PAGEVIEWERS

தொடக்கக் கல்வி துறையில் -ஆன் லைன் கலந்தாய்வு -தென் மாவட்ட ஆசிரியர்களுக்கு பயன் கிடைக்காது -TATA.

வரும் ஜூன் 30,ஜூலை 1,2 ல் நடக்க இருக்கும் தொடக்கக் கல்வி துறையில் -ஆன் லைன் கலந்தாய்வு -தென் மாவட்ட ஆசிரியர்களுக்கு பயன் கிடைக்காது.ஏன் என்றால் பலர் ஏப்ரல் 2014 க்கு முன்பாகவே பணம் கொடுத்து மாறுதல் பெற்று வந்து நிரப்பி விட்டார்கள் ,யாரும் மாறுதலுக்காக கனவு காண வேண்டாம் .கடந்த 12-6-2014 க்கு முன்பாகவே பல பணியிடங்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டது .நாகர்கோவில் ,திருநெல்வேலி ,தூத்துகுடி ,விருதுநகர் ,மதுரை ,தேனி , சிவகங்கை  போன்ற மாவட்டங்களில்  இடை நிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மிக மிக குறைவு ,அதிக பச்சமாக் 5*10=50 தான் காட்ட வாய்ப்பு உள்ளது ,இவை அனைத்தும் பணி மாறுதல் முன்னுரிமை உள்ளவர்களுக்கே காணாது ,எனவே முன்னுரிமை இல்லதவர்கள் ஆசை பட வேண்டாம் .பணம் கொடுத்து நிர்வாக மாறுதல் பெறுகிறவர்களுக்கு எதிராக TATA. ( தமிழ் நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம்  ) போராடி வருகிறது. தயவு செய்து யாரும் பணம் கொடுத்து பணி மாறுதல் பெற வேண்டாம் .உங்களுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில்  பணி மாறுதல் பெற்று தர நமது சங்கம் தயாராக உள்ளது .நமது சங்கம் மூலம் நீதிமன்றத்தை நாடி தீர்ப்பு பெற்று மாறுதல் பெற்று கொடுத்து உள்ளோம் .

-ஆன் லைன் கலந்தாய்வு - பல பணியிடங்கள் மறைக்கப்பட்டு மிக குறைந்த இடங்கள் மட்டுமே காட்டப்படும் இதனால் -ஆன் லைன் கலந்தாய்வு முறை வந்தால் நல்லது நடக்கும் என்பது மாபெரும் நாடகமே !  நாடகமே ! 

No comments:

Post a Comment