PAGEVIEWERS

கற்பித்தல் பாதி கணக்கெடுப்பு பாதி : அலைக்கழிக்கப்படும் ஆசிரியர்கள்

கற்பித்தல் பாதி கணக்கெடுப்பு பாதி : அலைக்கழிக்கப்படும் ஆசிரியர்கள் பல்வேறு கணக்கெடுப்புவாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் என கற்பித்தலுடன்பல பணிகள் கூடுதலாக செய்ய வேண்டி
உள்ளதால், ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அன்னூர் ஒன்றியத்தில் 75 துவக்க, 16 நடுநிலைப் பள்ளிகளில், 6,000மாணவமாணவியர் படிக்கின்றனர். அனைத்து பள்ளிகளிலும் சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன.
"அனைவருக்கும் கல்வி இயக்கம்சார்பில்துவக்கப்பள்ளிகளுக்கு பள்ளி கட்டடங்கள் பழுதுபார்ப்பு மானியம் ரூ. 5,000, பராமரிப்பு மானியம் ரூ. 5,000 வழங்கப்பட்டது.

நடுநிலைப் பள்ளிகளுக்குதலா 10 ஆயிரம் வீதம் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இரு மாதங்களுக்கு முன் தொகை வழங்கியபோது, "எந்த பணிக்கு செலவிட வேண்டும்என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்எனதெரிவிக்கப்பட்டது.

இரு வாரங்களுக்கு முன்அனைத்து துவக்கநடுநிலைப் பள்ளிகளும்ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் பெயருக்கு,ரூ. 3,000க்கு வங்கி வரைவோலை (டி.டி.,) எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் வரைவோலை எடுத்து,அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.

இந்நிலையில்இருநாட்களாகஅனைத்து துவக்கநடுநிலைப் பள்ளிகளும்வரைவோலையை வந்து திரும்ப பெற்றுக் கொள்ளும்படியும்அதை வங்கியில் மீண்டும் ரொக்கமாக்கி சம்மந்தப்பட்ட கணக்கில் வைக்கவும் அறிவுறுத்தினர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் கற்பித்தல் பாதிப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment