PAGEVIEWERS



பள்ளிக்கல்வி - பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - மாவட்டத்திற்கு சிறந்தபள்ளியை தேர்ந்தெடுத்து தொடக்கப்பள்ளிக்கு ரூ.25000/-ம், நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50000/-ம், உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75000/-ம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.100000/- வழங்க தமிழக அரசு உத்தரவு.



 மாவட்ட வாரியாகசிறந்தநான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்து, 25 ஆயிரம் ரூபாய்முதல், 1 லட்சம் ரூபாய் வரைரொக்கப்பரிசு வழங்கதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.காமராஜர் பிறந்த நாள்பள்ளிகளில்கல்வி வளர்ச்சி

தொடக்கக் கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு.

ராணுவத்தில் ஆசிரியர் பணிகள் - Teachers job in the military

இந்திய ராணுவத்தில் ஹவில்தார்(Havildar) அந்தஸ்திலான ஆசிரியர் பணியிடங்களுக்கு 182 

பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.ஏ.பிஎட்(B.A. B.Ed), பி.எஸ்.சி. பி.எட்(Bsc.B.Ed), மற்றும் பி.ஏ.

(B.A.,), எம்.ஏ.,(M.A.,) படித்தவர்கள் இதற்கு

விண்ணப்பிக்கலாம்

கூடுதல் விபரங்களுக்குWWW.joinindianarmy.nic.in இணையதளத்தை பார்க்கவும்

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி ஜூலை மூன்றாவது வாரத்தில் நடத்தி முடிக்க தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கழக இயக்குனர் உத்தரவு.

ஆறாவது ஊதிய குழுவும் ஆசிரியர் சங்கங்களும் - ஓர் கண்ணோட்டம்.



அன்பார்ந்த ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வணக்கங்கள். ஆறாவது ஊதிய குழுவினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள   
ஊதிய முரண்பாடுகள் முழுமையாக இன்னமும் சரி செய்யப்படவில்லை. தற்போது ஆசிரியர் சங்கங்களால் ஏற்ப்பட்ட நிலைகளை அரசாணையில்    குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை குறிப்பிட்டு ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். 

ஆறாவது ஊதிய குழு அரசாணை 234 நாள்.1.6.2009  வெளியிடப்பட்டபோது, தொகுப்பூதியத்தில் பணியேற்று 1.6.2006 - இல் காலமுறை ஊதியத்திற்கு வந்தவர்கள் 1.6.2006 - இல் பெற்று வந்த ஊதியம் பின்வருமாறு,

             அடிப்படை ஊதியம்              :   4500
              அகவிலைப்படி ஊதியம்    :   2250
              அகவிலைப்படி 24%              :   1620
                                                                   =======
       (DA G.O.188.Dt.17.4.06)  TOTAL      :     8370
                                                                  =======

ஆறாவது ஊதிய விகிதம் G.O. 234 Dt.1.6.2009 - இல் வெளியான போது இவ்வகையான இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் 

                          அடிப்படை ஊதியம்     :    5200
                          தர ஊதியம்                     :    2800
                          அகவிலைப்படி              :    NIL
                                                                          =======
(New DA (2%) only from 1.7.2006) TOTAL   :     8000
                                                                          =======

முந்தைய ஊதிய விகிதத்தில் பெற்றுவந்த ரூ.8370 ஐ விட புதிய ஊதிய விகித ஊதியம் ரூ.370 குறைவாக இருந்தது. ( 8370 - 8000 = 370)

இவ்வாறான நிலை மொத்தமிருந்த 29 ஊதிய பிரிவினர்களில் 03 ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டது. கல்வித்துறையில் 1.6.2006 இல் காலமுறை ஊதிய விகிதத்திற்கு உட்படுத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  மட்டுமே ஏற்ப்பட்டது. அதனை கீழே உள்ள அட்டவணை மூலம் அறியலாம். இந்த அட்டவணை தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A) மூலம் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.



இந்த பாதிப்பை பல்வேறு சங்கங்கள் அன்றைய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனால் 1.1.2006 முதல் 31.5.2009 வரை பணியேற்றவர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக்கொள்ள வாய்ப்பு  கொடுக்கப்பட்டது. 

பெற்றுவந்ததை விட குறைவான ஊதியம் பெறும் நிலை எந்தெந்த ஊதிய பிரிவினர்களுக்கு ஏற்பட்ட்தோ  அதனை தெளிவாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்ததால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்பட்டிருக்கும். சற்று பொறுமையாக படியுங்கள்.

(எப்படி கொண்டு சென்றனர், உள்ளதை உள்ளபடியே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பு சரி செய்யப்பட்டிருக்கும் என்பதையும், தவறான தகவலை அரசுக்கு கொடுத்ததால் பெற்று வந்ததை விட நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதியத்தில் குறைவு ஏற்படாத ஊதிய பிரிவினர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக் கொள்ள வழி வகை ஏற்ப்படுத்தியதையும் நீங்கள் அறிந்துகொள்ள உங்கள் முன் வைக்கிறேன்.)

               01.01.2006 முதல் 31.5.2009 வரை புதிய நியமனதாரர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தில் குறைவு ஏற்படுவதாக சங்கங்கள் அரசுக்கு தெரிவித்துள்ளன. ஆனால் உண்மை நிலவரமோ மொத்தமிருந்த ஊதிய பிரிவினர்களில் மூன்று ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டுள்ளது.  அரசாணை  258 நாள் 23.5.2009. இல் உள்ளதை படியுங்கள்.

       Certain Employees / Teachers  Associations have brought to the notice of Government that the employees appointed as fresh recruits on or after 1.1.2006 and upto the date of issue of Orders happen to face loss in emoluments while fixing their pay in the revised pay structure and therefore requested to rectify the same by granting pay protection of allowing the fitment benefit to the new entrants as was allowed in the earlier pay commission periods.

  முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அதற்க்கு பின்னர் தனி ஊதியம் 750 கொடுத்தாலும் அகவிலைப்படிகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் 1.1.2009-க்கு பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு முந்தைய ஊதிய விகித ஊதியமே அதிகமாக உள்ளது. 

பணி ஒய்வு பெற்றவர்களை மதிக்கிறோம். விழிப்புணர்வுகளுக்காக பாதிப்புகளை இடைநிலை ஆசிரியர்களின் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம். 

             பணியாளர்கள் அங்கம் வகிக்க வேண்டியது   
                 பணியாளர் சங்கத்தில் 
    பணி  ஓய்வு பெற்றவர்கள் இருக்க வேண்டியது  
              ஓய்வு பெற்றோர் சங்கத்தில் 

          அவரவர் இடத்தில் அவரவர் இருந்தால் அபாயம் ஒன்றுமில்லை 
அடுத்தவர் முதுகில் ஏற நினைத்தால் அதனால் வரும் இது போன்ற ஊதிய பாதிப்பு தொல்லை. 

ஒரு அரசாணை தொகுப்பின் துவக்கத்தில் படித்த மகாகவி பாரதியின் வரிகளை பதிவு செய்து விடைபெறுகிறேன்.

        தேடிச் சோறு நிதம் தின்று 
       மனம் வாடப் பழங்கதைகள் பேசும் 
       சில வேடிக்கை மனிதரைப் போல 
       வாழ்வேன் என்று நினைத்தாயோ.

எத்தனை அருமையான வரிகளை மகாகவி பாரதி எழுதி இருக்கிறார்.

படியுங்கள், சிந்தியுங்கள் விழிப்படையுங்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE G.O. 258 Dt.23.5.09.


தொகுப்பு:        சே. தாமஸ்  ராக்லண்ட்
                   மாநில துணை பொதுசெயலாளர் 
       தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம். (T.A.T.A.) 

பெருந் தலைவர் காமராஜர் பற்றிய அறிய புகைப்படங்கள் மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறு



பெருந் தலைவர் காமராஜர் திரைப்படம்

பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், இதர உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லத பணியாளர்கள் அனைவரின் அடிப்படை கடமைகள் குறித்து RTI வழியாக பெற்ற தகவல்கள்.

Thanks To - Computer Instructor, GHSS, Ariyalur District.

Click here to download RTI Letter-Non teaching/ teaching staffs works regading

முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் நேர்முக உதவியாளர்கள் கலந்துகொள்ளும் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் 13.07.2013 அன்று நடைபெறுகிறது.

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறை சார்பாக னைத்து பள்ளிகளிலும் ஜூலை 15 - காமராஜர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.


சுரேஷ் கல்மாடி டெல்லி சிஎம் மாக தேர்வு -ஷீலா தீட்சித் ராஜினாமா

ஆகஸ்ட் 8, புது தில்லி
இன்று காங்கிரஸ் தலைவர் த்விவேதி பத்திர்க்கையாளர்களை சந்தித்து  காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி சுரேஷ் கல்மாடியை டெல்லி முதல் மந்திரியாக தேர்வு செய்தது  அறிவித்தார். ஷீலா தீட்சித் பெயர் மத்திய சி.ஏ.ஜி ரிப்போர்டில் காமன்வெல்த் கேம்ஸ் ஊழலில் அடிபட்டதாலேயே காங்கிரஸ் கட்சி இந்தஅ திரடி முடிவை எடுத்ததாக தெரிகிறது. ஆரம்பத்தி தயங்கிய ஷீலாவை கட்சி மேலிடம் ராஜினாமா செய்ய சொன்னதாகவும் அவர் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.

தொடக்கக் கல்வி - RTE 2009 - வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினருக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் சேர்க்கை குறித்து விவரம் கோரி உத்தரவு.

SYLLABUS III TERM CLASSES I TO VIII

Subject
Mathematics
Science III to VIII & EVS for I &II
Social Science (Classes III to VIII)

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள் மறுப்பு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், 56,682 இடங்கள் இருந்த போதும், 18,946 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. இது, 33.42 சதவீதம். 1,012 தனியார் பள்ளிகள், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு, "சீட்' கொடுக்க மறுத்துள்ளன. "இந்த பள்ளிகள் மீது, விரைவில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

புத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்: தொடக்க கல்வி இயக்குனர் தகவல்

அரசு வழங்கும் விலை இல்லா பாடப்புத்தகம், புத்தகப்பை, காலணி உள்ளிட்டவை விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் 1–வது வகுப்பில் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 1 லட்சம் மாணவ–மாணவிகள் அதிகமாக சேர்ந்துள்ளனர் என்று தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
முதல் அமைச்சர் ஜெயலலிதா

ELECTION DUTY TRAINING FOR GOVERNMENT OFFICERS.....

இந்த முறை  குரூப் 2 தேர்வில் அதிரடியாக 

 மாற்றம் வந்துள்ளது.......

முன்பெல்லாம் குரூப் 2 தேர்வில் எழுத்து தேர்வில் மட்டுமே தேர்வானால் போதும் அடுத்ததாக நடக்கும் நேர்முகத்தேர்வில் பங்கு பெறலாம்.ஆனால் இப்போது அப்படி இல்லை.இரண்டு கட்ட எழுத்துத் தேர்வில் தேர்வானால் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு செல்ல முடியும்.இது ஆரோக்கியமான போக்கு.முதற்கட்டமாக சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுதல், இதில் தேர்வானால் அடுத்தது விரிவான விடையளிக்கும் தேர்வு, இதிலும் தேர்வானால் மட்டுமே நேர்முகத் தேர்வு, இதில் தேர்வானால் பணி நியமனம்.இனி நடக்கும் குரூப் 2 தேர்வுகளில் சாதாரணமாக தேர்வாக முடியாது. அ,ஆ என

தனியார் பள்ளிகளில் பஸ் கட்டணம் முறைப்படுத்த ஆர்டிஓ அலுவலகம் மூலம் பயண அட்டை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்....



நெல்லை: தனியார் பள்ளி களில் பஸ் கட்டணம் வசூலிப்பதை வரன்முறைப்படுத்த ஆர்டிஓ அலுவலகம்  மூலம் பணம் செலுத்தி பயண அட்டை வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் எனஅனைத்து ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்க
பொது செயலாளர் கிப்ஸன் விடுத்துள்ள அறிக்கை:

அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை மெட்ரிக் பள்ளிகள் வசூலிக்கின்றனவா என்பதை கண்காணிக்க லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு அதிகாரம் வழங்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத மாணவர்களுக்கு மெட்ரிக் பள்ளியில் இலவச கல்வி உறுதி செய்யப்பட வேண்டும். 
பள்ளி, கல்லூரி வாகனங்களில் மாணர்களிடம் அதிக கட்டணம் வாங்குவதை அரசு தடுக்க வேண்டும். பள்ளி பஸ்சில் பயணிக்க மாதாந்திர மற்றும் வருடாந்திர பயண அட்டையை வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் பணம் செலுத்தி பெறும் முறை உருவாக்கப்பட வேண்டும். மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் பெற்றோரை சந்தித்து பள்ளி மீதுள்ள குறைகள், பள்ளி வாகன குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

* சான்றிதழ்கள் பெற...


பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf
http://www.tn.gov.in/appforms/death.pdf
சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

* E-டிக்கெட் முன் பதிவு:
ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/

தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம் - மாநில அளவிலான நிர்வாக சீர்த்திருத்தக் குழுவில் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சமூக நலத்துறை செயலாளர் சேர்த்து அரசு உத்தரவு

இந்த ஆண்டு 18,205 ஆசிரியர்கள் நியமனம்

இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் 18,205 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் 12,295 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 817 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
 
இதைத் தவிர 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 1,093 அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களும், 782 சிறப்பாசிரியர்களும், 232 பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மூத்த விரிவுரையாளர்கள் 32 பேரும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் 30 பேரும், விவசாயத்துறை பயிற்றுநர்கள் 25 பேரும், அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள் 18 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணைச் செயல்பாடுகள் சார்பான ஆசிரியர் கையேட்டினை அ.க.இ. சார்பில் வழங்கப்படும் பள்ளி மான்யம் மூலம் பெற்று பயன்படுத்திட உத்தரவு.

பள்ளிக்கல்வி - அகஇ சார்பில் 2013-14ம் கல்வியாண்டில் வட்டார வள மையம் / தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய பணிமூப்பு பட்டியல் வெளியீடு

2010 ல் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு முறையை கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு கொண்டுவந்தது. ஆனால் அதற்கு முன்னர் இருந்துவந்த பதிவு மூப்பு அடிப்படை முறையில் ஆசிரியர் பணி இடங்கள் வழங்க, 2010 ஆம் ஆண்டு 32,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.
 

"கிரீன் கார்டு" வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன?



அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா குறித்த, பல்வேறு சந்தேகங்களைப் போக்கும் வகையில், தினமலர் வாசகர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்.

அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறும் உரிமையை அளிக்கும், "கிரீன் கார்டு" வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன? அமெரிக்காவில் ஏதாவது தொழிலில் முதலீடு செய்தால், இந்த உரிமையைப் பெற முடியுமா? ஏ.வி.கிருஷ்ண தேவராஜன், கோவை

பதில்: அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவது என்பது, அதாவது சட்டப்பூர்வ நிரந்தரக் குடியுரிமை பெறுவது பல அம்சங்களைப் பொறுத்து அமையும். பலர், தங்கள் குடும்பத்தினர் வாயிலாக "கிரீன் கார்டு" பெறுகின்றனர்.

July DA 90% almost confirmed – AICPIN

RELIGIOUS HOLIDAYS-2013


   ..............R.HOLIDAYS-2013 .......

JANUARY: 13,27


FEBRUARY: 13,21,25


MARCH: 04,28


APRIL: 25 


MAY: 26


JUNE: 06,24 


JULY: 10 


AUGUST: 03,16,20,21


SEPTEMBER: 07,16


OCTOBER: 15


NOVEMBER: 02,05,


DECEMBER: 18,24,31

தமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள் முதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) வரை பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், நலத்திட்டங்கள் வழங்குவது உட்பட பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள் முதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) வரை பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், நலத்திட்டங்கள் வழங்குவது உட்பட பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கல்வித் துறையில் செயல்படுத்தும் திட்டங்களை கண்காணித்து, செயல்படுத்துவதில் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. மாவட்டங்களில், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் "வழிநடத்தும்' பொறுப்பில் உள்ளவர்கள். பல மாதங்களாக, இதுபோன்ற தலைமையிட அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக கிடப்பதால், துறை உத்தரவுகளை செயல்படுத்துவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது.

நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் 30.06.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் ரூபாய் இரண்டரை லட்சம் பரிசு வழங்கினார்கள். ஏழை மாணவர்களுக்காக தாய் தமிழ் பள்ளிக்கு ரூபாய் ஒரு லட்சமும், வாழை சமூக சேவை இயக்கத்துக்கு ரூபாய் இரண்டு லட்சமும் வழங்கினர்

அகஇ - 2013-14ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/-, நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி -களுக்கு ரூ.7000/- விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

20-6-13




கல்வி முறையில் மாற்றம்: உச்ச நீதிமன்றம் விருப்பம்


"நாட்டில் கல்வியறிவு உயர்ந்துள்ளது; எனினும், நம் கல்வி முறை குறிக்கோளை எட்டவில்லை; எனவே, கல்வி முறையை சீரமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநில அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மகரிஷி மகேஷ் யோகி விஸ்வ வித்யாலயா என்ற கல்வி நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு, நீதிபதிகள், இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பி.எஸ்.சவுகானைக் கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்" முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை, முந்தைய நிலையை விட, இப்போது அதிகரித்துள்ளது. கல்வியறிவு குறைவாக இருந்த போது, மனித மாண்பு சிறப்பாக இருந்தது. இப்போது, கல்வியறிவு அதிகரித்து உள்ளது; மனித மாண்பு குறைந்து விட்டது.

இதற்கு காரணம், கல்வி முறையில் உள்ள சிக்கல் தான். கல்வி கற்பதற்கான குறிக்கோள் எட்டப்படவில்லை; எனவே, நாட்டின் கல்வி முறையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் -ஆசிரியர்கள் புலம்பல்


அரசு உதவி பெரும் பள்ளிகளில் -விதி மீறி கல்வி கட்டணம் வசூல்



இடைநிலை ஆசிரியர்களில் புதிய நியமனதாரர்களுக்கு ஆறாவது ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே என்பதை விளக்கும் கட்டுரை.


ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக  நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும்.

தற்போது புதிய ஊதிய விகிதத்தினருக்கான  D.A. அறிவித்த பின்னர் முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி  அரசாணை வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A  அரசாணை  வெளியிடப்பட்ட பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்றுவருபவர்களுக்காக நிதித்துறை அரசாணை  258 நாள்.14.5.2013 இல் D.A. 166% -க்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தை விட, முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில் இருந்திருந்தாலே ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.

முந்தைய ஊதிய விகிதமே  இருந்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய ஊதியம்:

         BASIC PAY                          =       4500
         DEARNESS PAY (D.P)        =       2250
         D.A. 166%                             =     11205
                                                           ___________
         TOTAL                                          17955
                                                           ____________
         (D.A. நிதித்துறை அரசாணை  258 நாள்.14.5.2013 இன் படி)

ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு.

           BASIC                                 =      5200
           GRADE PAY                       =      2800
           P.P.                                    =        750
           D.A. 80%                             =      7000
                                                              _________
           TOTAL                                        15750
                                                              __________


ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தால் புதிய நியமன இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு 

                              17955 - 15750 = 2205

எளிதில் புரிவதற்காக 1.1.2013 D.A. அரசாணையை வைத்து விளக்கியுள்ளேன். இதே போன்று 2009 முதல் 2012 வரை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி அரசாணைகளை வைத்து கணக்கிட்டு பாருங்கள். புதிய ஊதிய விகிததினருக்கு D.A.அரசானை அறிவிக்கப்பட்டு சில வாரங்களில் முந்தைய ஊதிய விகித்தினருக்கும் D.A. அரசாணை  வெளியிடப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவரை அலட்சியப்படுத்தும் பேருந்து ஊழியர்கள்: நீதிமன்றத்தில் வழக்கு



            இலவச பாஸ் வைத்துள்ள மாணவர்களை, புறக்கணிக்கும் நோக்கில் செயல்படும், அரசு பேருந்து ஊழியர்களுக்கு எதிராக, மதுரை ஐகோர்ட் கிளையில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

              மதுரை வழக்கறிஞர் ஞானகுருநாதன் என்பவர், மதுரை ஐகோர்ட் கிளையில், தாக்கல் செய்துள்ள பொது நல மனு: போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் பாதிக்கும் என்பதால், இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவர்களை, அரசு பேருந்துகளில் முறையாக ஏற்றுவதில்லை.