PAGEVIEWERS

பி.இ., "ரேங்க்' பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை(12ம் தேதி) காலை வெளியிடுகிறது.

பி.இ., "ரேங்க்' பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை(12ம் தேதி) காலை வெளியிடுகிறது. இந்த ஆண்டு, 2.35 லட்சம் பி.இ., விண்ணப்பங்கள் விற்பனை ஆயின. எனினும், 1.89 லட்சம் மாணவர்கள் மட்டும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அண்ணா பல்கலையிடம் சமர்ப்பித்தனர். இதில், மாணவர்கள், 1.14 லட்சம் பேர்; மாணவியர், 74 ஆயிரம் பேர். கடந்த, 5ம் தேதி, "ரேண்டம்' எண்களை, அண்ணா பல்கலை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, 1.89 லட்சம் மாணவர்களின் "ரேங்க்' பட்டியலை, நாளை, 12ம் தேதி காலை, அண்ணா பல்கலை வெளியிடுகிறது. அண்ணா பல்கலை, "ரேங்க்' பட்டியலை வெளியிட்டதும், மாணவர்கள், தங்களுடைய "ரேங்க்' விவரங்களை, www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வரும் 21ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குகிறது. ஜூலை, 30ம் தேதி வரை கலந்தாய்வை நடத்தி, ஆகஸ்ட் 1ம் தேதி, வகுப்புகளை துவக்க, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment