PAGEVIEWERS

அன்பார்ந்த ஆசிரியர்களுக்கு வணக்கம் .

இடைநிலை ஆசிரியர்ஊதிய வழக்கு WP.33399/13 விபரம் அறிய அனைவரும் ஆவலாய் இருப்பதுக்கு வாழ்த்துகள் !

நமது வழக்கை காரணம் காட்டி பலர் போராட்ட களம் செல்ல சாக்கு போக்கு சொல்லி வருவதாக களப்பணியில் உள்ள  பிற சங்க தோழர்கள் சொல்வதாக   அறிந்தோம் . அதன் காரணமாக வழக்கு குறித்து தொடர் பதிவுகள் வெளியிட வில்லை . மேலும் போராட்டம் நமது வழக்குக்கு வலு சேர்க்கும் என்பதே நமது இயக்க கருத்தாகும் . தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகள் தொய்வின்றி சிறப்பாக நடந்து வருகிறது .

அரசின் நடவடிக்கை காரணமாக வழக்கு தள்ளிப்போய் கொண்டு வருகிறது .
மேலும் தீர்ப்பு வந்த பின்  இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300+4200 வழங்கினால்   அரசுக்கு நல்ல பெயர் கிடைக்காது என்பதால் வழக்கு முடியும் முன்பாக அரசு ஆணை வெளிவர உள்ளதாக தகவல் பரவி வருகிறது .

வழக்கு மூலம் அரசுக்கு இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை ,நடை பெற்ற தவறுகள் எடுத்து செல்லப் பட்டுள்ளது .தொடர்ந்து TATA வுக்கு ஆதரவை தாருங்கள் . உங்கள் வட்டாரங்களில் கிளைகளை துவங்க நடவடிக்கை எடுங்கள் .அதுவே நீங்கள் எங்களுக்கு  செய்யும் நன்றி ! 

இனி நேரடியாக வழக்கின் தீர்ப்பு இந்த மாத இறுதிக்குள்   நம் இணையதளத்தில் வெளியிடப்படும் ....

No comments:

Post a Comment