சத்துணவு, அங்கன்வாடி நியமனம் ரத்து :பணம் வாங்கி ஏப்பம் விட்டவர்கள் எங்கே?
தமிழகம் முழுவதும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பதால், வீடு, நகை, நிலம் போன்றவற்றை அடமானம் வைத்து, மூன்று லட்சம் வரை கொடுத்து வேலை வாங்கியவர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.
அறிவிப்பு:
மேலும், பணம் வாங்கி ஏப்பம் விட்ட ஆளுங்கட்சியினர், பிரச்னையிலிருந்து தப்பிக்க, ஓட்டம் பிடிக்கின்றனர்."சத்துணவு, அங்கன்வாடிகளில் காலியாக உள்ள, 28,600 பணியிடங்கள் நிரப்பப்படும்' என, கடந்த ஆண்டு, சட்டசபை கூட்டத் தொடரில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான அரசாணை, கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. அதையடுத்து, காலியாக உள்ள பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, இன சுழற்சி அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. சத்துணவில், 16 ஆயிரத்து 500, அங்கன்வாடியில், 12 ஆயிரத்து 100 காலியிடம் இருப்பதாக கணக்கிடப்பட்டது. பொது, தாழ்த்தப்பட்டோர், விதவையர், மாற்றுத்திறனாளி, என பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், அ.தி.மு.க.,வினர் வசூல் வேட்டையை துவக்கினர்.