 சேகரித்து சட்ட போராட்டம் உயர் நீதிமன்றத்தில் நடத்தி வந்தது .தற்போது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி தடை பெற்று உள்ளதால் நாமும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .நாம் உச்ச நீதிமன்றம் செல்லாவிட்டால் வருங்காலத்தில் ஊதியம் மிகவும் பாதிக்கப்படும் .இதை அறியாமல் நாம் சங்கத்தின் பெயரால் சண்டை போடுகிறோம் .இப்போது நமக்கு தேவை ஊதிய முரண்பாடு தீர்க்க படுதல் ஆகும் .
டாட்டா அனைத்து சங்கங்கள் நடத்தும் கள போராட்டம் வெற்றி பெற தனது பங்களிப்பு வழங்கும் .அதுபோல சங்க பாகுபாடு இல்லாமல் அனைவரும் சட்ட போராட்டம் வெற்றி பெற நிதியுதவி வழங்க வேண்டுகிறேன் .தற்போது காலம் கடந்து கொண்டே செல்கிறது வழக்கு தாக்கல் செய்திட வழக்கறிஞர் அவர்களுக்கு ரூபாய்.2,50,000வழங்க வேண்டியது உள்ளது .ஆனால் இதுவரை நிதியுதவி ரூபாய் 12,500 மட்டுமே கிடைத்துள்ளன .இன்னமும் தேவை அதிகம் .இடைநிலை ஆசிரியரே இழந்து உள் ள உரிமை மீட்க ஊதியம் 9300+4200 என மாற்றம் செய்திட தங்கள் பங்களிப்பு வழங்கிடுங்கள் .
இந்த பாதிப்பு நீங்காவிட்டால் அரசு அடுத்த ஊதிய குழு வில் இடைநிலை ஆசிரியர் களுக்கு ஊதியம் தற்போது பெறுவதில் இருந்து 20,000 உயர்த்தி வழங்குமாறு ? சிந்தனை செய்வீர் இழந்த உரிமை மீட்டிடுவோம்.

டாட்டா கிப்சன் .
இன்றைய01-08-2015 உண்ணாவிரதக் கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் வெளிப்படையாக செய்தனர். ஆசிரியர்களின் ஊதிய பிரச்சினை அரசியலாக்கப்பட்டதற்கு யார் காரணம்...?
ஊடகங்கள், ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்காக போராடுவதாக செய்திகள் பரப்புகின்றன.
நாங்கள் ஊதிய உயர்வுக்காக போராடவில்லை... மாதம் 10,000 த்துக்கும் மேல் இழந்து வருகிறோம். எங்கள் இழைப்பிற்காக தான் போராடுகிறோம்.
எங்கள் கல்வித்தகுதி 10th எனக் கூறி வழங்கிவரும் 2800 தர ஊதியத்தை, எங்கள் உண்மையான கல்வித்தகுதி +2 with Diploma, அதற்கு வழங்க வேண்டிய 4200 தர ஊதியம் பெற... எங்கள் தன்மானம் உயர்வுக்காவே போராடுகிறோம.

இந்த நிலைக்கு யார் காரணம்?
2009 ல் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியக்குழுவில் பெரும் இழைப்பு ஏற்பட்ட பிறகு, அன்று நடத்தப்பட்ட போராட்டங்களினால்...
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்காமல், 1.86 மட்டும் வழங்கி தற்காலிகமாக சப்புகட்டு கட்டியது... அன்றைய அரசா...? இல்லை... 1.86 வாங்கினால் ஊதியம் மட்டும் உயரம், தர ஊதியம் மற்றும் Entry pay குறைவது சங்க நிர்வாகிக்களுக்கு தெரியாமல் போயிற்றா...?

அதைத்தொடர்ந்து நடந்த போராட்டங்களினால் SP 500 மட்டும் வழங்கியது அரசின் தவறா..? இல்லை... அதற்கும் சம்மதித்தது சங்கங்களின் தவறா...?
பிறகு இலகரங்களில் ஆசிரியர்களை சென்னையில் திரட்டி நடத்தப்பட்ட பேரணியின் பலனாக... SP 500வுடன், 250ஐ மட்டும் சேர்த்து, அதை 750 PP ஆக வழங்கியது அரசின் தவறா... அதை பெற்றுக்கொண்டு வெற்றி எனக் கொண்டாடியது சங்கங்களின் கையாளாகாதா தன்மையா...?
2009லிருந்து எத்தனை போராட்டங்கள்...
ஊர்வலங்கள்... உண்ணாவிரதங்கள்... போதும் இவையெல்லாம்...
அனைத்து சங்கங்களும் ஒன்றுபட்டு ஒரு வலுவான போராட்டம்... அது வேலைநிறுத்தப் போராட்டமாக இருந்தால் நலம்...

என்று மாறும் எங்கள் நிலை...???
சம்பத் இடைநிலை ஆசிரியர்
வேலூர். 7845964964