PAGEVIEWERS

ஊட்டி தாவரவியல் பூங்காவில் தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்



 ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிய புல்வெளி மைதானத்தில் ஓடியாடி விளையாடுவது வழக்கம். இரண்டாவது சீசன் துவங்கியுள்ளதாலும், பள்ளி விடுமுறை என்பதாலும் ஊட்டியில் தற்போது சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், பூங்கா நிர்வாகம் பராமரிப்பு என்ற பெயரில் பெரிய புல்வெளி மைதானத்தை கடந்த சில நாட்களாக மூடி வைத்துள்ளது. பெரிய புல்வெளி மைதானத்திற்கு செல்ல பூங்கா நிர்வாகம் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓடியாடி விளையாட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். பெரிய புல்வெளி மைதானத்தை திறக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment