PAGEVIEWERS

15,000 பேருக்கு அரசுப்பள்ளி ஆசிரியர் பணி உறுதி

டி.இ.டி  தேர்வில் தேர்ச்சி பெற்ற 27,000 பேரில் 15,000 பேருக்கு அரசுப்பள்ளி ஆசிரியர் பணி உறுதி மேலும்12ஆயிரம்பேருக்கு ஏமாற்றம். டி.இ.டி.தேர்வில்,தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்குஅரசு பள்ளிகளில்ஆசிரியர் வேலை உறுதி; 12 ஆயிரம் பேர்ஏமாற்றம் அடையும் நிலை எழுந்துள்ளது.

டி.இ.டி.முதல் தாள் தேர்வில், 12,596 பேரும்,இரண்டாம் தாள் தேர்வில், 14,496 பேரும்தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும்அரசு பள்ளிகளில், 15ஆயிரம் பணியிடங்கள் வரைகாலியாக இருப்பதாக,துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்க கல்வித்துறையில், 880 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 1,500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும்காலியாக இருக்கின்றன. பள்ளி கல்வித்துறையில்தற்போதைய நிலவரப்படி, 10,500இடங்கள் காலியாக உள்ளன. மே மாதம்பணி ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால்மேலும்சில ஆயிரம் இடங்கள்அதிகரிக்கலாம்.மொத்தத்தில், 15 ஆயிரம் பேருக்குஅரசு பள்ளிகளில்ஆசிரியர் வேலை கிடைக்கஅதிக வாய்ப்புகள் உள்ளன.தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கும்இம்மாத இறுதியிலோ அல்லதுடிசம்பர்முதல் வாரத்திலோசான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அதன்பின்இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு,கல்வித்துறையிடம்டி.ஆர்.பி.,வழங்கும்.டிசம்பர் இறுதிக்குள்புதிய ஆசிரியர்பணி நியமனம் செய்யப்படலாம். இடைநிலை ஆசிரியர் பணியை பொறுத்தவரைதேர்ச்சி பெற்றிருந்தாலும்,மாநில அளவில்வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தான்பணி நியமனம் நடக்கும். பட்டதாரி ஆசிரியர் மட்டும்தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்பணி நியமனம் செய்யப்படுவர். எனவே, 12 ஆயிரம் பேருக்குஅரசு பள்ளிகளில்ஆசிரியர் வேலைAdvertisementகிடைக்க வாய்ப்பு இல்லை.இவர்கள்தனியார் பள்ளிகளில்,ஆசிரியர் வேலையில் சேரலாம். அரசு பள்ளிகளில்,ஒவ்வொரு ஆண்டும்கணிசமான எண்ணிக்கையில்,ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுவருகின்றனர். ஆனால்மாணவர் சேர்க்கை சதவீதம்,சரிந்துகொண்டேவருகிறது. இதனால்ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், 1:25 என்ற நிலை உள்ளது. டி.இ.டி.தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் நியமனம் செய்யும்போதுஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம்மேலும் சரியும் என,எதிர்பார்க்கப்படுகிறது. எனவேவரும் ஆண்டுகளில்,ஆசிரியர் நியமனம்பெரிய அளவில் இருக்காது என,துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment