PAGEVIEWERS


TATA - வின் மாநில அளவில் பதவி 
 
 
உயர்வு வழக்கு W.P . ( MD ) NO; 
 
 
4773/2011.....வழக்கறிஞர் உடன் 
 
 
சந்திப்பு   (7-6-2014 ) 
 

தொடக்க கல்வித் துறையில் மாநில அளவில் பதவி உயர்வு  நடைமுறை படுத்திட கடந்த 2011 ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .
                இந்த வழக்கு 2014 ஏப்ரல் மாதம் விசாரணைக்காய் எடுக்கப்பட இருந்தது .ஆனால் ரீச் ஆகாமலே நீதி மன்ற விடுமுறை வந்து விட்டது .தற்போது மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது .இந்த வருடம் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு முன்பாக மேற்படி வழக்கின் மூலம் தொடக்க கல்வித் துறையில் மாநில அளவில் பதவி உயர்வு  நடைமுறை படுத்திட அனைத்து முயற்சிகளையும் நமது வழக்கறிஞர் திரு.அறிவழகன் அவர்கள் மூலம் எடுத்து வருகிறோம் .முக்கிய விசாரணையில் நமது மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்களை ஆஜர் ஆகும் படி நடவடிக்கை எடுத்து வருகிறோம் .
 
     மேற்படி வழக்கிற்கு தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் திரு.குமாரசாமி ஆசிரியர் ரூ 5000/- திரு .அருணாசல சுந்தரம் ஆசிரியர் அவர்களும் அவரின் நண்பர்களும் சேர்ந்து ரூ .3000/-ஆக ரூ .8000/- கிடைத்தது .மேற்படி தொகையை திரு.கிப்சன் .சேலம் மாவட்ட செயலாளர் திரு.ராம்குமார் ஆகியோர்  வழக்கறிஞர் அவர்களிடம் கொடுத்து உள்ளோம் .மேலும் இந்த வழக்கிற்கு இது வரை ரூ .76000 செலவு செய்யப்பட்டு உள்ளது .கூடுதலாக 24000 தேவை படுகிறது
அளவில் பதவி  உயர்வு
விரும்புகிறவர்கள் உதவிட வேண்டுகிறோம்.
 
            பதவி உயர்வு அறிவிப்பு வந்தால் அதை நீதி மன்றம் மூலம் தடை ஆணை பெற்றிட வழக்கறிஞர்அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார் .
 
     தொடர்புக்கு ;கிப்சன் 9443464081.

No comments:

Post a Comment