செவ்வாய் கிரகத்திலிருந்து புதிய படங்களை அனுப்பியது கியூரியாசிட்டி விண்கலம்
NASAs Mars rover sends back stunnin...
SHARE THIS STORY
1
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்துக்கு நாசா ஆய்வு மையம் அனுப்பி வைத்திருக்கும் கியூரியாசிட்டி விண்கலமானது புதிய புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறது.
இப்புதிய புகைப்படத்தில் அங்குள்ள சிகரத்தின் படம் இடம்பெற்றுள்ளது. இதேபோல் பாறை ஒன்றையும் விண்கலம் படம்பிடித்திருக்கிறது. நாசா அனுப்பியிருக்கும் மவுண்ட் சார்ப் என்ற இந்த சிகரம் முழுவதும் மண்குவியல்களால் ஆனது.
நிலவில் முதன்முதலாக காலடி வைத்த நீல் ஆம்ஸ்டிராங் 82 வயதில் மரணம்
Neil Nitin Mukesh to support Think ...
வாஷிங்டன்: நிலவில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டிராங் தனது 82வது வயதில் காலமானார்.
1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி அப்பல்லோ மிமி என்ற விண்கலம் சந்திரனில் தரை இறங்கியது. அதில் இருந்து நீல் ஆம்ஸ்ட்ராங் தான் முதல் ஆளாக இறங்கிநிலவில் காலடி எடுத்து வைத்தார். இதன் மூலம் சந்திரனில் முதன் முதலாக நடந்த விண்வெளி வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. பூமி திரும்பிய பின்னர் நீல் ஆம்ஸ்ட்ராங் உலக ஹீரோவானார்.
கடந்த 5ம் தேதி அவர் தனது 82வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கடந்த 7ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதில் இருந்து உடல் நலம் குன்றி இருந்த ஆம்ஸ்டிராங் காலமானார் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் எங்கு, எப்போது இறந்தார் என்று அவர்கள் தெரிவிக்கவில்லை.
நீல் ஆம்ஸ்டிராங் நிலவில் நட்டுவைத்த அமெரிக்ககொடி ஏற்கனவே அழிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தகுதித் தேர்வு 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி! அக்டோபர் 3-ல் மறுதேர்வு, மறுதேர்வில், 90 நிமிட நேரம் கூடுதலாக வழங்கவும் உத்தரவு!!!
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், சுமார் 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3-ம் தேதி (புதன்கிழமை) மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி சென்னையில் சனிக்கிழமை அறிவித்தார். பெரும்பாலான தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 2 கோடி காலி பணியிடங்கள்
விரைவில் நிரப்பப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். சென்னையில், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தென் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது, அரசு அலுவலகங்களில் தற்போதைய அளவில் 2 கோடி பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், விரைவில் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசின் தேர்வுகள் தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடைபெற்று வருகின்றன. நாட்டின் கிராமப்புறப்பகுதிகளில் உள்ள திறமையானவர்களும் அரசுப்பணிகளில் அமரும் வண்ணம், அந்தந்த மண்டல மொழிகள் என மூன்று மொழிகளில் வினாத்தாள்களை தயாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்குள், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (எஸ்.எஸ்.சி.) மூலம், 1 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அவர் கூறினார்.
: பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (டி.இ.டி.,) சமீபத்தில் நடந்தது. இதில் பி.எட்., பிரிவில் சமூக அறிவியலில் 150 க்கு 125 மதிப்பெண்கள் பெற்று, தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த அருள்வாணி, மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.அருள்வாணி எம்.ஏ., பொருளாதாரம் படித்துள்ளார். அவர் கூறியதாவது: என் கணவர் ஹரிபாஸ்கர், இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழக அரசின் பாடப் புத்தகங்களை, படித்து தேர்விற்கு தயாரானேன். தேர்வில் பாடம் சம்பந்தமில்லாத சில கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. அதை தவிர்த்தால், என்னைப் போல பலரும் அதிக மதிப்பெண்களை பெறுவார்கள். மாநில அளவில் முதல் இடம் எனக்கு எதிர்பாராத ஒன்றாகும். மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு அவசியமானது. அப்போது தான் சிறந்த ஆசிரியர்களை, தகுதியான ஆசிரியர்களை உருவாக்க முடியும், என்றார்.
வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:
1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.
3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.
4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice)
ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு " .இந்த விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் . இயற்கை மட்டும் விதிவிலக்கா என்ன ? இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி சதா ஓடிக்கொண்டே இருக்கிறோம் . இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது . இதை உணர மறக்கிறோம் . எல்லாவற்றுக்கும் ஒரு விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது . நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு " உலக பூமி தினம் " என்று ஒரு நாள் தேவைப்படுகிறது .
மலைகளின் அரசியான ஊட்டி இருக்கும் மலைத் தொடர்ச்சி தான் நீலகிரி. நீலகிரி மலையைக் காண்பதற்கு நீலமாக இருப்பதால்,'நீலகிரி' என அழைக்கப்படுகிறது.மலைகளின் அரசியான ஊட்டி சுற்றுலா
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வீடு, அவரது மாமனார் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிகாலை, அதிரடி சோதனை நடத்தினர். கல்வித்துறை நிதியை மோசடி செய்தும், கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்தும், சேர்க்கப்பட்ட, 46 சொத்துகளுக்கான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
தமிழகத்தில் 27 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர் நலன் கருதி அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது .மதுரை (எஸ்.எஸ்.ஏ.,), சிவகங்கை (எஸ்.எஸ். ஏ.,) விழுப்புரம் (ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ.,) கடலூர் (ரெகுலர்), வேலூர் (எஸ்.எஸ்.ஏ.,), காஞ்சிபுரம் (எஸ்.எஸ்.ஏ.,) உள்ளிட்ட 27 சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. மேலும், பல்வேறு மாவட்டங்களில் 27 கல்வி அலுவலர் பணியிடங்களும் பல மாதங்களாக காலியாக உள்ளன.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு பணிகளை, நவீன தகவல் தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக, அதை தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்க டெண்டர் விளம்பரத்தை டி.ஆர்.பி வெளியிட்டுள்ளது.
ஸ்கேனிங், பிரின்ட்டிங், தகவல் தொடர்பு நிர்வாகம் மற்றும் தேர்வுப் பணிகளில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பங்களை www.tenders.tn.gov.in or www.http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
அமெரிக்க பத்திரிகை போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலி்ல், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை, பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, பட்டியலில் 6ம் இடம் பிடித்துள்ளார்.
கொள்கைகளை வகுத்தல், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், சேவை நோக்குடன் செயல்படும் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வெற்றி வாகை சூடியுள்ள பெண்களை கவுரவிக்கும் பொருட்டு, அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டும் அந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலின் முதலிடத்தில் ஜெர்மன் சாஞ்சலர் ஏஞ்சலா மெர்கெலும், இரண்டாமிடத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், மூன்றாம் இடத்தில் பிரேசில் அதிபர் டில்மா ரெளசூப்பும் உள்ளனர். கடந்தாண்டும், முதல் மூன்று இடங்களை இவர்களே பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மவுலானா ஆசாத் பல்கலைக்கழகம் சார்பாக சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான
இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை
தற்போது நடைபெற்று வருகிறது.
2013ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக
சிறுபான்மையினர் மற்றும் இளநிலை பட்டப்படிப்பு பயின்ற
சைதை துரைசாமியின்
மனிதநேயம் மையத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்ற 8 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணியும், 4 பேருக்கு ஐ.எப்.எஸ். பணியும், 4 பேருக்கு ஐ.பி.எஸ். பணியும் ஒதுக்கப்பட்டு
உள்ளது.
சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு உதவும்
வகையில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி, வசுந்தரா வெற்றி ஆகியோரால் மனிதநேய அறக்கட்டளை
தொடங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. சாதி, மத வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரும்
பயன்பெறும் நோக்கில் இந்த
தினமலர் சார்பில், வி.ஏ.ஓ., தேர்வுக்கான இலவச ஆலோசனை முகாம், நாளை(ஆக.,18) காலை 10 முதல் மதியம் ஒரு மணிவரை, மதுரை பசுமலை மன்னர் கல்லூரியில் நடக்க உள்ளது.
ஜூலை 9ல் வி.ஏ.ஓ., தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. மொத்தமுள்ள 1870
காலிப்பணியிடங்களுக்கு, இதுவரை பத்தரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஒரு பதவிக்கு 550 பேர் வரை
மதுரை: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2012 - 13க்கான
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலையில் பயிலும்
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பள்ளி வீரர்களுக்கு ரூ.10ஆயிரம், கல்லூரி, பல்கலை வீரர்களுக்கு
ரூ.13ஆயிரம் வழங்கப்படும். 1.7.2011 முதல் 30.6.12 வரையான காலத்தில்,
விளையாட்டுத் துறையில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மட்டும்
விண்ணப்பிக்கலாம். தேசிய பள்ளி விளையாட்டு குழுமம்,
சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள இலவச காலணி
வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, பள்ளி மாணவ, மாணவியரின் கால் பாத
அளவீடு எடுப்பது குறித்து, மாநில அளவில், ஆசிரியர்களுக்கு பயிற்சி
அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் படி, 81 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 100 கோடி ரூபாய்
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியரின் சரியான கால் பாத அளவு மூலம்,
புதிய காலணிகள் தயாரிக்கப்படும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்புக்கு முதல்
பிரிவு எனவும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை
மாநில நுகர்வோர் கோர்ட்டின் மதுரை கிளையில்,
வரும் 21ம் தேதி முதல், வழக்குகள் விசாரணை துவங்குகிறது.மாவட்ட நுகர்வோர்
கோர்ட்டுகளின் தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீட்டு
தளவாய்புரம்: சொந்த செலவில், 20 ஆண்டுகளாக மரங்களை வளர்த்து வருகிறார்,
சேத்தூர் வெற்றிலை வியாபாரி தலைமலை.விருதுநகர், சேத்தூர் அருகே தேவதானத்தை
சேர்ந்தவர் தலைமலை, 50. இவர், தினமும் சைக்கிளில் வெற்றிலை வியாபாரம்
செய்கிறார்.
ஒரு நாள், வியாபாரத்தை முடித்து விட்டு வரும் போது,
வெயிலின் கொடுமைக்கு மூதாட்டி இறந்ததை கண்டார். "மரம் இருந்தால்,
* அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலை வாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். * இறைவனுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, இறைவனின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள். *
நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே! சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு
உரியவராய் இருந்தீர், எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். * வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும் வரை மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே. *
நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். நீ நெருங்கிக்
கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல் புரிவதுமில்லை, சிந்தனை
செய்வதுமில்லை. * உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி, எல்லாருக்கும், எப்பொழுதும், நன்மை செய்யவே நாடுங்கள். * நம்பிக்கை இல்லாத தீய உள்ளம், கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்கள் எவருக்கும் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது புதிய தானியங்கி தரையுளவி ஒன்றை செவ்வாய்க் கோளில் தரையிறக்கியுள்ளது.
ஓவியரின் கைவண்ணத்தில் கியூரியோசிட்டி தரையிறங்குவதைக் காட்டும் படம்
செவ்வாயில் இருந்து கியூரியோசிட்டி அனுப்பிய முதலாவது படம்
கியூரியோசிட்டி
(Curiosity) என அழைக்கப்படும் ஒரு தொன் எடையுள்ள இந்தத் தரையுளவி
செவ்வாயின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில் ஜிஎம்டி நேரம்
இன்று காலை 05:32 மணிக்கு தரையிறங்கியது. இத்தளவுளவி குறைந்தது இரண்டு
ஆண்டுகளுக்கு செவ்வாயில் தங்கி அங்கு முன்னர் வாழ்ந்திருக்கக்கூடிய
உயிரினங்கள் பற்றி ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது.
தரையுளவி செவ்வாயில் தரையிறங்கிய சமிக்கை நாசாவின் ஒடிசி செயற்கைக் கோள்
வழியாக பூமியை எட்டியதை அடுத்து கலிபோர்னியாவின் பசடேனா நகரில் உள்ள ஜெட்
உந்துகை ஆய்வுகூடத்தில் பெரும் கரகோசத்துடன் வரவேற்கப்பட்டது.
கியூரியோசிட்டி செவ்வாயில் தரையிறங்கிய முதலாவது படிமங்கள் ஏற்கனவே
பூமிக்குக் கிடைத்துள்ளது.
கியூரியோசிட்டி செவ்வாயில் தரையிறங்கும் நாசாவின் நான்காவது தரையுளவி
ஆகும். ஆனாலும் இது ஏனைய திட்டங்களிளை விட மிகப் பெரியதாகும். 1997 ஆம்
ஆண்டில் தரையிறங்கிய முதலாவது தரையுளவி நிறியை விட 4 மடங்கு பாரமான
பரிசோதனைக் கருவியை கியூரியோசிட்டி கொண்டு சென்றுள்ளது.
தரையுளவி தரையிறங்கிய பள்ளத்தில் உள்ள 5 கிமீ உயர மலை ஒன்றை கியூரியோசிட்டி
ஆராயும். மலையில் ஏறும் போது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் திரவ
நீரில் உருவாகிய பாறைகளையும், நுண்ணுயிரிகள் வாழ்ந்த சூழ்நிலைகளையும் அது
ஆராயும்.
ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இத்தரையுளவி இயங்கக்கூடும் என
எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது இது பத்து அல்லது அதற்கு மேலான
ஆண்டுகளுக்கும் இயங்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த மெகா ஊழலை மிஞ்சும்
வகையில், தற்போது மேலும் பல ஊழல்கள் நடந்திருப்பது, மத்திய கணக்கு தணிக்கை
அலுவலகத்தின் அறிக்கை மூலம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது
சமூகத்தில் ஒரு சக்தி வாய்ந்த
படிப்பாக திகழும் சட்டப் படிப்பிற்கான சேர்க்கை நடைமுறைகளை மாணவர்கள்
தெளிவாக அறிந்துகொண்டால் நன்மை பயக்கும்.
படிப்புகள்
சட்ட இளநிலைப் படிப்பு(LL.B) என்பது இன்னும் பிரபலமாக இருக்கும் ஒரு
படிப்பு. ஒருங்கிணைந்த B.A. LL.B, B.Sc. LL.B, BBA. LL.B and B.Com. LL.B
படிப்புகளும் பிரபலமானவை. மேலும், சட்ட முதுநிலைப் படிப்பையும்(LL.M)
மாணவர்கள் மேற்கொள்ள முடியும்.
"பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களை எக்காரணம் கொண்டும் வேருடன் வெட்டக்கூடாது. மேலும், வகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் போன் உபயோகிக்கக் கூடாது; மொபைல் போன் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி எச்சரித்து உள்ளார்.
அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவி வழங்குவது
தொடர்பாக, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்,
சென்னை: டி.என்.பி.எஸ்.சி சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகளை
வெளியிட, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தர்மபுரியைச் சேர்ந்த சின்னச்சாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த
உயர்நீதிமன்றம், குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது.
சின்னசாமி தாக்கல் செய்த மனுவில், தனது வினாத் தாளில் 200க்கு 195
கேள்விகள் மட்டுமே இருந்ததாகவும், இதனால் தனது அரசு வேலை உரிமை
பறிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து வழக்கு
தொடர்பாக விளக்கம் கேட்டு டி.என்.பி.எஸ்.சிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
சாதாரண போலீஸ்காரராக பணிபுரிந்து வந்த ஜேப்பியார்,
இன்று, 10 பொறியியல் கல்லூரிகளுக்கும், ஒரு பல்கலைக்கழகத்திற்கும், ஆறு
தொழிற்சாலைகளுக்கும் சொந்தமானவர் என்ற செய்தியை படித்த போது,
வியப்படையாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காவல் துறையில் தொடர்ந்து
இவர் பணி புரிந்திருந்தால், இந்த அளவுக்கு சொத்து சேர்க்க முடியாது.
இவ்வளவு சொத்து சேர்வதற்கு மூல காரணம் அரசியல். அரசியலில் இவர் ஈடுபட்டதால்
தான், இவ்வளவு சொத்து.
மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே, சமணர் படுகைகள், கல்வெட்டுக்கள்
நிறைந்த மலைகளையும், குவாரி உரிமையாளர்கள் விட்டு வைக்காதது, அதிகாரிகள்
ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில், பாமியான் புத்தரை சிதைத்த
தலிபான் செயல் போல, இங்கே கொடுமை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு
உள்ளது.
மேலூர் அருகே, கீழவளவு பகுதியில் உள்ள, மூன்று மலைகளும்,
அரிட்டாபட்டியில் உள்ள ஏழு மலைகளும் மற்றும் திருவாதவூர்
TATA சங்கக்கோரிக்கை விரைவில் வெற்றி சத்துணவுத் திட்டத்தில், பல வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்த
அறிவிப்பு, அண்ணாதுரை பிறந்த தினத்தன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
சத்துணவில், இனி, பெப்பர் முட்டை, கறிவேப்பிலை சாதம் போன்றவை வினியோகிக்க
வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. தமிழகத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச்
சேர்ந்த குழந்தைகளுக்கு, தேவையான அளவில் சத்தான உணவு அளிப்பதன் மூலம்,
அவர்கள் உடல் தரத்தை உயர்த்தி, கல்வி கற்பதை ஊக்குவித்து, கல்வி
விகிதாச்சாரத்தை உயர்த்துவதுடன்,