



PAGEVIEWERS
ஆறாவது ஊதிய குழுவினால் பாதிப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல. பதவி உயர்வில் சென்றுள்ள மூத்த ஆசிரியர்களுக்கும் தான் என்பதை விளக்கும் கட்டுரை
TO DOWNLOAD GOVT LTR.23373/S/2011-2 DATED.09.08.2011 CLICK HERE...
அரசாணை 234 நாள்:1.6.2009 இல் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாதபோதே சமரசமின்றி தொடர்ந்து போராடி இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை போராடி பெற்றிருந்தால், அதன்பின்னர் பல்வேறு ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய முயன்றிருக்க வாய்ப்புண்டு. ஏதோ இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு என்றுமட்டும் நினைத்துவிட்டார்களோ என்னவோ? குறை சொல்வதற்காக இப்படி குறிப்பிடவில்லை. மூத்த ஆசிரியர்களுக்கும் ஊதிய பாதிப்பு ஏற்படுவதால் இப்படி குறிப்பிடுகிறோம்.G.O.240. நாள்.22.7.2013. இன் படி அனுமதிக்கப்பட்ட RE-OPTION வாய்ப்பை பயன்படுத்தி ஊதிய நிர்ணயம் செய்தால் இப்போது பெற்று வருகிற அடிப்படை ஊதியத்தை விட குறைவான ஊதியமே நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது பற்றிய ஓர் ஆய்வு
THANKS - MR.Thomas Rockland (tata)
தலைப்பில் உள்ளவாறு உள்ள பாதிப்பை
விளக்கும் முன்னர் OPTION & RE-OPTION பற்றி ஒரு சிறு
விளக்கம்.
OPTION பற்றிய விளக்கம்.
1.1.2006 முதல் 31.5.2009 இக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு / சிறப்பு நிலை எய்தியவர்கள்
ஆறாவது ஊதிய குழு ஊதியத்தில் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது, முந்தைய ஊதிய விகிதத்தில் தேர்வு/சிறப்பு நிலை பெற்ற காலம் வரை பழைய
ஊதிய விகிதத்தில் இருந்து விட்டு தேர்வு/சிறப்பு நிலைக்கு பின்னர் புதிய ஊதிய
விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளலாம். அதாவது 9300 - 34800 + G.P.
4300 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளலாம்.
RE-OPTION பற்றிய விளக்கம்.
தொடக்கக் கல்வி - தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் கலந்தாய்வு 20.08.13 அன்று சென்னையில் நடைபெறுகிறது
ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்தும், அதற்கு பதிலாக 31.08.2013 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு
GO.131 SCHOOL EDN (TRB) DEPT DT.13.08.2013 - DECLARE HOLIDAY ON 17.08.13 FOR TET EXAM CLICK HERE...
ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்தும், அதற்கு பதிலாக 31.08.2013 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தீர்க்கப்படாத பிரச்சனைகளை தீர்க்க மனு அனுப்புங்க.
சட்டசபை மனுக்கள் குழு அழைப்பு.
சட்டசபை மனுக்கள் குழு அழைப்பு.
பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்சனைகள் குறித்து சட்டசபை மனுக்கள் குழுவுக்கு மனு அனுப்பலாம்.
இதுகுறித்து தமிழ்நாடு சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிக்கை: தமிழ்நாடு சட்டசபை மனுக்கள் குழு விரைவில் திருச்சியில் கூடுகிறது. திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்படவேண்டிய பொதுப்பிரச்சனைகள், குறைகள் குறித்த மனுக்களை அனுப்பலாம்.
மனுதாரர் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர்,மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டசபை, சென்னை - 600 009. என்ற முகவரிக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் அனுப்பலாம். 5 நகல்கள் அனுப்பப்பட வேண்டும். மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கபடாமல் இருக்கும் பொதுப்பிரச்சனைகள் குறித்ததாக இருக்கலாம்.எந்தவொரு மனுவும் ஒரேயொரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறை சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.
மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.சட்டசபை வரம்பிற்கு உட்பட்ட மனுக்கள், மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பின்னர் தகவல் அனுப்பப்படும்.
மாணவர் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு..
பள்ளிக்கல்வித்துறையில் புதிய இணை இயக்குநர்கள் பொறுப்பேற்பு
*இணை இயக்குநர் (பணியாளர்த் தொகுதி) திரு.
கருப்பசாமி அவர்களையும்,
*இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) திரு.
முத்து பழனிசாமி அவர்களையும்,
*இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி)
திரு.பாலமுருகன் அவர்களையும்,
*இணை இயக்குநர் (தொழிற்கல்வி) திரு.தர்ம
ராஜேந்திரன் அவர்களையும்,
*இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி
இயக்கம்) திருமதி.லதா அவர்களையும்,
*இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி இயக்கம்-நிதி உதவிப் பெறும்
பள்ளிகள்) திரு.செல்வராஜ் அவர்களையும்,
மத்திய அரசு PFRDA மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் நாளன்று மத்திய அரசு அலுவலகங் -களில் இரண்டு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு
மத்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில்
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் / PFRDA (ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை
மற்றும் மேம்பாட்டு ஆணையம்) மசோதாவை தாக்கல் செய்து நடைமுறைபடுத்த
திட்டமிட்டுள்ளது. அதற்காக நாடாளுமன்ற நடப்பு கூட்டத் தொடரின் நிகழ்ச்சி
நிரலில்(பட்டியல்) இந்த மசோதாவை சேர்த்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர்
பட்டியலில் உள்ளதால், மத்திய அரசு இந்த மசோதா குறித்து எந்த நாளிலும் விவாதம் நடத்தும் என்று தெரிய வருகிறது.
2009 இல் நியமிக்க பட்ட இடைநிலை
ஆசிரியர் பணி மாறுதல் உச்சநீதிமன்ற வழக்கு
நீதிபதி உத்தரவு
நமது சங்கம் சார்பாக 2009 க்கு பின் பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் வேண்டி தொடரப்பட்ட வழக்கு 13-4-2012 உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது ..
சிலர் ரூ .10 இலச்சம் வரை வசூல் செய்து உள்ளனர் . நமக்காக திரு .ஜெய்ந முத்து ராஜ் மற்றும் திரு .சுரேன்தரன் ஆகிய வழக்குரைஞர்கள் ஆஜர் ஆகினர் .சிலர் நமது இயக்கத்திற்கு எதிராக புரளி கிளப்பி வருகிரார்கள் . நம்பாதீர்கள் .. நாம் தான் முதலமைசர் அவர்களுக்கு 1000 மனுக்கள் அனுப்பி அரசை பதில் மனு தாக்கல் செய்ய வைத்து ஊள்ளோம் ..எந்த சங்கமும் இது போல் வெளிப்படையாய் தங்கள் வழக்கு நகலை வெளியிட்டது இல்லை ..நமக்கு மடியில் கனம் இல்லை நெஞ்சில் பயம் இல்லை...நமது இயக்கத்தினர் .. பிரரை போல் டூர் செல்ல வில்லை ..நமது வழக்க்றின்ர் வழக்கை நல்லப் படி முடித்து தருவார்கள் ..நாம் வழக்குக்கக் ரூ .90,000 மட்டும் வசூல் செய்து கொடுத்து உள்ளோம் .பிறர் தங்கள் கேஸ் காப்பியை கூட வெளியிட பயம். காரணம் அவர்கள் கேஸ்சில் வலு இல்லை. வழக்கு இந்த மாதத்தில் முடிந்து விடும்
இதோ order copy
இதோ order copy
இடைநிலை ஆசிரியர்களில் 1-6-2009 பின் நியமனம் ஆறாவது ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே என்பதால் பழைய ஊதியம் போதும் ,புதிய ஊதியம் வேண்டாம்.
ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும்.
தற்போது புதிய ஊதிய விகிதத்தினருக்கான D.A. அறிவித்த பின்னர் முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி அரசாணை வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A அரசாணை வெளியிடப்பட்ட பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்றுவருபவர்களுக்காக நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இல் D.A. 166% -க்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தை விட, முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில் இருந்திருந்தாலே ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.
BASIC PAY = 4500
DEARNESS PAY (D.P) = 2250
D.A. 166% = 11205
___________
TOTAL 17955
____________
(D.A. நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இன் படி)
ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு.
BASIC = 5200
GRADE PAY = 2800
P.P. = 750
D.A. 80% = 7000
_________
TOTAL 15750
__________