PAGEVIEWERS

TET -Paper 2 social science tentative key Answers

Sl.No
Subject
Question (or)Answer Keys
1Child Development and Pedagogy
(relevant to age group 6 – 11)
Soon update
2Language I

Tamil/Telugu/Malayalam/Kannada/Urdu
3Language II - English
Soon update
4Mathematics & Science
5Social Science



முதல் வெற்றி :டிட்டோ-ஜேக் கூட்டத்தில் பெரும்பாலான சங்கங்கள் கலந்துகொண்டன, இரு முக்கிய சங்கங்கள் தவிர மற்ற சங்கங்கள் பங்கேற்பு

இன்று சென்னை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற டிட்டோ-ஜேக் கூட்டத்திற்கு தொடக்கக்கல்வித்துறையில்  உள்ள அனைத்து சங்கங்களையும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் திரு.கண்ணன் அவர்கள் தலைமை வகித்தார்
: சென்னை பல்கலைக்கழகத்தின் 155வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை பல்கலைக்கழகம் எண்ணற்ற அறிஞர்களை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கல்வி வளர்ச்சிக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னாட்சி கல்லூரிகளை முதலில் அறிமுகம் செய்தது சென்னை பல்கலை., எனவும் அவர் புகழாரம் சூட்டி உள்ளார். இவ்விழாவில் தமிழக கவர்னர் ரோசைய்யா, கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கேள்விகளில் அச்சுப்பிழை தமிழாசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடகூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு

A FLAT IN CHENNAI

imggallery

Pension – Tamil Nadu Pension Rules, 1978 – Amendment to rule 9 of the Tamil Nadu Pension Rules, 1978 - Orders – Issued.

M.PHIL CHENNAI HIGH COURT STAY ORDER

ஆறாவது ஊதிய குழுவினால் பாதிப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல. பதவி உயர்வில் சென்றுள்ள மூத்த ஆசிரியர்களுக்கும் தான் என்பதை விளக்கும் கட்டுரை

TO DOWNLOAD GOVT LTR.23373/S/2011-2 DATED.09.08.2011 CLICK HERE...

அரசாணை 234 நாள்:1.6.2009 இல் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாதபோதே சமரசமின்றி தொடர்ந்து போராடி இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை போராடி பெற்றிருந்தால், அதன்பின்னர் பல்வேறு ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய முயன்றிருக்க வாய்ப்புண்டு. ஏதோ இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு என்றுமட்டும் நினைத்துவிட்டார்களோ என்னவோ? குறை சொல்வதற்காக இப்படி குறிப்பிடவில்லை. மூத்த ஆசிரியர்களுக்கும் ஊதிய பாதிப்பு ஏற்படுவதால் இப்படி குறிப்பிடுகிறோம்.

Communicate English என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 40% தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ( 24.08.2013) அன்றும் 40% உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு (07.09.2013) அன்றும் பயிற்சி அளிக்க முதன்மை கருத்தாளர்களுக்கு பயிற்சி SCERT உத்தரவு

G.O.240. நாள்.22.7.2013. இன் படி அனுமதிக்கப்பட்ட RE-OPTION வாய்ப்பை பயன்படுத்தி ஊதிய நிர்ணயம் செய்தால் இப்போது பெற்று வருகிற அடிப்படை ஊதியத்தை விட குறைவான ஊதியமே நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது பற்றிய ஓர் ஆய்வு

THANKS - MR.Thomas Rockland (tata)
தலைப்பில் உள்ளவாறு உள்ள பாதிப்பை விளக்கும் முன்னர் OPTION & RE-OPTION பற்றி ஒரு சிறு விளக்கம்.

OPTION பற்றிய விளக்கம்.
1.1.2006 முதல் 31.5.2009 இக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு / சிறப்பு நிலை எய்தியவர்கள் ஆறாவது ஊதிய குழு ஊதியத்தில் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது, முந்தைய ஊதிய விகிதத்தில் தேர்வு/சிறப்பு நிலை பெற்ற காலம் வரை பழைய ஊதிய விகிதத்தில் இருந்து விட்டு தேர்வு/சிறப்பு நிலைக்கு பின்னர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளலாம். அதாவது 9300 - 34800 + G.P. 4300 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளலாம்.
RE-OPTION பற்றிய விளக்கம்.

தொடக்கக் கல்வி - தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் கலந்தாய்வு 20.08.13 அன்று சென்னையில் நடைபெறுகிறது

திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் ரத்து

பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ / எம்.எஸ்.சி., பட்டப்படிப்பிற்கு பெறும் முதல் ஊக்க ஊதிய உயர்விற்கு பின் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியாக உயர்கல்வி எம்.எட்., உடன் எம்.பில்., மற்றும் பி.எச்.டி.,எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் வக்காலத்து

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு

TO DOWNLOAD HALL TICKET CLICK HERE...

பள்ளிக்கல்வி - மேல்நிலைத் தேர்வு - பழைய பாடத் திட்டத்தில் தேர்ச்சிப் பெறாத பாடங்களை புதிய பாடத் திட்டத்தில் தேர்வெழுதுதல், தனித்தேர்வர்களுக்கு சில வழிமுறைகளை அனுமதித்தமைக்கு பின்னேற்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு.

ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்தும், அதற்கு பதிலாக 31.08.2013 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு

GO.131 SCHOOL EDN (TRB) DEPT DT.13.08.2013 - DECLARE HOLIDAY ON 17.08.13 FOR TET EXAM CLICK HERE...

ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்தும், அதற்கு பதிலாக 31.08.2013 சனிக்கிழமை அன்று வேலை  நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தீர்க்கப்படாத பிரச்சனைகளை தீர்க்க மனு அனுப்புங்க.

சட்டசபை மனுக்கள் குழு அழைப்பு.


பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்சனைகள் குறித்து சட்டசபை மனுக்கள் குழுவுக்கு மனு அனுப்பலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு சட்டசபை செயலாளர் ஜமாலுதீன்  அறிக்கை: தமிழ்நாடு சட்டசபை மனுக்கள் குழு விரைவில் திருச்சியில் கூடுகிறது. திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்படவேண்டிய பொதுப்பிரச்சனைகள், குறைகள் குறித்த மனுக்களை அனுப்பலாம்.


மனுதாரர் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர்,மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டசபை, சென்னை - 600 009. என்ற முகவரிக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் அனுப்பலாம். 5 நகல்கள் அனுப்பப்பட வேண்டும். மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கபடாமல் இருக்கும் பொதுப்பிரச்சனைகள் குறித்ததாக இருக்கலாம்.எந்தவொரு மனுவும் ஒரேயொரு  பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு    துறை சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.

மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.சட்டசபை  வரம்பிற்கு உட்பட்ட மனுக்கள், மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பின்னர் தகவல் அனுப்பப்படும்.

மாணவர் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு..

 


சென்னையில் மாணவர்கள் பாதுகாப்பு பற்றி ஆராய காவல்துறை சார்பில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 211 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாணவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என போலீசார் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். எல்கேஜி மாணவர் சூர்யா கடத்தலை அடுத்து பள்ளி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் மாணவர்களை கண்காணித்து வீட்டிற்கு அணுப்புவது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பாகும் எனவும், வகுப்பு தோறும் ஒரு பொறுப்பாளரை நியமிக்கவும் போலீசார் அறிவுறுத்தினர்.

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் விதிவிலக்கு உண்டா?

பள்ளிக்கல்வித்துறையில் புதிய இணை இயக்குநர்கள் பொறுப்பேற்பு

*இணை இயக்குநர் (பணியாளர்த் தொகுதி) திரு. கருப்பசாமி அவர்களையும்,
*இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) திரு. முத்து பழனிசாமி   அவர்களையும்,
*இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) திரு.பாலமுருகன் அவர்களையும்,

*இணை இயக்குநர் (தொழிற்கல்வி) திரு.தர்ம ராஜேந்திரன் அவர்களையும்,


*இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி இயக்கம்)  திருமதி.லதா அவர்களையும்,
*இணை இயக்குநர்  (தொடக்கக் கல்வி இயக்கம்-நிதி உதவிப் பெறும் பள்ளிகள்)  திரு.செல்வராஜ் அவர்களையும்,

செவிலியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் திங்கள்கிழமை (ஆக.12) முதல் விநியோகிக்கப்படவுள்ளன.

 தமிழகம் முழுவதும் 23 அரசு நர்சிங் கல்லூரிகளும் 200-க்கும் மேற்பட்ட தனியார் நர்சிங் கல்லூரிகளும் உள்ளன. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மொத்தம் 68 ஆயிரம் இடங்கள் உள்ளன.இதற்கான
விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்படவுள்ளன.

மத்திய அரசு PFRDA மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் நாளன்று மத்திய அரசு அலுவலகங் -களில் இரண்டு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு

மத்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்  திட்டம் / PFRDA (ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) மசோதாவை தாக்கல் செய்து நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக நாடாளுமன்ற நடப்பு கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில்(பட்டியல்) இந்த மசோதாவை சேர்த்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் பட்டியலில் உள்ளதால், மத்திய அரசு இந்த மசோதா குறித்து எந்த நாளிலும் விவாதம் நடத்தும் என்று தெரிய வருகிறது.

  2009 இல் நியமிக்க  பட்ட இடைநிலை         

  ஆசிரியர் பணி  மாறுதல்   உச்சநீதிமன்ற   வழக்கு 

   MAIN  CASE   யுடன்  சேர்த்து  விசாரிக்க 

    நீதிபதி   உத்தரவு 




நமது சங்கம் சார்பாக 2009 க்கு  பின் பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் வேண்டி   தொடரப்பட்ட வழக்கு   13-4-2012 உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது ..
சிலர்   ரூ .10 இலச்சம்  வரை வசூல் செய்து உள்ளனர் . நமக்காக திரு .ஜெய்ந  முத்து ராஜ்   மற்றும் திரு .சுரேன்தரன்  ஆகிய  வழக்குரைஞர்கள் ஆஜர் ஆகினர் .சிலர் நமது  இயக்கத்திற்கு எதிராக  புரளி கிளப்பி  வருகிரார்கள் .   நம்பாதீர்கள்   ..  நாம்  தான்  முதலமைசர்  அவர்களுக்கு 1000 மனுக்கள்  அனுப்பி அரசை பதில் மனு தாக்கல் செய்ய வைத்து ஊள்ளோம் ..எந்த சங்கமும்  இது போல் வெளிப்படையாய்  தங்கள்  வழக்கு நகலை  வெளியிட்டது இல்லை ..நமக்கு மடியில்  கனம் இல்லை   நெஞ்சில் பயம்  இல்லை...நமது  இயக்கத்தினர்  ..     பிரரை   போல் டூர்  செல்ல வில்லை ..நமது  வழக்க்றின்ர்  வழக்கை  நல்லப் படி முடித்து தருவார்கள் ..நாம்  வழக்குக்கக் ரூ .90,000 மட்டும்  வசூல் செய்து கொடுத்து உள்ளோம் .பிறர்  தங்கள்  கேஸ் காப்பியை  கூட  வெளியிட பயம். காரணம் அவர்கள்   கேஸ்சில்  வலு  இல்லை. வழக்கு இந்த மாதத்தில் முடிந்து விடும் 

இதோ order copy



பள்ளிக்கல்வி - இளநிலைப் பட்டப்படிப்பு (UG) படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக் கழத்தில் (Open Universities) முதுகலை பட்டப்படிப்பு (PG) பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து உத்தரவு

இடைநிலை ஆசிரியர்களில் 1-6-2009 பின்  நியமனம்  ஆறாவது ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே  என்பதால் பழைய ஊதியம் போதும் ,புதிய ஊதியம் வேண்டாம்.

ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக  நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும். 


தற்போது புதிய ஊதிய விகிதத்தினருக்கான  D.A. அறிவித்த பின்னர் முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி  அரசாணை வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A  அரசாணை  வெளியிடப்பட்ட பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்றுவருபவர்களுக்காக நிதித்துறை அரசாணை  258 நாள்.14.5.2013 இல் D.A. 166% -க்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தை விட, முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில் இருந்திருந்தாலே ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.

முந்தைய ஊதிய விகிதமே  இருந்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய ஊதியம்:

         BASIC PAY                          =       4500
         DEARNESS PAY (D.P)        =       2250
         D.A. 166%                             =     11205
                                                           ___________
         TOTAL                                          17955
                                                           ____________
         (D.A. நிதித்துறை அரசாணை  258 நாள்.14.5.2013 இன் படி)

ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு.

           BASIC                                 =      5200
           GRADE PAY                       =      2800
           P.P.                                    =        750
           D.A. 80%                             =      7000
                                                              _________
           TOTAL                                        15750
                                                              __________


IGNOU - ஜுன் - 2013 பி.எட்., தேர்வுமுடிவுகள் வெளீயீடு


தமிழ் ஆசிரியர்




ஒருவர்= "எதுக்கு அந்த ஆளை எல்லாரும் அடிச்சிட்டு இருக்காங்க‌?"

மற்றொருவர் = "இங்க தமிழ் ஆசிரியர் யாருனு கேட்டதுக்கு 'அடியேன்' னு சொன்னாராம்.

எங்கேயோ படித்தது





திரட்டிய நகைச்சுவைகள் ...!



அந்த மாணவன் புத்தகத்தை தின்னுறான் ஏன்?
அவனுக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு தாக்கும்..?
**************
எங்க வீடு கோயில் மாதிரி....
அதுக்காக வீட்டு வாசல்ல உண்டியல் எல்லா வைக்கணுமா...?
****************
என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?
*****************
உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
ஓட்டுவீடு,அபார்ட்மென்ட் இப்படித்தான் கிடைக்கும்...தங்க வீடெல்லாம் கிடையாது.

3,500 காலி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது

100 உதவி வணிக வரி அதிகாரி, 48 சார்–பதிவாளர், 1,000–க்கும் மேற்பட்ட வருவாய் உதவியாளர் பதவிகள் உள்பட 3,500 காலி பணி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும்.

மாண்புமிகு முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகைத் திட்டம் - 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் BC / MBC / DNC / சிறுபான்மையர் மாணவ / மாணவியர்களில் மாநில அளவில் முதல் 500 இடங்களை பெரும் மாணவர்களுக்கு ரூ.3000/- அவர்களின் உயர்கல்விக்காக வழங்க முதல்வர் உத்தரவு

TRB TN TET Hall Ticket 2013 | TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013 Hall Ticket published now |

கூட்டு  போராட்டத்திற்கு தமிழ்நாடு  அனைத்து ஆசிரியர் 

சங்கம்(TATA) சார்பில் அழைப்பு


தொடர்புக்கு 

நா .கர்த்திகேயன்  -- 9442239962

S.C.கிப்சன்            ---9443464081

சே .தாமஸ்      ---   9043426895


ஓய்வூதியத்தாரர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.35000/-லிருந்து ரூ.50000/- ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு

எம்.பில் / பி.எச்.டி., ஊக்க ஊதியம் தொடர்பாக அரசு பிறபித்த தெளிவுரை ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால் தடை விதித்து உத்தரவு.

தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., / பி.எச்.டி படித்தவர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற்று வந்தனர். பிறகு தமிழக அரசு 17.07.2013 அன்று இவ்வரசாணை தொடர்பான தெளிவுரையில் அரசாணை எண்.18 வழங்கிய நாள் முதல் ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் என்று தெளிவுரை வழங்கியது. இதையடுத்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் அதன் தலைவர் மற்றும் 8 ஆசிரியர்கள் தொடர்ந்து வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் ஹரிபரந்தாமன்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - புள்ளி விவர மையத்தில் இருந்து பெறப்பட்ட ஆசிரியர்களின் CPS விவர தாட்களை 08.08.2013க்குள் சமர்பிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and Organisations covered under this Scheme.















புகையிலை நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளில் மாணவ / மாணவியர்கள் கலந்து கொள்ள தடை


இரட்டைப்பட்டம் வழக்கு நாளை (06.08.2013 - செவ்வாய்) விசாரணைக்கு வருகிறது

ORAGANISATION OF SCHOOL LEVEL PAINTING COMPETION FOR 6,7,&8 STD STUDENTS FOR THE YEAR 2013-2014 REG

DEE.ELE.19547/J2/2013-SCHOOL LEVEL PAINTING COMPETION FOR 6,7,&8 STD STUDENTS

தமிழ் நாடு பள்ளிகல்வி -அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர (REGULAR ) படிப்பில் சேர்ந்து பி.எட் பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்த்தல்

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஏமாற்றம் .-உறுதிமொழி என்னாச்சு?தினகரன் செய்தி

புதிய ஓய்வூதிய திட்டம் சட்டவிரோதமானது - விளக்கம் கேட்டு ஐகோர்ட் நிதித்துறை செயலர் மற்றும் தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் -Source-HINDU News paper, DT-3.8.2013 Madurai Edision

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் 

உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு. 


மதுரையில் நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானம்.

   நேற்று 03.08.2013 அன்று மதுரை Y.M.C.A SCHOOL COMPOUND - இல் (T.A.T.A.) தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க கூட்டம் மாநில தலைவர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண் ஆசிரியைகள் உட்பட பல்வேறு ஆசிரியர்களுடன் இயக்கப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். 

 கூட்டத்தில் 3 நபர் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் அறிக்கைக்குப் பின்னரும் தீர்க்கப்படாத இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. பாதிப்புகள் ஆசிரியர்களுக்கு எடுத்துகூறப்பட்டது. கலந்து கொண்டவர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு முதல்கட்டமாக உண்ணாவிரதம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

 தமிழக அரசின் கவனத்திற்கு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகள், ஊதிய குறைதீர்க்கும் பிரிவின் அறிக்கையை தொடர்ந்து வெளியிடப்பட்டஅரசானைகளுக்குப் பின்னரும் தொடர்வது குறித்து பொதுசெயலாளர் திரு.கிப்சன் எடுத்து கூறினார். மேலும் இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நாம் மேற்கொள்ள இருக்கும் ஜனநாயக முறையிலான உண்ணாவிரதத்திற்கு பெருந்திரளாக ஆசிரியர்கள் கலந்துகொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். 

இந்த உண்ணாவிரதம் மூலம், 1.1.2009  -க்கு பின்னர் பணியேற்றவர்களை பொருத்தவரையில் ஆறாவது ஊதிய குழுவினால் ஊதிய இழப்பே ஏற்பட்டுள்ளது என்பதையும், அதனை களைய ஊதிய குறை தீர்க்கும் பிரிவு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும், மேலும் 1.1.2009 - க்கு  முன்னர்   பணியேற்றவர்களை   பொருத்தவரையில்,   ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படாததால் அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் பெரும் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதை குறித்தும் விரிவாக விளக்கி பேசி உண்ணாவிரதத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டியதின் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார்.

முதல்கட்டமாக உண்ணாவிரதம் 31.8.2013 அன்று திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்த விவரங்கள் ஆசிரியர்களுக்கு பொறுப்பாளர்கள் மூலம் தெரிவிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

கூட்டத்தில்  பங்குபெற்ற அனைவருக்கும்  மாநில செய்தி தொடர்பாளர் திரு. கார்கில் ராஜேந்திரன் அவர்கள் நன்றிகூற கூட்டம் நிறைவடைந்தது.

புதிய பங்கேற்பு ஓய்வூதியம் (cps) திட்டம் என்றால் என்ன?

டி.இ.டி., தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படும்' - டி.ஆர்.பி.,

வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி நடக்கும், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,11,634 பேரும் எழுதுகின்றனர்.
புதுடில்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில், சட்டதிருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிக்க வகை செய்யும் சட்டத்தில் சில நிபந்தனைகளை தளர்த்தவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இன்று வந்த இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 6ந் தேதிக்கு ஒத்தி வைப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம்தொடர்பான வழக்கு எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் வேண்டுதலுக்கிணங்க வருகிற 06.08.2013 செவ்வாய் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வழக்கில் முன்னின்று நடத்தி வரும் ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.


06.8.2013க்கு பின்னர் தள்ளி போக வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.