PAGEVIEWERS


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு, 01.01.2016 முதல் அமுலுக்கு வருகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் மன்மோகன்சிங் பிறப்பித்துள்ளார். இந்த சம்பள கமிஷன் 2016-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 7வது ஊதியக் குழுவில் இடம் பெற உள்ள வல்லுனர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த ஊதியக் குழு தனது பரிந்துரைகளை 2 வருடத்திற்குள் மத்திய அளிக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment