PAGEVIEWERS





 

 


தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( டாடா ) மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 09.07.2016 சனிக்கிழமை மதியம் 2.00 மணிக்கு மாநில தலைவர் அவர்கள் தலைமையில் திருச்சி ...ஹோட்டல் அருணில் நடைபெற்றது.             


 மேற்படி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்.    வருமாறு.......         
                
  1)மத்திய அரசு உழியர்களுக்கு ஏழாவது ஊதியகுழு நடைமுறைபடுத்தப்பட உள்ள நிலையில் தமிழக இடைநிலை ஆசிரியர்களின் 6 வது ஊதிய குழு முறன்பாடு இதுநாள் வரை தீர்க்கப்பட வில்லை.மேலும் தமிழக 6 வது ஊதியகுழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 158 வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேற்படி வழக்குகளுக்கு தமிழக அரசு வரைவாக பதில் மனு தாக்கல் செய்து வழக்கை முடித்து ஊதிய முறன்பாட்டை தீர்த்த பின்னர்தான்    தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு அமைக்க வேண்டும்...                
 2)பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்திட அமைக்கப்பட்ட குழு அறிக்கை தயாரிக்கும் முன்னர் அனைத்து சங்கங்களையும் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்திட வேண்டும்.......              
3) தலைமை ஆசிசியர்கள் பல்வேறு பதிவேடுகள் பராமறிப்பு செய்திட வேண்டியது உள்ளதாள் "" அரசு உழியர்களுக்கு உள்ள பவாணிசாகர் பயிற்சி மையம்  "" போல் தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் பயிற்சி வழங்கிட திருச்சியை மையமாக கொண்டு புதிய பயிற்சி மையம் துவங்கப்பட வேண்டும் ...               
 4) ஆண்கள், பெண்கள்,மாற்றுதிறனாழிகளுக்கு தனி தனி மேல்நிலை பள்ளிகள் இருப்பது  போல்  திருநங்கைகள்  கல்வி தடையின்றிபயில மாவட்ட தலைநகர்களில் சிறப்பு மேல்நிலைபள்ளிதுவங்கப்பட வேண்டும்........                 5)அரசின் விலையில்லா பொருள்கள் அனைத்தும் பள்ளிகளுக்கே கொண்டு வந்து வழங்கிட வேண்டும்....                 
 6)தமிழக அரசு உழியர்களுக்கான பணி விதிகள் மற்றும்  அடிப்படை விதிகள் ஊதிய விதிகள் இதுவரை தமிழில் இல்லை.ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.எனவே முக்கிய விதிகளைதமிழில் மொழிபெயற்பு செய்து அரசிதழில் வெளியிட வேண்டும் ....             
  7).தொடக்க கல்வி துறையில்  கடந்த 10 வருடமாக நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு. பணிநிரவல் நடைபெற வில்லை.  எனவே விரைந்து பணிநிரவல் நடத்திட வேண்டும். 
8)ஆசிரியர்களின் உயர்கல்வி பின்னேற்ப ு2 வருடமாக அனுமதிக்கப்படாமல்நிலுவையில் உள்ளது இவற்றிற்கு கல்வித்துறை செயலாளர் விரைர்து அனுமதித்து ஆணை வழங்கிட வேண்டும்.                   9)வினாயகா மிஷன் பல்கலைகழகம் படிப்புகள். மற்றும் M.Com. B.Dd.  / M.A .  B.Ed.(பொருளாதாரம்) படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வும் பதவி உயர்வும் அனுமதிக்க வேண்டும்.                   
  10) ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் துவங்கப்பட்ட ஆங்கில வழி கல்வி பாட பிரிவுக்கு போர்கால அடிப்படையில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் விரைந்து நியமிக்க அரசை வேண்டுகிறோம்.      
  11.) 2003--2006 வருடங்களில் தொகுப்புதியத்தில் பணி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணி காலத்தை ஊதிய உயர்வுக்கும்  பதவி உயர்வுக்கும் எடுத்துக்கொள்ளபணி நியமன நாள் பணிவரன்முறை செய்திட வேண்டுகிறோம்..    
   12 ) தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிசெய்து வரும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் . ..               
  13.) உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள TET வழக்குகளை விரைந்து முடித்து மத்திய அரசு போல் ஆண்டுக்கு இரு முறை தகுதிதேர்வு நடத்த வேண்டும்..                   
  14) தொடக்க கல்வி துறையில் அதே பள்ளியில் B.Ed கற்பித்தல் பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முழு ஊதியம் வழங்கிட வேண்டும்..                   
  15) ஆசிரியர்கள் , அரசு உழியர்களின்  பணி சார்ந்த வழக்குகள் விரைந்து முடிக்கப்பட மதுரையிலும் சென்னையிலும் என இரண்டு  "டிரிபினல்" நீதிமன்றங்கள் உயர்நீதி மன்ற வளாகத்தில் அமைத்திட வேண்டுகிறோம்.           16)  ஆசிரியர்களுக்கு  விரைவாக பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்உ  கலந்தாய்வு ஓளிவு மறைவு இல்லாமல் நேர்மையான முறையில் நடத்திட வேண்டும்..               
  17)    பள்ளி கல்வி துறை போல் தொடக்க கல்விதுறையிலும்  பணி நியமன தேதி அடிப்படையில் மாநில அளவில் பதவிஉயர்வு பட்டியல் தயார் செய்து நடைமுறை படுத்திட வேண்டும்  

தேசிய திறனாய்வு தேர்வு 9ம் வகுப்பு மாணவர்கள் ஆக.1 முதல் விண்ணப்பிக்கலாம்
அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆக.1 முதல் 8 வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் பகுதிகளில் இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2016-17ம் கல்வியாண்டில் தொடர்ந்து 9ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளிக்க வேண்டும்.தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.8ம் தேதி ஆகும். இதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 பேருக்கு 12ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
7 வது ஊதியகுழு .....
.டாடா சங்கம் எப்படி எதிர்கொள்ளும்..... 

கடந்த 6 வது ஊதியகுழு நடமுறை படுத்தும்போது டாடா சங்கம் துவங்கப்படவே இல்லை. ஊதிய குழு 1.6.2009 நடைமுறை படுத்தப்பட்பது.அதன்மூலம் ஏற்பட்ட பாதிப்பு நீங்க 14.4.2010 ல் டாடா சங்கம் துவங்கப்பட்டது. ஊதிய பாதிப்பு நீங்க பல்வேறு ஆதாரங்களை RTI மூலம் சேகரித்து நீதி வேண்டி நீதிமன்றத்தை நாடியது.மேலும் தொடந்து இன்று வரை ஊதிய பிரச்சனைக்காக தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வரை வழக்கு நடத்தி வருகிறது.""கன்டிப்பாக 1.1.2006 முதல் டாடா ஊதிய மாற்றம் பெற்று தரும் "" தற்போது உள்ள நிலையில் டாடா சங்கம் ஏகப்பட்ட அதாரங்களுடன் எதையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது. எனவே எந்த ஆசிரியரும் அஞ்சல் வேண்டாம் . டாடா சங்கம் மட்டுமே போதும் இடைநிலை., பட்டதாரி ., முதுகலை என அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் ஊதிய மாற்றம் பெற்று தரும் . தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு உச்ச நீதிமன்ற அனுமதி பெற்றபின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தான் அமைக்க முடியும் .எனவே 1.1.2006 முதல் ஊதிய மாற்றம் எட்டு.இதன் பயனை அடைய அனைவரும் 2019 வரை காத்திருக்க வேண்டும் .........டாடாகிப்ஸன்

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக கருப்பசாமி நியமனம்...........

தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்துக்கு, புதிய இயக்குனராக கருப்பசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரிக் பள்ளி இயக்ககம், முறைசாரா கல்வி ஆகியவற்றுக்கு, இயக்குனர் பணியிடங்கள், நான்கு மாதங்களாக காலியாக இருந்தன. முறைசாரா கல்வியை, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவனும், மெட்ரிக் இயக்ககத்துக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகனும் கூடுதல் பொறுப்பில் கவனித்தனர்.


இந்நிலையில், மேல்நிலைப் பள்ளி இணை இயக்குனர் முத்து பழனிச்சாமி, பணியாளர் நிர்வாகம் இணை இயக்குனர் கருப்பசாமி ஆகியோர் இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில், கருப்பசாமி மெட்ரிக் பள்ளி இயக்ககத்துக்கும், பழனிச்சாமி முறைசாரா கல்வி இயக்ககத்துக்கும் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி கல்வித்துறை கையாளும் பிரிவுகள் : தமிழக பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ், பள்ளிக் கல்வி, தொடக்க கல்வி, மெட்ரிக் பள்ளி, முறைசாரா கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேர்வுத்துறை இயக்ககம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய துறைகள், ஒவ்வொரு இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அவர்களுக்கு கீழ் இணை இயக்குனர்களும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் இயங்குகின்றனர்.

திருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் பங்கு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

பணிப்பதிவேட்டில் வாரிசுதாரராக இல்லாத நிலையிலும் அரசுஊழியர்களின் இறுதி பணப் பலன்களில் அவரது தாயாருக்கு பங்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், குமுழியேந்தலை சேர்ந்த எம்.முத்துலெட்சுமி (72) உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:


எனக்கு 5 மகன்கள், 3 மகள்கள். 8 குழந்தைகள் இருந்தும் என்னை யாரும் கவனிக்கவில்லை. என் மகன் கணேசன் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி யூனியனில் ஊரக நல அலுவலராக பணிபுரிந்தார். அவர் 2013-ல் இறந்தார். கணேசனுக்கும், அவரது மனைவி அன்புக்கரசிக்கும் பிரச்சினை இருந்தது. கணவனிடம் ஜீவனாம்சம் கோரி தேவகோட்டை நீதிமன்றத்தில் அன்புக்கரசி வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.
(TATA)

மாநில செயற்குழு கூட்ட அழைப்பு - 2016.
நாள் : 09.07.2016.
இடம் : ஹோட்டல்
அருண் மினி ஹால்.
திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில்.

நேரம் : மதியம் 2 மணி
அனைத்து மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். மாவட்டப் பொறுப்பாளர்கள் வட்டாரக் கிளை பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
....2016-- 17. கல்வி ஆண்டிற்கான உறுப்பினர் சந்தா புத்தகத்தின் அடிகட்டையுடன் மாநில இணைப்பு கட்டண பங்கு தொகை கொண்டு வரவும்..



அன்புடன்
S.C. கிப்சன்
பொது செயலாளர்.
TATA.

வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1:1என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டதில் அனைத்து சங்கங்களிலும் உள்ள வரலாறு பாட ஆசிரியர்கள் சார்பாக அவர்களிடம் இருந்து பெறப்பட்ட அன்பளிப்பு மூலம் போடப்பட்டு வெற்றி பெற்ற வழக்கு விவரம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வரலாறு பாடத்திற்கு பி.ஜி.Promotion வழங்கும் போது 1:1என வழங்க வேண்டும் என தொடுத்தவழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு விவரம்
=============
G.O.152ல் ஆங்கில பட்டதாரி ஆசியர்களுக்கு வழங்கியது போல் வரலாறு ஆசிரியர்களும் 1:1என்ற அடிப்படையில் பதவிஉயர்வு வழங்கவேண்டும்.


1:1என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி நடைமுறைபடுத்தி 70 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் தகவல் அளிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கபட்டுள்ளது.
 
 

இனி 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு

அனைவரும் கட்டாயத் தேர்ச்சி திட்டம் இனி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது கட்டாயத் தேர்ச்சி திட்டம் எட்டாம் வகுப்பு வரை செயல்படுத்தப்படுகிறது. எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெறச் செய்வதால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய வரைவு கல்விக் கொள்கையின் ஒரு பகுதியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக இந்த வரைவு கொள்கையின் ஒரு பகுதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு கருத்துக்கள்,

பள்ளிக்கல்வி - 2016 நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்தோர் பட்டியல் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

அரசு ஊழியர்கள் மீது லஞ்சப் புகார் குறித்த தமிழக அரசின் அரசாணை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக அரசு ஊழியர்கள் மீதான லஞ்சப் புகார் குறித்த தமிழக அரசின் புதிய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


அரசு ஊழியர்கள் மீது ஊழல் புகார் வந்தால் அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து புகழேந்தி தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தமிழக அரசின் புதிய அரசாணையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
7 வது ஊதியக் குழு பரிந்துரை பற்றிய செய்தி தொகுப்பு...

============================
7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.தர ஊதிய நடைமுறை அறவே கைவிடப்பட்டுள்ளது.குழு காப்பீட்டு நிதி வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
01.01.2016 முதல் பரிந்துரையை அமல்படுத்தி ஊதிய உயர்வு நிலுவைத் தொகையையும் ரொக்கமாக வழங்க அறிவித்துள்ளது.

ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு பற்றிய கணக்கீடுகள்
தற்போது பணியில் இருக்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக அவரவர் பெறும் அடிப்படை ஊதியத்தில் (Basic pay+Grade pay+pp) சேர்த்து 32 % த்தை பெருக்கினால் வருகிற தொகையினை புதிய ஊதியமாக வழங்கிட மத்திய அமைச்சரவை முடிவு செய்து அறிவித்துள்ளது. இந்த உயர்வு தற்போது அவரவர் பெறும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி 125 % சேர்த்து கணக்கிடும் போது 14.2 % சத உயர்வு வரும். ஒவ்வொருவரின் 01.01.2016ல் திருத்தப்பட்ட அடிப்படை ஊதியத்தினை கணக்கிட அவரவர் 01.01.2016ல் பெற்று வரும் அடிப்படை ஊதியத்தினை 2.57 % ஆல் பெருக்கினாலும் அதே உயர்வுதான் வரும்.அவ்வாறு கணக்கிடும் போது ஊதியம் குறைவாக இருந்தால் 7 வது ஊதியக் குழுவில் ஏற்பு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள தொகை இடைநிலை ஆசிரியர்களுக்கு
ரூ 29200 (entry pay) ஊதியமாகும்.பணியில் மூத்தவருக்கு ஊதியம் குறைந்தாலும் ரூ 29200 லிருந்து ஊதியம் நிர்ணயம் செய்து சர்வீஸ் வெயிட்டேஜ் முறையில் கணக்கிட்டு ஊதியம் நிர்ணயம் செய்யும் பழைய முறையே அமல்படுத்துவார்கள் என அறிகிறோம்.ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் மேற்காணும் நடைமுறையே பொருந்தும்.

குறைந்தபட்ச ஊதியம் 26,000 நிர்ணயம் செயதிட சங்கங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியது.மத்திய அரசு 18,000 மட்டுமே என்று அறிவித்துள்ளது. அடிபிறழாமல் ஊதியக் குழு பரிந்துரையை ஏற்பு செய்ய 6 மாத காலம் அவகாசம் எடுத்துக்கொண்டது தேவையில்லை. ஆனால் மத்திய அரசு 6 மாதத்திற்குள் வழங்கியுள்ளதாக பெருமிதம் கொள்வதை உணர முடிகிறது.
(நாளேடுகளில் 23.5 % ஊதிய உயர்வு என்பது பொருத்தமில்லாத செய்தியாகும்.23.5 % ஊதிய உயர்வு என்பது பெருநகரங்களில் பணிபுரிவோர் பெறுகின்ற இதர படிகள் சேர்த்து  ஆகும் .
PG VACANCY LIST in kanyakumari DT as on 31.05.2016.
TAMIL- 11
ENGLISH -2
SLB Nagercoil
Thenkaipattinam
PHYSICS - 1
kottaram
CHEMISTRY -1
Nattalam
MATHS-2
Munchirai
Vallankumaran vilai
BOTANY-4
Kollankodu
Thenkaipattinam
Kaattathurai
Agastheeswaram
ZOOLOGY-3
Kollankodu
SLP Nagercoil
Vadaseri
HISTORY-3
KDVP G Ngercoil
Marthandam B
Kurathiyarai
POLITICAL SCIENCE -1
Thackeray
ECONOMICS-4
Munchirai
Vilavankodu
Edalakkudi
KDVP G Nagercoil
PHYSICAL DIRECTOR -1
Marthandam
RTI ல் இவையெல்லாம் கேட்டால் தகவல் தர தேவையில்லை!
Right to information act 2005
R TI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள் :
| .துறை Website ல் உள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை
2. கட்டணம் செலுத்தி பெறக்கூடிய சேவை எனில் RTIல் தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை

3. கோப்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய காலம் முடிந்து, / அழிக்கப்பட்டிருப்பின் தெரிவிக்க வேண்டியதில்லை
4. கேள்விகளாய் இருந்தால் பதில் தெரிவிக்க வேண்டியதில்லை
5 கேட்ட தகவலுக்கான கோப்பு இருந்தால் நகலாக வழங்கலாம்.
6. நாமாக விளக்க மோ நாம் அறிந்தவற்றையோ கூறக் கூடாது.
7. தெளிவுரை, விளக்கம், மொழிபெயர்ப்பு செய்து தர வேண்டியதில்லை.
8. கோரிக்கை, புகார், யூகம் அடிப்படையிலான கேள்விகளுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை.
மனுதாரர் தன் மீதான புகார் குறித்து நகல் கேட்டால் கொடுக்கலாம்.
9. மனுதாரர் முன்பு கொடுத்த சாதாரண மனுவைக் கேட்டால் தெரிவிக்க வேண்டியதில்லை.
10. மனுதாரர் கேட்கும் படிவத்தில் தர வேண்டியதில்லை
11. பல்வேறு கோப்புகளை தொகுத்து தர வேண்டியிருப்பின், விதிப்படி தொகுத்து தர வேண்டியதில்லை.
12. ஏன் எப்படி, எங்கு எதனடிப்படையில் போன்ற கேள்விகளுக்கும், ஆம் எனில் பதில் ,இல்லை எனில் பதில் போன்ற உபகேள்விகளுக்கும் பதில் தர வேண்டியதில்லை
13. சாதாரண திட்டங்களில் தந்த மனு மீதான நடவடிக்கை குறித்து கேட்க முடியாது
14. மனுதாரருக்காக வேறொருவர் கேட்க கூடாது (வக்கீல் தன் கட்சிக்காரருக்காக)
15. மூன்றாம் நபர் குறித்த விபரம் , நமது அலுவலக பணியாளர் பற்றிய எந்த விபரமும் தர வேண்டியதில்லை.(சம்பளம், கிப்ட், IT, memo, ஒழுங்கு நடவடிக்கை)
மனைவி கூட மூன்றாம் நபர்
16. பட்டா ட்ரான்ஸ்பர், சிட்டா போன்ற விபரங்கள் தெரிவிக்க வேண்டியதில்லை
17.SR Copy தர வேண்டியதில்லை
18. பணி நியமனம் தொடர்பான நகல் தர வேண்டியதில்லை
19. பணியாளரது தனிப்பட்ட விபரங்கள் (அ) அலுவலக தொடர்பாக வரப் பெற்ற விண்ணப்பங்களில் உள்ள விண்ணப்பதாரரது விபரம், தெரிவிக்க வேண்டியதில்லை
20. வேண்டிய விபரங்களைப் பெற்று தொகுத்து அனுப்ப வேண்டியதில்லை
21. மிக அதிக அளவு விபரம் கோரப்பட்டால், தெரிவிக்க வேண்டியதில்லை
22. SR நகல் வழங்க வேண்டியதில்லை.
பொது நலன் எனக் கருதினால் முதல் பக்கம் மட்டும் தரலாம்
23. ஒரே மாதிரியான தகவல்களை திரும்ப திரும்ப கேட்க கூடாது
24. நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள போது, மனுதாரர் RTIல் தகவல் பெற முடியாது 
: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியை மனமொத்த மாறுதலில் வாடிப்பட்டி அலங்காநல்லுர் மதுரை மேற்கு பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளதால் தேவைப்படும் இடைநிலை ஆசிரியர் தொடர்பு கொள்ளவும்.9842108287
[7/1, 1:42 PM] +91 80128 09341: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டாங்கொளத்துர் ஒன்றியத்தில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியை விருப்ப மாறுதலில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் ,திருமங்கலம்,மதுரை கிழக்கு,வட்டாரங்களில் பணிபுரிய விருப்பம் தெரிவித்து உள்ளார் விருப்பம் உடைய ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும் .9842108287
பிடியாணை இன்றி கைது செய்ய கூடிய குற்றங்கள், பிடியாணைவுடன் கைது செய்ய கூடிய குற்றங்கள் என்னென்ன என்பதை இந்திய தண்டனை சட்டத்தில் தெரிந்துகொள்வது இவ்வாறு தான்.
அதாவது, இரண்டு வருடங்களுக்கு மேல் தண்டனை பெற கூடிய குற்றங்களை ஒரு நபர் செய்து இருந்தால்,அந்த நபரை பிடியாணையின்றி கைது செய்யலாம்.
அதே மாதிரி ஒரு நபர் இரண்டு வருடங்களுக்குள் தண்டனை பெற கூடிய குற்றங்களை செய்து இருந்தால் ,அந்த நபரை பிடியாணைவுடன் தான் கைது செய்ய வேண்டும்.



இவற்றை பற்றி குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 2(22) விளக்குகின்றது.
மேற்படி இந்திய தண்டனை சட்டத்தில் பிணையில் விடுவிக்கக்கூடிய குற்றங்கள் மற்றும் பிணையில் விடுவிக்கக்கூடாத குற்றங்கள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.

பிணையில் விட கூடிய குற்றங்களுக்கு எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் புலன் விசாரணை செய்து ,விசாரணைக்கு பின் எப்.ஐ.ஆர் தேவை என்றால் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்.

பிணையில் விட கூடாத குற்றங்களுக்கு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்படும்.
லோக் ஆயுக்தா தற்போது நடைமுறையில் உள்ள மாநிலங்களாக 

1.மகாராஷ்டிரா(1971),
 2.பீகார்(1973), 
3.ராஜஸ்தான்(1973), 4.உத்திரபிரதேசம்(1975),
 5.மத்திய பிரதேசம்(1981),
 6.ஆந்திரா(1983), 
7.ஹிமாச்சல் பிரதேசம்(1983), 8.கர்நாடகா(1985),
 9.அஸ்ஸாம்(1986),
10. குஜராத்(1986),
11. கேரளா(1988), 
12.பஞ்சாப்(1985),
13. டெல்லி(1996),
14. ஹரியான(1996)
 ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன.
Flash News:7ஆவது ஊதியக்குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.இனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000.
தில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது.ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்தது.

இதையடுத்து, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இன்று புது தில்லியில்நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.7-ஆவது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் அடிப்படையில், அதன் பரிந்துரைகள் சென்ற ஜனவரி 1-ஆம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும். இதனால், 50 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 58 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.7வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதால், மத்தியஅரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.7 சதவீதம்.7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியில் சேரும் அறிமுக நிலை பணியாளருக்கான மாத ஊதியம் தற்போதைய ரூ.7,000-லிருந்து, ரூ.18,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், அமைச்சரவை செயலரின் அதிகபட்ச மாத ஊதியம் தற்போதைய ரூ.90,000-லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் 6 வது ஊதியகுழு தவறுகளை சரி செய்திட இந்திய உச்ச நீதிமன்றத்தில் 158 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தமிழ்நாட்டில் தற்போது 7 வது ஊதிய குழு அமைக்க சாத்தியம் இல்லை. டாடா சங்க ஊதிய வழக்குபடி 6 ஊதிய குழு முறன்பாட்டை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மீண்டும் குழு அமைத்து சரி செய்த பின் தான் 7வது ஊதிய குழு ஊதியம் நிர்னயம் செய்ய முடியும். எனவே இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் 1.1.2006 முதல் 9300+4200 ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தான் இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் நிர்னயம் செய்யப்படும்....டாடா கிப்ஸன்

கல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ.,வின் இணை இயக்குனர் சசிகலா, தொடக்க கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு பணியாற்றும், இணை இயக்குனர் செல்வராஜ், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் வர்மா, எஸ்.எஸ்.ஏ.,வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு  அரசு  ஊழியர்  அடிப்படை விதிகள் 


             Tn   govt    F.R           Total    pages    328

                           Download   Here   F,R
      தமிழ்நாடு  அரசு ஊழியர் 

                     நடத்தை  விதிகள் -1973

                                          42  Pages



          DOWNLOAD  HERE  

பழைய முறையில் பென்சன் கொடுப்பது பற்றி தி.மு.க. உறுப்பினர் ஐ.பெரியசாமி கேட்ட கேள்விக்கு மாண்பு மிகு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில்

பழைய முறையில் பென்சன் கொடுப்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் .பன்னீர்செல்வம் தெரிவித்தார்*
சென்னை
சட்டசபையில் இன்று தி.மு.. உறுப்பினர் .பெரியசாமி பேசும்போது, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் .பன்னீர் செல்வம் பேசியதாவது:-

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் முறையை அமல்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கைகள் வந்தன. இதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் 22.2.2016 அன்றே வல்லுனர் குழு அமைக்க உத்தரவிட்டார். அதன்படி அமைக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அந்த குழுவின் பரிந்துரை அரசுக்கு கிடைக்க பெற்றவுடன் பழைய முறையில் ஓய்வூதியம் வழங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.



இடைநிலை ஆசிரியரே சிந்தனை செய்வீர்
2016 ஆண்டு முதல் நடைமுறை படுத்த இருக்கும் 7. வது ஊதியகுழுவில் விழப்போகுது மரண அடி .
நாம் தற்போது உள்ள பாதிப்பு நீங்க எந்த அளவு போராடி உள்ளோம் .
டாடா நடத்தி வரும் சட்ட போராட்டம் எந்த அளவு ஆதரவு கொடுத்து உள்ளோம்
மனதை தொட்டு உணர்ந்து உண்மை நிலை தெளிவாக அறிவோம் .
வரும் ஊதிய குழு வில் தற்போது பெறும் ஊதியம் +அகவிலைபடிவி --புதிய ஊதிய மாக நிர்ணயம் செய்ய படும்.
இதில் அடுத்த ஊதிய குழுவில் 2800₹2400 தர ஊதிய கட்டுகள் ஒன்றாக இணைக்க பட உள்ளன என செய்திகள் வெளிவந்தது உள்ளன .ஏற்கனவே நாம் இளநிலை உதவியாளர் பணியிடங்களை காரணம் காட்டி தமிழக அரசு நமது ஊதியத்தை ஏமாற்றம் செய்து வருகிறது .இந்த நிலை தொடர்ந்தால் ஏழாம் ஊதிய. குழுவில் நமக்கு மாபெரும் ஊதிய இழப்புகள் ஏற்படும் .தயவுசெய்து உணமை உணர்ந்து ஊதிய இழப்புகள் நீங்க டாட்டா சங்கத்திற்கு ஒத்தாசை தாருங்கள் . இனி வருங்காலங்களில் .

சட்ட போராட்டம் டாடாவின் தலைமையில் முன்னெடுத்து செல்ல முழுவதும் ஆதரவு வழங்க வேண்டுகிறேன் -----+டாட்டா கிப்சன் .
NELLAI  AEEO .FREE  BOOK   SALE  .....





எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

 
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

மருத்துவ தரிவரிசை பட்டியலில் 3 பேர் முதலிடம் பிடித்துள்ளனர் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. முதலிடத்தை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா மகேசும், 2வது இடத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேசும், 3வது இடத்தை விஜயவாடாவைச் சேர்ந்த ஜெய ஞானவேலும் பிடித்துள்ளனர்.

தரவரிசை பட்டியல் குறித்த விபரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.   நடப்பாண்டில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 2723 இடங்கள் உள்ளன. பிடிஎஸ் படிப்பிற்கு 1055 இடங்கள் உள்ளன.

2 இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகளுக்கான 130 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுவரை மருத்துவ கவுன்சிலிங்கிற்கு 27, 450 பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ கவுன்சிலிங் ஜூன் 20 ம் தேதி துவங்க உள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2016 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதியான நபர்களின் பெயர்ப்பட்டியல் அனுப்புதல் சார்பு


TO DOWNLOAD PROCEEDING LTR CLICK HERE...


MATHS AND PHYSICS PANEL 2016-07 CLICK HERE...

தமிழகத்தில் 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மாநில தேர்தல் ஆணையராக டி.எஸ்.ராஜேசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பெயர் புதிய பதவி (கூடுதல் பொறுப்பு)

1. எஸ்.கே.பிரபாகர்- செயலர், பொதுப்பணித்துறை

2. என்.எஸ்.பழனியப்பன்- செயலர், எரிசக்தித்துறை

3. ஜக்மோகன் சிங் ராஜூ- தலைவர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை

4. மங்கத் ராம் சர்மா- செயலர், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை (தலைவர், சிட்கோ)

5. சி.சந்திரமவுலி- ஆணையர், வணிகவரித்துறை ( செயலர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை)

6.ஆர். வெங்கடேசன்- செயலர், செய்தி மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை( செயலர், வருவாய்த்துறை)
TATAவின் 5வருட சாதனைகள் ...

He is commenting about TATA &TATA.
Before commenting any one...you must know what I am...commenting whom...past history...what is going on now...
Not knowing anything...having lot of strength...what is the use...strength/age will not workout...hand full of dash...what's the use...
Last 9 years what u are doing...
Now also not doing fruitful.....nothing...

இடைநிலை ஆசிரியருக்கு பிரச்ச்னைகள் இருக்குன்னு சொல்லி தூங்கி கிடந்த உங்களை எழுப்பியது TATA சங்கங்களே...
என்ன நடந்தது...இன்னும் அரசு இடைநிலை ஆசிரியரை டிப்ளமோ ஹோல்டர் இல்லை என்றுதான் சொல்லி வருகிறது...
TATA சங்கங் சாதனைகள் கடந்த சில வருடங்களில்....

--மாநில மூப்பு அடப்படையில் பணி நியமனம் உச்ச நீதிமன்றம் மூலமாக.நியமனம் பெற்றவர்கள் மாவட்ட மாறுத்தல் பெற முதன் முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தீர்ப்பு பெற்றது .... நாங்களே..

--இடைநிலை ஆசிரியர்களின் 6வது ஊதிய குழுவில் 'பிரச்சனை உள்ளது' என்று சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு .... நாங்களே...

--தற்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300+4200 வழங்கிட ஊதிய பிரச்சனை தொடர்பாக உச்ச நீதி மன்ற வழக்கு - நிலுவையில்....

....தொடக்க கல்வி துறையில் மாநில அளவில் பதவி உயர்வு வழக்கு நிலுவையில் .....

....ஆசிரியர் நலனுக்காய் 10 கோரிக்கைகளை நிறைவேற்றிட தேர்தல் ஆணையம் மீது பொது நல வழக்கு ....மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நாள் ..18.02.2016.

... CPS..திட்டம் தவறானது, 2003 க்கு பின் ஓய்வு ,,மரணம் அடைந்தவைகளுக்கு ( 216 பேர் ) கட்டிய பணம் திரும்ப வழங்கிட வேண்டும் .தற்காலிக ஓய்வுதியம் ரூ.10,000/= அனுமதிக்க வேண்டும் .கமுடேசன் வழங்கிட வேண்டும்.என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ...விசாரணை நாள் ...23-02-2016 .

எங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்..

...ஆசிரியாரின் நலனுக்காய் உண்மையாய் உழைக்கும் சங்கம் டாட்டா மட்டுமே.!!!!!

We don't want any appreciation r recognition...
We r fighting on our way...ultimately v also FOR teachers only...
Leave us alone...pl don't pass any negative comments against us....
--from Kipson Tata
10-06-2016.உயர்திரு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் TATA சார்பில் கோரிக்கைகள் அளிக்கப்பட்டன.




10-06-2016.உயர்திரு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் TATA சார்பில் கோரிக்கைகள் அளிக்கப்பட்டன.



கோரிக்கைகள்:- 

1.மாணவர்களின் விலையில்லா நலதிட்ட பொருட்கள் பள்ளிக்கே நேரடியாக வழங்கப்பட வேண்டும்.

இயக்குனர் பதில் ;-அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

2.தெலுங்கு,உருது,கன்னடம் ,மலையாளம்
நடுநிலைப்பள்ளிகளில் கல்வி உரிமை சட்ட படி   தமிழ் பட்டதாரி பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இயக்குனர் பதில்;-  -அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் புதிய பணியிடங்கள் உருவாக்க பட்டு பதவி உயர்வு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் .


 3.1997-98 ல் பின்னடைவு காலி பணியிடத்தில் (SC/ST) பணியேற்ற பட்டதாரி தகுதியுடைய இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் கலந்தாய்வில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
 இயக்குனர் பதில்;- உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

 4.இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை ஒளிவு மறைவின்றி உடனடியாக நடத்திட வேண்டும்.
இயக்குனர் பதில்;- தற்போதைய நிலையில் அரசு பணி மாறுதல் குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்க வில்லை .

  5.Economics,commerce,(M.A M.COM WITH B.ED) படித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.வினையாக மிஷன் பட்ட படிப்புகளுக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்க வேண்டும்.பின்னேற்பு வேண்டி 1.5 வருடமாக நிலுனையில் உள்ள கோப்புகளுக்கு விரைந்து அனுமதி வழங்கிட வேண்டும்.
இயக்குனர் பதில்;-  விரைவில் 2   வாரத்திற்குள் இவற்றிற்கு அரசு ஆணை வெளிவரும்.அதன்பின் பணபலன் பெற உரிய தெளிவுரை வழங்கப்படும்


  6.மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை உடனடியாக வழங்கிட வேண்டும்.
 இயக்குனர் பதில்;-  விரைவில் வழங்கிட உள்ளது.

7. தனியார் பள்ளி சட்டம் 1973 சட்ட பிரிவு 31 ன் படி இயக்குனர் அனுமதி இல்லாமல் நிதிஉதவி பெறும் தனியார் பள்ளிகளை விற்பனை செய்வதோ அல்லது தனது வாரிசுகளுக்கு தனமாகவோ ,நன்கொடையாகவோ கொடுப்பது செல்லாது என்பது கூறித்து அணைத்து DEEO களுக்கும் தெரிவுரை வழங்கிட வேண்டும்.முன் அனுமதி பெறாமல் மாற்றம் செய்யப்பட்ட பள்ளி நிர்வாக மாற்ற ஆணை ரத்து செய்திட வேண்டும். 
 இயக்குனர் பதில்;-  விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வழங்கிய பள்ளிகள் பற்றி எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் நிர்வாக மாற்றம் ரத்து செய்யப்படும்.
 
💢💢💢💢💢💢💢💢💢💢💢AEEO அலுவலக தகவல்: முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை பற்றிய தகவல். 31-7-2011க்குள் பிறந்த மாணவர்களை முதல் வகுப்பில் சேர்க்க எந்த தடையும் இல்லை. 01-08-2011முதல் 31-08-2011 வரை பிறந்த மாணவர்களை சேர்த்துக்கொண்டு AEEO /AAEEO விடம் தவிர்ப்பாணை வேண்டி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளவும். 01-09-2011முதல் 30-11-2011 வரை பிறந்துள்ள மாணவர்களை முதல் வகுப்பில் சேர்த்துக்கொண்டு 01-08-2016 க்கு பின்னர் தொகுத்து பட்டிலிட்டு மாணவனின் பிறந்த நாள் சான்று இணைத்து DEEO விற்கு இரண்டு நகல்களில் விண்ணப்பித்து தவிர்ப்பாணை கண்டிப்பாக பெற்றுக்கொள்ளவும்.💢💢💢💢💢💢💢💢💢💢

G.O.165 Dt:01.06.16 MEDICAL AID – NHIS 2014 for Pensioners (including spouse) /Family Pensioners – List of Addl Hospitals covered under this scheme and Addl Specialties included in the Hospitals already empanelled under this Scheme – Approved

















 




 

2016-2017-தொடக்க கல்வி-உதவி தொடக்க கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்...

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு...............

 

 

புதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிப்பு.....

பிளஸ் 2 தேர்வில் அதிக தேர்ச்சி: ஈரோடு மாவட்டம் முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர் மாவட்டம்

1. கன்னியாகுமரி : 95.7 சதவீதம்
2. திருநெல்வேலி : 94.76 சதவீதம்
3. தூத்துக்குடி : 95.47 சதவீதம்
4. ராமநாதபுரம் : 95.04 சதவீதம்
5. சிவகங்கை : 95.07 சதவீதம்
6. விருதுநகர் : 95.73 சதவீதம்
7. தேனி : 95.11 சதவீதம்
8. மதுரை : 93.19 சதவீதம்
9. திண்டுக்கல் : 90.48 சதவீதம்
10. ஊட்டி : 91.29 சதவீதம்
டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் - -2016 சட்ட மன்ற தேர்தல் பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு சலுகைகள் வழங்கி உள்ளார்கள் .அதன்படி
  பெண் ஆசிரியர்கள் மற்றும் அரசு உழியர்கள் ஆகியோரை பணிபுரியும் சட்ட மன்ற தொகுதியில் பணி நியமனம் செய்திட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தின்  ஆணையை -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-TATA KIPSON.  


இந்த ஆணையைக்கு புறம்பாக தேர்தல் பணி நெடுந்தொலைவில் நியமனம் செய்யப்பட்டால்  மாவட்ட ஆட்சியர்  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையாளர் ஆகியேருக்கு புகார் அனுப்புங்கள் ....

1. Dr. Nasim Zaidi



Chief Election   Commissioner.    NIRVACHANSADAN. ASHOKA ROAD     NEW DELHI-110001             

 2.திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ .ப .
 தமிழக தலைமை தேர்தல் ஆணையாளர்.
பொது தேர்தல்கள் துறை .
தலைமை செயலகம் .சென்னை -9.





 
 
 டாட்டா சங்கம் -தேர்தல் பணி -வழக்கு -இந்திய தேர்தல் ஆணைய ஆணைக்கு புறம்பாக - பல இடங்களில் பெண் ஆசிரியர்களுக்கு ஆணைக்கு புறம்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பணி புரியும் ஒன்றியத்தை விட்டு பலருக்கு  மீண்டும் நெடுந்துரத்தில் தேர்தல் பணி வழங்கப்பட்டு உள்ளதாக புகார்கள் வந்து உள்ளது .எனவே ஆணையை மீறி செயல் பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் , அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு தாக்கல் செய்திடவும் தங்களது தேர்தல் பணி ஆணையை இஸ்கேன் செய்து e.mail : - kipson76@yahoo.in என்ற இ - மெயில்  முகவரிக்கு அனுபவும் . இது எதிர் காலத்தில் பணியாற்றும் இடத்திலேயே தங்களுக்கு தேர்தல் பணி கிடைக்க உதவிடும்.

இப்படிக்கு 
 டாட்டா .கிப்சன் .
பொது செயலாளர் 
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் .
9443464081//9840876481/
2016- சட்ட மன்ற பொது தேர்தல் - கல்வித்துறை செயலாளர் -6 வருடம் ஒரே இடத்தில் பணி - திருமதி. சபிதா .அவர்களை  பணியிடம் மாற்றம் செய்திட தனக்கு அதிகாரம் இல்லை என கடித எண் :- 8931/2016 நாள் .25.4.2016.மூலம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு .ஆனால் கடித எண் :-7815/2016 நாள் . 22.4.2016 மூலம் திருமதி. சபிதா .அவர்கள் மீதான புகார் மீது தலைமை செயலாளர் அறிக்கையுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கு உரிய நடவடிக்கைக்காக் அனுப்பப் பட்டு உள்ளது என தமிழக தேர்தல் ஆணையம் முன்னுக்கு பின் முரணான தகவல் வழங்கப்பட்டு உள்ளது .

 
நமது ஜனநாயக கடமையான வாக்குரிமையை கண்டிப்பாக தவராமல் பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும்....
போராட்டத்தில் பங்குபெற்று கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற மன வேதனையில் உள்ள ஆசிரியராக இருந்தாலும் சரி...
போராட்டத்தில் பங்குபெறாத ஆசிரியராக இருந்தாலும் சரி....
தங்களுடைய தபால் ஓட்டை கண்டிப்பாக உரிமையோடு பெற்று கீழ் காணும் வழிமுறைகளை பின்பற்றி வாக்களிக்கவும்....
நமது தபால் வாக்கு சதவீதத்தை வைத்துதான் அமையவிருக்கும் அரசு நமது தற்போதய கோரிக்கையானாலும் சரி அல்லது 7வது ஊதிய குழுவை ஊதிய நிர்ணயமானாலும் சரி அனைத்து முடிவையும் எடுக்கும்....
ஆகையால் இதில் தயவுசெய்து சோம்பலோ...
எந்த சமரசமோ வேண்டாம்....
தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை !!!
தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை !!!

100% தபால் ஓட்டு பதிவிற்காக தபால் ஓட்டு பதிவு செய்யும் போது கவனிக்க... 👀👁👁👀
🔸 முதலில் கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டு சீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில் டிக் அடிக்க வேண்டும் .
🔸 நாம் அடிக்கின்ற டிக் பக்கத்தில் இருக்கும் சின்னத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
🔸✍🏻 டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற rose color office cover ல் வைத்து ஒட்ட வேண்டும்.
staple பண்ணக்கூடாது.
🔸 13A என்று ஒரு form இருக்கும் . அதை சரியாக fill பண்ணி தங்களுக்கு தெரிந்தattested பண்ண தகுதி உடைய நண்பர்களிடம் அந்த form 13A ல் attested வாங்க வேண்டும்.
🔸 பின்னர் A என்ற ஒட்டிய rose color office coverயும் , form 13A யும் சேர்த்து B என்ற கவரில் போட்டு ஒட்டி விட வேண்டும் .
குறிப்பு :
செய்யக்கூடாதது.
🔹 form 13A ல் attested வாங்காமல் இருக்கக் கூடாது.
🔹 இரண்டு office cover யும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.
🔹 form 13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரி கூட வைத்து விடக்கூடாது.
🔹 மேலும் சந்தேகம் இருந்தால் உங்கள் நண்பர்களிடம் discuss பண்ணி தெளிவு படுத்தி கொள்ளுங்கள் .
🔹இந்த முறை ஒரு தபால் வாக்கு கூட செல்லாத வாக்காக இருக்கக்கூடாது.
** இதில் சமரசம் செய்தால் நமது எதிர்காலம் கேள்விக்குறிதான்...

வாக்காளர் பட்டியலில் நேற்று 29.4.16 முதல் வரிசை எண் மாறியுள்ளது, சரி பார்த்துக் கொள்ளவும்,,,,,,

 டாட்டா ஆசிரியர் சங்கம் கருத்து கணிப்பின் படி 2016 சட்ட மன்ற பொது தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சியை பிடிக்கும்....

டாட்டா சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்று தி.மு.க தனது தேர்தல் அறிக்கை  மூலம் உறுதி வழங்கி உள்ளது .அதற்கு டாட்டா சங்கத்தின் வாழ்த்துகள் ...





2016-சட்ட மன்ற பொது தேர்தல் - கல்வித்துறை செயலாளர் -6 வருடம் ஒரே இடத்தில் பணி - திருமதி. சபிதா .அவர்களை  பணியிடம் மாற்றம் செய்திட தனக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு .