PAGEVIEWERS

















எம்.பில் பகுதி நேர படிப்பாக பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்பு கல்லூரிகளில் வழங்குகின்றன.திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் எம்.பில் பகுதி நேர படிப்பாக வழங்கப்படுகிறது. வழங்கப்படும் கல்லூரிகளை காண http://www.bdu.ac.in/admission/mphil2012/MPhil_Prospectus_2012_v6.pdf என்ற வலைதளத்தில் பார்க்கலாம்.

பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளிலும் எம்.பில்.பகுதி நேர மற்றும் முழுநேர படிப்பாக வழங்கப்படுகிறது. வழங்கப்படும் கல்லூரிகளின் விவரங்களை காணhttp://www.periyaruniversity.ac.in/files/course_structure_mphil.pdf என்ற இணையதளத்தை அணுகலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


1 முதல் 8 வகுப்புகளுக்கு CCE எனும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை நடைமுறையில் உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இது 9ஆம் வகுப்பிற்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதில் வகுப்பாசிரியர்

உலகை வாழ வைக்கும் அமிர்தம், தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்

Today is World Water Day. 'The world can be dry,' Come to the New Century. 'Water is the elikcar of Life' is. I mean, the world, the world will live lives like Amirtham water

இன்று உலக தண்ணீர் தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது






 






ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் ஜெனிவாவில் தொடங்கியது. ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், மனித உரிமை உரிமை மீறல் குறித்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது.
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள், பாலிடெக்னிக், மருத்துவம், பொறியியல், சட்டம் என அனைத்துக் கல்லூரிகள் என ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களுக்கும் புதன்கிழமை (மார்ச் 20) முதல் மார்ச் 22-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் இ.வல்லவன் அறிவித்துள்ளார்




மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி தி.மு.க., நாடகம் ஆடுவதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.


கல்வியில் பின் தங்கியுள்ள ஒன்றியங்களில் உள்ள மாணவர்கள், மற்ற மாணவர்களுக்கு இணையான கல்வி பெற, மாதிரிப் பள்ளிகள் துவங்கும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் கல்வி ஆண்டு முதல், 26 ஒன்றியங்களில், மாதிரி பள்ளிகள் துவங்கப்படுகின்றன. இப்பள்ளிகளில், ஆறாம் வகுப்பிலிருந்து, 12ம் வகுப்பு வரை, மாணவர்கள் சேர்க்கப்படுவர். இவற்றுக்கு சொந்தக் கட்டடம் கட்டும் வரை, அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், மாதிரி பள்ளிகள் இயங்கும். இப்பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இசை, உடற்கல்வி, கணினி, ஓவிய ஆசிரியர்கள் என, 17 ஆசிரியர் பணியிடங்களும், இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், காவலாளி, தோட்டக்காரர் என, ஏழு ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும்VAO தேர்வில் இருந்து பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1, குரூப்–1–ஏ, குரூப்–1–பி, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இதர தொழில்நுட்ப தேர்வுகளுக்கும் பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக 72 பக்கங்கள்

 கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான சந்தேகங்களை அறிய, தொலைபேசி எண்கள் அறிவிப்பு


கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான சந்தேகங்களை அறிய, தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஆணையாளராக ஓய்வு ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தொடர்பான சந்தேகங்கள், புகார்கள் தெரிவிக்க, கட்டுப்பாட்டு அறைகளும் செயல்பட்டு வருகிறது. மாநில அளவிலான சந்தேகங்களை 044 2435 1403,

விருதுநகர் மாவட்ட தொடக்க கூட்டுறவு சங்கங்கள் தொடர்புடைய தேர்தல் சந்தேகங்களுக்கு 04562 252 680, ஸ்ரீ வில்லிபுத்தூர் துணை பதிவாளர் அலுவலகம் 04563 260 312, அருப்புக்கோட்டை துணை பதிவாளர் 04566 228 220 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்வு


அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இது செல்லாது என அறிவிக்கக்கோரி இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


நமது  TATA சங்கம் சார்பாக   மாண்புமிகு தமிழக முதல்வர் 

அவர்களின் தனிபிரிவுக்கு, ஊதிய முரண்பாடுகள் களைய 

கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை 

(ஊதிய குறைதீர்க்கும் பிரிவு) அனுப்பியுள்ள பதில்




தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது.

ஊதிய குறைதீர்க்கும்  பிரிவு நமது 


கோரிக்கையை பரிசிலனை செய்து 

விரைவில்  முடிவு அறிவிக்கும் 


அரசு பதில்  










ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுமுறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ் இலக்கிய பட்டதாரிகள் மட்டுமே இனி தமிழில் தேர்வு எழுத முடியும். மற்றவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தேர்வு எழுத வேண்டும். புதிய தேர்வுமுறையால் கிராமப்புற மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மார்ச் 21ல் தமிழக அரசு பட்ஜெட்

தமிழக சட்டப்பேரவை வரும் மார்ச் 21ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆகிறது. இதனை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டம் 13.03.2013 அன்று சென்னை தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெற உள்ளது.

அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டம் 13.03.2013 அன்று சென்னை தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெற உள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களும் தவறாது கலந்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தங்களது மாவட்டத்தின் முக்கியமான புள்ளி விவரங்களை தயார்ப்படுத்தி வைத்து கொள்ள இயக்குநர் உத்தரவு பிற்பித்துள்ளார்.
 மேற்கண்ட கூட்டத்தில் கழிவறை / குடிநீர் வசதி, மடிக்கணினி பயன்பாடு, ஸ்மார்ட் கார்டு, விலையில்லா நோட்டு புத்தகம், நீதிமன்ற வழக்குகள், சுயநிதிப் பள்ளிகள், அரசாணை எண். 210 குறித்த நீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்தாதற்க்கான காரணம், சிறார் இல்லங்கள் கருத்துருக்கள், மின் கட்டண தேவை, முதலமைச்சரின் தனிப் பிரிவு மனுக்கள் பற்றிய விவரம், அரசு வழக்கறிஞர் கட்டண நிலுவை ஆகிய விவரங்களை கொண்டு வர இயக்குநர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒலி மாசுவின் விஸ்வரூபம்

வாழ்வதற்கு ஏற்ற நல்ல சூழல் என்பது, நல்ல காற்று, குடிநீர், இருப்பிடம் ஆகியவற்றோடு முடிந்துவிடுவதில்லை. அமைதியும் முக்கியம். ஓசை என்பது ஓசையாகவே இருக்க வேண்டும்; அது ஒலியாக மாறி நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது.

மாசு நிறைந்த நீர், நிலம், காற்று ஆகியவற்றால் உடல் ஆரோக்கியம் எப்படிப் பாதிக்கப்படுகிறதோ அதற்கு இணையாக ஒலி மாசு உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதிக்கும் என்பதை உணராவிடில் உடல் உறுப்புகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

எச்சரிக்கை...! C.F.L .பல்புகள் உடைந்தால்...!

 
சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது.
இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

ஏழாவது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.லோக்சபாவில் நேற்று, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா கூறியதாவது: ஆறாவது சம்பள கமிஷன் அளித்த பரிந்துரைகள், 2006 ஜனவரி, 1ம் தேதியிலிருந்து, அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், ஏழாவது சம்பள கமிஷனை அமைக்க வேண்டும் என, ஒரு சிலரிடமிருந்து, கோரிக்கைகள் வந்துள்ளன.முந்தைய நடைமுறைகளின்படி, இரண்டு சம்பள கமிஷன்களுக்கு இடையே, குறைந்தது, 10 ஆண்டுகள் இடைவெளி இருந்துள்ளது. எனவே, ஏழாவது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் எதுவும், இப்போது அரசிடமில்லை.இவ்வாறு, நமோ நாராயண் மீனா கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், 12ம் தேதியுடன் முடிகிறது. எனவே, புதிய தலைவர் குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியான நடராஜ், கடந்த ஆண்டு, ஜனவரி, 23ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருப்பவர்கள், 62 வயது அல்லது ஆறு ஆண்டுகள், இதில், எது முதலில் வருகிறதோ, அதுவரை பதவியில் இருக்கலாம். அதன்படி, நடராஜ், 62, பதவிக்காலம், வரும் 12ம் தேதியுடன், முடிவுக்கு வருகிறது. கடந்த,

"ஆண்களுக்கு பெண்கள் போட்டி' என்ற நிலை மாறி இன்று "பெண்களுடன் ஆண்கள் போட்டியிடும் நிலைமை' ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு அனைத்து துறைகளிலும் பெண்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர். பெண் என்பவள், மனைவி, தாய், குடும்பத்தலைவி என பல பரிணாமங்களாக திகழ்கிறாள். "உடல் வலிமை ஆண்களுக்கு பலம் என்றால், மன வலிமை பெண்களுக்கு பலம்' என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. "ஒரு உறுதிமொழி: பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளை முற்றிலும் நிறுத்துவதற்கான நேரம்' என்பது இந்தாண்டு ஐ.நா.,வின் மையக்கருத்து. பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக, பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதிகார வர்க்கமாக திகழும் அரசியலில், பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்பது, இன்னும் கோரிக்கை நிலையில் உள்ளது. எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது பார்லிமென்டிலும், மத்திய அமைச்சரவையிலும் உள்ள பெண்கள் வெறும் 10 சதவீதம். பெண்களுக்கு கிடைக்க வேண்டிய இந்த உரிமையை, சிலர் சலுகையாக நினைத்து மறுப்பது வேதனைக்குரியது.
 : ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ், பென்ஷன், பாஸ்போர்ட் உள்ளிட்ட சேவைகளை தாமதப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.250 லிருந்து அதிகபட்சமாக ரூ.50,000 வரை அபராதம் விதிக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 

அரசுத் துறைகளில் குறித்தகாலத்தில் பொருள் மற்றும் சேவை பெறும் உரிமை மற்றும் குறைதீர் சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைச் சுருக்கமாக "சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வரைவு' எனலாம். இந்தச் சட்ட முன்வரைவின் உள்ளார்ந்த நோக்கம் ஒருவகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு இணையானது.
மத்திய, மாநில அரசுத் துறைகள், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் ஆகியன அனைத்தும் இந்தச் சட்ட வரம்புக்குள் வருகின்றன. சேவைக் குறைபாடு உண்மை என்று கண்டறியப்பட்டால், ரூ.250 முதல் ரூ.50,000 வரை அபராதம், துறை நடவடிக்கை எல்லாவற்றையும் இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.

தொடக்கக் கல்வி - 2010 - 11ஆம் ஆண்டு தரம் உயர்த்தப் பட்ட 218 நடுநிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான பதவி உயர்வு கலந்தாய்வு 09.03.2013 அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும்.


பள்ளிக்கல்வி - தமிழ்நாடு அடிப்படை பணி - பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு உயர் / மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட்டு பகுதிநேர, தினக்கூலி மற்றும் சில்லறை செலவினப் பணியாளர்கள் 10 ஆண்டுகால பணி முடித்த நாள் முதல் முறையான பணியிடத்தில் நியமனம் வழங்க விவரம் கோரி உத்தரவு.


தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப்பணி - 2012-13ம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியி லிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பதவி உயர்வுக்கான (பணிமாறுதல்) கலந்தாய்வு அந்தந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 8.3.2013 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் என அறிவிப்பு.


தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - புதிய நியமனங்கள் - TRB மூலம் 2009-2010ம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் நியமனம் செய்யப்பட்ட கணித மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்து உத்தரவு.


த அ உ சட்டம் - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதித்துறை சார்ந்த விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு.