PAGEVIEWERS

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 25 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி இவர்களை கைது செய்தனர். 

தர்மபுரி டவுன் போலீசார் தர்மபுரி குப்பாண்டி தெருவைச் சேர்ந்த ரத்தினசாமி (வயது 65), அன்பழகன் (49) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். சவுளுர் ஜம்புகளக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (39) என்பவரை மதிகோன்பாளையம் போலீசார் கைது செய்தனர். 


அதியமான்கோட்டை பகுதியைச் சேர்ந்த சசி என்ற சசிகுமார் மற்றும் முக்கல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜெயமணி என்ற ராஜாராம் ஆகிய இரண்டு பேரை அதியமான் கோட்டை போலீசார் கைது செய்தனர். 

பெரியபட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மற்றும் காரிமங்கலத்தில் உள்ள பாலக்கோடு ரோட்டை சேர்ந்த மகேந்திரன் ஆகிய இரண்டு பேரை காரிமங்கலம் போலீசார் கைது செய்தனர். தொப்பூர் பகுதியில் பிரகாஷ் (43) என்ற போலி டாக்டரை தொப்பூர் போலீசார் கைது செய்தனர். 

அரூர் ஈச்சம்பாடி பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (40), அரூர் மேல்பாட்சா பேட்டை பகுதியைச் சேர்ந்த ரபீக் (44), ஆகிய இரண்டு பேரை அரூர் போலீசார் கைது செய்தனர். கடத்தூர் பஜார் தெருவைச் சேர்ந்த மணியம்மை (35) என்ற பெண்ணை கடத்தூர் போலீசார் கைது செய்தனர். 

பாப்பிரெட்டிபட்டி காளிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (42), பாப்பிரெட்டிபட்டி மெனசி பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் (33), சின்னவெள்ளை (63) பைரநத்தம் பகுதியைச் சேர்ந்த ஜான் ஜூலியஸ் (46) ஆகிய 4 பேரை பாப்பிரெட்டிபபட்டி போலீசார் கைது செய்தனர். 

பெண்ணாகரம் பெரிய தோட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (51), பி.அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (29), ஆகிய இரண்டு பேரை பெண்ணாகரம் போலீசார் கைது செய்தனர். ஏரியூர் எருக்கோல்பட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் (45), ஏரியூர் அருகே உள்ள பூச்சூர் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (48), ஆகிய இரண்டு பேரை ஏரியூர் போலீசார் கைது செய்தனர். 

பெண்ணாகரம் அருகே உள்ள மோட்டுப்பட்டியைச் சேர்ந்த செந்தில் (37) என்பவரை ஓகேனக்கல் போலீசார் கைது செய்தனர். பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிளி பகுதியைச் சேர்ந்த பச்சையம்மாள் (42), பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (36), ஆகியோரை பாப்பாரப்பட்டி போலீசாரும், பாலக்கோடு தாலுகா மகேந்திரமங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார் (30), மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஜிட்டாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (42), மகேந்திரமங்கலம் மல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயசங்கர் (43) ஆகியோரை மகேந்திர மங்கலம் போலீசாரும் கைது செய்தனர். 

கைதான 25 போலி டாக்டர்களும் அந்தந்த போலீஸ் எல்லைக்குட்பட்ட கோர்ட்டுகளில் ஆஜர் செய்யப்பட்டு சேலம், தர்மபுரி, அரூர் மற்றும் கிருஷ்ணகிரி சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment