PAGEVIEWERS


ஏப்ரல் 3ந் தேதி முதல் பொறியியல், 'கலை மற்றும் அறிவியல்' கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் போராட்டம் காரணமாக கல்லூரிகளை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை அரசை கண்டித்து தமிழக முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு முன்பு உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழக அரசு அனைத்துக் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளித்தது. இந்நிலையில் தமிழக அரசு ஏப்ரல் 3ந் தேதி முதல் அனைத்துக் கல்லூரிகளையும் திறக்க உத்தரவிட்டுள்ளது
.

No comments:

Post a Comment