PAGEVIEWERS



சன் குழுமத்திற்கு மாணவர்கள் கடும் எச்சரிக்கை


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி நாளை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, இந்தியாவில் நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி நாளை சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் அலுவலகம் மற்றும் சன் ரைஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் கலாநிதி மாறன் ஆகியோரின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் திருச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள், மாணவர்களை தாக்கியதை வன்மையாக கண்டிப்பதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாணவர்கள் யார் என்பதை நிருபித்து காட்ட உள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment