PAGEVIEWERS


புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) ஏன் ஒழிக்கப்பட வேண்டும்?


ஓய்வூதியம் என்றால் என்ன? நோபல் பரிசும், இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதைஅமார்த்தியசென் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத்திட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமானமறுபங்கீடே என்று
விளக்கமளித்துள்ளார். செல்வத்தை உற்பத்தி செய்வதேதொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்தஅடிப்படையில்தான் 1871ல் ஓய்வூதியச் சட்டம் 1871’நிறைவேற்றப்பட்டது.
ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்தாகும் 
அரசியல் நிர்ணயச்சட்டத்தின் 31-ஆவது பிரிவின்படி ஓய்வூதியம் அவரது சொத்துரிமை.ஓய்வூதியம் என்பது ஓய்வு பெற்றவரின் கையில் சென்றுசெரவேண்டும் என ஓய்வூதியச் சட்டம் உறுதிப் படுத்துகிறது. அதை எந்தநீதிமன்றமும்கூடப் பறிமுதல் செய்துவிட முடியாது. உச்சநீதி மன்றம்மன்னர் மான்ய ஒழிப்பு வழக்கில் ஓய்வூதியம் என்பது ஊழியரின்சொத்துரிமை. அரசியல் சட்டத்தின் 31ஆவது பிரிவு அளித்துள்ள இந்தஉரிமையைத் தட்டிப் பறிக்க- இந்த அடிப்படை அம்சத்தை மறுதலிக்கநாடாளுமன்றத்துக்குக்கூட அதிகாரமில்லை என்று தீர்ப்புஅளித்துள்ளது. நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்குத்பணிக்கொடை வழங்குவதற்காக பணிக்கொடைச் சட்டம் 1972 (GGratuity Act 1972) நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாட்டில் உள்ளதொழிலாளர் எவரும் பணிக்கொடை இல்லாமல் இருக்கக் கூடாது.எனவே அனைவருக்கும் பணிக்கொடை அளிக்கப்பட்டு வருகிறது.இந்தப் பணிக்கொடையைப் பறிக்க அரசுக்கு உரிமை கிடையாது.ஓய்வுபெறும்போது ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறகம்முட்டேஷன் உரிமையும் ஊழியருக்கு உண்டு. ஒருவேலையில்சேர்ந்து சுமார் 35 முதல் 40 ஆண்டுகள்வரை தனது உழைப்பைநாட்டுக்குத் தந்து ஓய்வுபெறும் ஒருவர் தனது எஞ்சிய வாழ்நாளைஓரளவாவது குறைந்தபட்ச வசதிகளோடு வாழவேண்டும் என்றநோக்கில் அவர் பணியில் இருக்கும்போதே அவரது ஊதியத்தில்ஒருகணிசமான தொகையைப் பிடித்தம் செய்து அத்துடன்அதேஅளவுக்கு அரசின் பங்கையும் சேர்த்து ஓய்வுபெறும் நாளில்அளித்திட உருவானதுதான் வருங்கால வைப்புniநிதித்திட்டம்.இதற்காக நிறைவேற்றப்பட்டதுதான் பிராவிடண்ட் ஃபண்ட்சட்டம் 1952 (Employees Provident Fund Act 1952) அனைவருக்கும் பி.எஃப்இருக்கவேண்டும் என்றுசொல்லும் இந்தச்சட்டத்தின்படி எவர்ஒருவருக்கும் இதை மறுப்பது சட்டவிரோதச் செயலாகும்.mm இந்தச்சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை பா,..தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி அரசில் நிதித்துறை அமைச்சகம் 22.12.2003ல்பிறப்பித்த உத்தரவு ஆபத்துக்குள்ளாக்கியது. எந்த ஒரு அரசுஉத்தரவும் இந்திய அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவரின்பெயரில்தான் பிறப்பிக்கப் படவேண்டும். அதற்கு மாறாக மத்தியநிதித்துறை அமைச்சகம் புதிய ஓய்வூதியத் திட்டம் என்றஉத்தரவைப் பிறப்பித்தது. இதன்படி ஓய்வூதியவிதிகள்.ஓய்வூதியத்தைத் தொகுத்துப்பெறும் விதிகள்,எக்ஸ்ட்ரா ஆர்டினரிஓய்வூதிய விதிகள்,வருங்கால வைப்புநிதி விதிகள் 1.1.2004க்குப்பின்புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்குப் பொருந்தாது .ஓய்வூதியவிதிகளில்தான் பணிக்கொடை விதிகளும், ஓர்ஊழியர் இறந்தபின்அவரது குடும்பத்திற்கு வழங்கும் குடும்ப ஓய்வூதிய விதிகளும்,பணிக்காலத்தில் ஊனம்,நோய் முதலியவற்றால் வேலைஇழப்பவர்களுக்கு வழங்கும் இயலாமை ஓய்வூதிய விதிகளும்உள்ளன. நிதித்துறை உத்தரவின்மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தைமேற்பார்வையிடவும், வளர்த்திடவும் ஓர்ஆணையம் 10.10.2003 முதல்முன்தேதியிட்டு நியமிக்கப்பட்டது. இந்த ஆணையம் இரண்டுஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன்பின் முறையானசட்டம் இயற்றி அதன்மூலம் உருவாகும் சட்டபூர்வமான ஆணையம்செயல்படும். இது பா...வின் ஆட்சிக்காலத்தில் நிதித்துறையின்செயல்பாடு. 2004ல் ஆட்சிக்குவந்த காங்கிரஸ் தலைமையிலானமுதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பா... கொண்டுவந்தநிதித்துறை ஆணையைச் சட்டபூர்வமாக்க 29.12.2004 அன்றுஓய்வூதிய நிதியை ஒழுங்கு படுத்துதல் மற்றும் வளர்த்தல்ஆணைய அவசரச் சட்டத்தைப்(Pension Fund Regulatory And Development Authority Ordinance) பிறப்பித்தது. இந்த அவசரச்சட்டத்தைச் சட்டபூர்வ மாக்க 2005 பிப்ரவரியில் P.F.R.D.A 2005 Bill –அறிமுகப்படுத்தியது. ஆனால், .மு.கூட்டணி 
1 அரசை வெளியில்இருந்து ஆதரித்த இடதுசாரிக்கட்சிகள் இதைக் கடுமையாகஎதிர்த்தன. எனவே இந்த மசோதாவை 14-வது மக்களவைமுடியும்வரை அந்த அரசால் சட்டமாக்கமுடியவில்லை.இதனால்,7.4.2005ல் அவசரச் சட்டம்காலாவதியானது. பி.எஃப்.ஆர்.டி. 2005 பில் ஐச் சட்டமாக்க முடியாதநிலையில் நிதித்துறை அமைச்சகம் 14.7.2008ல் மீண்டும் ஒருசுற்றறிக்கை மூலம் இடைக்கால ஆணையத்தின் பதவிக்காலத்தை8.4.2005முதல் என முன்தேதியிட்டு மேலும் ஐந்தாண்டுகளுக்குநீட்டித்தது. 10.10.2003ல் நியமிக்கப்பட்ட அந்த ஆணையம் 10.10.2011ல்8ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 8.4.2005ல் மேலும் 5ஆண்டுகளுக்குஎன நீட்டித்த காலமும் 7.4.2010ல் முடிவடைந்து விட்டது 8.4.2010முதல் சட்டபூர்வத் தகுதியை இழந்துவிட்ட இம்மசோதாவைச்சட்டபூர்வமாக்க .மு.கூட்டணி2 அரசு 24.3.2011ல் ‘.பி.எஃப்.ஆர்.டி.2011 பில் என அறிமுகப் படுத்தியது.ஆனால்இடதுசாரிக்கட்சிகள்-குறிப்பாக மார்க்ஸிஸ்ட் கட்சியின்நாடாளுமன்றக்குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா இந்தமசோதாவை வாக்கெடுப்பின் மூலம்தான் அறிமுகப்படுத்தவேண்டும் என நிர்ப்பந்தித்தார். அவையில் அன்று போதுமானஉறுப்பினர் எண்ணிக்கை இல்லாததனால் காங்கிரஸ் கட்சி பா...ஆதரவைப்பெற்று மசோதாவை அறிமுகப் படுத்தியது.அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டுவிடுமானல் பழைய ஓய்வூதியத் திட்டதின் சமுதாயப்பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிடும். புதியஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் ஊதியம்மற்றும் அகவிலைப்படியில் 10% பிடித்தம் செய்யப்படும். இதற்குஇணையான தொகையை அரசு வழங்கும். இந்த ஓய்வூதிய நிதிமேலாளர்கள் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும்.ஓய்வுபெறும் நாளில் பங்குச் சந்தையின் ஏற்ற,இறக்கங்களுக்கேற்பஓய்வூதியம் கிடைக்கும்.பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டால்இலாபம் மட்டுமல்ல: மொத்த முதலீடும் பறிபோய்விடும்.அதுமட்டுமா? புதிய ஓய்வூதியத்திட்டத்தில் 1.ஓய்வூதியத்தைத்தொகுத்துப் பெறமுடியாது. 2.ஓய்வூதியத்திற்கு அகவிலைபடிசேராது. 3.குடும்பஓய்வூதியம் கிடையாது. 4.பணிக்கொடைகிடைக்காது. 5.புதிய ஊதியக்குழுக்கள் பரிந்துரைக்கும்ஊதியத்திற்கேற்ப ஓய்வூதியம் உயராது. -இதுபோன்ற பல்வேறுஆபத்துக்கள் உள்ளதால்தான் நாடுமுழுவதுமுள்ள அரசுஊழியர்களும், ஆசிரியர்களும் தங்கள் எதிர்காலத்தைக்கேள்விக்குறியாக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப்போராடிவருகிறார்கள். இலட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசுஊழியர்களுக்கு ஏற்பட உள்ள ஆபத்துக்களையும், அவர்களின்உணர்வுகளையும் புரிந்துகொண்ட தமிழக முதல்வர்செல்வி.ஜெ.ஜெயலலிதா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னும்,தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னும்தமிழ்நாட்டில்பழைய ஓய்வூதியத் திட்டமே தொடரும்: புதிய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்தார்.அந்த உறுதிமொழியைத் தமிழக முதல்வர் நடைமுறைப்படுத்தும்நாளைத்தமிழ் நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும்எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

நன்றி ;திரு . செ.நடேசன், அவர்களுக்கு ,


No comments:

Post a Comment