PAGEVIEWERS

தமிழ்நாடு அடிப்படைப் பணி - பள்ளிக்கல்வித்துறை - பகுதி நேர பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களை முறையான நியமனம் வழங்குதல்.


அரசு கடித எண். 11199 / ஆர்1 / 2010-11, நாள்.28.11.2011.  
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 5950 / ஜே3 / 2012, நாள். 09.03.2012.
மேலே உள்ள அரசு கடிதத்தில் 01.01.1996 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணியில் உள்ள / ஓய்வுப்பெற்ற சில்லறை செலவின / தினக்கூலி / பகுதிநேரப் பணியாளர்கள் குறித்த முழுவிவர அறிக்கையினை வேலைவாய்ப்பகம் மூலம் நியமனம் செய்யப்பட்டோர் மற்றும் நேரடியாக நியமனம் செய்யப்பட்டோர் என இரண்டு பட்டியல்களாக அரசுக்கு அனுப்பமாறு கோரப்பட்டுள்ளது.  எனவே 12.3.2012 க்குள் E-MAIL மூலம் அனுப்பிவைக்க அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Private Schools Fee Determination Committee Fee Fixed for the year 2013-2016


Justice Thiru S.R Singaravelu,
Chairman, Private Schools Fee Determination Committee, Chennai - 600 006.
Fee fixed for the year 2013-2016
District wise Particulars
District
Tirunelveli

Fixation  
Ariyalur
Fixation
ChennaiFixation
CoimbatoreFixation
CuddaloreFixation
DharmapuriFixation
DindigulFixation

உயர்நிலைப் பள்ளிகளில் தரம் உயரவில்லை: பிளஸ் 1 மாணவர்கள் தவிப்பு


          நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு இல்லாததால், பிளஸ்1 சேர்க்கையில் இடம் கிடைக்காமல், மாணவர்கள் தவிக்கின்றனர்.

          கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், அனைவருக்கும் கல்வி கற்பிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5 கி.மீ., தூரத்திற்குள் ஒரு பள்ளி என்ற குறிக்கோளுடன், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் செயல்படுகிறது. 

தொடக்கக் கல்வி - மைய அரசின் நிதியுதவி திட்டம் - IDMI - நிதியுதவி கோரும் சிறுபான்மையினத்தவர்களால் நடத்தப்படும் பள்ளிகள் சார்பான கருத்துரு பெற இயக்குனர் உத்தரவு

டி. என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

டி. என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு வரும் ஆக 25 ம் தேதி தேர்வு நடக்கிறது. இதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம், என இந்த துறை அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
‌இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர், தட்டச்சர் என மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். வரும் ஜூலை 15 ம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள் ஆகும். இதனை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டு

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் 17.06.2013 காலை 10.00 மணி முதல் 01.07.2013 மாலை 5.30 மணி வரை (ஞாயிற்றுகிழமை தவிர்த்து) அனைத்து நாட்களிலும் காலை 10.00 மணி முதல் 5.30 மணி வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விற்பனை செய்யப்படும்






பி.இ., "ரேங்க்' பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை(12ம் தேதி) காலை வெளியிடுகிறது.

பி.இ., "ரேங்க்' பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை(12ம் தேதி) காலை வெளியிடுகிறது. இந்த ஆண்டு, 2.35 லட்சம் பி.இ., விண்ணப்பங்கள் விற்பனை ஆயின. எனினும், 1.89 லட்சம் மாணவர்கள் மட்டும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அண்ணா பல்கலையிடம் சமர்ப்பித்தனர். இதில், மாணவர்கள், 1.14 லட்சம் பேர்; மாணவியர், 74 ஆயிரம் பேர். கடந்த, 5ம் தேதி, "ரேண்டம்' எண்களை, அண்ணா பல்கலை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, 1.89 லட்சம் மாணவர்களின் "ரேங்க்' பட்டியலை, நாளை, 12ம் தேதி காலை, அண்ணா பல்கலை வெளியிடுகிறது. அண்ணா பல்கலை, "ரேங்க்' பட்டியலை வெளியிட்டதும், மாணவர்கள், தங்களுடைய "ரேங்க்' விவரங்களை, www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வரும் 21ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குகிறது. ஜூலை, 30ம் தேதி வரை கலந்தாய்வை நடத்தி, ஆகஸ்ட் 1ம் தேதி, வகுப்புகளை துவக்க, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விபரங்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி., என்ற மத்திய பணியாளர் தேர்வாணையம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., .உட்பட உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ்‌ தேர்வு நடத்துகிறது. முதல் நிலை , பிரதான தேர்வு, ‌நேர்முகத்தேர்வு என 3 கட்டமாக நடக்கிறது. இதில், முதல் நிலை மற்றும், பிரதானதேர்வில், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தபால் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விபரங்களை, யு.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி 12.06.2013 அன்று காலை 11.00 மணிக்கு அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் எடுக்க தமிழக அரசு உத்தரவு.

தனியார் பள்ளிகள் சாதனை! பின்னணி என்ன? - நா.முத்துநிலவன் கட்டுரை

இப்போது, அரசுப்பள்ளிகளில் பெருகிவரும் கல்விஉதவிகள், அறிவியல் ஆய்வக, தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்த நினைக்காத பெற்றோர், பெரிய பெரிய கட்டடஙகளைப் பார்த்து, மயங்கித் தனியார் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கும்போது, அவர்கள் இவர்களை ஒட்டக் கறந்துவிடுவதும், மாணவரும் மனிதர்தான் என்பதை மறந்துவிடுவதும் தொடர்கிறது. அதனால்தான் இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய அவசியமும் எழுந்தது. - நா.மு.
கடந்த ஆண்டு பன்னிரண்டாம்வகுப்புத் தேர்வுமுடிவுகள் வந்த அடுத்தநாள் (24-05-2012) தினமணித் தலையங்கத்தில் எழுப்பப் பட்ட கேள்வி இது - ‘தனியார் பள்ளிகளுக்கு நிகராகவும், மேலாகவும் கற்றுக் கொடுக்க முயலாதவர்கள் மக்கள் வரிப்பணத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக ஏன் தொடரவேண்டும் என்று கேள்வி எழுப்புகிறோமா?’ - இந்த ஆண்டு, அதை விஞ்சக்கூடிய அளவுக்கு “நாமக்கல்(வி) சாதனை” என்று தினமணியின் தலைப்புச் செய்தி சொல்கிறது.(10-05-2013). இரண்டும் சொல்வது ஒரே பொருள்தான் அதாவது தனியார் பள்ளிகள் சாதனை செய்கின்றன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சாதிக்க முயற்சிகூடச் செய்வதில்லை. என்பதுதான் அது. இந்தக் கருத்துச் சரிதானா? தனியார் பள்ளிகளின் இந்த சாதனைக்குப் பின்னால் என்னென்ன நடக்கிறது? அந்த வழிகள் சரியானவையா? என்பவையே நமது கேள்விகள்.

தொடக்கக் கல்வி துறை - 2013-2014 ஆம் கல்வியாண்டு ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கியது - கூடுதல் விவரம் கோருதல் சார்பு





டேராடூன்


டேராடூன் புகைப்படங்கள் -  ராபர்ஸ் கேவ்டேராடூன் புகைப்படங்கள் -  ஃபாரெஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - முகப்புத் தோற்றம்டேராடூன் புகைப்படங்கள் - ஃபாரெஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்

பத்தாம் வகுப்பு முடிவுகள் : மறுகூட்டலுக்கு 07.06.2013 முதல் 10.06.2013 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மார்ச்/ஏப்ரல் 2013 எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதியோர் விடைத்தாட்களின் மதிப்பெண்கள் மறுக்கூட்டலுக்கு Online மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. எனவே   தேர்வர்கள் விண்ணப்பங்கள் கோரி எந்தவொரு கல்வி அலுவலகத்தையும் அணுக வேண்டாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

மார்ச்/ஏப்ரல் 2013 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்விற்கு தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு (Retotalling)  விண்ணப்பிக்கலாம்.    விண்ணப்பிக்க   விழைவோர்.www.dge.tn.nic.in என்ற இணையதளத்தின்மூலம் Online முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்பங்கள் தயார்: அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் கிடைக்கும்


           ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை மையங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

ஆசிரியர் தகுதித்தேர்வு

இரயில்வே அருங்காட்சியகம்……………….


பள்ளிக்கல்வித்துறையின் "கற்க கசடற" மாத இதழ் துவங்க மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் உத்தரவு

பள்ளிக்கல்வி - அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010-க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர் பிற நிபந்தனையுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்திருக்க வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர்

















தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் கட்! பாதிப்பில் ஆசிரியர்கள்


நெல்லை மாவட்டத்தில் தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத சுமார் 200ஆசிரியர்களுக்கான சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுககான இலவச மற்றும் கட்டாயக்கல்விச்சட்டம் 2009 (4)ன்படி பிரிவு 23 உள்பிரிவு (1)ன்படி ஆசிரியர் நியமனத்திற்கு
ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தேசியஆசிரியர் கல்வி கவுன்சிலும் இதனை அங்கீகரித்துள்ளதோடு இதனைகுறைந்தபட்ச தகுதியாக நிர்ணயித்துள்ளது. 

பள்ளிக் கல்வித் துறையில் 44 டி.இ.ஓ., 10 சி.இ.ஓ. பணியிடங்கள் காலி

பள்ளிக் கல்வித் துறையில் 44 மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.), 10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.), 3 இணை இயக்குநர், 2 இயக்குநர்பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த கல்வியாண்டு ஜூன் 10-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்தக் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சென்னையில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தி்ல் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.

சென்னை தங்கசாலையில் அரசு மைய அச்சகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்கள் மற்றும் கல்வித் துறைக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் அச்சடிக்கப்படுகின்றன. அரசுக்கு தேவையான அறிக்கைகள், காலண்டர், டைரி போன்றவையும் இங்கு அச்சடிக்கப்படுகின்றன. இங்கு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று காலை 9.30 மணியளவில் இங்குள்ள ஒரு

12ஆம் வகுப்பு மார்ச் பொது தேர்வு எழுதியவர்களில் நகல் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை கீழ்க்கண்ட பாடங்களுக்கு விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டு உள்ளது


Subject CodeSubject NameCandidates are allowed to apply for revaluation/re-totalling for the following subjects ONLY
007ChemistryFrom 29.05.2013 to 01.06.2013 ONLY @dge.tn.nic.in
009BiologyFrom 01.06.2013 to 04.06.2013 ONLY @dge.tn.nic.in
011BotanyFrom 03.06.2013 to 06.06.2013 ONLY @dge.tn.nic.in
013ZoologyFrom 03.06.2013 to 06.06.2013 ONLY @dge.tn.nic.in
005PhysicsFrom 03.06.2013 to 06.06.2013 ONLY @dge.tn.nic.in
041MathematicsFrom 03.06.2013 to 06.06.2013 ONLY @dge.tn.nic.in

தொடக்கக் கல்வி - 2013-2014ஆம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதலில், மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு 31.05.2013 அன்று பிற்பகல் பணியில் இருந்து விடுவித்து உடன் பணியில் சேர இயக்குநர் உத்தரவு

உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க :


          
சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும்சுமார்700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும்பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம்நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர்அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
திண்டுக்கல்: கவுன்சலிங்கின் போது தலைமையாசிரியையை கேலி, கிண்டல் செய்ததாக தலைமையாசிரியர்கள் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திண்டுக்கல் சிஎஸ்ஐ போர்டிங் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு நேற்றுமுன் தினம் நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். குஜிலியம்பாறை
நெல்லையில் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வில் காலி பணி இடங்கள் மறைக்கப்பட்டன. ஆசிரியை, ஆசிரியர்கள் வெளியேறி போரா ட்டம் நடத்தினர். இதனால் கூடுதல் காலி பணியிடம் காட்டப்பட்டு மீண்டும் கலந்தாய்வு நடந்தது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, பாளை லயோலா கான்வென்ட் பள்ளியில் நேற்று முன்தினம் (29ம் தேதி) நடந்தது. இதில் 18 இடங்கள் அறிவிக்கப்பட்டு நிரப்பப்பட்டன. இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு தொடர்ந்து நேற்று (30ம் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அவர்களின் குடும்ப திருமண விழாவை கொண்டாட, 2013-14 ஆம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.

GO.172 FINANCE DEPARTMENT DATED.29.05.2013 - LOANS AND ADVANCES by the State Government – Advances to Government Employees for the Celebration of Marriages - Allotment of Funds for the year 2013 2014 – Order–Issued.
1. Government of India – Department of Education 2. National Education Policy 3. National Council for Teacher Education 4. Indian Institute of Technology, Chennai
5. Universities in Tamil Nadu 6. Teachers Education Research and Training
7. Tamil Nadu State Council for Higher Education 8. Tamil Virtual University 9. Madras Institute of Development Studies 10. State Resource Center-Tamil Nadu 11. Teachers Recruitment Board 12. Department of Social Defence
13. Missing Child Bureau 14. Rehabilitation of the Disabled (Special Education) 15. Institute of Child Health and Hospital for Children 16. Tamil Nadu Corporation for Development of Women Limited 17. Electronics Corporation of Tamil Nadu
18. UNICEF 19. School Syllabus 20. School Text Books Online 21. Directorate of Elementary Education 22. Gateway to Examination Results 23. Directorate of Government Examination

2011 குரூப் 2 தேர்விலும் மோசடி: கிளம்பியது புது பூகம்பம் - நாளிதழ் செய்தி

கடந்த, 2012ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், 2011ல் நடந்த, குரூப் 2 தேர்விலும், மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, வணிக வரித் துறை துணை கமிஷனரான ரவிக்குமார் என்பவரை, கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில், 2012 ஆக., 12ம் தேதி, அரசுத் துறையில் காலியாக இருந்த, 3,631 பணியிடங்களுக்கு நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில், 6.40 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில், ஈரோடு, தர்மபுரி, அரூரில் வினாத்தாள் அவுட்டானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது.

கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர் வேலை டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு




தமிழர் வரலாறு (Tamizhar History)


Thamizhar History
தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணைந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் பகுப்புத் தொகுப்பு. 



தமிழர் வாழும் நாடுகள் : 




பள்ளி கல்வித் துறையில், ஆசிரியர் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு, நாளை (20ம் தேதி) முதல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், "ஆன்-லைன்' வழியில் நடக்கிறது. 

பட்டதாரி அறிவியல், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில், 8,000 காலி பணியிடங்கள் உள்ளன. கணிதம், தமிழ்ப் பாடங்களில், எந்த மாவட்டத்திலும், காலி பணியிடங்களே கிடையாது என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தென் மாவட்டங்களுக்குத் தான் ஆசிரியர்கள் அதிக அளவில் பணி மாறுதல் கேட்கின்றனர். ஆனால், அங்கு மிக சொற்ப இடங்களே காலியாக உள்ளன.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, வழக்கமாக, ஜூன், ஜூலையில் நடக்கும். கல்வி ஆண்டு துவங்கிய பின், கலந்தாய்வு நடத்துவதால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிக்கிறது; அத்துடன், பணியிட மாறுதலில் கவனம் செலுத்துவதால், ஆசிரியர், சரிவர, பள்ளிகளுக்கும் செல்வதில்லை. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

இதை மனதில் கொண்டு, பள்ளி திறப்பதற்கு முன்னரே, ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்தது. அதன்படி, நாளை (20ம் தேதி) முதல், நான்கு நாட்களுக்கு, "ஆன்-லைன்' முறையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு, 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, நாளை காலை, 9:00 மணி முதல் நடக்கிறது. முதலில், மாவட்டத்திற்குள் மாறுதல் பெறவும், பின், மாவட்டம் விட்டு, மாவட்டம் செல்வதற்கான மாறுதலும் நடக்கும்.

4,000 இடங்கள் காலி:வரும், 21ம் தேதி, அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கும். 22ம் தேதி, அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கும். 23ம் தேதி, முதுகலை ஆசிரியர்கள் மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கிறது.இதில், 4,000 காலி பணியிடங்கள் உள்ளன. அனைத்து பாடங்களிலும், காலி பணியிடங்கள் இருப்பதாகவும், தென் மாவட்டங்கள், சென்னை மற்றும் பக்கத்து மாவட்டங்களில், காலி பணியிடங்கள், மிகக் குறைவாக இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், சிறப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர் ஆகியோர், மாவட்டத்திற்குள் மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு, 24ம் தேதியும், மாவட்டம் விட்டு, மாவட்டத்தில் பணியிடம் பெறுவதற்கான கலந்தாய்வு, 25ம் தேதியும் நடக்கின்றன.

பட்டதாரி:பட்டதாரி ஆசிரியரில், 8,000 காலி பணியிடங்கள் உள்ளன. அறிவியலில், 2,000 இடங்கள், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியலில், தலா, 3,000 இடங்களும், காலியாக உள்ளன. கணிதம், தமிழ்ப் பாடங்களில், காலி பணியிடங்கள், சுத்தமாக கிடையாது என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.அதிலும், 8,000 காலி பணியிடங்கள், விழுப்புரம்,திருவண்ணாமலை, வேலூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் தான், அதிகளவு உள்ளன. தென் மாவட்டங்களில், மிகக் குறைவு என, கூறப்படுகிறது. தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 24ல் துவங்கி, 31 வரை நடக்கிறது.3ம் தேதி பணியில் சேர உத்தரவு:கலந்தாய்வுக்குப் பின், அனைத்து ஆசிரியர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில், ஜூன், 3ம் தேதி, பணியில் சேர வேண்டும். பள்ளி திறந்ததற்குப் பின், பணியிட மாறுதல் வழங்கப்படாது. எனவே, பள்ளி திறந்ததற்குப் பின், யாராவது, பணியில் சேராமல் இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

த.தொ.க.சார்நிலைப் பணி - 2013-2014ம் ஆண்டிற்கான ஆசிரியர்களின் முன்னுரிமை மற்றும் தகுதியுடைய தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைபடுத்த உத்தரவு.


த.தொ.க.சார்நிலைப் பணி - கூடுதல் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பொது மாறுதல் கலந்தாய்வு 24.05.2013 அன்று காலை 9.30மணிக்கு தொடக்கக் கல்வி இயக்ககத் தில் நடைபெறுகிறது