PAGEVIEWERS

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு பணிகளை, நவீன தகவல் தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக, அதை தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்க டெண்டர் விளம்பரத்தை டி.ஆர்.பி வெளியிட்டுள்ளது.

ஸ்கேனிங், பிரின்ட்டிங், தகவல் தொடர்பு நிர்வாகம் மற்றும் தேர்வுப் பணிகளில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பங்களை  www.tenders.tn.gov.in or www.http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களுடன் ரூ.1000 அங்கீகாரம் பெற்ற வங்கியில் வரைவோலை எடுத்து, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், The Chairman, Teachers Recruitment Board, 4th EVK Sampath Maaligai, College Road, Chennai 600 006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தகுதி வாய்ந்த நிறுவனத்தை தேர்வு செய்து முதல் ஒரு ஆண்டுகளுக்கு மட்டும் பணி வழங்கப்படும். அந்த நிறுவனத்தின் சேவையில் மனநிறைவு இருந்தால் தொடர்ந்து ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வேலைக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணி டி.ஆர்.பி அலுவலகத்தில் நடக்கும். தேர்வு செய்யப்படும் நிறுவனம், ஞாயிற்று கிழமையை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் வேலை செய்ய வேண்டும் என டி.ஆர்.பி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment