PAGEVIEWERS

 கல்வித் துறை முதன்மைச் செயலாருடன் நடந்த பேச்சு வார்த்தையில் நமது சீனியர் சங்கங்கள் கேட்ட காமெடியான கோரிக்கை : 3 நபர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்பது. ஐயா சாமிகளா அந்த அறிக்கை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கிப்சன் அவர்களால் பெறப்பட்டு, அரசுக்கு மறுப்பு அறிக்கை அனுப்பப்பட்டு எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் அந்த அறிக்கையினை அடிப்படியாக வைத்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்த்து வருகிறது. 

இடை நிலை ஆசிரியருக்கு என்ன பாதிப்பு, அதனை தீர்க்க அமைக்கப்பட்ட குழுவின் பதில் என்ன , அதில் என்ன குறைபாடு என்ன , என்பன போன்ற எவ்வித அடிப்படையும் தெரியாமல் கடந்த 2.5 ஆண்டுகளாக இடை நிலை ஆசிரியருக்காக போராடுவதாக கூறி அப்பாவி இடை நிலை ஆசிரியர்களை கூட்டத்திற்காக மட்டும் பயன் படுத்தி வரும் சீனியர் சங்கங்களை என்னவென்று கூறுவது? 

தயவு செய்து புரிஞ்சுக்கிட்டு போராடுங்க! போராடுவது போல் நடிக்க வேண்டாம்.

தேவேந்திரன். இடைநிலை ஆசிரியர்......


No comments:

Post a Comment