PAGEVIEWERS
















 கலங்கிக் கிடக்கும் எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர்கள்!




''வேற வேலையை பார்த்துக்குங்கன்னு, அதிகாரியே சொல்றதால, ஆசிரியர்கள் ஆடிப் போய் இருக்காங்க பா...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.


''அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகத்துக்கு கீழ, பதினாறாயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், வேலை பார்க்கறாங்க பா... மத்தியில, திரும்பவும், காங்கிரஸ் அரசு வந்தா, வேலை தொடருமாம்... ஆட்சி மாறினா, வேலை போயிடும்ங்கற நிலை இருக்காம்... ஏன்னா, மத்திய அரசு நிதியில இருந்து தான், இவங்களுக்கு, சம்பளம் தந்துட்டு இருக்கறாங்க...

''இந்நிலையில, அதிகாரிகளை சந்திச்சு, 'எங்களை காப்பாத்துங்க'ன்னு, ஆசிரியர்கள் கேட்டுட்டு இருக்கறாங்க... ஒரு அதிகாரி, 'எங்களால ஒண்ணும் செய்ய முடியாது... பேசாம, இப்பவே, வேற வேலையை பார்த்துக்குங்க'ன்னு, கூலா சொல்றாரு... இதனால, ஆசிரியர் மத்தியில, நாளுக்கு நாள், பீதி அதிகமாயிட்டு இருக்குது பா...'' என்றார் அன்வர்பாய்.''குப்புசாமின்னு என் நண்பர் ஒருத்தர் இருக்கார்... அவருக்கு போன் போட்டு, நாலு கேள்வி கேட்கணும்... வரேன்...'' எனக் கூறிக் கிளம்பினார் குப்பண்ணா.மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது!

No comments:

Post a Comment