PAGEVIEWERS

அன்பு இயக்க உறவுகளே!
வணக்கம். ஜேக்டோ இட்ட அனைத்து கட்டளைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட என்னால் முடிந்த வரை இயக்கப் பணியாற்றியதாகவே கருதுகிறேன்.
ஜேக்டோவின் அனைத்து விதமான போராட்டங்களில் நீங்கள் எனக்களித்த ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜேக்டோவின் நேற்றைய முடிவுகள் என்னை வெகுவாக பாதித்துள்ளது.
அப்பாதிப்புகளில் இருந்து வெளிவர மிகவும் கடினமாக உள்ளது.
இப்பதவியில் இன்னும் நீடிக்க வேண்டுமா? என்பதை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன்.
இயக்கப் போராட்ட நிகழ்விற்காக எனதருமை உறவுளை பகைத்துக் கொண்டதும் உண்டு.
வட்டாரச் செயலாளர் அழைத்துச் சென்ற போராட்டப் பாதைகள் நிச்சயம் வெற்றியைத் தரும் என 100% நம்பி வந்த இயக்க ஆசிரியப் பெருமக்களை இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு சந்திப்பது?
இனி போராட்டத்திற்கு வாருங்கள் என்று நான் அழைத்தால் எந்த நம்பிக்கையில் உறவுகள் வருவார்கள்?..
மேற்குறிப்பிட்ட பல்வேறு நிகழ்களை நினைவில் கொண்டு என்னை செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்ள விழைகிறேன் என்பதை நான் சார்ந்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்க உறுப்பினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். என்றும் என் இதயம் இயக்கத்திற்காக துடிக்கும்...
அ.ஜெயராஜ்..
TESTF
குண்டடம்.

No comments:

Post a Comment